தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் வரிசை எண். 50
தமிழ்நாட்டுக் கல்வவட்டுகள் ஒதாகுதி-30
குருவண்ணாமலை மாவட்டக் கல்வவட்டுகள் எதாகுதீ - 1)
தமிழ்நாட்டுக் கல்வெட்றுகள் வரிசை எண். 5௦
தம்ழ்நாட்டுக் கல்வாட்டுகள் வதாகுதீ-20
குருவண்ணாமலை மாவட்டக் கல்வவட்டுகள் எதாகுதீ - 1)
பொதுப்பதிப்பாசிரியர்
முனைவர் 12. ஜகந்நாதன், இஆப.,
ஆணையர் மு.கூ.பெற்
பதிப்பாசிரியர்
இரா. சிவானந்தம்
உதவி கண்காணிப்பு கல்வெட்டாய்வாளர்/
துணை இயக்குநர்டுபறி
வவளியீடு
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
கசன்னை-600 008
2017-திருவள்ளுவர் ஆண்டு 2047
Title
Editor
Copyright
Subject
Language
Edition
Publication No
Year
Type point
No. of pages
No. of copies
Paper used
Printer
Publisher
Price
BIBLIOGRAPHICAL DATA
TAMILNATTUK KALVETTUKAL-VOL. XI
R. SIVANANTHAM
Tamilnadu State Dept. of Archaeology
Epigraphy
Tamil
First
288
2017
14
424
1000
80 Gsm Maplitho
Thirumullaivail Stationary Printing Book binding Aluminium &
Leather Manufacturers Industrial Co.op. Society,
40, I“ floor, Anderson street, Chennai- 600 001.
State Department of Archaeology,
Tamil Valarchi Valaagam,
Thamizh Salai, Egmore,
Chennai - 600 008.
Rs.140/-
பதிப்புரை
முன்னுரை
திருவோத்தூர்
பிரம்மதேசம்
Summary
சொல்லடைவு
. நிழற்படங்கள்
319
365
381
இ.க. ஆண்டறிக்கை - இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கை
தெ.க. தொ - தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி
முனைவர் 19. ஐகந்நாதன், இஆப., தொல்லியல் துறை .
ஆணையர் மூ.கூ.பெறி தமிழ்வளர்ச்சி வளாகம்,
தமிழ்ச்சாலை,
சென்னை-600 0௦௦8.
பதிப்புறை
வரலாற்றினை எழுதுவதற்கு துணைபுரியும் சான்றுகளாகத் திகழ்பவை
அகழாய்வுத் தொல்பொருட்கள், கல்வெட்டுகள், காசுகள், செப்பேடுகள், வரலாற்றுச்
சின்னங்கள், இலக்கியங்கள் போன்றவையாகும். வரலாற்றினை அறிய உதவும்
கல்வெட்டுகளைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். தமிழ்நாடு அரசு
தொல்லியல் துறையானது தமிழ்நாட்டிலுள்ள கல்வெட்டுகளைப் படியெடுத்து, படித்து,
பதிப்பித்து, நூலாக வெளியிடும் பணியினைத் தனது முதன்மைப் பணிகளில்
ஒன்றாகச் செய்து வருகிறது.
இத்துறைக் கல்வெட்டுப் பிரிவு வாயிலாக சென்ற ஆண்டு வரை 6827
கல்வெட்டுகள் 47 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 2016-17-ஆம் ஆண்டில்
நான்கு கல்வெட்டு நூல்கள் வெளிவருகின்றன. இவற்றில் இந்நூல் கல்வெட்டு
வரிசை எண் 50-ஆவது நூலாக வெளியிடப்படுகின்றது. திருவண்ணாமலை
மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள திருவோத்தூர், பிரமதேசம் ஆகிய ஊரிலுள்ள
172 கல்வெட்டுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூல் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள்
தொகுதி-X1 (திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி -] என்னும்
தலைப்பில் வெளிவருகின்றது.
இக்கல்வெட்டுகளைப் பதிப்பித்து நூலாக வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்ட
இத்துறை உதவி கண்காணிப்புக் கல்வெட்டாய்வாளர் திரு இரா. சிவானந்தம்
அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூலில் இடம்பெற்றுள்ளக் கல்வெட்டு வாசகங்களைத் தட்டச்சு
மாற செய்த திரு. மு. சக்திவேல் அவர்களுக்கும், அச்சுப்பிழைத்திருத்திய
திருமதி ச. சரஸ்வதி அவர்களுக்கும், இந்நூலிற்கு அட்டைப்படம் வடிவமைத்த
திரு த. பிரகாஷ் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.
தமிழ்நாடு அரசு புதுமை முயற்சிகள் திட்டம் 2016-17 திட்டத்தின் கீழ்
நான்கு கல்வெட்டு நூல்களை வெளியிட நிதியுதவி நல்கிய தமிழ்நாடு அரசிற்கு
மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
துறை அலுவலர்களின் உழைப்பாலும், பெரும் முயற்சியாலும் இது போன்ற
நூல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். முதன்மைச் சான்றாக உள்ள
இக்கல்வெட்டு வாசகங்களை ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் பயன்படுத்தி
இப்பகுதியின் வரலாற்றினை எழுதுவதற்கு உதவும் என்ற நோக்கில் இந்நூலினை
வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
“(532
ஆணையர்
மூன்னுறை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தின் தலைநகராக உள்ள
செய்யாறு என்னும் ஊர் திருவத்திபுரம், திருவத்தூர், திருவத்தியூர் என்று பல
பெயர்களில் அழைக்கப்படுகின்றது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டு வரையுள்ள
கல்வெட்டுகளில் இவ்வூர் “திருவோத்தூர்” என்றே அழைக்கப்பட்டுள்ளது. சேயாறு
என்ற ஆற்றின் பெயரால் தற்போது இவ்வூர் “செய்யாறு” என்றழைக்கப்படுகிறது.
திருவோத்தூர் கோயிலில் காணப்படும் மிகப் பழமையானக் கல்வெட்டு முதலாம்
ஆதித்தன் (கி.பி. 871-907) காலத்தியது ஆகும். இக்கல்வெட்டு தற்போதுள்ள
வேதபுரீஸ்வரர் கோயில் கருவறை மற்றும் முன்மண்டபங்களில் வெட்டப்படவில்லை.
இக்கோயிலில் சிதம்பரேஸ்வரர் என்ற சன்னதியின் தெற்கு ஜகதிமில் வெட்டப்பட்டுள்ளது.
சங்கரநாரணர் என்பவரின் தம்பி ஆதித்தகுட்டியார் என்பவர், தனது தமையன்
பெயரில் “சங்கரநாரண ஈஸ்வரம்” என்ற இக்கோமிலை எடுப்பித்துள்ளார் என்பதை
கல்வெட்டுக் குறிப்பின் வாயிலாக ' அறிகிறோம். மேலும், இக்கல்வெட்டு
- இக்கோமிலுக்கென்று நந்தவனம் ஒன்றினைத் திருவோத்தூர் சபையார் அமைத்துக்
கொடுத்துள்ளனர் என்ற செய்தியைத் தெரிவிக்கிறது. முற்காலச் சோழர் காலக்
கல்வெட்டுகள் அனைத்தும் சிதம்பரேஸ்வரர் கோமில் கருவறை அதிட்டானத்திலே
காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோமிலில் உள்ள இராட்டிரகூட மன்னன்
கன்னரதேவனின் 27-ஆம் ஆட்சியாண்டுக் (கி.பி. 966) கல்வெட்டில் “திருவோத்தூர்
மகாதேவர்” என்று இக்கோமில் இறைவன் அழைக்கப்பட்டுள்ளார். கி.பி. 17-ஆம்
நூற்றாண்டு வரையிலானக் கல்வெட்டுகளில் இக்கோமில் இறைவன் திருவோத்தூர்
மகாதேவர், திருவோத்தூர் உடையார், .திருவோத்தூர் ஆளுடையார், ஆளுடையார்
திருவோத்தூருடையார், உடையார் திருவோத்தூருடையார், திருவோத்தூருடைய
நாயனார் என்ற ஊரின் பெயரால் காலவாரியாக தமிழ்ப் பெயராலேயே அழைக்கப்பட்டுள்ளார்.
“வேதபுரீஸீவரர்” என்ற பெயர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே சூட்டப்பட்டிருத்தல்
வேண்டும்.
உத்தமசோழனின் அரசியர்கள் செம்பியன் மகாதேவியார், ஆருரன் அம்பலத்தடிகள்
ஆகியோர் இவ்வூர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர். உத்தமசோழ மாராயன்
திருவோத்தூர் மகாதேவர். கோமிலில் திருநந்தா விளக்கெரிக்க ஆடுகள் வழங்கியுள்ளான்.
சூளை நோயினால் இறந்த பின்னர், அரசியார் செம்பியன் மகாதேவியாரிடம் இவ்விளக்கு
எரிக்க வழிவகைச் செய்ய வேண்டுமென ஊரார் முறையிட்டனர். மீண்டும் 200
ஆடுகள் வழங்கி, இக்கோயிலில் இரண்டு திருநந்தாவிளக்குகள் எரிக்க, மாதம்
ஒன்றுக்கு 16 நாழி ஓர் உரி மற்றும் ஓர் ஆழாக்கு அளவு நெய் கோயிலிலேக்
கொண்டுச் சென்று கொடுத்திட வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. சோழ மன்னன்
உத்தமசோழனின் பட்டத்து அரசியார் ஆருரன் அம்பலத்தடிகள் என்பவர் திருவோத்தூர்க்
கோயிலில் விளக்கெரிக்க 25 கழஞ்சுப் பொன் தானமளித்துள்ளார்.
கண்டகோபாலனின் படைத்தளபதி பட்டமுடையார் காங்கயர் என்பாரின் பேரன்
பெருமானடி நாயக்கர் என்பவர் இக்கோயில் கருவறையையும் ஓடும் மேய்வித்ததாகக்
கல்வெட்டொன்றுக் கூறுகிறது. இக்கல்வெட்டு, கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச்
சார்ந்த தெலுங்குச் சோழன் கண்டகோபாலன் காலத்தியது ஆகும். மூன்றாம்
சடையவர்மன் வீரபாண்டியனின் (கி.பி. 1810) ஆட்சிக் காலத்தில் சிவனம்மை என்பவள்
இக்கோயிலில் சோமநாததேவர் திருமேனியை எடுப்பித் துள்ளாள். இதேபோன்று சம்புவராயர்
இராசநாராயணன் ஆட்சியின்போது (கி.பி. 1850) வீரவல்லாள தேவர் என்பவன்
இக்கோயிலில் அண்ணாமலையார் திருமேனி ஒன்றினை அமைத்துள்ளான். மேலும்,
இவ்வூரில் கொற்றவைக்கு தனிக்கோயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. “கானகரை செல்வி
அம்மை” என்று கொற்றவை அழைக்கப்பட்டுள்ளாள். திருவோத்தூர் கோயிலைச்
சார்ந்த தேவரடியாள் சம்பா என்பவள் விசைய கண்ட கோபாலன் (கி.பி. 1277)
ஆட்சிக்காலத்தில் “கானகரை செல்லி அம்மை” கோயிலை எடுப்பித்துள்ளாள்.
புவனேகபாகு தேவர் என்பவர் இக்கோயிலில் பூசை செய்வதற்கான உரிமை
பெற்றிருந்த செய்தியினை இவ்வூரிலுள்ள இராசநாராயணின் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
(கி.பி. 1848) திருவோத்தூர் கோயிலில் திருப்பாட்டு (தேவாரம்) ஓதும் மாகேசுவரர்களுக்கு
நிலதானம் வழங்கப்பட்டுள்ளது.
திருவோத்தூர் கோயிலுக்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு உணவளிக்க
வேண்டி “புட்பகிரி ஜீயர்” மடத்திற்கு நிலம் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தனியூர் பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்) மேலைச்சேரியில்
“ஸ்ரீபதஞ்சலிமகாமுனி தேவன் திருமடம்” என்கிற பிக்ஷா மடத்தினை நிர்வகிப்பதற்காக
அத்திப்பற்று மற்றும் அழிபடைத்தாங்கிபற்று நாட்டவர்கள் நிலக்கொடை அளித்துள்ளனர்.
திருவோத்தூர் கோயிலில் பலபண்டங்கள் விற்பதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளதை
கி.பி. 15-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றுத் தெரிவிக்கிறது. |
ப்
ந்
திருவோத்தூர் இறைவனுக்குப் பொன்னாலான பட்டங்கள் தானமளிக்கப்பட்டுள்ளன.
பொன்னூர் ஊரைச் சார்ந்த கண்ணுடையான் காரணை விழுப்பரையன் என்பவன்
இரண்டு பட்டங்களுக்கு 100 கழஞ்சுப் பொன் தானமளித்துள்ளான். அதேபோன்று,
பாண்டிய அரசி உலகுமுழுதுடையார் என்பவர் “கலியுகராமன் திருத்தோள் பிரியாத
திருக்கானை” என்ற தனது பெயரில் 48 கழஞ்சுப் பொன்னில் ஆன பட்டம் ஒன்றைத்
தானமளித் துள்ளார்.
பாண்டிய மன்னன் வீரபாண்டியன் பெயரில் “வீரபாண்டியன் சந்தி” ஒன்றினை
இக்கோயிலில் கண்டியதேவர் என்பவன் .ஏற்படுத்தியுள்ளான். திருவோத்தூர் இறைவனுக்கு
திருப்பள்ளித்தாமம் (பூமாலை) வழங்கிட வேண்டி அழகியசீயன் என்பவன் 520 குழி
அளவு நிலத்தில் “தப்பாமொழி” என்ற பெயரில் நந்தவனம் ஒன்றினை உருவாக்கியுள்ளான்.
இக்கோயிலுக்குப் பல்வேறு தானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இக்கோமிலில்
திருநந்தாவிளக்கு, சந்தி விளக்கு, வழிபாட்டுச் செலவினம் போன்றவற்றிற்காகப் பல்வேறு
நபர்கள் தானம் வழங்கியுள்ளனர். மூன்றாம் இராசராசன் காலத்தில் செங்கேணி
வீரப்பெருமாள் அத்திமல்லன் எதிரிலிச்சோழ சம்புவராயன் என்னும் கூடலாளப் பிறந்தார்
காடவராயரின் நம்பிராட்டியார் மீட்டாண்ட நாச்சியார் என்பவர் திருநாமத்துக்காணியாக
தேவாரமூவர் முதலிகளான எம்பெருமக்கள் மூவர் வழிபாட்டிற்காக ஆயிரம் குழி
நிலம் தானமாக வழங்கியுள்ளார்.
திருவோத்தூருடைய நயினார் கோயிலில் (தேவார மூவர் முதலிகளில் ஒருவரான)
திருஞானசம்பந்தப்பெருமாளுக்கு சித்திரைத் திருநாள், ஆனித்திருநாள் திருவிழாக்களில்
பத்தாந் திருநாளில் நிருத்த மண்டபத்தில் திருகண்சாத்து நிகழ்ச்சி நடைப்பெற்றுள்ளது.
அவ்விழாவில் திருஞானம், சுகந்தம், அடைக்காயமுது, திருவிளக்கு ஆகியவற்றை
வழங்கிட 100 பணம் அளித்து 200 குழி நிலம் ஒன்றினை வாங்கி இந்நிலத்தின்
மூலம் வரும் மேல்வாரத்தினைப் பயன்படுத்திக்கொள்ள நமினார் திருச்சனை என்பவர்
ஏற்பாடுச் செய்துள்ளார்.
முற்காலச் சோழர் காலத்தில் “கைக்கோளப்படை” அரசு படையாக விளங்கியது.
மன்னர்களின் பெயரில் பல கைக்கோளப்படைகள் இருந்தன. இப்படைப் பிரிவினர்
“தெரிஞ்ச கைக்கோளர்” என்ற சொல்லினைப் பின்னொட்டாக பெற்றிருந்தனர்.
உதாரணமாக மதுராந்தகத் தெரிஞ்ச கைக்கோளர், பராந்தகத் தெரிஞ்ச கைக்கோளர்,
வீரச்சோழ தெரிஞ்ச கைக்கோளர் போன்றவற்றினைக் குறிப்பிடலாம். திருவோத்தூரில்
உள்ள உத்தமசோழனின் கல்வெட்டில் (கி.பி. 984) “இரண்டு தலை பொற்கோமில்
கைக்கோளப் பெரும்படை” பற்றிய குறிப்புக் காணப்படுவது ஒப்புநோக்கத்தக்கது.
Vv
ஜயங்கொண்டசோழ மண்டலத்திலுள்ள பெரிய வயலூர் ஊரைச் சார்ந்த
வேட்டைக்காரர்கள் சோழமுத்தரையன் மகன் சீயமுத்தரயன் மற்றும் சேந்தமுத்தரயன்
மகன் பந்தல் ஆகிய இருவரும் வேட்டைக்குச் சென்ற போது, சீயமுத்தரயன் விட்ட
அம்பு தவறுதலாக பந்தல் என்பவன் மீது பாய்ந்து இறந்து விட்டான். இந்த குற்றம்
நீங்க ஆளுடையார் திருவோத்தூர் கோயிலுக்கு சீயமுத்தரையன் தானம் வழங்கியுள்ளான்.
அதேபோன்று சூற்றி என்பவனின் மகன் கொங்கன் செல்வமுத்தரையன் என்பான்
மிருகவேட்டைக்கு சென்ற போது, மிருகத்தின் மீது எறிந்த அம்பு தவறுதலாக
புலியன் என்பவன் மீது பாய்ந்து இறந்துவிட்டான். பன்னாட்டார் என்னும் நிர்வாக
அமைப்பினர் கூடி இரு குடும்பத்தாரிடம் பகை ஏற்படவேண்டாம் என்று
செல்வமுத்தரையனை இக்குற்றத்திலிருந்து விடுவித்துள்ளனர். இக்குற்றத்திற்காகத்
திருவோத்தூர் இறைவனுக்கு ஒரு விளக்கு வைக்க பதினாறு பசுக்களைக் கொடுக்கத்
தீர்ப்பளித் துள்ளனர்.
செங்கேணி அத்திமல்ல நாயன் என்கிற இராசேந்திரசோழச் சம்புவராயன் மற்றும்
இவனது தம்பி ஒதுவாந் என்கிற இராசகம்ப்ர சம்புவராயன் ஆகிய இருவரும்
இணைந்து சீயன் பல்லவதரையன் எனும் சம்புவராயனுடன் ஓர் அரசியல்
உடன்படிக்கைச் செய்துகொண்டனர். அத்தியாண்டான் என்கிற விக்கிரமசோழ
சம்புவராயன் என்பவனுடன் ஒருபொழுதும் உறவு கொள்ளமாட்டோம் என்றும்,
அத்தியாண்டானை எதிர்க்கும் பொழுது தங்கள் பகையாகக் கருதி எதிர்ப்போம்
என்றும் திருவோத தூர் கோயிலில் உறுதியளித்து உடன்படிக்கை
எழுதிக்கொடுத் துள்ளனர்.
பிரம்மதேசம்
செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள பிரமதேசம் என்கிற ஊரில் சந்திரமெளலீஸ்வரர்
கோயில், செல்லியம்மன் கோமில் மற்றும் இவ்வூரின் புறப்பகுதி ஊரான புதூரில்
ருத்ரகோடீஸ்வரர் கோயில் ஆகியவை உள்ளன. இக்கோயில்களில் மிகப்பழமையான து
சந்திரமெளலீஸ்வரர் கோயில் ஆகும். ஏனெனில் இக்கோயில் முன்மண்டபம் தெற்குச்
சுவரில் பல்லவ மன்னன் கம்பவர்மனின் 20-ஆவது ஆட்சியாண்டுக் (கி.பி. 866)
கல்வெட்டு இடம் பெற்றுள்ளது. எனவே, பல்லவர் காலந்தொட்டு இங்கு கோமில்
அமைந்துள்ளது எனலாம். பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர் பிரமதேயம்
என்றழைக்கப்படும். எனவே, இவ்வூர் பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட
ஊர் என்பது முடிவாகிறது. பல்லவ மன்னன் கம்பவர்மனின் கல்வெட்டு, இவ்வூரை
ராஜமல்லச் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கிறது. சதுர்வேதி மங்கலம் என்பது
ப்!
நான்கு வேதங்களுங் கற்றறிந்த பிராமணர்களுக்குக் கொடையளிக்கப்பட்ட ஊராகும்.
பொதுவாக, பிராமணர்களுக்குத் தானம் வழங்கப்பட்ட ஊர்களானது பிரம்மதேசம்,
சதுர்வேதி மங்கலம், அகரம், மங்கலம் என்னும் பின்னொட்டுச் சொற்களுடன் காணப்படும்.
இவ்வூரும் சதுர்வேதிமங்கலம் என்ற பின்னொட்டோடு உள்ளதால், பிராமணர்களுக்குத்
தானமாக வழங்கப்பட்ட ஊர் என்று கூறலாம். மேலைக்கங்க மன்னன் இரண்டாம்
பிரிதிவிபதியினை அடுத்து ஆட்சி செய்த இராஜமல்லன் என்பவன் பெயரால் இவ்வூர்
“ராஜமல்லச் சதுர்வேதிமங்கலம்” என்று பெயர் சூட்டப்பட்டிருத்தல் வேண்டும்.
சோழமன்னன் இராசகேசரிவர்மன் முதலாம் ஆதித்தனின் கல்வெட்டில் இவ்வூர்
திருவேகம்பபுறத்து ராஜமல்லச் சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. புரம்
என்பது வணிகருக்குரிய ஊரைக் குறிக்கும் சொல்லாகும். முதலாம் இராசராசன்
ஆட்சிக்காலம் வரை இவ்வூர் வணிக நகரத்துக்குள் ஒரு பிரிவாக சதுர்வேதிமங்கலம்
அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
முதலாம் இராசராசனின் 18-ஆம் ஆட்சியாண்டு வரை (கி.பி. 1003) தாமர்
கோட்டத்துத் திருவேகம்பபுறத்து ராஜமல்லச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில்
அழைக்கப்பட்ட இவ்வூர் பின்னர் தாமர் நாட்டுக் கரைக்கோட்டு பிரமதேயம்
பராக்கிரமசோழச் சதுர்வேதிமங்கலம் என்று மாற்றம் பெற்றுள்ளது. முதலாம்
இராசராசனுக்கு “கீர்த்தி பராக்கிரமன்' என்ற சிறப்பு பெயர் உண்டு. எனவே, முதலாம்
இராசராசனின் 27-ஆம் ஆட்சியாண்டு முதல் இவ்வூர் மன்னனின் சிறப்பு பெயரால்
பராக்கிரமசோழச் சதுர்வேதிமங்கலம் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று கொள்ளலாம்.
மேலும், முதலாம் குலோத்துங்கன் காலம் முதல் தினசிந்தாமணிச் சதுர்வேதிமங்கலம்
என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இவ்வாறு பெயர் மாற்றம் பெற்றாலும் தொடர்ந்து
பிராமணர்களுக்குரிய ஊராகவே இருந்துள்ளது.
போந்தை நாதரை வனநாயகர் என்றும், தானாக தோன்றியவர் என்னும் கருத்தில்
“அஜ?” என்றழைக்கப்படுகிறார். போந்தை நாதர் திரேதாயுகத்தில் தேவர்களாலும்,
துவாரபார யுகத்தில் ரேவாஸ என்னும் முனியாலும் வழிபடப்பட்டவர் என்றும்,
கலியுகத்தில் இங்கு சந்தன குழம்பால் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளார் என்றும்
சமஸ்கிருத மொழியில் அமைந்த கல்வெட்டு ஒன்றுக் கூறுகிறது. இக்கல்வெட்டின்
எழுத்தமைதியைக் கொண்டு, இதனின் காலம் கி.பி. 10-11 ஆம் ஆண்டு என்று
கூறலாம்.
முதலாம் இராசராசனின் தமக்கையான குந்தவை பிராட்டியரின் கணவர்
வல்லவரையன் வந்தியதேவன் ஆவான். பிரமதேசம் பகுதியை ஆட்சி செய்த குறுநிலத்
ன்
தலைவன். இவன் சோழர்க்கு சிறந்த படைத்தளபதி தலைவனாகவும் இருந்துள்ளான்.
வல்லவரையரின் மனைவியராக இந்தள தேவியார், உமாதேவியார் மற்றும் குந்தவை
தேவியார் என மூன்று மனைவியரின் பெயர்கள் இவ்ஷர்க் கல்வெட்டுகளில்
காணப்படுகின்றன (பக். 204, 280, 215).
தாமற் கோட்டத்து, தாமர் நாட்டு பராக்கிரமசோழச் சருப்பேதி மங்கலத்து
பெருங்குறி சபையார் தீத்தக் குளத்தின் வடகரையில் இருந்த புளியமரத்தின் கீழ்
கூடி, முதலாம் இராசேந்திர சோழன் இறந்த பின்னர் உடன்கட்டை ஏறின மன்னரின்
தேவியார் வீரமகாதேவியார் இறப்பிற்காக, தாகம் தீர்க்க வேண்டி தண்ணீர் பந்தல்
அமைக்க இவரது உடன்பிறந்த சகோதரர் மதுராந்தகன் என்னும் பரகேசரி வேளான்
என்பவனுக்கு நிலம் விற்றுக் கொடுத்துள்ளனர். இந்நிலத்திற்கான தொகை மற்றும்
வரிகளுக்கானத் தொகையினை பெற்றுக்கொண்டு வரிகளை தாங்களே செலுத்துவதாக
மகாசபை பெருங்குறி பெருமக்கள் சம்மதித்துள்ளனர். முதலாம் இராசேந்திரன் தனது
இறுதிக்காலத்தில் இவ்வூரில் தங்கி இறந்துள்ளான். இவனது மனைவி வீரமகாதேவியார்
உடன்கட்டை ஏறியுள்ளாள். சந்திரமெளலீஸ்வரர் கோமில் முதலாம் இராசேந்திரனின்
உடலின் மீது கட்டப்பட்ட “பள்ளிப்படைக் கோயில்” என்கின்றனர் சிலர். அவ்வாறு
இல்லை, ஏனெனில் இக்கோமிலில் பல்லவ மன்னன் கம்பவர்மனின் கல்வெட்டும்,
முதலாம் ஆதித்தன், சக ஆண்டு 8380-ஆம் ஆண்டுக் கல்வெட்டு, முதலாம்
பராந்தகன் காலத்தியக் கல்வெட்டுகள் இக்கோயிலில் வெட்டப்பட்டுள்ளன. முதலாம்
இராசேந்திரனின் பள்ளிப்படைக் கோமில் இதுவரை கண்டறியப்படவில்லை.
தாமர் கோட்டத்து திருவேகம்பபுரத்து இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து
ஐஞ்ஜஷ்டசத்தும் என்னும் மகாசபையினர் 86% கழஞ்சுப் பொன்னினை வரிகளுக்கு
முதலீடாகப் பெற்றுக்கொண்டு கோயிலுக்கு உரிய நிலங்களுக்கு வரிவிலக்கு
அளித்துள்ளனர். மேலும், வருங்காலங்களில் கோயிலுக்கு வழங்கப்படும் நிலங்களுக்கும்
வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர். ஐஞ்சஷ்டசதத்து சபை
என்பது “நாலாமிரவர்” சபை என்பதை குறிப்பதாகும். ஐந்து, அஷ்டம், சதம் (எட்டு)
என்பதின் பெருக்குத் தொகை நாலாயிரம் ஆகும். சிவக்குறி காமடிபெருமான்
மற்றும் இவனது இளைய சகோதரன் பெருமாள் ஆகிய இருவரும் கம்மாளர்
சபையிடமிருந்த வாங்கிய நிலத்திற்கு இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து
ஐஞ்சஷ்டசதத்து சபையினர் வரிவிலக்களித்து. ஸ்ரீபோந்தை மகாதேவர் வழிபாட்டிற்கு
தினசரி 2 நாழி அரிசி வழங்கிட தானமாக வழங்கப்பட்டுள்ளது.
இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து ஆளுங்கணத்து உறுப்பினர்கள் ஒருவனான
கூடலூரைச் சார்ந்த மணிசிவபட்ட சர்வகிறுதுக்கள் என்பவனின் மகன் மகாதேவ
பட்டன் என்பவன் ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் நந்தாவிளக்கு எரிக்க 141
கழஞ்சுப் பொன் அளித்துள்ளான். மற்றொரு கல்வெட்டில் மணிசிவ பட்ட
சறுவகிறத்துக்கள் என்பானின் மகன் மகாதேவ பட்டன் பற்றி கூறப்பட்டுள்ளது.
இவனின் இரு மகன்களும் ஆளுங்கணத்து குழுவில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டு முதலாம் பராந்தகனின் 37-ஆம்
ஆட்சியாண்டில் கல்வெட்டு அதாவது கி.பி. 9448-ஆம் ஆண்டைச் சார்ந்தது.
முன் கல்வெட்டு முதலாம் பராந்தகனின் 88-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு
கி.பி. 9460-ஆம் ஆண்டைச் சார்ந்தது.
வெற்றியூரைச் சார்ந்த வாட்கை காரிகுடி கரிகுடையான் என்பவன் இவ்வூரின்
மேற்கேயுள்ள சுப்பிரமண்யதேவர் இறைவனுக்கு திருஅமுது மற்றும் வழிபாட்டிற்காக
பராக்கிரமசோழ சதுர்வேதிமங்கலத்து மகாசபையாரிடமிருந்து 1225 குழி நிலம்
வாங்கி இத்தேவற்கு தானமளித்துள்ளான். இந்த சுப்பிரமண்யதேவர் கோயில் “சோழகேரளந்
கோயில்” என்று மன்னனின் பெயரால் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வூரின் மேற்கில் அமைந்துள்ள திருவாய்பாடி தேவர் (கிருஷ்ணன்) கோயிலில்
கூடி இவ்வூர் ஸீ போந்தை உடையார் கோயிலில் உள்ள ஆடவல்லான் பராக்கிரமசோழ
விடங்கர் (நடராஜர்) திருமேனிக்கு உச்சி வேளையின் போது அமுதுபடி வழிபாட்டுச்
செலவினங்களுக்காக வேண்டி இவ்ஷூரின் பொது நிலத்தில் (ஊர் மஞ்சிக்கம்) 2000
குழி நிலத்தினை மாதவசர பட்டன், இளைய நம்பித்தக் கிரமவித்தன், இளைய
சந்தான கிரமவித்தன் ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளனர். பராக்கிரம சதுர்வேதி
மங்கலத்து மகாசபையார் அயோத்தி ஆழ்வார் கோயில் முன்பு கூடி, போந்தை
உடையார் கோயிலில் உள்ள திருச்சிற்றம்பல முடையார் (நடராசர்) திருமேனி
வழிபாட்டிற்கு அமுதுபடி வழங்கிட 2000 குழிகளை விற்று விலையாவணம்
செய்து கொடுத்துள்ளனர். போந்தை ஆழ்வார் கோயிலில் சபையினர் கூடிமிருந்தபோது
குண்டூர் மாதவ கிரமவித்தன், கோமங்கலத் து ஆதித்த கிரமவித்தன், எயில் திருவேகம்ப
கிரமவித்தன் ஆகிய இம்மூவரும் இவ்வூர் சப்தமாதர் (ஏழு கன்னிகையர்)
இறைவிகளுக்கு திருநந்தா விளக்கு எரிக்க வழிவகை செய்துள்ளனர். கல்வெட்டு
முழுமைபெறாமல் உள்ளது.
இராஜமல்லச் ச.துர்வேதிமங்கலத்து சங்கரப்பாடியில் (எண்ணெய் வணிகர் வசிக்கும்
பகுதி)வசிக்கும் பேராய்ய நல்லூழான் ஊரடி என்பானின் மகன் அட்டமூர்த்தி என்பவன்
ற்;
இக்கோமிலில் உள்ள தட்சணாமூர்த்தி இறைவனுக்கு அமுதுபடி மற்றும் வழிபாட்டுச்
செலவுகளுக்காக 325 குழி நிலம் தானமாக வழங்கியுள்ளான். தாமர் கோட்டத்து
திருவேகம்பபுரம் இராஜமல்லச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள்
கோமிலில் உள்ள ரிசபவாகன தேவர் திருமேனி வழிபாட்டிற்காகவும் நந்தாவிளக்கு
எரிப்பதற்காகவும் சிங்கபெருமாள் என்பவன் 121 கழஞ்சுப் பொன் தானமளித்துள்ளான்.
இச்செய்திகளின் வாயிலாக இவ்வூரின் மேற்குப் பகுதியில் சுப்பிரமணியர் கோயில்,
கிருஷ்ணன் கோயில் ஆகியவை அமைந்திருந்தன என்பதை அறிகிறோம். மேலும்
இவ்வூரில் அயோத்தி ஆழ்வர் என்றழைக்கப்பட்ட ராமர் கோயிலும், சப்தமாதர் கோயிலும்
இருந்துள்ளதை காண்கிறோம். சந்திரமெளலீஸ்வரர் கோயிலில் நடராசர் திருமேனி,
ரிசப வாகனதேவர் திருமேனிகளுக்கு வழிபாட்டுகள் நடைப்பெற்றுள்ளதையும்
காண்கிறோம்.
ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் தினமும் நண்பகலின் போது ஒரு
பிராமணனுக்கு உணவளிக்க வேண்டி இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து யாளும்
கணத்து உறுப்பினர் மணற்பாக்கத்தைச் சார்ந்த குமாரடி பட்ட வாஜபேஜியார் மகன்
திருப்போந்தைச் சோமாசியார் என்பவன் திகைத்திறல் ஏரிமின் கீழிருந்த நிலம் ஒன்றினை
வழங்கியுள்ளான். வள்ளிவயம் என்னும் ஊரைச் சேர்ந்த நல்லுழான் பெருமான் என்பவன்
அமாவசைத் தினங்களில் இரண்டு பிராமணர்களுக்கு உணவளிக்க வேண்டி இரண்டு
கழஞ்சுப் பொன் கொடையாக அளித்துள்ளான். வேதம் நன்கறிந்த இரண்டு
பிராமணர்களுக்கு நண்பகலில் உணவளிப்பதற்காக தாமர் கோட்டத்து இராஜமல்லச்
சதுர்வேதிமங்கலத்து ஐஞ்சஷ்டசதத்து என்னும் நிர்வாக சபையினர் 440 குழி நிலம்
அளித்துள்ளனர். திருமலைக்குச் சென்று தீர்த்தமாடக் கூட்டமாகச் செல்லும்
ஸ்ரீவைஷ்ணவர்கள் இவ்வூர் ஜனநாதன் மண்டபத்தில் வந்து தங்கும் போது 100
வைணவர்களுக்கு உணவளிக்கவும், தீர்த்தமாடி விட்டு திரும்பும் போதும் 100
ஸ்ரீவைணவர்களுக்கு உணவு அளிக்கவும், புரட்டாசி மாதம் திருவோணத்து நாளன்று
தீர்த்தமாட வரும் 100 ஸ்ரீவைணவர்கள், ஐப்பசி மாதம் திருவிழாவின் போது .
வழிபடவரும் ஸ்ரீவைணவர்களுக்கு உணவளிக்கத் தேவையானப் பொருட்கள் வழங்கிட
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீபோந்தையுடைய. மகாதேவர் கோயிலில் நடைபெறும்
திருவிழாக்களின் போது வழிபடவருபவர்கள் தெண்ணாமிரவன் மடத்தில் உணவு,
உண்பதற்காக வேண்டி 46 குழி நிலத்தினை வரிநீக்கி மடப்புறமாக ஒன்பது
கழஞ்சுப் பொன் பெற்றுக்கொண்டு ஓமாநண்டத்தூர் ஊரார் விற்றுக் கொடுத்துள்ளனர்.
ஸ்ரீபோந்தையாண்டார் கோயில் வளாகத்தில் இருக்கும் பவித்திரமாணிக்க மடத்தினை
x
நிர்வகிப்பதற்காக மடப்புற இறையிலியாக 3549 குழி நிலத்தின் மீதான அனைத்து
வரிகளும் நீக்கி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிலங்களின் விளைச்சல்களுக்கும்
வரிவிதிப்பதில்லை என்றும் மகாசபை பெருங்குறி பெருமக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் இறைவனை மூன்று சந்தியும் அர்த்த சாமம்
போதும் அபிஷேகம் செய்யும் பிராமணனுக்கு நெல் மற்றும் கூறை (துணி)
ஆகியவை வழங்குவதற்கும் 80 கழஞ்சுப். பொன் தானமாக அளிக்கப்பட்டுள்ளது.
இப்பொன் தன்மக்கட்டளைக் கல்லால் நிறுத்து, தரத்தினை இராஜமல்ல சதுர்வேதி
மங்கலத்து திரைராஜ்ய கடிகாவைச் சார்ந்த மத்தியஸ்தன் பொற்கோயில் மூவாமிரவன்
எனும் சதுரன் என்பவன் சரிபார்த்துள்ளான்.
தாமர் நாட்டு பிரமதேசம் பராக்கிரமசோழ சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீபோந்தை
உடைய மகாதேவர் கோமிலில் ஸ்ரீபலி வழிபாட்டின் போது எழுந்தருளும் ஸ்ரீபாசுவத
மூர்த்திகளுக்கு சிறுகாலைச் சந்தி வழிபாட்டின் போது திருவமுதுக்காக வேண்டி
.ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புழற்கோட்டத்து நியமம் ஊரைச் சார்ந்த மாதேவன்
திருவந்தான் என்பனிடமிருந்து 12 கழஞ்சுப் பொன்னினை இக்கோயில் சிவபிராமணர்கள்
பெற்றுக்கொண்டு திருவமுது அளிப்பதாக உடன்பட்டுள்ளனர். தாமர் கோட்டத்து
இராஜமல்ல சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீபோந்தை மகாதேவ பட்டாரகர் இறைவனுக்கு
சூரிய கிரகணத்தின் போது திருநந்தா விளக்கு ஒன்று இரவு பகலும் ளிக்க
சோழநாட்டு கிழார் கூற்றத்து கிளிநல்லூர் ஊர்த் தலைவன் செம்பியன் கிழார்
நாட்டுக்கோன். என்பவனிடமிருந்து 15 கழஞ்சுப் பொன்னினை வதியூர் ஊர் சபையார்
பெற்றுக்கொண்டு தினம் உழக்கு எண்ணெய் கோயிலுக்கே வந்து அளப்பதாக
உறுதியளித்துள்ளனர். வெளியன் நுளம்பர் விசுத்தமதி பண்டிதர் என்பவன் ஸ்ரீபோந்தைப்
பெருமானடிகள் இறைவனை மூன்று சந்தியும், அர்த்த யாமமும் வேதத்தில்
வல்லவனாய் உள்ளவன் அபிஷேகம் செய்வதற்காக 525 குழி நிலத்தினை வரிநீக்கிப்
பெற்றுத் தானமாக அளித்துள்ளான்.
படுவூர் கோட்டத்து காவதிப்பாக்கத்து ஆளுங்கணத்து உறுப்பினர்களில் ஒருவன்
ஸ்ரீபோந்தைபெருமானடிகள் கோமிலுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பதற்கு 11
கழஞ்சுப் பொன் கொடையளித்துள்ளான். சோழமண்டலத்து உய்யக்கொண்டார் வளநாட்டு
வெண்ணாட்டு பிரமதேயமான கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த நாரக்கன்
என்பவன் தாமர் நாட்டு கரைக்கோட்டு பிரம்மதேயம் எனும் பராக்கிரமசோழ சதுர்வேதி
மங்கலத்து ஸ்ரீபோந்தையுடையார் கோயிலுக்குத் தானமாக வழங்கிய நெல்லினை
மூலதனமாகக் கொண்டு, தினமும் நான்கு வேளையும் இறைவனுக்கு அபிஷேகம்
xi
செய்வதற்கு ஸ்ரீவைகுந்தம் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதற்கு வழிவகை
செய்துள்ளான். மேலும், திருநந்தவனம் அமைப்பதற்கு 350 குழி நிலம் கொடையாகவும்
தரப்பட்டுள்ளது.
ஏரி வாரியத்தின் கணக்குகளை எழுதும் கணக்கனுக்கு (மத்யஸ்தன்)
அஞ்ச்ஷ்ட்டசத்து சபையினர் மதிப்பூதியம் வழங்க நிர்ணமித்துள்ளனர். அவனுக்கு
தினமும் 4 நாழி நெல்லும், வருடத்திற்கு 7 கழஞ்சும் பொன்னும், ஒரு சோடி (ஓர்
இணை) ஆடையும் வழங்கிடவும் தீர்மானித்துள்ளனர். மேலும் கணக்குகளைச்
சமர்ப்பிக்கும்போது தன்னுடைய நேர்மையினை நிரூபிப்பதற்குப் பழுத்தக் காய்ச்சிய
இரும்பு கம்பிமினை (மழு) பிடித்திட முன்வரவேண்டும். அவ்வாறு பிடிக்கும்
போது கைகளில் காயங்கள் ஏற்படவில்லை எனில் நிரூபிக்கப்பட்டதாகக் கருதி
கூடுதலாக ஊக்கத்தொகை (பாதசேஷா) வழங்கப்படும். அவ்வாறு இன்றி காயம்
ஏற்பட்டால் தவறு செய்ததாகக் கருதப்பட்டு, அதற்காக 10 கழஞ்சுப் பொன் தண்டமாக
வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் உடல் ரீதியான தண்டனை... (சரீர தண்டம்)
வழங்கப்படாது என்றும் முடிவெடுத்துள்ளனர்.
திரைராஜ்ய கடிகாவின் மத்யஸ்தன் (கணக்கர்) சதுரன் மூவாமிரவன் என்பவன்
ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் இரண்டு நந்தா விளக்குகள் வைப்பதற்கு 30
கழஞ்சு துளைநிறைப் பொன் தானமளித்துள்ளான். கணப்பெருமக்கள் நந்தாவிளக்கு
ளரிப்பதைக் கண்காணிக்கவும் ளிக்கவில்லை எனில் தெண்டம் வசூலிக்கவும் சிரதாமந்தர்
எனும் நிர்வாகப்பிரிவினர் உரிமை பெற்றிருந்தனர். இராஜமல்லச் ச.துர்வேதிமங்கலத்து
திருவேகம்பச்சேரியைச் சார்ந்த வியாபாரி மங்கலபிரியன் கலிவிலங்கி என்பவனின்
மகன் அலங்கார செட்டி என்பவன் ஸ்ரீபோந்தைப் பெருமாநடிகள் கோயிலில் நந்தா
விளக்கு எரிக்க 15 கழஞ்சுப் பொன்னினை கணப்பெருமக்கள் வசம் அளித்துள்ளான்.
தும்பூர் ஊரைச் சார்ந்த கம்பன் மலையன் மற்றும் நக்கன் பவித்ரம் எனும் இராஜராஜ
தலைக்கோலி லக்ஷணத்தாள் ஆகிய இருவரும் இராஜமல்லச் சதுர்வேதி மங்கலத்து
ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் நந்தாவிளக்கு வைப்பதற்காக 12 கழஞ்சுப்
பொன் தானமளித்துள்ளனர். நடனத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு அளிக்கப்படும்
உயரிய பட்டம் தலைக்கோலி ஆகும்.
இவ்விரண்டு ஊர்களிலுள்ள கல்வெட்டுகள் இது போன்ற பல்வேறு வரலாற்றுச்
செய்திகளை தன்னகத்தே கொண்டுள்ளன.
இரா. சிவானந்தம்
உதவி கண்காணிப்புக் கல்வெட்டாய்வாளர்
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 1/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. (871-907)
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 103/190
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/118
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ் I
அரசு 3: சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 1
அரசன் : முதலாம் ஆதித்த சோழன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் சிதம்பரேஸ்வரர் சன்னதி தெற்கு ஜகதி.
குறிப்புரை : சங்கர நாரணனார் என்பவர் நினைவாக அவனது தம்பி ஆதித்த குட்டியார்
என்பார் இக்கோயிலில் எடுத்துள்ள “சங்கர நாரண ஈஸ்வர கிருகம்” என்னும்
கோயில் இறைவனுக்கு, இவ்வூர் வடக்கில் தென்னை மரங்கள் உள்ள நந்தவனம்
ஒன்றினைத் திருவோத்தூர் சபையார் கொடுத்துள்ளனர். :
கல்வெட்டு :
1. ஷஹுஹிஸ்ரீ [॥*] சங்கர நாரணனார்க்காக அவர் தம்பியார் ஆதித்த குட்டியா
ரெடுப்பித்த
2. சங்கரநாரண-ஈ௩௩ஊற மத்து 2ஊஹாஜேவர்கே யுரித்தாக வடக்கில் தெங்கிட்ட
நஷவான-
3. ம் நீரோடு அட்டிக்குடுத்தோம் திருவோத்தூர் ஸடெலெயோம்
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 2/2017
மாவட்டம் திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 28
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 966
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 101/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/11
(தெ.க.தொ.)
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு இராட்டிரகூடர் ஊர்க் கல்வெட்டு எண்: 2
அரசன் கன்னரதேவன் (மூன்றாம் கிருஷ்ணன்)
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் சிதம்பரேஸ்வரர் சன்னதி தெற்குச் சுவர்.
குறிப்புரை : கத்தக் கோட்டத்து தரையூர் நாட்டு மாம்பாக்கம் ஊரைச் சார்ந்த கோதண்ட
மன்றாடி என்பவன் திருவோத்தூர் மகாதேவர் கோயிலில் பகல் விளக்கு
ஒன்று வைப்பதற்கு 50 ஆடுகள் தானமளித்துள்ளான்.
கல்வெட்டு :
1. ஹஷிய்ீ [॥*] கச்சியுங் தஞ்சையுங் கொண்ட ஸ்ரீக[ன்]*னர சேவர்க்கு
யாண்டு இருப[த்தே]ழா[வது] பல்குன்றக் கோட்டத்[து]
2. த[ரை]யூர் நாட்டு மாம்பா[க்க*]த்து கோதண்ட மன்றாடி திருவோத்தூர்
2ஹாஜேவர்க்கு பகல் விள[க்குக்கு] வைத்த சாவா[மூ]-
3. வா பேர்[ஆடு அ]ஞ்பது
த.நா... தொல்லியல் துறை தொடர் எண் :- 3/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 14
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 984
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 102/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/2
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 8
அரசன் .- உத்தம சோழன்
இடம் 3 வேதபுரீஸ்வரர் கோயில் சிதம்பரேஸ்வரர் சன்னதி தெற்குச் ஜகதி.
குறிப்புரை : திருவோத்தூர் மகாதேவர்க்கு வைத்த திருநந்தா விளக்கிற்கு 100 ஆடுகள்
வழங்கப்பட்டுள்ளன. இவ்வூர் வெள்ளாளன் பாம்புணைப் பாட்டில் என்பவன்
நெய் அளக்காமல் இருந்ததால் பல ஆண்டுகள் விளக்கு ளிக்க முடியாமல்
போனது. தற்போது இவன் மகன் விடங்கன் தொடர்ந்து விளக்கு எரிக்க
இவ்வூர்த் திருவுண்ணாழிகையுடைய இளங்கிடாசான் திருமேற்றளி பள்ளிகட்டில்
பிடாரன் வழிவகைச் செய்துள்ளான். இந்த விளக்கிற்கு இளங்கிடாசான் எனப்
பெயரிடப்பட்டுள்ளது. இவ்வூர் இரண்டு தலை பொற்கோயில் கைக்கோளப்
பெரும்படையர்குடி இவ்விளக்கு ளிப்பதைப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஹஹிஸ்ரீ [॥*] கோப்பரகேசரிபநற்கி யாண்டு ௰௪-ஆவது திருவோத்தூர்
ஹ[ா]*தேவர்க்-
2. கொரு திரு[க*]ஷாவிளக்கின் நூறாட்டுக்கும் மி[வ்*]வூர் வெள்ளாளன்
பாம்புணைப் பாட்டிற்-
3. கடவனா நெயட்டாமையில் விளக்கு முட்டிப் பலவாண்டு செல்ல மிவன்
மகன் விட-
4. நகனை துடர்வ யிவ்விளக்கு வைப்பி[தீ*]தான் மயிவ்வூர்த
திருவுண்ணாழிகையுடைய மிள-
5. ங்கிடாசானை திருமேற்றளி பள்ளிகட்டில்ப் பிடாரன் மிவ்விளக்கின்பேர் மிள
6. ங்கிடாசானை மித்[௰$,](ம்)மிரண்டுதலை பொற்கோயில் கைக்கோளப் பெ[ரும்]
படையார்க்குடி
சீல் கவனக் சம் அளந்து குடுப்போமா[னோமி[ப்*] பாட்டி[ல்] மன்றாடிக(ள்)ளோம்
மிவிளக்கேற்ற விண்ண-
8. [ப்ப]ஞ்செய்து மிவ்விளக். . . . . . .... மிளங்கிடாசானை திருமேற்றளி
பள்ளிகட்டில் பிடாரன் [॥*]
த.நா... தொல்லியல் துறை தொடர் எண் :- 4/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 14
வட்டம் $ செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 984
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 104/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/114
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 4
அரசன் : உத்தமச்சோழன்
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் சிதம்பரேஸ்வரர் சன்னதி தெற்குச் ஜகதி.
குறிப்புரை : உத்தமசோழ மாராயன் திருவோத்தூர் மகாதேவர் கோயிலில் திருநந்தா
விளக்கெரிக்க ஆடுகள் வழங்கியுள்ளான். சூளை நோமினால் இறந்த பின்னர்,
அரசியார் செம்பியன் மகாதேவியாரிடம் இவ்விளக்கு ளிக்க வழிவகை செய்ய
வேண்டுமென முறையிட்டனர். மீண்டும் 200 ஆடுகள் வழங்கி கோயிலில்
இரண்டு திருநந்தாவிளக்குகள் எரிக்க மாதம் ஒன்றுக்கு 16 நாழி, ஓர் உரி
மற்றும் ஓர் ஆழாக்கு நெய் கோயிலிலே கொண்டு சென்று கொடுத்திட
வழிவகைச். செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஹஹிய்ீ [॥*] கோப்பரகேஸரிபந்2[ர* ]க்கு யாண்டு மசலாவது திருவோத்தூர்
8ஹாசேவர்க்கு திருநஷாவிளக் கெரிப்ப-
2. தற்க்கு வைத்த ஆடு உத்தமசோழமாராயந் சூறையிற் போக உடையார்
செம்பியன் மாஹாசேவியார்க்கு விண்ண-
3. ப்பஞ்செய்ய அருளுச்செய்ய மீண்ட ஆடு இருனூறும் உடையார் வைத்த
திரு ௩ஷா விளக்கினுக்கு சாவாமூ-
4. வாப் பேராடு ஸ[ஞூ,]நாகிதவரை இரண்டு திருகஷாவிளக் கெரிப்பதற்க்கு
பஞ்சவாரக் காலோடொக்கு நாழியால் திங்கள்
5. பதிந[ா]று நாழி உரி ஆழாக்கு நெய்[யு]ம் கோயிலுக்கே கொண்டு சென்று
திருவுண்ணாழிகையுடையார்களு'
1. கல்வெட்டு முற்றுப்பெறொமல் உள்ளது.
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 5/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 15
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி 985
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 118/1939-40
மொழி : தமிழ் முன் பதிப்பு 20 ,4
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 5
அரசன் : பரகேசரிவர்மன் (உத்தமசோழன்)
இடம் : வேதபுரீஸ்வரர் கோயிலில் உள்ள சிதம்பரேஸ்வரர் சன்னதி மேற்கு ஜகதி.
குறிப்புரை : சோழ மன்னன் உத்தமசோழனின் பட்டத்து அரசியார் ஆருரன் அம்பலத்தடிகள்
என்பவள் திருவோத்தூர்க் கோயிலில் விளக்கெரிக்க 25 கழஞ்சுப் பொன்னினைத்
தானமளித்துள்ளாள்.
கல்வெட்டு :
1. ஹஷிஸ்ரீ கோப்பரகேஸரி வறரற்க்கு - யாண்டு . . .
2. த்தம சோழர் 2ஹாஜேவியார் ஆருரன் அம்பலத்தடிகள் . . .
3. த்தகோன் மல கட்டளையால் நின்ற இருபத்தைங் கழஞ்சு . . . தைங்
கழஞ்சும் . . .
4. லியூர் கோட்டத்து காயரம்பேடு நாட்டு சிவன்புதுப்பாக்கத்து . . . க்கும்
தேவர் . . .
5. யொடொக்கும் உழக்கினால் ஸ்ரீகோயிலுக்கு கொண்டு செலுத்த
திருடண்ணாழிகை உடையார்கள் வசம்
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 6/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
2. ..
னங்க ஆட்சி ஆண்டு : 2
ய வரலாற்று ஆண்டு : கியி. 1006
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 100/1900
தமிழ் I முன் பதிப்பு : 7/110
இ (தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 6
முதலாம் இராசராசன்
வேதபுரீஸ்வரர் கோயில் சிதம்பரேஸ்வரர் சன்னதி வடக்குச் சுவர்.
தஞ்சாவூர்க் கூற்றத்துக் குருக்காடி ஊர்த் தலைவன் கண்டன் பரகேசரி
என்பவன் திருவோத்தூர் யாளுங்கணத்து உறுப்பினர் நெடுமாங்கிழான் பரமடி
கிரமவித்தன் என்பவனிடமிருந்து 5 மா நிலம் வாங்கி திருவோத்தூர் கோயிலுக்கு
அர்ச்சனா போகமாக (பூசை செய்பவர்களுக்கு) வழங்கியுள்ளான். இவ்வூர்ச்
சபையார் கண்டன் பரகேசரியிடமிருந்து இந்த நிலத்தின் மீதான வரிமினை
நீக்குவதற்குப் பணம் (திறை திரவியம்) பெற்றுக் கொண்டனர்.
இதக் க்க சேத்து மைபூ[ண்]*டமை மன[க்*]கொளக் காந்தளுர்சாலை
கலமறு[த்]*தருளி வேங்கெநாடுங் கங்கபாடி[யு*]ம் னுள[ம்ப]*பாடியு[ம்*]
தடிகை[பா]டியுங் குடமலைநாடுங் கொல்[ல*]முங் கலிங்க(லிங்க)மு[ம்*]
எண்[டி*]சை புகழ்தர ஈழமண்டலமுந் த-
மசத கல்லில் ழியூழியுள் எல்லா யாண்டுந் தொழு[த*]கை விளங்கு[ம்*]
யாண்டே செழிஞரைத் தேசுகொள் ஸ்ரீகோவிராஜமாஜகே(£)ஸரிபந[ற்கு*]
யாண்டு ௨௰கவது காலியூர்க் கோட்ட[த்]*து தன்கூற்று
ட்டு ஸ்கல் தீதென்கரை தஞ்சாவூர் கூ[ற்]*றத்துக் குருக்காடிக்
குரு(க்)க்காடிகிழான் கண்டன் பரகேசரி திருவோத்தூர் யாளுங்கணத்தாருள்
நெடுமாங்கிழான் [பர]மடி ௯2வித்தன் பக்கல் யான் விலை
ம்
ல்க கவ்வ ௬வுநாலோமத்து[க்]*கு கமுகந்தோட்டத்துக்கு
மேற்கும் தென்பாற்கெ[ல்*][லை] இவன் தன் நில[த்*]து[க்]கு வடக்கும்
மேல்பாற்கெ[ல்*]லை அத்தாணிநங்கை செறுவுக்கு பாரய்]*ந்த நீரோடு
வா(ய்*]காலு[க்*]கு
நக்கு கஓாலோமத்து[க*]கு தெற்கு னாற்* போ[ற்*] கெ[ல்*]லையு[ரூ]
மக[ப்*]பட்ட நிலம் உ[ண்ணி]லமொழிவி[ன்]*றி மச சாண் கோலா[ல்]*
ஊ[ர்]*க்குண்டில் நாலுமாவும் கமுகந்தோட்ட[த்]*தில் வடக்கடைய ஒரு
மாவும் த-
இல் தக க ன் பரமடி'கிர2வி[த்*]தன் ப[க்*]கல் நான் விலைகொண்ட
பூமிக்கு இ[வ்*]வூர் ஸலெயோமும் இவன் பக்கல் இறைஉஹ்
கொண்டு எற்பேர்[ப்ப*]ட்ட இறையுமிழி[ச*]சி கு[டு]த்தோ[ம்*] ஸமஸெ-
ரீக ந்தி மிறைசும் வேலியிட்டு பூ பறித்[து*]மர[ம்*] நட்டும் இதற்கு
வேண்டு உழப்ப உழந்துண்ண குடுத்தேன் கண்டன் வீரகேசரியேன்
[n*]
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 7/2017
மாவட்டம் : திருவண்ணாமலை .. ஆட்சி ஆண்டு 3 -
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி, 12-18 நூற்.
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: -
மொழி : தமிழ் முன் பதிப்பு உ
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 7
அரசன் 3 -
இடம் : வேதபுரீஸ்வரர் கோமில் கருவறை தெற்கு குமுதம் (தட்சிணாமூர்த்தி மண்டபம்
அருகில்),
குறிப்புரை : அறம் உரைத்த நாயனார் (தட்சிணாமூர்த்தி) உருவத்தினையும்
முன்மண்டபத்தையும் மத்திபல்லவன் எடுப்பித்துள்ளச் செய்தி.
கல்வெட்டு
1. ஹஹிஸ்ரீ அறமுரைத்த நாயனார்
2. மத்திபல்லவந் திருப்பணி ௨
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 8/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 5
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1128
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 84/1939-40
தமிழ் முன் பதிப்பு ட
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 8
விக்கிரம சோழன் வ
வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று கிழக்கு வெளிப்புறச் சுவர்.
சோழ மண்டலத்துப் பாண்டிகுலாசநி வளநாட்டுக் கிளியூர் நாட்டு குறிச்சி
என்னும் ஊரினன் குறிச்சியுடையான் திருச்சிற்றம்பலமுடையான் எனும் அபிமாநப்
பல்லவரையன் என்னும் அதிகாரி ஆராவமுதன் என்பவனிடம் பொருள் கொடுத்து
நிலம் ஒன்றினை வாங்கித் திருவோத்தூருடையார் கோயிலில் அமாவாசைத்
தினத்தன்று வழிபடவரும் பக்தர்களுக்கு (அபூர்வி ஆண்டார்கள்) உணவளிக்க
வேண்டி இந்நிலத்தினைத் தானம் அளித்துள்ளான்.
கல்வெட்டு :
மாது புணரப் புவிமாது வளர நாமாது விளங்க ஜயமாது விரும்பத்
தன்னிருபது மலர மன்னவர்சூட மன்னியவுரிமையால் மணிமுடிசூடி
... சென்று திசைதோறும் வளர்ப்ப வெங்கலி நீங்கி மெய்யறந்தழைப்பக்
கலிங்கஇரியக் கடாமலை நடாத்தி வலங்கொளாழி வரை
இருசுடரளவும்மொருகுடை கிழற்றி வீரஷிஃ2ஹாஸநத்து
முக்கோக்கிழாநடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பரராந
அிலவநச்-
. ஸ்ரீவிகூமசோழ ஜேவற்கு யாண்டு அஞ்சாவது சோழமண்டலத்துப்
பாண்டி குலாசநி வளநாட்டுக் கிளியூர் நாட்டுக் குறிச்சிக் குறிச்சிடடை-
உச் சிற்றம்பலமுடையாநாந அபிமாந மேருப் பல்லவரையன் ஜெயங்கொண்ட
சோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துக் காமிரம்பேடு னா-
10
10. த
11,
௨ பாற்கெல்லை குசவன் புதுப்பாக்கத்தேரிக்குக் கிழக்கு நோக்கி நீர்
புகுகிற வாய்க்காலுக்குத் தெற்கும் கீழ்பாற்கெல்லை கொதுகன்
ம(ட்)டத்துக்கு
, பாற்கெல்லை சாத்தனார் கோயிலில் மேட்டுக்குக் கிழக்கும் தென்பாற்கெல்லை
பிரப்பமொட்டைக்கு வடக்கும் நான்கெல்லைக்குட்பட்ட பதிநாற் சாண்
பே
- ண்டாமிரமும் திருவோத்தூராளுடையார் கோயிலில் அபூர்வியாண்டார்கள்
அமாவாஹியமுது செய்கைக்குச் செய்த அடைந்தவாரலையன் மடத்து
.. அனாகுல விளாகமென்று இவ்வூர் காணிஉடைய வேசாலிபாடி
நாட்டுத் தலைக்குளத்துத் தலைக்குளமுடையாந் அரயன் சோலை
ன் மண்டை நம்பியும் அரயன் ஆராவமுதந் பக்கல் வஷ4் குடுத்து
சஞூாசித்தவற் இறையிழிச்சினான் இக்-
உ ஹே க்ஷ நன்றாக ॥ உ
11
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 9/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 6041
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி, 1125
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 87/1900
தமிழ் முன் பதிப்பு : 7/96
(தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 9
விக்கிரமசோழன்
வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று தெற்குச் சுவர்.
ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர் கோட்டத்து காழியூர் நாட்டுக்
குடநகர் என்னும் ஊரில் விக்கிரம சோழனின் ஆறாவது ஆட்சியாண்டில்
(கி.பி. 1124) ஏற்பட்டப் பெருவெள்ளத்தின் காரணமாக ஊரும் விளைநிலமும்
மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் இவ்வூருக்கான வரி கொடுக்க வேண்டி,
இவ்வூரிலிருந்த 2000 குழி நிலத்தினை இவ்வூரார் பொது ஏலத்தில் விட்டனர்.
இந்நிலத்தினை இங்க நாட்டு நட்டுவாய்க் குடையான் ஆதித்தன் உய்யவந்தான்
என்பவனுக்கு 25 காசுகளுக்கு இவ்வூரார் விற்றுக்கொடுத்துள்ளனர். இவன்
இந்த நிலத்தினை, மடத்தினை நிர்வகிப்பதற்காக மடப்புறமாக தபஸ்வி
விடையின்மேல் வருவான் என்பவனுக்கு அளித்துள்ளான். இந்நிலத்துக்கு
புணற்கால், பள்ளக்கால் போன்றவற்றால் நீர்பாயவும், ஆற்றில் ஏத்தம் இட்டு
இறைக்கவும், கொல்லையில் கால்வாய் வெட்டிக் கொள்ளும் உரிமையும்
வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிலத்தின் மீதான எச்சோறு, கூற்றுநெல்,
வெட்டி முட்டையாள், சென்லீரமஞ்சி போன்ற வரிகளையும் நீக்கி அளித்துள்ளனர்.
1. ஹஸிஸ்ீ பூமாது புணரப் புவிமாது வளர நாம[£]து விளங்க ஜயமாது
விரும்பத் தன்னிருமதுமலர் மன்னவர் சூட மன்னிய வுரிமையா[ல்]
மணிமுடி சூடிச் செங்கோல் .சென்று திசைதொறு நட-
2. ப்ப வெங்கலி நீங்கி மெய்யறந் தழைப்பக் கலிங்க இரியக் கடமலை நடாத்தி
வலங்கொளாழி வரையாழி நடாத்தி இருசுடாளவும் ஒருகுடை. நிழற்ற
வீரஷிஃஹாஸநத்து முக்கோக்கி[ழ]-
12
10.
௨ ரீநடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிபற்மராந கி, வநவசூவத்திகள்
ஸ்ரீவிகூ.மசோழமேவற்கு யாண்டு ஆறாவது எதிராமாண்டு ஜயங்கொண்ட
சோழ மண்டலத்துக் காலியூர்க்-
. கோட்டத்துக் காழியூர் நாட்டுக் குடநகர் ஊரோம் ஊர்க்குச் சமைந்து
இவ்வூர்ப் பெருந்துறை உடையான் இரவி எழுவநேனும் எழுவன்
உலகுடையாநேனும் எழுவன் இரவிஎனும் எழுவன் பிள்ளை நம்பிஎ-
னும் பெருந்துறை உடையான் உலகுடையான் வாழவந்தாநேனும் உள்ளிட்ட
ஊரோம் இவ்வூர் யாண்டு ஆறாவது பெருவெள்ளங்கொண்டு ஊரும்
போகமுமழிந்து அநதபப்பட்டு இவ்வூரிறை இறுக்கைக் குட-
. விலாமையில் இவ்வூர் நீர்நிலம் கொடுபாட்டுத் தென்கழநிமில் கீழ்பாற்கெல்லை
ஈகைச் செறுக்களுக்குக் கிழக்கு நட்ட கல்லுக்கு மேற்கும்
தென்பாற்கெல்லை திருவோத்தூர் ஏரி செம்பியன்-
. மாதேவிப் பேரேரியில் நின்றும் திருவோத்தூர்க்கு நீர்பாயுங் கேசவ வாய்க்காலுக்கு
வடக்கும் மேல்பாற்கெல்லை புளியஞ்செறுவுக்கும் ஆலஞ்செறுவுக்கும்
கிழக்கு நட்ட கல்லுக்[கு]*
. கிழக்கும் வடபாற்கெல்லை கோவன்செறுவும் கருணாகரன் செறுவுக்கும்
தெற்கு நட்ட கல்லுக்கு தெற்கும் இந்நாற்பேர் எல்லைக்கும் உட்பட்ட
நீர்நிலமும் வரம்பும் காடும் களரும் மேடும்
. மேநோக்கிய மரமும் கீழ்நோக்கிய கிணறும் திருவுலகளந்த ஸ்ரீபா[த ]க்கோலால்
குழி இரண்டாமிரமும் பெறுவிலைக்காணங் கிழி[ஸ]*கச்செலத் தந்து
விற்றுத்தரக் கொள்வீருள்ீரோ வென்று கூற இம்-
மொழி கெட்டு எதிர்மொழி குடுத்தோன் இங்கநாட்டு நட்டுவாய்க்குடி
நட்டுவாய்க்குடையான் ஆதித்தன் உய்யவந்தாந் ஆளுடையார்
திருவோத்தூருடையாரைக் கும்பிட்டு பமிவஜிமாவு[ந]-
ம் பண்ணிமிருக்கும் கவஷி விடையின் மேல்வருவானுக்கும் இவந்
வமமத்தார்க்கு[ம்]* மடப்புறமாக இப்பூமி பெறுவிலைக்காணங்
கிழிகைச் செலவத்தந்து கொள்வேநேன் முற்கூறிய பெருந்துறை
உடையார்களுக்குப் பெறுவிலை-
13
12. க்காணக் கிழிகைச் செலக் குடுத்த அன்றாடு நற்கா[சு] இருபத்தஞ்சு
மாவணக்களியேறக் கொண்டு இவ்வொரு வேலி நிலமும் இறையிலியாக
நட்டுவாய்க்குடையான் ஆதித்தன் உய்யவந்தாந விடையின்
மேல்வருவானுக்கு மடப்புற-
13. மாக விட விற்றுக் குடுத்தோம் கு[ட [நகர் ஊர்க்குச் சமைந்து பெருந்துறை
உடையார்களோம் இந்நிலத்துக்கு[ப் பு]ணற்காலாலும் ப[ள்]*ளக்காலாலும்
நீர்பா[ய]ப் பெறுவதாகவும் ஆற்றேத்தமிட்டிறைக்க கொல்லை[மி]ற்
க[£]ல்பெறுவதாக-
14. வும் இந்நிலத்துக்கு எச்சோற்றுக் கூற்றுநெல் வெட்டி முட்டையாள்ச் சென்னீ
ரமஞ்[சி] யுள்ளிட்ட எப்பே(ர)ற்பட்ட திருக்கொற்றவாய்தலாற் போந்த குடிமை
சொல்லப் பெறாதோமாகவும் இத்தன்மத்துக்கு இடையூறு வாறாமற் காக்-
15. க[க்]*கடவோமாகவும் இடையூறுவரிற் ம23ாஸநத்திலே நித்த மஞ்சாடி
பொன் மன்றப்பெறுவதாகவும் மன்றுபாடு இறுத்தும் இத்தந்மம்
சந்திராதித்தவரை நிலை நிரு[த்]*தக்கடவோமாக ஒரு காலாவது
மிருகாலாவ-
16. து முக்காலாவதும் விற்றுக்குடுத்தோம் குடநகர் ஊர்க்குச் சமைந்து
பெருந்துறை உடையார்களோம் இத்தந்மம் ஸ்ரீபதாஹேறாற றகக்ஷ ॥
14
த.தா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 10/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 8
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு :. கியி. 1126
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 88/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/97
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு 3 சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 10
அரசன் 3 விக்கிரம சோழன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் மகா மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : சோழ மண்டலத்து கேயமாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு வைய்ப்பூர்
ஊரைச் சார்ந்த தபசி வைப்பூரூடையான் தேவன் விடையின்மேல் வருவான்
என்பவனுக்கு, அரியாவூர் ஊரார் 4250 குழி நிலத்தினை பொது ஏலத்தில்
விட்டு விற்றுக் கொடுத்துள்ளனர். திருவோத்தூருடையார்க்குத் தீருவீதிப்
பணிசெய்யும் திருவீதி ஆண்டார்களுக்கு உணவளிக்க த்ருதி மடப்புறமாக
இந்நிலம் அளிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஹஸிஸ்ரீ பூமாலை மிடைந்து பொன்மாலை திகழ்தரப் பாமாலை மலிந்த
பன்மணித் திரள்புயத் திருநிலமடந்தையோடு ஜயமக எிருப்பக்
கனவரைமார்வந் தனதெனப் பெற்றுத் திரு-
2. மக ளொருதனி மிருப்பக் கலைமகள் சொற்றிறம் புணர்ந்த கற்பினளாகி
விருப்பொடு நாவகத் திருப்ப அகிலபுவனமுங் கவிப்பதோர் புதுமதி
போல வெண்குடை மீமி[ச] நிழற்றத் திசைதொறுந்-
3. திகிரியோடு செங்கொல் நடப்பக் கருங்கலி யெ]ாளித்துப் பிலத்திடைக்
கிடப்பக் குளத்திடைத் தெலுங்கவீமன் விலங்கல் மிசை ஏறவுங் கலிங்கர்
பூமியைக் கனலெரி பருகவும் ஐய்ம்ப[ஸ]டப் பருவத்து வெ-
15
10.
, ம்படை தாங்கி வேங்கை மண்டலத் தாங்கினி திருந்து வடதிசை
வடிப்படுத்தருளித் தென்றிசைத் தருமமுந் தவமுந் தானமுந் தழைப்ப
வேதமும் மெய்மையுமாதியுகம் [பொலத் தலைத்தலை சிறப்ப வந்து
சுடர்மணி
. மகுடம் முறை[ன)]*மமிற் சூடி மன்னுமிர்க்கெல்லா மின்னுயிர்த் தாய்போற்
றண்ண[ளி] பரப்பித் த[னி] வந்து த[ன்] கொற்றவாய் தலப்புறத்து
மணிநா வொடுங்க முரசம் முழங்க விசயமும் புகழும் மென்மே லோங்கச்
(சன
. சழியர் வெஞ்சுரம் புகச் சேர[ல]ர் கடல்புக அழிதரு சிங்கணர் அஞ்சி
நெஞ்]ச[ல]மாக் கங்கர் திறையிடக்கன்னடர் வெ[ன்னி]டக் கொங்க
ரொதுங்கக் கொங்கணர் சா[ய] மற்றெத்திசை[மன்ன]௬ு[ந்] தந் தந்[த]மக்
கரணெ-
. எத் திருமலர்ச்சேவடி [உரி]மமி லிறைஞ்சத் தொ[ல்]லை ஏழுலகுந் தொழுதெழத்
தோன்றிய முல்லை வா[ள்] நகை முக்கோக்கிழாநடி உமையோடு சங்கரன்
இமையச் சிமையத் திருந்தனநெனப் பொருந்தி உடநிருப்ப ஆ-
௨ங்கவன் மகிழுங் கங்கையொப்பாகிய தெரி[வ]யர் திலதந் தியாகபதாகை
புரிகுழல் மடப்பிடி புனிதகுணவனிதை திரிபுவனமுழுதுடையாளவன்
திருவு[ள்ள]த் தரு[ள்] முழுதுமுடையாளோடு உடறிருப்ப
வீ மஹிஹாணஹனத்-
[து] முக்கோக்கிழாநடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேஸரிவ[ந]மா
தி_ல-வரச்சக்[கர]*வர்த்திக[ள்] ஸ்ரீவிக்கிரமசோழ ௨]வர்க்கு யாண்டு
[எ]ட்டாவது ஜெயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர் கோட்டத்துக்
காயிரம்பேடு நாட்டு அரியாவூர் ஊரோம் ஊர்க்குச்சமைய்ந்து ஆணிகிழவன்
ஏறன் பிச்ச-
னும் ஏறன் நிமத்தனும் நிமத்தன் ராஜசிங்கதேவனும் தியம்பன் குராவனும்
நிமத்தன் காக்குநாயகனும் இவ்வனைவோம் எங்களுர் பட்டிறைப்
பட்ட[]*மயாலும் அடுத்தவாண்டைச் செலவு கோயிற்றமர் தவிராமயாலும்
நாங்களெங்களுர் அம்பலத்திருந்து இவ்வூர்க்குக் காணிகொள்வார்க்கு
விற்-
16
14.
றுக்குடுத்தும் இறையிலி செய்வார்க்கு விற்றுக்குடுத்தும் இறையிறுப்போமே
யென்று ஆணிகிழவன் ஏறன் பிச்சனும் ஏறந் நிமத்தனும் நிமத்தன்
ஈாஜசிங்கதேவனும் தியம்பன் குராவனும் நிமத்தன் காக்குநாயகனும்
இவ்வனைவோம் ஸஃவசித்து இருந்து இறையிலி நிலைவிலையாவணக்
கையெழுத்து இவ்வூர்ப் பி-
.டாகை தண்டலத்துக் [கீ]ழ்கழனிக்குக் கிழக்கு நட்ட கல்லுக்குக் கிழக்கும்
வடபாற்கெல்லை தண்டலத்திநின்றும் வே[ல்]மேற்ப் போன வழிக்குத்
தெற்கு நட்ட கல்லுக்குத் தெற்கும் கீழ்பாற்கெல்லை கார்மான் காலுக்கு
மேற்க்கு நட்டகல்லுக்கு மேற்குத் தென்பாற்கெல்லை மழவராயப் பெரிஅரயன்
கொல்லையில் செ
தற்கில் ஒழுங்[]*கயில் நட்ட கல்லுக்கும் இந்நாற்பேர் எல்லைக்கு நடுவுப்பட்ட
கொல்லைத்தறை காடுவெட்டி(ய்)க் கட்டைபறித்து மேடும் பள்ளமும்
திருத்தி நீர்நிலமாகப் பதிநாறுசாண்கோலால் குழி நாலாயிரம் இந்நிலத்திற்குத்
தென்கிழக்குக் குடிஇருப்பு இக்கோலாற் குழி இருநூற்றைய்ம்பதுமாகக்
குழி நா-
லாயிரத்திரு நூற்றைய்ம்பதும் எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு
இருபது இக்காசு இருபதும் ஆவணக்களியே கிழிகைச்செலத் தந்து
இறைஇலியாக நாங்கள் விற்றுத்தரக் கொள்வீருளிரொவென்று கூற
இம்மொழி கேட்டு எதிர்மொழி குடுத்தோன் திருவோத்தூருடையாரைக்
கும்பிட்டிரு-
- [க்]*கும் தவஸி சே ர்டலத்[து]*க் கேயமாணிக்க வளநாட்டு கல்
மண மரு
நாட்டு வைப்பூர் வைப்பூரூடையான் தேவந் விடையின்மேல்வருவானேன்
யானிறொ உங்கள் கொல்லை நிலத்துக்கு வடபாற்கெல்லை
தண்டலத் [தி]நிந்றும் வேல்மேற்போன பெருவழிக்கு தெற்கும்
கீழ்பார்[க]*கெல்லை கர்மாந்காலு-
க்கு மேற்கு தெந்பாற்கெல்லை மழவராயப் பெரியரையந் கொல்லையில்
தெற்கில் ஒழுங்கைக்கு வடக்கு மேல்பாற்கெல்லை தண்டலத்துக்
கீழ்கழநிக்கு கிழக்கும் இந்நார்பாற்கெல்லை நடுவுபட்ட நிலம்
பதிநாற்சாண்கோலால் நீர்நிலமாகக் குழி நாலாமிரமும் இந்நிலத்துக்கு
குடியிருப்பாக நத்தங் கு-
17
17.
18.
19.
20.
் 21.
22.
ழி இருநூற்[ன)*றம்பதும் ஆக குழி நாலாயிரத்திரு நூற்[ன/]*றம்பதும்
காலியூற்கோட்டத்துக் காழியூர் நாட்டு திருவோத்தூர் ஆளுடையார்
திருவோத்தூர் 2ஹாதேவர்க்கு திருவீதி பணிசெய்யுந் திருவீதி
ஆண்டார்களுக்கு அமுதுசெய்கைக்கு திருவீதிமடப்புறமாக ஆகி
லாஸமமணேயும விலையாக எம்மிலிசைந்த விலைப்-
பொருள் அந்றாடு நற்காசு இருபதும் யானிடக் கொண்டு இறையிலியாக
நீங்கள் விற்றுத் தரக்கொள்வேநெந்று பிற்கூற முற்கூறிய காலியூற் கோட்டத்து
காயிரம்பேடு நாட்டு. அரியாவூர் ஆணிகிழவந் ஏறந் பிச்சநும் ஏற[ந்]*
நிமத்தநும் நிமத்தீந் இராசசிங்கதேவநு[ம்]*நிமத்தந் குராவநும் நிமத்தந்
காக்கு
நாயகநும் இவ்வனைவோம் ஊற்கு சமைந்து எங்கள் காணியாந தண்டலத்துக்
கடைக்கழநிக்கு கிழக்கு வடபாற்கெல்லை தண்டலத்திநிந்றும்
வேல்மேற்போந பெருவழிக்கு தெற்கும் கீழ்பாற்கெல்லை கர்மாந்காலுக்கு
மேற்குந் தெந்பாற்கெல்லை மழவராயப் பெரியரையந் கொ-
ல்லையில் தெந்ஒழுங்கைக்கு வடக்கும் இந்நாற்பாற்கெல்லையுள் நடுவுப[ட்]*ட
. நிலம் பதிநாற்சாண்கோலாற் குழி நாலாயிரமும் இந்நிலத்துக்கு தெந்கிழக்கு
சாரநத்தங் குழி இருநூற்[ன)]*றம்பதும் ஆக குழி நாலாயிரத்
திருநூற்[]*றம்பதும் உள்நிலம் ஒழிவிந்றிப் பிற்[கூ]றி[ய] சோழ
மண்டலத் -
துக் கேயமாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு வைப்பூரு
வைப்[பூ]ருடையாந் தேவந் விடையிந்மேல்வருவாநுக்கு ஆளுடையார்
திருவோத்தூருடையாற்கு திருவீதி பணி செய்யுந் திருவீதி
ஆண்டார்களுக்கு அமுதுசெய்கை[க் ]*கு திருவீதிமடப்புறமாக
ஆதிசாஸஹமணேறா-
ஈ விலையாக எம்மில் லிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு இருபதும்
ஆவணக்களியே கிழிகைச்செல்ல கைக்கொண்டு இறையிலியாக வி[ற்]*று
விலையாவண[ஞ்] செய்து குடுத்தோம் இந்நிலத்துக்கு நீர்பாயக் கார்மாந்
காலே எரியாக குலை உசர்த்தி கொ-
18
23.
24.
25.
26.
27.
_ள்ளப்பெறுவதாகவும் பைங்கிணற்றில் ஏரிநீர் பாயப் பெறுவதாகவும் [நீர்]விலை
உப்புக்காசு உள்ளிட்ட வெட்[டி]முட்டையாள் சில்லிறை சோறுமாட்டுச்
செந்நீர[ம]ஞ்சி மற்[று]ம் எப்பேற்பட்ட திரு[க்]கொற்றவாய்தல் ஏறி போந்த
குடிமை சொல்லபெறாததாகவும் ॥ணே-
றற விலையாக தேவந் விடையிந்மேல்வருவாநுக்கும் இவந் வங்மாத்தார்க்குமே
திருவீதிமடப்புறமாக இறையிலி யாவணஞ்செய்து குடுத்தோம்
இ[ருகா]லா[வ]தும் [முக்கா](ல்)லாவதும் எம்மிலிசை[ந்]த விலைப்பொருள்
முற்றும் அ[ற]*க்கொண்டு ஓலை-
க்குற்றஞ் சொற்பழுது எழுத்துப்பிழை யென்று சொல்லப்பெறாததா[க ]*வும்
இத[ற்]*கிதுவே பொரு[ள்]*மாவறுதிப் பொருள் செலவோலையாவதாகவும்
இதுவல்லது [பொருள் ]மாவறுதிப் பொரு[எள்]*செலவோலை
காட்டப்பெறாததாகவும் இப்படி இசைந்து இறை-
யிலி யாவணஞ்செய்து குடுத்தோம் “இத்தந்மஞ் சந்திராதித்தவரை
செல்லக்கடவதாக செய்து குடுத்தோம் இவ்வ[னை]வோம் இவர்கள் வேண்ட
எழுதிநேன் அரியாவூ[ர் சி]வப்பிராமணந் ௯மஷூந் திருமாகாளலட்டந்
எழுத்து இப்படிக்கு இவை ஆணிகிழவந் ஏறந் பிச்சந் எழுத்து
இப்படிக்கு இவை ஆணிகிழவந் ஏற[ந்]* நிமத்தந் எழுத்து இப்படிக்கு
இவை ஆணிகிழவந் அவநிவீமந் எழுத்து, இப்படிக்கு இவை தியம்பந்
குராவந் எழுத்து இப்படிக்கு இவை ஆணிகி[ழ]வந் நிமத்தந் காக்குநாயகந்
எழுத்து இப்படிக்கு இவை சோழந் ஏறந் எழுத்து இப்படிக்கு இவை
நிமத்தந் இராசசிங்கதேவந் எழுத்து. ॥-
19
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 11/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 6
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1189
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 91/1939-40
மொழி : தமிழ் முன் பதிப்பு உ ல
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 11
அரசன் : இரண்டாம் குலோத்துங்கன்
இடம் 3: வேதபுரீஸ்வரர் கோயில் மகா மண்டபம் கிழக்கு வெளிப்புறச் சுவர்.
குறிப்புரை : கல்வெட்டு முற்றுப்பெறொமல் உள்ளது. இக்கோயிலில் திருநந்தா விளக்கு
ஒன்று வைப்பதற்கு பசு தானம் வழங்கப்பட்டுள்ளது.
1. ஹஷிஸ்ீ பூமேவு வளர் செம்பொந்மார்பு புணர நாமேவு கலைமகள் நலம்
பெரிது சிறப்ப விசைய மாமகள் வெ .. .
2. றைஞ்ச நீணிலம் மடந்தையைத் திருமணம் புணர்வ சீர்வளர் தரும்
அணிமுடி கவித்தெ மணிமுடிசூடி மல்லை ஞா . ..
ட]
. வெண்குடை நிழற் செங்கோலோச்சி வாழி பல்லூழி நடப்ப செம்பொந்
வீரஹிநாஸகத்துப் புவந முழுதுடை ...
, 4. கீகரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு ௬ ஆறாவது
ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலி . . .
5. த் திருநஷாவிளக்கு ஒந்றுக்கு விட்ட பசு
20
த.நா.அ: தொல்லியல் துறை தொடர் எண் :- 12/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 6
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1139
ஊர் : திருவோத்தூர் ர இ.க. ஆண்டறிக்கை: 77/1900
மொழி : தமிழ் ட முன் பதிப்பு : 7/85
(தெ.க.தொ.)
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 12
அரசன் : இரண்டாம் குலோத்துங்கன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் அர்த்தமண்டபம் வடக்குச் சுவர்.
குறிப்புரை : சூற்றி என்பவனின் மகன் கொங்கன் செல்வமுத்தரையன் என்பான்
மிருகவேட்டைக்குச் சென்ற போது, மிருகத்தின் மீது எறிந்த அம்பு தவறுதலாக
புலியன் என்பவன் மீது பாய்ந்து இறந்துவிட்டான். பன்னாட்டார் என்னும்
நிர்வாக அமைப்பினர் கூடி இரு குடும்பத்தாரிடம் பகை ஏற்படவேண்டாம்
என்று செல்வமுத்தரையனை இக்குற்றத்திலிருந்து விடுவித்தனர்.
இக்குற்றத்திற்காகத் திருவோத்தூர் இறைவனுக்கு ஒரு விளக்கு வைக்க
பதினாறு பசுக்களைக் கொடுக்கத் தீர்ப்பளித் துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஹவஷிஸ்ரீ பூமேவி வளர்த் திருப்பொன் மார்பு புணர் நாமேவு
2. கலைமகள் நலம் பெரிது. சிறப்ப விசையமாமகள் வெல்புயத் திருப்ப இ-
3. சையின் செல்வி எண்டிசை விளங்க நிருபர் வன்தி[]*றஞ்ச நீணிலமடலை
4. யைத் திருமணம் புணர[ர்]*ன்து சீர்வளர் தரும[ம்]* அணிமுடி கவி
மணிமுடி சூடி
5. மல்லைஞாலத்து மன்ந-யிற்க்கெல்லாம் எல்லையில் இன்பம் இசைவிநி
லெய்தி வெ-
6. ண்குடைநிழற் செங்கோலோச்சி வாழி பல்லூழி ஆழி நடப்ப செம்பொன்
வீரஹிஃ
21
7. ஹாஸநத்து புவநமுழுதும் உ[]*டயாளோடும் வீற்றிருன்தருளிய
கோராஜகேச-
8. ரிபந்மராந திரிபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழ தேவற்க்கு யாண்டு
ஆ ் ன்
9. றாவது விருகவேட்டை போநயிடத்தில் சூற்றி மகன் கொ[ங்]கந்
செல்வமுத்தரையன் எசடத்தில்
10. விருகத்தை தப்பி புலியனை[பட புலி]யன் பட்டவாறே பன்னாட்டார் திரண்டு
திருவோத்தூ-
11. ர் உ[ன]*டயார்க்கு செல்வமுத்[தரைய]னை இடுவிச்சு பகைஅற விடுவிச்ச
பசு(ப்) பதிநாறு
22
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 13/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 443
வட்டம் : . செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1144
னர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 79/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 787
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 13
அரசன் : இரண்டாம் குலோத்துங்கன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் மகா மண்டபம் வடக்குச் சுவர்.
குறிப்புரை : செய்யூர் ஊரைச் சார்ந்த முரிவன் பல்லவராயன் என்பவன் இருங்கலை
அரைசூருடையான் என்பானிடமிருந்து விலைக்கு வாங்கின நீர்நிலம் மற்றும்
தோட்ட நிலம் 1000 குழி நிலத்தினைத் திருவோத்தூருடைய நாயனார் கோயிலில்
_திருநுந்தா விளக்கு ஒன்று வைப்பதற்காக வழங்கியுள்ளான்.
கல்வெட்டு :
1. ஹஸிஸ்ரீ கி,ல-நச்சக_வத்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோ-
2. ழஜேவற்கு யாண்டு யக ஆவது ஆளுடையார் திருவோத்தூரு-
3. டைய. நாயநாற்க்[கு] செய்யூர் முரிவந் பல்லவராயந் வைத்த
4. திரிநுந்தாவி[ள]*க்கு ஒந்று[க்]*கு பர[£]சூர் நாட்டு இருங்கலை
அரைசூ[ர௬ு ]டை-
5. யாந் பக்கல் கொண்டு விட்ட நீர்நிலம் கருப்புச்செறுவு[ம்] திருவே-
6. கம்பமுடையாநும் தோட்டச்செறுவு[ம்]* தடி ௩ நால் குழி ஆமிரமு-
7. ம் வஞாதித்தவரை செல்[வ]தாக கொண்டு விட்டமைக்கு இ-
8. வை அரைகூருடையாந் எழுத்து இது பந்ம[£]*வேயற ஈக
23
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 14/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 19
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1165
ஊர் : திருவோத்தூர் சு இ.க. ஆண்டறிக்கை: 85/1939-40
மொழி : தமிழ் முன் பதிப்பு 3 -
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 14
அரசன் : இரண்டாம் இராசராசன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று கிழக்கு வெளிப்புறச் சுவர்.
குறிப்புரை : கிளிய பல்லவரையன் அம்மையப்பன் என்கிற அதியமான் என்பவன் திருவோத்தூர்
ஆளுடையார் கோமிலில் ஒரு நந்தா விளக்கு எரிக்க அளித்த 80 பசுக்களைக்
கீரந்தை ஊரைச் சார்ந்த திருவெண்காட்டுக்கோன் என்பான் பெற்றுக்கொண்டுத்
தினமும் ஓர் உழக்கு நெய் அளிக்க உடன்பட்டுள்ளான்.
கல்வெட்டு :
1. ஷுஹிஸ்ரீ தில-வந வ௯,வத்திகள் ஸ்ரீமாஜமாஜ சேவற்க்கு யாண்டு ௰௯
தாவது ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துக்
காழியூர் நாட்டு திருவோத்தூர் ஆளுடையா்க்கு
2. கிளிய பல்லவரையந் அம்மையப்பநாந அதியமாந் வைத்த திரு நுகாவிளக்கு
ஒந்றுக்கு செல்வி ராசகேசரியால் நித்தப்படி உழக்கு நெய் கோயிலிலே
அளக்க கடவேநாகப் புலியார் பெரு-
9. ம்பாடி . . க்கும்பந் இடி கீரஷை திருவாய்க்குலம் திருவெண்காட்டுக்
கோநேந் கைக்கொண்ட பசு ௩௰ முப்பதும் கைக்கொண்டு சஷிராதித்தவரை
செலுத்த கடவேநாநேந் திருவெண்-
4. காட்டு கோநேந் இவை எந்எழுத்து இது பந்ீதாஹேஸ்ாற ஈகக்ஷ ॥-
24
த.நா.அ. . தொல்லியல் துறை தொடர் எண் :- 15/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : க்
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1167
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 76/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/84
(தெ.க.தொ.)
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 15
அரசன் : இரண்டாம் இராசாதிராசன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபம் வடக்குச் சுவர்.
குறிப்புரை : செங்கேணி வீராண்டன் என்பானின் மகன் அத்தியாண்டான் என்பவன்
ஜயங்கொண்டசோழ மண்டலத்து காலியூர் கோட்டத்துக் காலியூர் நாட்டு
திருவோத்தூர் ஊரிலுள்ள ஆளுடையர் திருவோத்தூருடையார் இறைவனுக்கு
ஒரு நந்தா விளக்கு எரிக்க 32 பசுக்கள் தானமளித்துள்ளான்.
கல்வெட்டு :
1. ஷஸிஸ்ரீ தி_லஏவ*]நஏ௯,வத்திகள் ஸ்ரீமாஜாயிறாஜசேவற்கு யாண்டு
நாலாவது
2. ஜயங்கொண்ட சோழமண்டலத்துக் காலியூற் கோட்டத்துக் காழியூர் நாட்டு
ஆ-
3. ளுடையார் திருவோத்தூருடையாற்க்குச் செங்கேணி வீராண்டான் மகன்
அத்தியா-
4. ண்டான் வெெத்த திருககாவிளக்கு ஒன்றும் வ௲.தித்தவரை செல்வதாக
விட்ட பசு முப்-
5. பத்திரண்டும் கைக்கொண்டு செல்விமாஜகேசரியால் நித்தம் உழக்கு நெய்
கோயி-
6. லிலேய் கொடுவவ அளக்கக்கடவேனாக ஸம்மதித்து இப்பசு முப்பத்திரண்டு-
25
7. ம் கைக்கொண்டேன் புலியார் பெரும்பாக்கத்தில் இருக்கும் இடையன்
முன்நிலை-
8. க்கோன் மகன் சீராமநேன் இப்படிக் கிவை என் எழுத்து இது பன்மாஹே
ugh க்ஷ
26
த.நா... தொல்லியல் துறை தொடர் எண் :- 16/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 4
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1167
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 95/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/105
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் g ஊர்க் கல்வெட்டு எண்: 16
அரசன் : இரண்டாம் இராள்திராசன்
இடம் 3 வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்திலுள்ள பெரிய வயலூர் ஊரைச் சார்ந்த
வேட்டைக்காரர்கள் சோழ முத்தரையன் மகன் சீயமுத்தரயன் மற்றும்
சேந்தமுத்தரயன் மகன் பந்தல் ஆகிய இருவரும் வேட்டைக்குச் சென்ற
போது, சீயமுத்தரயன் விட்ட அம்பு தவறுதலாக பந்தல் என்பவன் மீது
பாய்ந்து இறந்து விட்டான். இக்குற்றம் நீங்க ஆளுடையார் திருவோத்தூர்
கோயிலுக்கு சீயமுத்தரையன் தானம் வழங்கியச் செய்தி.
கல்வெட்டு :
1. ஹஸிய்ீ கி,ல-வசசக,வத்திகள் ஸ்ரீ மாஜாயிறாஜ மேவர்க்கு இயாண்டு
நாலாவது ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் பெரிய வயலூர் இருக்கும்
வேட்டைக்காறன்
2. சோழ முத்தரயன் மகன் சீயமுத்தரயனும் இவ்வூர் இருக்கும் வேட்டைக்காறன்
சேந்தமுத்தரயன் மகன் பந்த[லு]ம் வேட்டை போந[வி]*டத்து இந்த
சீயமுத்தரயன் கைய்யிலம்பாலே இந்தப்
3. பந்தல் பட்டமைமில் இந்தக் குற்ற நீங்க ஆளுடையார் திருவோ'
1. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை
27
த.நா... தொல்லியல் துறை தொடர் எண் :- 17/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 8
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1171
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 81/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/89
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 17
அரசன் : இரண்டாம் இராசாதிராசன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபம் வடக்குச் சுவர்.
குறிப்புரை : களத்தூர்க் கோட்டத்து தனியூர் மதுராந்தகச் சதுர்வேதிமங்கலத்தின் புறனரான
மதுவூரைச் சார்ந்த குடிப்பள்ளி சாமந்தன் மும்மலராயன் மகன் அருமொழிதேவன்
எனும் பள்ளிக்கட்டு மும்மலராயன் என்பவன் திருவோத்தூர் கோயிலில் ஒரு
நந்தாவிளக்கு எரிக்க 32 பசுக்கள் தானமளித்துள்ளான். கீரந்தை
திருவெண்காட்டுக்கோன் என்பவன் இப்பசுக்களைப் பெற்றுக்கொண்டுத் தினமும்
ஓர் உழக்கு நெய் இக்கோயிலின் செல்வி ராசகேசரி என்னும் அளவையால்
அளக்கப் பொறுப்பேற்றுக் கொண்டான்.
கல்வெட்டு :
1. ஹஸிஸ்ரீ தி_ல-வநவக,வத்திகள் றாஜாயிறாஜ&வற்க்கு யாண்டு
எட்டாவது உடையார் திருவோத்தூருடையாற்க்கு
2. களத்தூற் கோட்டத்து தநியூர் ஸ்ரீமதுராககச்சதுவே”திமங்கலத் துப்
பிடாகையாந மதுவூற் குடிப்பள்ளி
3. சாமஷன் மும்மலராயன் மகன் அருமொழிதேவனாந பள்ளிக்கட்டு மும்மலராயன்
திருநகாவிளக்கு ஒன்றுக்-
4. கு விட்ட பசு முப்பத்திரண்டும் கைக்கொண்டு செல்வி ராசகேசரியால் நித்தம்
உழக்கு நெய் வராதித்தவரை கோ-
28
5. யிலிலே கொடுவவ அளக்க[க்]* கடவேனாக ஸம்மதித்து இப்பசு
முப்பத்திரண்டும் கைக்கொண்டேன் புலியார் பெரும்பாக்-
6. கத்தில் இருக்கும் இடையன் கீரஸெ திருவெண்காட்டுக்கோ[நேன்]
இப்படிக்கு இவை எந் எழுத்து இது பன்சாஹே[]*ஈ [ஈக ॥]*
29
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 18/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ; 11
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1174
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 100/1989-40
தமிழ் முன் பதிப்பு ல
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 18
இரண்டாம் இராசாதிராசன்
வேதபுரீஸ்வரர் கோமில் நடராசர் மண்டப தெற்குச் சுவர்.
செங்கேணி அத்திமல்ல நாயன் என்கிற இராசேந்திரசோழச் சம்புவராயன் மற்றும்
இவனது தம்பி ஓதுவாந் என்கிற இராசகம்பீர சம்புவராயன் ஆகிய இருவரும்
இணைந்து சீயன் பல்லவதரையன் எனும் சம்புவராயனுடன் ஓர் அரசியல்
உடன்படிக்கைச் செய்துகொண்டனர். அத்தியாண்டான் என்கிற விக்கிரமசோழ
சம்புவராயன் என்பவனுடன் ஒருபொழுதும் உறவு கொள்ளமாட்டோம் என்றும்,
அத்தியாண்டானை எதிர்க்கும் பொழுது தங்கள் பகையாகக் கருதி எதிர்ப்போம்
என்றும் திருவோத்தூர் கோயிலில் சத்தியம் செய்து உடன்படிக்கை
எழுதிக்கொடுத்துள்ளனர்.
1. ஷஹுஹிஷஸ்ரீ தில-வன வ௯,_வத்திகள் ஸ்ரீமாஜாமிமாஜ மேவற்கு யாண்டு
பதிநொந்றாவது செங்கேணி அத்திமல்ல நாயநாந றா-
2, ஜேஷ, சோழச் சம்புவராயநும் எந்தம்பி ஓதுவாநாந மாஜமம்ஷீற சம்புவராயநும்
இவ்விருவோம் செங்கேணி மிண்டந் சீயந் பல்ல-
9. வதரெரெயநாந சம்புவராயற்கு உடையார் திருவோத்தூருடையார் கோயிலில்
கல்வெட்டிநபடியாவது பத்தாவது ஆநி மாஸத்து
4. நாங்களும் இவரும் உடையார் திருவகம்பமுடையார் ஆடி அருளிந
வழிநோக்கி ஸத்கம் பண்ணி இட்ட தீட்டிந்படி
5. நாங்கள் உள்ளதனையும் இவற்கு தப்பக் கடவோமல்லாதோமாகவும் இவர்
எங்களுக்கு ஊத்தும் பண்ணி இட்ட தீட்டிந்-
30
10.
11.
12.
18.
14.
15.
படியால் உள்ள நாடு மாஜறாஜந் பெருவழிக்கு மேற்க்கும் கிளியாற்றுக்கு
தெற்கும் குந்றுக்கும் நாகுணிக்கும் தெற்கும் மல்-
, லது ஏற்றமாக இவரைப்பெலப் பண்ணிக்கொள்ளக் கடவோமல்லாதோமாகவும்
ஒதுவாநாந ஈாஜமம்லீற சம்புவராயனை இந்-
நாளில் இவநுக்கு தக பெருங்கோட மேலூரும் விண்ணமங்கலமும்
பதிநொந்றாவது கல்வெட்டுகிற போது குடு-
தீத மதுவூரும் எநக்குத் தக வாதவூரும் உலக்கையூரிந் திறத்தும் படக்
கடவரல்லாராகவும் நாங்களும் இப்பற்றுக்கு மேல் ஏற்றமாக பெல-
ம் பண்ணி ஒற்றும் கொள்ளக்கடவோம் அல்லாதோமாகவும் இவரைத்
தவிர அத்தியாண்டாநாந விக்கிரமசோழச் சம்புவராயநுடந் ஒருகால-
மும் உறவு பண்ணக்கடவோமல்லாதோமாகவும் மற்றுமிவற்கு இந்நாதாருடந்
கூடி நிந்று இவரை வினை செய்யக்கடவோமல்லாதோ-
மாகவும் அத்தியாண்டானை இவர் எய்யுமிடத்து வேண்டும் படையுங்
குதிரையுங் கொண்டு பிள்ளைகளும் செந்று எங்கள் விநையாக கொ-
ண்டு கூடி நிந்று செய்து குடுப்போமாகவும் இப்படி ஸம்மதித்து உடையார்
திருவோத்தூருடையார் கோமிலிலே கல்வெட்டிக் குடுத்-
தோம் அத்திமல்லநாயநாந இராசேஷ, சோழச் சம்புவராயநும் ஓதுவாநாந
ஈாஜமம்வீரச் சம்புவராயநும் இவ்விருவோம் இக்க-
ல்வெட்டிநபடி தப்பிநோமாகில் எங்கள் பகைவநாந . . . மலராயந் கடை
காப்பாநுக்கு எங்கள் பெண்டுகளைக் குடுத்தோமாநோம்
31
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 19/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 18
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 1176
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 104/1989-40
மொழி தமிழ் முன் பதிப்பு _ ௮
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 19
அரசன் இரண்டாம் இராசாதிராசன்
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : திருமுனைப்பாடி நாட்டைச் சார்ந்த திருவீரட்டானமுடையான் என்பவனிடமிருந்து
122 கழஞ்சுப் பொன்னினைத் திருவுண்ணாழிகைச் சபையார் பெற்றுக்கொண்டு
திருவோத்தூருடையார் கோயிலில் ஒரு திருநந்தா விளக்கு வைப்பதற்குச்
சம்மதித் துள்ளனர்.
கல்வெட்டு :
1.
2.
ஹஹிஸஹ்ீ திருவாய்க் கேழ்வி முன்னாக .தில-வனச் ம தவா
மாஜாயிறாஜ சேவற்க்கு யாண்டு பதின்மூ-
ன்றாவது ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூற் கோட்டத்துக் காழியூர்
னாட்டு ஆளுடையார் திருவோத்தூ-
.. ருடையா[ர்]க்கு திருமுனைப்பாடி னாட்டில் பயறி ஈழத்தரெரயன் அழிசு
காடுகாவல் அரசமகன் திருவீரட்டானமுடெயான் வெ-
௨ ச்ச திருனந்தாவிளக்கு ஒன்றுக்கு ஒக்கும் பொன் பன்னிரு வ்ஞ்கவியுக்
ககெக்கொண்டு சஷ ஷூ. £சித்தவரெெ இத்திருனந்தா விளக்-
குச் செலுத்தக் கடவோமாக ஸம்மதித்தோம் இக்கோயிலில் திருவுணாழிகச்
ஸலெயோம் இப்படிக்கு இவெ தில்லைனாயக ஹஃ-
ட்டன் எழுத்த. இவெ தில்லைக்கூத்த மட்டன் எழுத்த இவெ
சண்டேமுர லட்டன் எழுத்த இவெ ஹூாமறிவ லட்டன் எழுத்த
இது பன்மாஹே-
உ யூர் ரக்ஷ ॥ உ
32
த.நா.அ௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 20/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 2
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1180
திருவோத்தூர் -இ.க. ஆண்டறிக்கை: 80/1900.
தமிழ் முன் பதிப்பு : 7/88
(தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 20
திரிபுவன ஸ்ரீவீரராசேந்திரசோழதேவர் (மூன்றாம் குலோத்துங்கன்)
வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று வடக்குச் சுவர்.
செங்கேணி அத்திமல்லன் அம்மையப்பன், அத்தி எனும் கேரளாந்தக நல்லூர்
பரிக்கிரகத்து நிலையுடைய பெண்டுகளில் வம்புபழுத்தாள் மகள் நாச்சி மற்றும்
வெள்ளாளன் களத்தூர் கிழவன் ஆகிய இம்மூவரும் தலா முப்பது பசுக்கள்
வீதம் மொத்தம் 90 பசுக்களைத் திருவோத்தூருடைய நாயனார் கோயிலில்
மூன்று நந்தாவிளக்குகள் எரிக்கத் தானமாகக் கொடுத்துள்ளனர்.
1. ஹுஷிஸ்ரீ தி,௮-வக௯,வகிகள் ஸ்ரீவீரமாஜே, சோழமேவற்கு யாண்டு ௨
ஆவ-
2. து ஜயங்கொண்டசோழ மண்[ட]*லத்துக் காலியூர்க்கோட்டத்து காழியூர்
நா-
9. ட்டு திருவோத்தூர் ஆளுடையர் திருவோத்தூருடையரற்குத் திருநகாவிளக்கு
ஒந்று-
4. க்குச் செங்கேணி அத்திமல்லந் அம்மைஅப்பந் விட்ட பசு முப்பதும்
அத்தியாந கேரளாகக நல்-
5. லூர்ப் பரிக்கிரகத்து நிலையுடைய பெண்டுகளில் வம்புபழுத்தாள் மகள் நா
33
6. ச்சி வைத்த திருநஷாவிளக்கு ஒந்றுக்கு விட்ட பசு முப்பதும் அனுக்காவூரில்
இருக்கும்
7. வெள்ளாளந் களத்தூர் கிழவநுடையாந் வைத்த திருநஷாவிளக்கு ஒற்றுக்கு
விட்ட பசு முப்பதும் ஆக பசு-
8. (த்)தொண்ணூறுங் கைக்கொண்டு திருநுகாவிளக்கு மூன்றுக்குச்
செல்விராசகேசரியால் நாளொன்'
1. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை
34
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 21/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 8
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 82/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/90
(தெ.க.தொ.)
எழுத்து : தமிழ்
அரசு : தெலுங்குச் சோழர் ஊர்க் கல்வெட்டு எண் : 21
அரசன் : மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முன் மண்டபம் வடக்குச் சுவர்.
குறிப்புரை : மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் ஜயங்கொண்டசோழ மண்டலத்து நாட்டுப்
பிரிவுத் தலைவர்களுக்கு நேரடி ஆணை ஒன்று பிறப்பித்துள்ளான். தேவதானம்,
திருவிடையாட்டம், அகரப்பற்று, திறப்பு, வன்னியப்பற்று ஆகிய நிலங்களில்
இருந்து வேலி ஒன்றுக்கு ஆறு கலம் நெல் வசூல் செய்ய நாட்டவர்களுக்கு
ஆணையிட்டுள்ளான். திறப்பு என்பது நேரடியாக அரசுக்கு இறை செலுத்தும்
வெள்ளான் வகை நிலம் ஆகும்.
கல்வெட்டு :
1. ஹஸிஹ்ீ மதுராந்தகப் பொத்தப்பிச்சோழன் ஓலை ஜயங்-
2. கொண்டசோழ மண்டலத்து நா[ட்]*டவர் கண்டு இரண்டாவது ஐ-
3. ற்பசி மாதமுதல் தேவதானம் திருவிடையாட்டம் அகரப்பற்றும்
4. திறப்பும் வன்னியப்பற்றும் உட்பட நாட்டுக்குத் தன் வரிசையிலே வே-
5. லி அறுகலநெல்லு விட்டோம் இன்னாள் முதல் இப்படியால் உள்ள நெல்-
1
6. லு
1... கல்வெட்டு முற்றுப்பெறவில்லை
அது
த
35
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 22/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 38
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1211
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 94/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/103
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 22
அரசன் 3: திரிபுவன வீரதேவர் (மூன்றாம் குலோத்துங்கன்)
இடம் 3 வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து பல்குன்றக் கோட்டத்துச் செங்குன்ற நாட்டு
- கலவை எனும் ராசநாராயணச் சதுர்வேதிமங்கலத்துத் தென்பிடாகை தட்டைச்சேரி
தேவதானமாக செங்கேணி அம்மையப்பன் அழகியசோழன் எனும் எதிரிலிசோழ
சம்புவராயன் என்பவன் அளித்துள்ளான். மேலும், திருவோத்தூர், வயலூர்,
கன்றியம் போன்ற ஊர்களிலிருந்து வசூலிக்கப்படும் வெட்டி, தனியாள்,
சிறுபாடி காவல், எடுத்துக்கொட்டி, அரிமுக்கை, கொல்லைப்புஞ்சை, எிமீன்பாட்டம்,
ஆசுவிகள் பேர்க்கடமை, தறியிறை, சாலிகர்-வாணிகர் பேராற்கடமை, செக்கு
கடமை, குற்றத்தெண்டம், பட்டித்தெண்டம், கோயில் அந்தராயம் ஆகிய
வரிகளின் வருவாயையும் கோமிலுக்கு அளித்துள்ளான்.
கல்வெட்டு :
1. ஷஹஷிஸ்ரீ[॥*] திருவாய்க்கேழ்விமுன்னாக தி,ல-வகவுக, வதிகள் மதுரையு
மீழமுங்-
2. கருவூரும் பாண்டியந் முடித்தலையுங் கொண்டு வீறாலிஷேகமும்
விஜயாஷிஷேகமு-
3. ம் பண்ணியருளிய தி_லநவீறஜேவற்க்கு யாண்டு முப்பத்துமூன்றாவது
ஜயங்கொண்டசோழ மண்டல[த்]-
36
10.
11.
12.
1.
14,
15.
16.
துப் பல்குன்றக் கோட்டத்துச் செங்குன்ற நாட்டுக் கலவையாந மாசநாறாயண
வுதுவெதி2ம[௨]த்-
. துத் தென்பிடாகை திட்டைச்சேரியாந அழகியசோழநல்லூர் நஞ்செய் புஞ்செய்
விளைநிலத்து
. ரென]ல்லை முற்றுமுடையார் திருவோத்தூருடைய நாயனார்க்கு ஜேவலாநமாக
விட்டேன் செங்கேணி அம்-
. மையப்பன் அழகிய சோழனான சம்புவராயனே[ன்] இன்னாயனார்
ஜேவலாநங்க[ள]ான திருவோத்தூ-
ரும் வயலூரும் கன்றியமும் ஸ்ரீகாழினாடான். விளாகமும் சீராளுபட்டும்
அண்டிலியும் உள்ளிட்ட ஊர்-
களில் வெட்டி த[னி]யா[ள் சி]றுபாடிகாவல் எடுத்துக்கொட்டி அரிமுக்கை
உள்ளிட்ட நெல்லாயமும் காசாயமுங் கொ-
ல்லைப் புஞ்சை ஏரிமீன்பாட்டம் ஆசுவிகள்பேர்க்கடமை தறியிறை சாலிகர்
வாணிகர் பேர[£]*ற்கடமை செக்கு
கடமை குற்றத்தெண்டம் பட்டித்தெண்டம் கோமிலன்தராயம் உள்ளிட்டன
எப்பே(ர்)ற் பட்டனவும் திருவோத்-
தூருடெய னாயனார்க்கு பாட்டன் பாட்டன் விட்டபடியே திட்டைச்சேரியான
அழகிய சோழ-
னல்லூரிலு மிப்படியால் வந்தன எப்பே(ர்)ற்பட்டனவும் திருவோத்தூர்
உடையனாயனார்க்கு
விட்டேன் செங்கேணி அம்மையப்பன் அழகியசோழ[னா]ன எதிரிலி சோழச்
சம்புவராயனே[ன்]*
இதுக்கு இலங்கனம் பண்ணுவார் கெங்கையிடைக் குமரிமிடைச் செய்தார்
செய்த பாவங்
கொள்வார் [॥]*
37
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 23/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 3 -
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 19-நூற்.
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 1048/1900
தமிழ் முன் பதிப்பு : 7/116
(தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
- ஊர்க் கல்வெட்டு எண்: 224
வேதபுரீஸ்வரர் கோயில் அம்மன் சன்னதி கருவறை மேற்குச் சுவர்.
திருவோத்தூர் கோயில் தேவரடியார்களுக்கு சீவிதம் ஆக வயலூர், கன்றியம்
ஆகிய இரண்டு ஊர்களும் ஊர்ச்சபையாரால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது
இவர்களிடம் 90 பணம் பெற்றுக்கொண்டு இவ்விரண்டு ஊர்களையும்
காணியாட்சியாக விற்றுக் கொடுத்துள்ளனர். இவ்வூரில் தாங்கள் வேண்டும்
குடிகளை ஏற்றிக்கொள்ளவும், வான்பயிர்களை பமிரிடவும் அனுமதி
வழங்கியுள்ளனர்.
1. ஹஹிஸ்ரீ [॥*] திருவாய்கேழ்வி முன்னாக [வுரஷ] வருஷ ஆனி மாதம்
முதல் தியதி திருவோத்தூர்த் தேவரடியார்க்கு தங்கள் சீவிதம் ஆன
வயலூர் கன்றியம் நஞ்சை புஞ்சை தோட்டப்பற்று நத்தம் நான்கு எல்லையும்
சீவிதம் ஆக குடுத்து
2. நடந்து பொதுகிற இவ்வூர் இரண்டும் இவர்களுக்கு காணி ஆட்சிஆக
சண்டேசுரவிலைஆக விற்று பற்றின ப-௯௰ இப்பணம் தொண்ணுற்றுக்கும்
இவ்வூர் இரண்டும் காணி ஆட்சி ஆக விற்று பிறமாணம்
பண்ணிக்குடுத்தோம் ்
3. இவ்வூர் இரண்டும் இவர்களுக்கு விற்று ஒற்றிப் பரிக்கிறைய தாய
தானங்களுக்கும் உரித்தாவதாகவும் இவ்வூர் தாங்கள் வேண்டும் குடியும்
38
ஏற்றி வேண்டும் [வ]ான்பமிரும் செய்து கொள்ளவும் இப்படிக்கு
சந்திராதித்தவரை-
4. யும் செல்லக் குடுத்தோ[ஏ] இது ௨[க்]சாஹேனா[ஈ*] ஈக்ஷ இது வர, ஜெலி
லடட்ஹு மெவாயிறாஜஸ இது மமிவக்கொழுந்[து] பட்டன் எழுத்து
௯2) [கணே] வட்ட எழுத்து
39
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 24/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 39
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 1217
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 93/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/02
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 23
அரசன் : திரிபுவனவீரதேவர் (மூன்றாம் குலோத்துங்கன்)
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : பொன்னூர் கண்ணுடையான் காராணை விழுப்பரையன் என்பவன்
திருவோத்தூருடையார் இறைவனுக்கு நூற்றுக் கழஞ்சு அளவு பொன்னிலான
இரண்டு பட்டங்கள் கொடையளித்துள்ளான்.
கல்வெட்டு
1. ஹஸஹிஸ்ரீ [॥*] தி,ல வகவுக_வதிகள் தி,ல-வகவீஈமேவற்கு யாண்டு
௩௯-வது உடையார் திருவோத்தூரு-
2. டையாற்கு பொன்னூர்க் கண்ணுடையான் காராணை விழுப்பரைய னிட்ட
பட்டம் க னால்
9. பொன் ரும்மம் பட்டம் க னால் பொன் ருமம் ம் ஆக பட்டம் ௨ னால்
ஏழேகால் மாறிப்
4. பொன் ஈமு பொன் நூற்றுக் கழஞ்சு ॥॥-
40
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 25/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 14
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1230
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 105/1999-40
மொழி : தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 24
அரசன் : மூன்றாம் இராசராசன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டபத் தெற்குச்சுவர்.
குறிப்புரை : செங்கேணி வீரப்பெருமாள் அத்திமல்லன் எதிரிலிசோழச் சம்புவராயன் என்னும்
சிற்றரசன் திருவோத்தூர் உடைய நாயனார் கோமிலுக்கு, ஜயங்கொண்டசோழ
மண்டலத்துக் காலியூரக் கோட்டத்து காசிரம்பேடு நாட்டு மாவண்டூர் ஏரிவாய்ப்பற்று
சிற்றியாற்றூர் என்னும் ஊரிலுள்ள நன்செய், புன்செய் நிலத்தின் மீது
வசூலிக்கப்படும் வரிகளைத் தானமாக வழங்கியுள்ளான். இக்கோயிலுக்கு
தேவதானங்களான திருவோத்தூர், வயலூர், கன்றியம், சிராயம்பட்டு, அண்டிலி,
அனுக்காவூர், தவசிபெரும்பாக்கம் ஆகிய ஊர்களில் வசூலிக்கப்பட்ட வரிகளை
மேற்படி சிற்றரசனின் பாட்டன் பாட்டன் தானமாக வழங்கினர் அவற்றினை
மீண்டும் உறுதி செய்து திருவோத்தூர் இறைவனின் பூசை மற்றும் இதர
வழிபாட்டிற்காகவும் வழங்கியுள்ளான்.
கல்வெட்டு :
1. ஹி ஸ்ரீ2௯ கதி முன்னாக தி, ௮௯, வதிகள் ஸ்ரீமாஜமாஜ ஜேவற்கு
வற்கு யாண்டு பதினாலாவது
2. ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்து காசிரம்பேடு
நாட்டு மாவண்டுரேரிவாய்ப்
3. பற்றில் சிற்றியாற்றூர் நஞ்செய் புஞ்செய் விளைநிலத்தின் னெல்லை
மற்றுமுடையார் திருவோத்தூருடை-
4. ய நாயனார்க்கு ஜேவலாநமாக அனைத்தாயமுமுள்பட விட்டேன் செங்கேணி
வீரப்பெருமாள் அத்திமல்லன்
41
10.
12.
18.
14.
. எதிரிலிசோழச் சம்புவராயனேன் இன்னாயனார் ஜேவலாநங்களான திருவோத்தூரும்
வயலூருங் கன்றியமும்
. ஸ்ரீகாழிநாடன் விளாகமுஞ் சிராயம்பட்டும் அண்டிலியும் திருநந்தா
விளக்குப்பட்டி திருநாமத்துக்காணியான
. அனுக்காவூர் நிலமொரு வேலியுமிருங்கலை நிலமுமொரு வேலியுந்
தவசிபெரும்பாக்கத்து நிலமரையே
. நாலுமாவு முள்ளிட்ட துணி நிலமுட்பட்ட ஜேவலாநங்களில் வெட்டி தனியாட்
கண்காணியெடுத்துக் கொட்டியரிமுக்கை
௨யுள்ளிட்ட நெல்லாயங்களுங் காசாயங்களும் வேலிப்பற்று தரப்படியரிசி
காசந்தராயம் நெல்லந்தராய முள்ளிட்டன
கொல்லைப் புஞ்சை யேரிமீன் பாட்டமும் மாவடையு மாசுவிகள்
பேர்க்கடமையுமாக கணக்கவரி யுவச்சன்பேர்க்கட-
மையும் அச்சுத்தறியுஞ் சாலியர் மனைத் தறியும் வாணிகர் பேர்கடமையுஞ்
செக்குக் கடமையு மிலைவாணிகர் பேர்க்கடமையு
மினவரியுங் கோலியத்தறிக் கடமையுள்ளிட்டன வெப்பேர்ப்பட்டனவு முடையார்
திருவோத்தூருடைய நாயனார் வஜெெக்கும்
திருப்பணிக்குமுடலாக பாட்டன் பாட்டன் விட்ட ஹாமநப்படியே
“ ஸிலாலேகெ பண்ணிக்குடுத்தேன் செங்கேணி
வீரப்பெருமாள் அத்திமல்லன் எதிரிலிச்சோழச் சம்புவராயனேன் உ இது
பன்மாஹேறாற ஈகக்ஷெ॥ ௨
42
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 26/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 15
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1291
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 83/1939-40
தமிழ் முன் பதிப்பு 3 ௬
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 25
மூன்றாம் இராசராசன்
வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று கிழக்கு வெளிப்புறச் சுவர்.
கல்வெட்டின் முன்பகுதி கட்டடத்தூண்களில் மறைந்துள்ளது. வெண்குன்றக்
கோட்டத்து பெருநகர் நாட்டு அத்தி எனும் கேரளாந்தக நல்லூர் ஊரைச்
சார்ந்த வேலைக்காரப் பெண்களில் (பரிக்கிரகத்து நிலை உடைய பெண்டுகள்)
வம்புபழுத்தாள் மகள் நாச்சி என்பவள் திருவோத்தூர் கோயிலில் திருநந்தாவிளக்கு
எரிக்க 30 பசுக்களைத் தானமாக வழங்கியுள்ளாள்.
கல்வெட்டு :
௨ வந வ௯,வத்திகள் ஸ்ரீமாஜமாஜ சேவற்க்கு யாண்டு ௰ரு ஆவது
ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துக் காழியூர்
நாட்டு ஆளுடையார் திருவோத்தூ . . .
ண்டலத்து வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகர் நாட்டு அத்தியாந
கேரளாந்தக நல்லூற்ப் பரிக்கிரகத்து நிலை உடைய பெண்டுகளில்
வம்புபழுத்தாள் மகள் நாச்சி வைத்த திருநு . . .
. க்கு செல்வி ராசகேசரியாலே நித்தப்படி உழக்கு நெய் கோயிலிலே
அளக்கக் கடவேநாக இவ்வூரில் இருக்கும் இடையன் கீரந்தை
திருவாய்க்குலம் மணவாளக்கோ . . .
௨ பசு. ௩௰ முப்பதும் கைக்கொண்டு சந்திராதித்தவரை செலுத்தக்
கடவேன் மணவாளக்கோநேன் இவை எந்எழுத்து இத்ய22 பன்ாஹேனறாற
ஈக இத்திரு . . .
கைக்கு இட்ட பித்தளை நிலை விளக்கு ஒன்று ॥ உ
43
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 27/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 16
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 1292
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 112/1999-40
மொழி : தமிழ் முன் பதிப்பு *, :*
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் த் ஊர்க் கல்வெட்டு எண்: 26
அரசன் : மூன்றாம் இராசராசன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : இக்கல்வெட்டின் இறுதி வரிகள் கட்டடப்பகுதிக்குள் மறைந்துள்ளன.
திருவோத்தூருடைய நாயனார் திருமேனிக்கு மேற்பூச்சு பூச நாள் ஒன்றுக்குத்
தேவையான சந்தனம், ஆராதனைக்கு கற்பூரம் ஆகியவற்றினை வழங்கவேண்டி
செங்கேணி அத்திமல்லன் சம்புவராய நாயன் எனும் எதிரிலிசோழச் சம்புவராயன்
என்பவன் 12000 காசுகள் அளித்துள்ளான். இக்காசுகளை மூலதனமாகக் கொண்டு,
இதனின் வட்டியிலிருந்து மேற்படி சந்தனம், கற்பூரம் வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஹி ஸ்ரீ2௯ கீத்தி முன்னாக திரில-வந அ௯,வத்திகள் ஸ்ரீமாஜ-
மாஜஜேவற்கு யாண்டு பதினாறாவது திருவோத்தூ கடையாயது-
க்கு ஆட்டைக்கு இறுக்கும் காசு 0௨ இக்காசு பன்னிராமிரத்துக்-
௨ கும் மாஸந்தோறும் . . . ங் காசுக்கு சந்[த]நமுங் கற்பூரமுங்
கொண்டு உடையார்] திருவோத்தூருடைய நாயனாற்கு திருமேற்-
6. பூச்சுங் கற்பூரமுஞ் சார்த்தி அருள இவ்வாண்டை மார்கழி மாஸ முதல்
விட்ட-
கூ வே 03
7. மைக்கு சிலாலேகை பண்ணிக் குடுத்தேன் செங்கேணி அத்திம-
8. ல்லன் சம்புவராய நாயனான எதிரிலிசோழச் சம்புவராயநேன்
44
. இது பன்மாஹேனாற ஈகக்ஷ
. இக்கல்வெட்டுப்படியே . . .
. காசு கைக்கொண்டு ய. . .
் தனெண்றுக்கு புக்க
. இடுவதாக பொலியூட்டாக இ . ...
. தோம் இப்படிக்கு இவை . . .
45
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 28/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 16
செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 1292
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 89/1900
தமிழ் முன் பதிப்பு : 7/98
(தெ.க.தொ.)
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 27
மூன்றாம் இராசராசன்
வேதபுரீஸ்வரர் கோமில் முன்மண்டபம் கிழக்குச் சுவர்.
திருவோத்தூருடைய நாயனார் இறைவனுக்கு ஆவணித் திருநாளன்று
நடைபெறும் பூசைக்கும், அமுதுக்கும், திருவிளக்கெண்ணைக்கும் மற்றும்
இதர தேவைகளுக்காக வெண்குன்றக் கோட்டத்து வாதவூர் நாட்டு மங்கலம்
என்னும் ஊரில் உள்ள நன்செய், புன்செய் நிலங்களின் மீதான விதிக்கப்பட்டிருந்த
விகள் அனைத்தும் இக்கோயிலுக்குத் தேவதானமாகச் செங்கேணி அத்திமல்லவன்
சம்புவராயன் எனும் எதிரிலிச் சோழ சம்புவராயன் அளித் துள்ளான்.
1. ஷுிஸ்ரீ ஸ்ரீ2௯க்கி முன்னாக [கி] வலக, வதிகள் ஸ்ரீமாஜமாஜசேவற்கு
2. யாண்டு பதினாறாவது உடையார் திருவோத்தூருடைய நாய-
9. னார் பூசந்தீதமாக திருஆவணித் [தி]ருநாளெழுந்தருளியருள
4, பூசைக்குமமுதுபடிக்குந் திருவிளக்கெண்ணைக்கும் ம-
5. ற்றும் வேண்டுவனத்துக்குமாக வெண்குன்றக் கோ-
6. [ட்]டத்து வாதவூர் நாட்டு மங்கலந் தன்னெல்லை முற்றும்
7. நஞ்செய் புன்செய்க் கடமைகளு மிவ்வூர் வெட்டி தனியாட்
8. சிறுபாடிகாவல் கண்காணி அரிமுக்கை யெடுத்துக்-
46
கொட்டி யுள்ளிட்ட நெல்லாயமுங் காசாயமுஞ் செக்குக்கட-
. மை வாணிகர் பேராற்கடமை சாலிகர் அச்சுத்தறி கோலியத்தறி
இனவரி உள்ளிட்ட கடமைகளும் ஏரிமீன்பாட்டமும் மாவடை
, யுள்ளிட்ட கடமைகளுங் குற்றத்தெண்டம் பட்டித்தெண்-
. ட முள்ளிட்டனவு முட்பட ஜேவலாநமாக விட்டு மிலாலேகெ
. பண்ணிக்குடுத்தேன் செங்கேணி அத்[தி]மல்லன் சம்புவ-
. ராய நாயனான எதிரிலிசோழச் சம்புவராயனேன்
47
த.நா.அ. தொல்லியல் துறை
தொடர் எண் :- 29/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ததி 1
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி, 1288
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 106/1989-40
மொழி : தமிழ் முன் பதிப்பு. ந
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 28
அரசன் : மூன்றாம் இராசராசன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் சன்னதி தெற்க்குச்சுவர்.
குறிப்புரை : திருவோத்தூருடைய நாயனார் கோயிலுக்கு எதிரிலிச்சோழ சம்புவராயர் காலியூர்க்
கோட்டத்துப் பெரும்புலியூர் நாட்டு ஏரிவாய்ப்பற்று சிற்றியாற்றூர் ஊரினைத்
தேவதானமாக வழங்கியதை, விக்கிரமசோழச் சம்புவராயன் பொறுப்பு ஏற்ற
பின்னர் சோமங்கலம் ஊரைச் சார்ந்த தாமோதரன் பெருமானடி நாயக்கன்
நாயன் என்கிற கண்டகோபாலர் சிற்றரசனிடம் முறையிட்டு, சிற்றியாற்றூர் ஊரில்
பாதிமினைத் தேவதானமாகவும், மீதிப் பாதியை புட்பகிரிசீயர் மடத்தில்
வெளியூர்களிலிருந்து வரும் சிவனடியார்கள் உணவருந்த மடப்புறமாகவும்
வழங்கிட ஆணை பெற்றுள்ளான். மேலும், வீரப்பெருமாள் எனும் எதிரிலிசோழ
சம்புவராயரும் இதற்கு அனுமதியளித்துக் இக்கோயிலில் கல்வெட்டு
வெட்டிக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.
கல்வெட்டு :
1. ஹஹிஸ்ரீ உடையார் திருவோத்தூருடைய நாயனாற்குத் தேவதானமாக
எதிரிலிசோழச் சம்புவரா-
2. யர் குடுத்த காலியூர்க் கோட்டத்துப் பெரும்புலியூர் நாட்டு ஏரிவாய்ப் பற்றுச்
சிற்றியாற்றூரை
8. [வி]க்கிரமசோழச் சம்புவராயர் மாறுகையில் சோமங்கலமுடையான் தாமோதரன்
பெருமானடி
4. நாயக்கன் நாயநான கண்டகோபாலர் விண்ணப்பன் செய்து தேவதானம்
பாதியும் புட்பகிரிச் சீயர் மடத்திலே
5. தேசாந்திக்கள் மாஸேயுறற்கு அன்னமிட மடப்புறம் பாதியுமாகத் திருமுகம்
வாங்கித் தந்தபடியே வீ-
48
6. ரப்பெருமாளான எதிரிலிசோழச் சம்புவராயருமிப்படி திருமலையிலே
கல்வெட்டுவிப்பதென
7. திருமுகந் தருகையாலே ஸ்ரீஇராசராச தேவற்குப் பதினேழாவது தை மாஸ
முதல் சந்தராதித்த-
8. வரை செல்வதாக ஸ்ரிலாறோவெ பண்ணித்து ஐது வராஹேறாற றக
49
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 30/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை . :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 19
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1285
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 84A/1900
தமிழ் முன் பதிப்பு ' : 7/98
(தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 29
மூன்றாம் இராசராசன்
வேதபுரீஸ்வரர் கோமில் முன்மண்டபம் தெற்க்குச் சுவர்.
விளத்தூர் ஊர்த்தலைவன் செந்தாமரைக் கண்ணன் தொண்டைமானா் என்பவன்
வெண்குன்றக் கோட்டத்து கோவலூர் நாட்டு செங்காடு ஊரில் 2015 குழி
நிலத்தின் மூலம் வரிகளாக வசூலிக்கப்படும் நெல் மற்றும் காசுகள் ஆகிய
வருவாமினைக் கொண்டு திருவோத்தூர் உடைய நாயனார் கோயிலில் இவர்
குடுத்த இரண்டு குத்துவிளக்குகள் திருநுந்தா விளக்காக ளரிப்பதற்குப்
பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளான். இவ்வரிவருவாமினை மூலதனமாகக்
கொண்டு திருநந்தா விளக்கு தொடர்ந்து எரிப்பதாக திருவுண்ணாழிகைச்
சபையார் சம்மதித்துள்ளனர்.
1. ஹஸி ஸ்ரீ2கிதி முன்னாக தி,லவநவுசூவதிகள் மாஜமாஜேவற்கு
யாண்டு ௰[௯]வது உடையார்
2. திருவோத்தூருடைய நாயனார்க்கு விளத்தூர் கிழவன் செந்தாமரைக்கண்ணன்
தொண்டைமானார் [வ]£-
9. ர்ப்பித்துக் குடுத்த திருக்குத்துவிளக்கு இரண்டி லெரியுந் திரு நுந்தாவிளக்கு
இரண்டுக்கு நிலக்கடமை
4. கொண்டு உலய மெ[ரி]*க்க இவரிடுவித்த வெண்குன்றக் கோட்டத்துக்
கோவலூர் நாட்டுச் செங்காடுச் சிற்றேரி-
8. தீதூம்பு நீர்வதியில் விழுந்த காலுக்கு கிழக்கு முடொங்கு குழி உ௱ரு௰
இதன் வடக்கு வானிகுண்டில் குழி ஈசுமரு இதன் வட[க்]*கு குமி-
50
6. ழ்பட்டி தடி இரண்டினாற் குழி சுா௪மஎ இதன் மேற்கு பல்லிகுண்டில்
குழி உ௱௩௰ இதன் வடக்கு கேசவவிளாகங் குழி ௪௱௪௰ இதன்
வடக்கு
7. பொன்னன்குண்டில் குழி ஈச௰௩ இதன் வடக்கு ஆளுடையான்குண்டில்
குழி ஈ[௪]௰ ஆக குழி ௨௲யரு இன்னிலத்தால் வந்த கடமை-
8. யும் வெட்டியுள்ளிட்ட நெல்லாயமுங் காசாயமுமுட்படத் தந்த [தி]ருமுகப்படியே
இந்த வுடல் கைக்கொண்டு வ,ாசிதுவரை செ-
9. ல்வதாக மிலாலேணனெ பண்ணிக்குடுத்தோம் திருவுண்ணாழிகை
ஸலெயோம் இது பன்மாஹேறாற றக்க ॥
51
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 31/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 20
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1996
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 90/1900
மொழி தமிழ் முன் பதிப்பு : 7/99
(தெ.க.தொ.)
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 30
அரசன் மூன்றாம் இராசராசன்
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : குளமுக்கில் கண்டன் ஏறநம்பி செட்டி என்பவனிடமிருந்து பொன் பெற்றுக்
கொண்டு 1050 குழி நிலத்தினை வாங்கி முதலீடாகக் கொண்டு இந்நிலத்தின்
கடமை, நெல் ஆயம், காசு ஆயம் போன்ற வரிகளைக் கொண்டு திருவோத்தூர்
இறைவனுக்கு ஒரு நந்தா விளக்கு தொடர்ந்து எரித்திட இக்கோயில் தானத்தார்
உறுதியளித் துள்ளனர்.
கல்வெட்டு :
1
2.
3.
4,
ஹவிஸ்ீ தி_லவமவக,(ர)வத்திகள் ஸ்ரீமாஜமாஜகேவர்[க்]*கு யாண்டு
௨௰-வது
உடையார் திருவோத்தூருடையாற்கு குளமுக்கிற் கண்டன் ஏறநம்பி செட்டி
வைத்த திருநுந்தாவிளக்கு ௧-க்கு திருமுகங்கொண்டு பொன்னிட்டுக் கொ-
ண்டு விட்ட வாட்குடையில் வடகழனியில் வதிமேலைச்செறு குழி உருமி
இதன்
- தெற்கு மேற்படி திருவோத்தூருடையான் குழி ஊரும் இதன் மேற்கு
ஆரணதியா-
கி குழி ௪௱ இதன் தெற்கு காமக்கோடி குழி ஈரும் ஆக குழி
ரும-துக்குமுள்ள ௧-
, டமையும் நெல்லாயமுங் காசாயமுங் கைக்கொண்டு சந்திராதித்தவரை
- செலுத்தக்கடவோம் இக்கோயிற் தேவகந்மிகளோம்
வில்
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 32/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 20
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1296
வார் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 91/1900
மொழி தமிழ் முன் பதிப்பு : 7/100
(தெ.க.தொ.)
எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 31
அரசன் மூன்றாம் இராசராசன்
இடம்
வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : குளமுக்கில் கண்டன் ஏறநம்பி செட்டி என்பவன் திருவோத்தூர் இறைவனுக்கு
“தப்பாமொழி” என்னும் பெயரில் நந்தவனம் ஒன்று அமைக்க 520 குழி நிலம்
தானமளித்துள்ளான். இந்நிலத்தின் மீதான இறுக்கப்படும் வரிமினைக் கொண்டு
இந்நந்தவனத்தில் பூமரங்கள் வைத்து நாளொன்றுக்கு ஒரு குறுணி அளவு
பூக்கள் அளக்க அழகியசீயன் சம்மதித்துள்ளான்.
கல்வெட்டு :
1
2.
3.
4.
ஸ்ரீ இராசராச தேவற்கு யாண்டு ௨௰(து) ஆவது குளமுக்கில் கண்ட[ன்]
ஏறநம்பிசெட்டி உடையார் திருவோத்தூருடைய நாயநாற்குத் தி-
ருநந்தவனஞ் செய்ய வாட்குடையில் வடகழனியில் வதிக்கு கிழக்கு
பொன்னிட்டுக் கொண்டு விட்ட வீரப்புலியந் தடி [மி]ரண்டினாற் குழி
ருஈ௨௰
. இ[ந்]*நிலத்தால் வந்த கடமையுமனைத்தாயமுங் கைக்கொண்டு தப்-
பாமொழி நந்தவனத்து பூமரம் வைத்து நாளொன்றுக்கு குறுணித் திரு-
. ப்பள்ளித்தாமமளக்க[க்]*கடவேன் அழகியசீயனேன்
33
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 33/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 21
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1287
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 84/1900
தமிழ் முன் பதிப்பு : 7/92
(தெ.க.தொ.)
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 32
மூன்றாம் இராசராசன்
வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபம் தெற்குச் சுவர்.
உத்தரன்மேலூர் ஊரில் அருமொழித்தேவப் பெருந்தெருவில் வசிக்கும் வியாபாரி
கருமவூர் வழக்கன் திருவேகம்பமுடையான் திருப்புலிவனம் உடையார் என்பவன்
திருவோத்தூருடைய நாயனார் கோயிலுக்குக் கொடுத்த 150 பலம் எடை
கொண்ட மூன்றுநிலையுடைய குத்துவிளக்கு திருநந்தாவிளக்காக எரிய,
சோற்றுப்பாக்கம் ஊரில் உள்ள 1000 குழி நிலத்தினை அறக்கட்டளையாக
ஏற்படுத்தி, இந்நிலத்தின் மீது பெறப்படும் வரிகள் மூலம் எரிக்க வழிவகைச்
செய்துள்ளான்.
1. ஷுஷி ஸ்ரீ 2௯கிதி முன்னாக தி,ல-வவுகூவதிகள் ராஜறாஜசேவற்கு
யாண்டு ௨௰[க]வது உடையார் திருவோத்தூருடைய நா-
2. யனார்க்கு உத்தரன்மேலூர் அருமொழிதேவப் பெருந்தெருவில் வியாபாரி
கருமவூர் வழக்கன் திருவேகம்பமுடையான் திருப்புலிவன-
3. முடையானேன் குடுத்த மூன்றுநிலைக் குத்துவிளக்கு பாதமுட்பட இடை
ஈரும-ல இதிலெரியுந் திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு
4. பொன்னிட்டு கொண்டு வி[ட்]*ட நிலக்கடமை கொண்டு உலயமெரிக்க
வெண்குன்றக்கோட்டத்துச் சோற்றுப்பாக்கத்து தலைவரிசைப் பற்றிற் தி-
5. றுமார்பனும் தினைச்செறுவும் புதுச்செறுவும் பனஞ்செறுகுண்டிலுட்படத்
6. வந்த!
தடி நாலினாற் குழி ஐ இக்குழி ஆயிரத்தால்
1. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.
54
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 34/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 9
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1259
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 117/1939-40
மொழி : தமிழ் முன் பதிப்பு :
(தெ.க.தொ.)
எழுத்து : தமிழ்
அரசு : தெலுங்குச்சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 33
அரசன் : விசைய கண்ட கோபால்ன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : கூடலாளப் பிறந்தார் காடவராயரின் தேவியாரும், உடையாழ்வார் என்பாரின்
மகளுமான மீட்டாண்ட நாச்சியார் என்பவள் செயங்கொண்டசோழ மண்டலத்து
காலியூர் கோட்டத்துக் காழியூர் நாட்டு காழியூர் ஊரவரிடம் 6000 குழி நிலத்தினை
“விலைக்கு வாங்கி, திருவோத்தூர் கோமிலில் உள்ள எம்பெருமக்கள் மூவர்
(திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்) வழிபாட்டிற்குத் தேவையான
அமுதுபடி, பூசை, சாத்துப்படி, பூச்சுப்படி, திருவிளக்கு ஆகியவற்றிற்கு
மூலதனமாக பயன்படுத்திக் கொள்ள இந்நிலத்தினை திருநாமத் துக்காணியாக
தானமளித்துள்ளாள்.
கல்வெட்டு :
1. ஷுஹிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீவிசையகண்ட கோபா-
2. ல மேவற்க்கு யாண்டு ௯ ஆவது கூடலாளப் பிறந்தார் காடவராயார் நம்பிராட்டி-
யார் உடையாழ்வார் மகள் மீட்டாண்ட நாச்சியாரேன் செயங்கொண்ட-
Hm ந]
.
. சோழ மண்டலத்து காலியூர் கோட்டத்து காழியூர் நாட்டு காழியூர் ஊரவர்
எனக்-
ச. கு விற்ற பிரமாணப்படி எழுபதின் கலவரிசை பற்றில் அரைமனைப்
பெருஞ்செறுக் குழி ௯-
6. சுக ம் கீழை வாழை தோட்டங் குழி சஈஎ௰ ம் புங்கன் குழி எ௱ஈக ம்
ஏரிகீழ் ஏரிப்பட்டி குழி ஐ-
னி
7.
10.
12.
18.
15.
௪ மங்கலச் செறுக் குழி ௪௱ருமகவ ம் அறுபதின் கலவரிசைப் பற்றில்
வரிச்சாமை குழி ௪௱௰௮ ம்
. குசவன் செறு குழி ௩ாஅய௮ ம் பிராங் குண்டில் குழி ஈ௩யசு ம் கல்லன்
குழி ஈ௯ ம் உழுதஞ்செறு
. குழி சாரு ம் மேற்படி குண்டில் குழி உ௱ரும ம் மடுவன் குழி ஈ௰௯
ம் கல்லன் குழி ௯௰௩ இகுண்டில் குழி
௱௩௰௨ ம் குண்டில் குழி ௫௰எ இதன் மேற்படி குண்டில் குழி ருமரு ம்
தூம்படி குண்டில் குழி ௩
. மே ஆக குழி ஆறாமிரமும் உடையார் திருவோத்தூருடைய நாயநார்
கோமில் எம்பெரு-
மக்கள் மூவற்க்கும் அமுதுபடிக்கும் பூசைக்கும் சாத்துப்படி பூச்சுபடி
திருவிளக்குக்கும் உட-
லாக திருநாமத்துக்காணி ஆக கொண்டு விட்டேன் கூடல் ஆளப்பிறந்தார்
நம்பிராட்டி-
யார் மகள் மீட்டாண்ட நாச்சியாரேன் இது பன்மாஹேறற ஈக ௨
திருவீரட்டான முடையா . . ௬ுடையான் பெரியநாயன் சிவதனப் பெருமாளும்
இவ்வ
னை ச
56
த.நா... தொல்லியல் துறை தொடர் எண் :- 35/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 80
செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 1268
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 83/1900
தமிழ் முன் பதிப்பு : 7/91
(தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
பிற்காலப் பல்லவர் ஊர்க் கல்வெட்டு எண்: 34
இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன்
வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டபம் தெற்குச் சுவர்.
சாந்தாநிக சைவாசார்ய காஞ்சிக்குறி திருவேகம்பமுடையார் என்கிற ஏகாம்பிரபட்டர்
என்பவரிடமிருந்து திருவோத்தூருடைய நாயனார் கோயிலில் திருநந்தா விளக்கு
ஒன்று எரிக்க திருவுண்ணாழிகைச் சபையார் 24 கழஞ்சுப் பொன்
பெற்றுக்கொண்டு விளக்கெரிக்க உடன்பட்டுள்ளனர்.
1. ஹஸிஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவற்க்கு யாண்டு ௨௰ தாவது ஸாஸஷாநிக
சைவாவாயஷ. காஞ்சிக்குறி திருவேகம்பமுடையாரான
. ஏகாம்பிர பட்டர் உடையார் திருவோத்தூருடைய நாயநா[ர்]*க்கு வைத்த
திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு பசு முப்பத்து இரண்டுக்கு இ-
. கீகோயில் திருவு[ண் ]*ணாழிகை ஸலெயோம் இவர் பக்கல்
கை(ய்)[க்]*கொண்ட பொன் இருபத்து நாற்கழஞ்சு இப்பொன்
இருபத்துநாற்-
. கழஞ்சும் கையற கைய்[க்]*கொண்டு இத்திருனுந்தாவிளக்கு ஒன்றும்
வ ாதிதைவரை செலுத்தக்கடவோம் திருவுண்ணாழிகை
ஸ்லெயோம் இவை தில்லைநாயகபட்டன் எழுத்து இவை சாதஸ்றிவபட்டன்
எழுத்து இவை திருவிக்கரமபட்டன் எழுத்து இவை ஜேவமிவாஊணி
. பட்டன் எழுத்து இது ஸ்ரீகாஹேசுற மலை!
57
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 36/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 22
வட்டம் : செய்யாறு . வரலாற்று ஆண்டு : கியி. 126
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 95/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/04
(தெ.க.தொ.)
எழுத்து : தமிழ்
அரசு : பிற்காலப் பல்லவர் ஊர்க் கல்வெட்டு எண்: 35
அரசன் : கோப்பெருஞ்சிங்கன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : மூன்றாம் குலோத்துங்கனின் 17-ஆவது ஆட்சியாண்டில் (கி.பி. 1195)
அனுப்பத்தூர் அகம்படிப் பெண்களில் களப்பாள நாச்சி என்பவள் திருவோத்தூர்
நாயனார் கோயிலில் இரண்டு திருநந்தாவிளக்கு எரிக்க அளிக்கப்பட்ட 2000
குழி நிலத்தினை, வெண்குன்றக்கோட்டத்து அனுக்காவூர் நாட்டு அனுக்காவூர்
எனும் இராஜராஜ நல்லூர் ஊர் நிர்வாகத்தினர் களப்பாள நாச்சியின் மகள்
வீரப்பெருமாள் நாச்சி என்பவளிடமிருந்து இரண்டாயிரம் காசுகள் பெற்றுக்கொண்டு
திருவோத்தூர் கோயிலுக்குத் திருநாமத்துக்காணியாக விற்றுக் கொடுத்துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஹஸிஸ்ரீ கோப்பெருஞ்சிங்கதேவற்கு யாண்டு ௨௨-வது ஜயங்கொண்ட
சோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து அனுக்காவூர் நாட்டு
அனுக்காவூரான
2. ஈாஜாாஜநல்லூர்க் காணி[உ]*டைய கீ[ழ்]ப்பாக்கிழான் பெரியாந
திருவோத்தூருடையானுள்ளிட்டாரும் எநந்தை உடையாந் செங்க
னுள்ளிட்டாரும் அனுக்காவூர் கிழவன் மலையன் சடைய-
3. னள்ளிட்டாரும் கீரந்தை ம[லை]யந் தேவனுள்ளிட்டாரு மிவ்வனைவோம்
ஊர்க்குச் சமைத்து நிலவிலையாவணக் கையெழுத்து முன்னாளில்
ஸ்ரீகுலோத்துங்கசோழ ேவற்கு யா-
58
4. ண்டு பதினேழாவது நாளில் உடையார் திருவோத்தூருடைய நாயனார்க்கு
வைத்த திருநுந்தாவிளக்கு இரண்டுக்கும் அனுப்பத்தூரகம்படிப்
பெ[ண்]டுகளிற் களப்பாளநாச்சி திருமுகங் கொ-
5. ண்டு எங்களூரிற் [த]டி உள்வரிப்படி விடுவித்த நிலம் திருவானைக்கா குழி
௲உ௱௫௰ரு-ம் இதன் மேற்குமுடொங் குழி ௨௱௨௰க-ம் [இ]தன் தெற்கு
அரசசெறு குழி ருர௨௰௯-ம் ஆக தடி மூன்றினா-
6. ற் குழி இரண்டாயிரமுந் திருநாமத்துக்காணியாக சூதிராஸஹவணேணாறற்கு
விற்றுக்குடுக்க இவள் மகள் வீரப்பெருமாள்நாச்சி பக்கல் நாங்கள்
கை[க்]கொ-
7. ண்ட கா[சு] ௨] இக்காசு இரண்டாமிரமுங் கைக்கொண்டு இத்தடி மூன்றினாற்
குழி இரண்டாமிரமுந் திருநாமத்துக்காணியாக நாங்கள் விற்று கல்
வெட்டிக் குடுத்தோம்
8. அனுக்காவூர் ஊரோம் இவள் வேண்ட எழுதிநேன் ஊற்கணக்கன் பட்டன்
எழுத்து இவை கீழ்ப்பாக்கிழான் எழுத்து இவை எனன்தை எழுத்து
இவை அனுக்காவூர் கிழவன் எழுத்து
9. இவை கீரன்தை எழுத்து இது பந்மாஹேற ஈகி [॥]*
59
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 37/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 27
செய்யாறு வரலாற்று ஆண்டு : கிவி. 1277
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 93/1939-40
தமிழ் முன் பதிப்பு :
தமிழ்
தெலுங்குச் சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 36
விசையகண்ட கோபாலன்
வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
திருவோத்தூர் உடைய நாயனார் கோயிலைச் சார்ந்த தேவரடியார்
உண்ணாமுலையார் என்பாளின் மகள் சம்பா என்பவள் இவ்வூரில் அவள்
எடுப்பித்த கானகர் செல்வி அம்மை (கொற்றவை) வழிபாட்டுக்கு நிலம்
வேண்டி, செங்கேணி வீராகரன் ஆளப்பிறந்தார் என்கிற இராசராச சம்புவராயரிடம்
முறையிட்டாள் புலியாடு பெரும்பாக்கத்தில் 2000 குழி நிலத்தினைப் பிடாரி
படம் (பிடாரி பட்டி) தானமாக இராசராச சம்புவராயர் வழங்கியுள்ளார்.
1. ஹஹிஸ்ரீ திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீவிசைய கண்டகோபால தேவற்க்கு
யாண்டு இருபத்தேழாவது உடையார் தி-
2. ௬வோத்தூ(£) ருடைய நாயனார் கோயிற் தேவரடியாள் உண்ணாமுலையார்
மகள் சம்பா இவ்வூர்க்கு எழுன்தருளுவித்த
8. கானகரை செல்வி அம்மைக்கு இருபத்தேழாவது மாசி மாதம் நாயனார்
ஆளப்பிறன்தார் ஆன இரா[ச]ரா[ச]ச் சம்புவராயர்க்கு வி-
4. ண்ணப்பஞ் செய்து திருமுகம் வாங்கிக் குடுத்த புலியாடு பெரும்பாக்கத்தில்
பெரிய ஏரிப்பற்றில் அறுபதின் கலவரிசைப் ப-
5. ற்றில் பிடாரி படம் ஆக வாங்கிவிட்ட அரசன்செறுக் குழி முன்னூற்று
அறுபத்தெட்டும் கதம்புலி முன்னூற்று
60
6. முப்பத்தாறும் திரைப்பட்டிக் குழி நூற்று நாற்பத்தேழும் மேற்படி செறுக்குழி
நூற்று நாற்பத்தேழும் குண்டில் குழி
7. நாற்பத்து நாலும் புளியஞ் செறு குழி முன்னூற்று ஒருபத்திரண்டும் குணமன்
குண்டில் குழி நூற்று ஐம்பத்து மூன்றும் இ-
8. தன் வடக்கு குண்டில் குழி ஐம்பத்திரண்டும் மானப்புலி குழி நூற்று
[அ]ருபத்தெட்டும் செப்புச்செறு குழி நூற்றிருபத்தெட்டும்
9. அத்தி வட்டம் குழி நூற்று நாற்பத்தைஞ்சும் ஆக குழி ௨௯ இக்குழி
இரண்டாமிரமும் இருபத்தேழாவது மாசி மாதம் பொன்வரி-
10. யும் ஆயமும் நீக்கி காசு கடமை உள்பட்ட காசாயமும் வெட்டி தனிஆள்
எடுத்து கொட்டி அரிமுக்கை உள்ளிட்ட நெல்லாய-
11. ங்களும் உள்பட்ட பிடாரி படம் ஆக விட்டேன் செங்கேணி வீராகரள்
ஆளப்பிறந்தாராந இரா[ச]ரா[ச] சம்புவராயந்னேன் இ-
61
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 38/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
- மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 27
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1277
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 108/1939-40
தமிழ் முன் பதிப்பு $2
தமிழ்
தெலுங்குச் சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 37
விசைய கண்ட கோபாலன்
வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப தெற்குச் சுவர்.
செங்கேனி வீரப்பெருமாள் கண்டகோபாலன் எனும் குலோத்துங்கசோழச்
சம்புவராயன் என்பவன் திருவோத்தூருடைய நாயனார் கோயிலில் இரண்டு
திருநுந்தா விளக்கு எரிப்பதற்கு வெண்குன்றக் கோட்டத்தில் வெண்குன்றம்
ஊர் நிலத்தில் 2087 குழி நிலத்தினைத் திருநுந்தா விளக்குப்பட்டியாக
வழங்கியுள்ளான். அந்நிலத்தின் வரிவருவாயைக் கொண்டு விளக்கெரிக்க
வழிவகைச் செய்துள்ளான்.
1. ஹஹிஸ்ரீ தில-வன ௮சூவத்திகள் ஸ்ரீவிஜயகண்டகோபால தேவற்கு யாண்டு
இருபதே-
. ழாவது கன்னி நாயற்று ஷஷியும் திங்கள் கிழமையும் பெற்ற காத்திகை
நாள் உடை-
யார் திருவோத்துருடைய நாயனார்க்குச் செங்கேணி வீரப்பெருமாள்
கண்டகோபால--
. நான குலோத்துங்கசோழச் சம்புவராயநேன் வைத்த திரு நுநீதாவிளக்கு
இரண்டுக்கு வெண்-
.. குன்றக்கோட்டத்து வெணச்குன்றத்தில்(க்) குடிநீங்காத திருநுந்தாவிளக்குப்
பட்டியாக விட்ட
... எண்பதின் கலவரிசைப் பற்றில் ஏரிப்பட்டி கிணறுட்படக் குழி அறுநூற்று
முப்பத்தொன்றும் பெரி-
62
7. ய நெச்செறுக் கிணறுட்படக் குழி அறுநூற்றறுபத்தாறும் செட்டேறன்
பள்ளம் குழி எழுநூற்-
8. று நாற்பதும் ஆகக் குழி ௨ஐ௩௰எ இக்குழி இரண்டாயிரத்து
முப்பத்தேழாலுள்ள கடமையு-
9. ம் வெட்டி தனிஆள் பாடிகாவல் கண்காணி எடுத்துக்கொட்டி அரிமுக்கை
உள்ளிட்ட ஆயமும் பொ-
10. ன்வரி காசுகடமை முள்ளடி இரட்டைக்காசு உள்ளிட்ட காசாயமும்
நெல்லாயமு[ம்] உடையார் திருவோத்-
11. தூருடைய நாயனார்க்குக் குடுத்தேன் செங்கேணி வீரப்பெருமாள் கண்ட
கோபாலனான குலோத்துங்க சோ-
12. ழச் சம்புவராயநேன் இது பன்மாஹேஸ்ரற றகக்ஷ உ
63
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
கல்வெட்டு :
1. ஹஹிஸ்ீ திருவாய்க்கேழ்வி முன்னாக திருபுவன சக்கரவத்திகள் ஸ்ரீவிசைய
கண்ட கோபால தேவற்கு யாண்டு
2. இருபத்தெட்டாவது உடையார் திருவோத்தூருடைய நாயனார் கோயிலிற்
தேவர்அடியாள் அடைஞ்சாடை
3. க காத்தாள் மகள் செய்யாண்டை ஆன சம்புவராய நாச்சி திருவோத்தூருடைய
நாயனார் கோமிலுக்கு எழு-
4. நீதருளுவித்த சுப்பிரமண்ணியப் பிள்ளையார்க்கும் நாச்சிமார்க்கும் நாயனார்
ஆளப்பிறந்தார் ஆன இரா[ச]ராசச் சம்புவரா-
5. யர்க்கு விண்ணப்பஞ் செய்து இருபத்தெட்டாவது ஆடிமாதம் திருமுகம்
வாங்கிக் குடுத்த அனுக்காவூர் எண்பதின் கலவரி-
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
செய்யாறு வரலாற்று ஆண்டு
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை:
தமிழ் முன் பதிப்பு
தமிழ்
தெலுங்குச் சோழர் ர்க் கல்வெட்டு எண்:
விசையகண்ட கோபாலன்
வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
திருவோத்தூருடைய நாயனார் கோயிலில் பணிபுரியும் தேவர் அடியாள்
அடைஞ்சாகை காத்தாள் மகள் செய்யாண்டை எனும் சம்புவராய நாச்சி
என்பவள் இக்கோயிலில் எழுந்தருளுவித்த சுப்பிரமணியர் மற்றும் தேவியர்கள்
வழிபாட்டிற்குத் தேவதானமாக நிலம் வழங்கிட இராசராச சம்புவராயரிடம்
முறையிட்டாள். இதற்காக அனுக்காவூரில் உள்ள இரண்டாயிரம் குழி நிலத்தின்
மீதான பொன்வரி மற்றும் கடமை அல்லாத பிற வரிகள் : அனைத்தும்
தொடர் எண் :- 39/2017
28
கிபி, 1278
95/1939-40
வழிபாட்டிற்கு இராசராச சம்புவராயர் தேவதானமாக வழங்கியுள்ளார்.
64
6. சைப் பற்றில் குடிநீங்காத தேவதானமாக விட்ட எதிரி(த)[க] னாயன் குழி
ஆயிரத்து நானூற்று நாற்ப்பதும் திரியமுடையா-
7. னில் கிழக்கடைய குழி ஐஞ்னுற்று அறுபதும் ஆகக்குழி இரண்டாயிரம்
இக்குழி இரண்டாயிரத்துக்கும் பொன்வரியு-
8. ம் ஆயமும் ஒழிய அல்லாத அனைத்து ஆயங்களும் காசு கடமையும்
உட்பட சம்புவரா[ய] நாச்சி எழுந்தருளுவித்த சுப்பிர-
9. மண்ணியப் பிள்ளையார்க்கும் நாச்சிமார்க்கும் தேவதானமாக குடுத்தேன்
செங்கேணி வீராகன் ஆளப்பிறந்தான் ஆன இ-
10. ரா[ச ]ரா[ச ]ச் சம்புவராயன்நேன் இவை என் எழுத்து பன்மாஹேறாற
.ஐஈகக்ஷ உ
65
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை
செய்யாறு
திருவோத்தூர்
தமிழ்
தமிழ்
தெலுங்குச் சோழர்
விசையகண்ட கோபாலன்
தொடர் எண் :- 40/2017
ஆட்சி ஆண்டு
வரலாற்று ஆண்டு : கியி. 18 நூற்.
இ.க. ஆண்டறிக்கை: -
முன் பதிப்பு 3:
ஊர்க் கல்வெட்டு எண்: 384
தெலுங்குச் சோழர் கண்டகோபாலர் படைத்தலைவர்களில் ஒருவரான
பட்டமுடையார் காங்கயர் என்பானின் பேரன் மாதேவிப் பெருமானடி நாயக்கர்
என்பவன் இக்கோயிலில் திருவெடுத்து மற்றும் ஓடும் மேய்வித்துள்ளான்.
1. ஷஹுஹிஸ்ரீ நாயனார் கண்டகோபாலர் முதலிகளில்
2. ஹஹஷிய்ீ பட்டமுடையார் காங்கயர் பேரன்
9. மாதேவிப் பெருமானடி நாயக்கர் திருவெடு-
4. தீதுக்கட்டிக்கு ஓடு மேய்வித்தான்
66
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 41/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 5
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு :. . கியி 1801 i
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 78/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/86
(தெ.க.தொ.)
எழுத்து : தமிழ்
அரசு 3: பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 89
அரசன் : சடையவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று வடக்குச் சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர் கோட்டத்துக் காழியூர் நாட்டு
திருவோத்தூருடைய நாயனார் வழிபாட்டிற்கு, இக்கோயில் பண்டரரத்திலிருந்து
திருவோத்தூர் மன்றாடிகளில் வெறுங்கை வென்றான் அல்லாண்டை மகன்
ஐஞ்சாதன் என்கிற குழையாகரக் கோனும் இவன் தம்பி பிரமன் என்கிற
திருஞானசம்பந்தக் கோன் ஆகிய இருவரும் அறுபது பசுக்கள் மற்றும்
இரண்டு காளைகளையும் பெற்றுக்கொண்டுத் தினமும் எட்டு நாழி பாலும்,
நெய் உரியளவும் கோயிலில் அளப்பதாகச் சம்மதித்துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஹவிஸ்ீ கோற்சடபன்மர் திரிபுவனச்ச௯, வதி ஸ்ரீவீரபாண்டியதேவர்க்கு யாண்டு
ரு வது 8த-ந நாயற்-
2. று வ௫வபக்ஷத்[து] உ,தமையும் வெள்ளிக்கிழமையும் பெற்ற அத்தத்து
நாள் ஜயங்கொண்ட சோழ
9. மண்டலத்துக் காலியூர் கோட்டத்துக் [கா]ழியூர் நாட்டு உடையார்
. திருவோத்தூருடைய நாயனார்-
4. க்கு பாலமுது நெய்அமுதுக்கு திருவோத்தூரில் மன்றாடிகளில்
வெறுங்கைவென்றான் அல்-
5. லாண்டை மகன் ஐஞ்சாதானான குழையா[க]ர(த)க்கோனும் என் தம்பி
பிரமனான
67
. திருஞானசம்ப[ந்]தக்கோனும் ஸ்ரீபண்டாரத்தில் நாங்கள் கைக்கொண்ட
சாவாமூவா பசு சு௰௪ ம் இ-
, ஷபம் இரண்டும் கைக்கொண்டு நாள் ஒன்றுக்கு ஆர[ணை ]தியாகியாலே
எட்டு நாழி பாலும்
. உரிய் நெய்யும் நாள்தோறும் என் மக்கள் மக்கள் வழியாக
வா(ஆ )தித்தவரையும் அளக்க[க்]*கட-
. வேன் ஐஞ்சாதான் குழையாகரக்கோனும் பிரமன் திருஞானசம்பந்த[க்]*
கோனு[ம்]* இவ்விருவரோம் இவை குழையா-
. [கரர[க]கோன் எழுத்து இவை திருஞானசம்பந்தக்கோன் எழுத்து இது
பன்மாஹேற க்ஷ
68
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 42/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு $
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 12-18 நூற்.
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 86/1900
மொழி : சமஸ்கிருதம் முன் பதிப்பு : 7/95
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தம்
அரசு = ஊர்க் கல்வெட்டு எண்: 40
அரசன் 3
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் மகா மண்டபம் வடக்குச் சுவர்.
குறிப்புரை : இக்கோயில் இறைவன் மீது போற்றி பாடப்பட்டுள்ள சமஸ்கிருத சுலோகம்.
கல்வெட்டு :
ர், ஹெஷாவா௱விகொகிகெ பம கிவீ ரீவாஸாய
2. கா22உஹெ வாயரா2ஸிலாலிறா2ஹஙஸெ ௬டெ
ஹஷெவிஹெ நூ: ஹர காறவசைகி,யாவறி-
[அ
்
2௦ யஷெராவகணெவஸஷழஹெ._ண?கொ-
ஸே
D
ஹறெண வவஸஷா வ௫ஷரகி காஓ: வாடு ॥
69
ச.ச... தொல்லியல் துறை தொடர் எண் :- 43/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 4
ட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1301
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 115/1929-40
மொழி : தமிழ் முன் பதிப்பு ந ஸு
எழுத்து : கிரந்தம் கலந்த தமிழ்
அரசு ் பாண்டியன் ஊர்க் கல்வெட்டு எண்: 41
அரசன் : சூதன்றாம் சடையவள்மன் வீரபாண்டியன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குதிப்புரை : தனியூர் பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்) மேலைச்சேரியில் உள்ள ஸ்ரீபதஞ்சலி
மகாமுனிதேவன் திருமடம் என்கிற பிக்ஷா மடத்தில் பூசை செய்யப்படுகின்ற
விஸ்வேஸ்வர நாயனார் இறைவனின் பூசைக்கும், அமுதுபடிக்கும் மற்றும்
மடத்தில் இருக்கும் தபஸ்விகளின் உணவிற்காகவும் வேண்டி
ஜயங்கொண்டசோழ மண்டலத்து அத்திப்பற்று அழிபடைத்தாங்கி பற்று
நாட்டவர்கள் வெண்குன்றக்கோட்டத்துப் பாரசூர் நாட்டுப் பிரிவில் உள்ள
மதுரை எனும் திருவம்பலப் பெருமாநல்லூர் என்னும் ஊரினைக்
கொடையளித்துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஹற: ஹஹிஸ்ரீ திருவாய்க்கேழ்வி முன்னாக .தில-வன ௮௯ ௯, வத்திகள்
ஸ்ரீவீரபாண்டிய சேவற்க்கு யா-
2. ண்டு ௪ வது மீன நாயற்று உ௫வ*வக்ஷத்து கவகியும் நாயற்றுக்கிழமையும்
பெற்ற பூசத்து நாள் ஜயங்-
3. கொண்டசோழ மண்டலத்து அத்திப்பற்று அழிபடைத் தாங்கிப் பற்று
நாட்டவரோம் தனியூர் பெரும்பற்றப் புலி-
4. யூர் மேலைச்சேரி ஸ்ரீ வகஷலி ஷஹோ2-ஸி மேவன் திருமடமான விக்ஷா
மடத்துப் பூஜெ கொண்டருளுகிற விஷேறாற நா-
5. யனார்க்குப் பூஜெெக்கும் அமுதுபடிக்கும் மடத்தில் தவஸிகளுக்கும்
அசனாவுனங்களுக்கும் உடலாக
70
18.
14,
. மடப்புறமாக நாங்கள் விட்ட இம்மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்துப்
பாராசூர் நாட்டு ம-
. துரை ஆன திருவம்பலப் பெருமாநல்லூர் இவ்வூர் நாற்பாற்கெல்லைக்கு
உள்பட்ட நஞ்சை பு-
ஞ்சை உள்ளிட்ட நிலமும் இவ்வூரில் ஏறும் புறக்கலனைக்குடி உள்ப்பட
இவ்வு. . டைப்
பங்குனி மாதம் முதல் ஸவ_2ரநமாக மடப்புறமாகக் குடுத்தோம் இவ்வூரால்
வந்த
. காசாயங்களும் நெல்லாயங்களும் கடமை காசுகடமை உள்ளிட்ட மற்றும்
“பேற்ப்பட்
. வரிகளும் நாங்களே இறுத்துக் குடுக்கக் கடவோமாகவும் பலதளி பூசைப்பேறு
பத்திலஞ்சு
. நீக்கி ஸவ.மாநமாகக் குடுத்தோம் இப்படிக்கு வாதிதுவரை குடிநீங்கா
மடப்புறமாக-
க் குடுத்தோம் அத்திப்பற்று அழிபடைதாங்கிப் பற்று நாட்டவரோம் பணியால்
ஜயங்கொண்ட-
சோழ வேளான் எழுத்து அகம்படி வேளான் எழுத்து பள்ளிக்கட்டு வேளான்
எழுத்து
71
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 44/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 14
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1810
: திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 89/1939-40
தமிழ் முன் பதிப்பு 3 5
கிரந்தங் கலந்த தமிழ்
பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 42
மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன்
வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் சன்னதி மேற்குச் சுவர்.
பாண்டிய மன்னன் வீரபாண்டியன் 18-ஆவது ஆட்சியாண்டில் ஆவணி
மாதம் முதல் மார்கழி மாதம் வரை திருவோத்தூருடைய நாயனார் கோயிலில்
அமுதுபடைக்கப் பணம் இல்லாத காரணத்தினால் சிவன்னம்மை
என்பவரிடமிருந்து பெற்ற பணத்திற்கு வட்டியாக 400 கலம் நெல் வழங்கிட
இயலாத நிலை ஏற்பட்டது. எனவே, சிவனம்மை இக்கோயிலில் எழுந்தருளித்த
சோமநாத தேவர்க்கு அமுதுபடி, திருவிளக்கு ஆகியவற்றிற்கு கோயில்
பண்டாரத்திலிருந்து செலவிடுவது என்று ஸ்ரீருத்ர ஸ்ரீமாஹேஸ்வரர்கள்
உடன்படிக்கைச் செய்துள்ளனர்.
1. ஷுஹிஷஸ்ரீ .தில-வன சக்கரவத்திகள் கோனேரி மேல்கொண்டான் வீரபாண்டிய
தேவற்கு யாண்டு
2. ௦௪ ஹிஹ நாயற்று ௨ர௫வ/*வக்ஷத்து அஷகசியும் திங்கட்கிழமையும்
பெற்ற அனிழத்தி னாள் ஜயங்கொண்டசோ-
8. ழ மண்டலத்து உடையார் திருவோத்தூருடைய நாயனார் கோயில்
பதிமூன்றாவது முதலில்லாதப்படியாலே சிவன்-
4. னம்மை பக்கல் ஆவணி மாதம் முதல் மார்கழி மாதவரையாக அமுதுபடிக்கு
எதிர்பை வாங்கின ௨௨% ௯ய௰௱க்குப் பலிசை
5. ஏற்றி முதலான ஈட ச௱மும் இவர்க்கு குடுக்க முதலில்லாதபடியாலே
இக்கோயிலில் சிவனம்மை எழுந்தருளிவித்த
72
6. நாயனார் சோமநாத தேவர்க்கு அமுதுபடிக்கும் திருவிளக்கும் நாள் ஒன்றுக்கு
இருநாழி அரிசியும் இராக்காலம் திரு-
7. வொத்தசாமத்தளவும் ஒரு விளக்கும் இடக்கடவதாகவும் இந்நெல்லு
நானூற்றுக்கலத்துக்கும் பலிசைக்கு
8. உடலாக ஸ்ரீபண்டார முதலிலே அமுதுபடிக்குப் பலகையிலே நாள் வழி
இரு நாழி அரிசியும்
9. இத்திருவிளக்கும் வரராசித்தவரையும் இப்படி செல்லக் கடவதாகச்
சம்மதித்தோம் ஸ்ரீ. ஸ்ரீவாஹே-
10. றறோடி இது பநாஹேயும க்ஷ
73
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 45/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 17
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1818
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை : 97/1989-40
தமிழ் முன் பதிப்பு 3 -
கிரந்தங் கலந்த தமிழ்
பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண் : 48
மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன்
வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
திருவோத்தூருடைய நாயனார் கோயிலில் முனையதரையர் என்கிற கண்டியதேவர்
என்பவன் மன்னனின் பெயரால் ஏற்படுத்திய வீரபாண்டியன் சந்தி, ஆனித்திருநாள்,
அமுதுபடி, படிவெஞ்சனம் ஆகியவற்றிற்காக அத்திபற்று பாராசூர் நாட்டு
தவசி பெரும்பாக்கம் ஊரில் வசூலிக்கப்படும் அனைத்து வரிகளையும்
தேவதானமாக பாண்டிய மன்னன் வீரபாண்டியன் அளித்த நேரடி
அரசாணையாகும்.
1. ஷஹிஸ்ரீ .தில-வனச் சக்கரவத்தி கோனேரிமேல் கொண்டான் வீரபாண்டிய
தேவற்க்கு
2. யாண்டு எ வது ஜயங்கொண்டசோழ மண்டலத்து உடையார்
திருவோத்தூருடைய நாயனாற்கு
3. நம்பேரால் முனையதரையரான கண்டியதேவர் கண்ட வீரபாண்டியன் சந்திக்கும்
ஆனி
4. திருநாளுக்கும் அமுதுபடிக்கும் படிவெஞ்சனங்களுக்கும் இவ்வாண்டை
மார்கழி மாதம் அத்தி பற்று
5. பாராசூர் நாட்டு தவசிபெரும்பாக்கம் நான்கெல்லைக்கு உட்பட்ட நன்செய்
புன்செய் . . .
6. லை மரம் உள்பட இந்நாள் முதல் தேவதான இறையிலியாக குடுத்தோம்
இவ்வூரால் வரும் பொ-
74
10.
. ன்வரி ஆயம் மாவடை மரவடை உள்ளிட்ட பல கடமையும் செட்டிகள்
வாணிகர் கைக்கோளர்
, கோலியர் . . கள் பேரால் கொள்ளும் கடமை பொன்வரியும் குற்றத்தெண்டம்
௨ பட்டித்தெண்டம் மற்றும் இவ்வூரால் வரும் உபாதிகளும் தேவையும்
சந்திராதித்தவரை
செல்லும்படிவிட்டோம் க
75
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 46/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 11
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1914
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 98/1939-40
தமிழ் முன் பதிப்பு i =
கிரந்தங் கலந்த தமிழ்
பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 44
மூன்றாம் மாறவர்மன் திரிபுவன சுந்தரபாண்டியன்
வேதபுரீஸ்வரர் கோமில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
காலியூர் கோட்டத்துக் காழியூர் நாட்டு அத்தி என்னும் ஊரைச் சார்ந்த
மன்றாடி மன்னன் என்பானின் மகன் கங்கன் என்கிற அழகிய சுந்தரக்கோன்
என்பவன் திருவோத்தூர் நாயனார் கோயிலுக்குத் தினமும் 4 நாழி பாலும், ஓர்
உழக்கு நெய்யும் அளிப்பதாக உறுதியளித்து, கோயில் பண்டாரத்திலிருந்து
92 பசுக்களும் 1 காளையும் பெற்றுக் கொண்டுள்ளான்.
1. ஹஹிஸ்ரீ கோமாறபன்மர் திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீசுந்தரபாண்டிய தேவற்கு
யா-
2. ண்டு மக வது £ந நாயற்று ௬வ௱உக்ஷத்து வ_கமையும் நாயற்றுக்
கிழமையும் அத்த-
3. த்து நாள் ஜயங்கொண்டசோழ மண்டலத்து காலியூர்க் கோட்டத்து காழியூர்
நா-
4. ட்டு உடையார் திருவோத்தூருடைய நாயனார்க்கு இக்கோட்டத்து இன்
நாட்டு அத்தி . . .
8. மன்றாடிகளில் மன்னன் மகன் கங்கனான அழகிய சுந்தரக்கோனேன்
இவ்வாண்டை மு-
6. தல் பாலமுது நெய் அமுதும் அளக்க ஸ்ரீபண்டாரத்தில் நான் கைக்கொண்ட
சாவா மூ-
76
7. வா பசு ௩ல௨ம் இஷபம் க ம் இப்பசு முப்பத்திரண்டும் இஷபம் ஒன்றும்
கை-
8. க்கொண்டு நாள் ஒன்றுக்கு ஆரணதியாகியாலே நானாழி பாலும் உழக்கு
நெ-
9. ய்யும் சந்திராதித்தவரையும் நானும் என் மக்கள் மக்கள் வழியாக அளக்கக்
கட-
10. வேன் மன்னன் மகன் கங்கனான அழகிய சுந்தரக் கோனேன் இவை
அழகிய சுந்தர-
11. க்கோன் எழுத்து இது பன்மாஹேறாற க்ஷ
77
த.நா.அ௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 47/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 12
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1815
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 97/1900
தமிழ் முன் பதிப்பு : 7/107
(தெ.க.தொ.)
கிரந்தங்கலந்த தமிழ்
பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 45
மாறவர்மன் திரிபுவனசுந்தரபாண்டியன்
வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப வடக்குச் சுவர்.
திருவோத்தூருடைய நாயனார் கோயில் இறைவன் முன் 28 திருநந்தாவிளக்கு
ளிக்க 14 வேலி நிலமும், இக்கோயில் இறைவி இளமுலை நாச்சியார் கோயிலில்
8 திருநந்தா விளக்கு ளிக்க 4 வேலி நிலமும் ஏற்கனவே தானமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆவணிமாதம் முதல் 40 திருநந்தாவிளக்கு எரிக்க தச்சன் தாங்கல்,
சிராயம்பட்டு ஆகிய ஊர்களை திருவிளக்குப்புறமாக வீரசம்புநாயன் என்ற
சம்புவராயன் வழங்கியுள்ளான்.
கல்வெட்டு :
1. ஷஹஹிஸ்ரீ கோமாறபன்மர் தி_ல-வனவுக,வதிகள் ஸ்ரீஸ-௩வாணசேவற்கு
யாண்டு
2. பன்னிரண்டாவது உடையார் திருவோத்தூருடைய நாயனார் திருமுன்பு
முன்னாள் இடுந் திருநந்தாவிளக்கு நன்-
9. திருநாமத்துக்காணியான அனுக்காவூர் நிலம் ஒரு வேலிக்கு விளக்கு
இரண்டும் விழா நல்லூர் நிலம் அரைவேலிக்-
4. கு விளக்கு ஒன்றும் செங்காடு நிலம் ஒன்றுக்கு விளக்கு இரண்டும்
இருங்கலை நிலம் ஒரு வேலிக்கு விளக்கு இரண்டு-
5. ம் நாவல் நிலம் ஒன்றுக்கு விளக்கு இரண்டும் வாட்குடை நிலம்
அரைவேலிக்கு விளக்கு ஒன்றும் தவிசிபெரும்பாக்கம்
6. அரைவேலிக்கு விளக்கு ஒன்றும் தொழுப்பேடு நிலம் ஒன்றுக்கு விளக்கு
இரண்டும் வள்ளைநிலம் ஒன்றுக்கு
78
, விளக்கு இரண்டும் பெரும்பாலை நிலம் ஒ[ன்று]க்கு விளக்கு இரண்டும்
வெண்குன்றம் நிலம் ஒன்றுக்கு விளக்கு
.. இரண்டும் குடநகர் நிலம் அரைவேலிக்கு விளக்கு ஒன்றும் [பு]துப்பாக்கம்
நிலம் ஒன்றுக்கு விளக்கு இரண்டும் வெளி[ய]-
௨னூர் நிலம் ஒன்றுக்கு விளக்கு இரண்டும் காழியூர் நிலம் அரைவேலிக்கு
விளக்கு ஒன்றும் ஆளப்பிறந்தவி[ளாக]ம் நிலம்
. ஒருவேலிக்கு வி[ள]*க்கு இரண்டும் மட்டைநிலம் அரைவேலிக்கு விளக்கு
(விளக்கு) ஒன்றும் ஆக இவ்வூர்களால் நிலம் ப-
. தினாலும் இளமுலைநாச்சியார் திருமுன்பு இடும் விளக்கு எட்டுக்கு பாராசூர்
நங்கித்தச்சன் தாங்கலுடன் கூடின
. நிலம் நாலுவேலி[யு]ம் ஆக நிலம் ப[தி]ன்எட்டு வேலியினால் இடும்
திருநந்தாவிளக்கு முப்பத்துஆறும் நீங்கலாக இவ்-
.வாண்டை ஆவணி மாதம் முதல் நாற்பது திருநந்தாவிளக்கு
இடக்கடவதாகவும் இத்திருநந்தாவிளக்கு நாற்ப-
. துக்கும் திருவிளக்குப்புறமாக திருநாமத்து[க்*] காணியான தேவதானம்
தச்சன்தாங்கலான வே-
. தவினோதநல்லூருஞ் சிராயம்பட்டும் நாற்பாற்கெல்லைக்கு உட்பட்ட நன்செய்
புன்செய்
,. கடமை ஆயம் உள்ளிட்ட பல நெல்லாயங்களும் பொன்வரி காசுகடமை
உள்ளிட்ட கா-
். சாயங்களும் தறிஇறை தட்டார்பாட்டம் ஊர்க்கணக்கர் ஆசுபொதுமக்கள்
[பெர்க்கடமை செ-
, பட்டிகள் வாணிகர் பெ]ர்க்கடமை செக்கிறை மாவடை குளவடை நாட்டுவரி
நாட்டு வினி-
. யோகரம்]* மற்றும் இ[வ்]*வூர்களை நோக்கிவரும் எப்பேர்ப்பட்ட உபாதிகளும்
வரிகளும் உட்பட
. முதலடங்க இறையிலியாகக் குடுத்தேன் வீரசம்பு நாயனான சம்புவராயனேன்
. இப்படி இத்தச்சன்தாங்கலும் சிராயம்பட்டும் தாங்களே உழவும் வேண்டுவார்க்கு
. அடைத்து அனுபவித்துக்கொண்டு வாதித்தவரையும் இத்திருநந்தாவிளக்கு
நாற்பது-
ம் இடுவதே இது உரநாணேய கெட
79
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 48/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 12
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1815
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 92/1999-40
மொழி தமிழ் முன் பதிப்பு உ ஃ
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 46
அரசன் சுந்தர பாண்டியன்
இடம் வேதபுரீஸ்வரர் கோமில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : பதிணென் விசையத்து எண்டிசை நிறைந்த வண்டுவராபதித் திருவாய்பாடி
நாட்டவர் திருவோத்தூர் அமுதவல்லவன் திருமண்டபத்தில் கூடித் தங்கள்
சாதிக்கும் தங்கள் வம்சத்துக்கும் வேண்டிய நன்மைகளைத்
திருவோத்தூருடைய நாயனார் செய்தருளியதால் தங்களின் திறத்திலிருந்து
(80 ஆடுகள், 80 பசுக்கள் (ம) 80 எருமைகள்) ஒரு கிடாரி, ஓர் ஆடு, ஓர்
எருமை கன்றும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
கல்வெட்டு :
1.
2.
ஸ்ரீகக மொவால வீரமெவாவதெ இதன் குருகோவிந்த பிதா-
ய சீரனந்த புகுசெய் சாதனம் திருவளர்ப்புகழ் பெருகச் செயமோங்க-
ச்சீர்நிலவ அருள்பெருகக் கலிமேலிய அறந்தழையமறமோங்க நாற்கடல்
சூழ-
லகனைத்தும் நாவலர்தங்கிளை வளரப் பாற்கடலில் திருவாவணையில்ப்-
. பள்ளிகொள்ளும் பாம்புருஷன் நந்தகோபந் திருமகனாய் நாராயண [ந்]நடுவா-
க அந்தரியகிலமெழுமாளுடையான் முன்னாக இமையோர் முன்னின்று வண-
ங்க வரும் ஸ்ரீகெருடக்கொடி எட்டுத் திக்கிலும் மிக்குயர் மன்னர் திருவடி
நிலை-
80
10.
12.
18.
14.
15.
16.
17.
18.
19.
, ம மற்றவர் தஞ்செங்கோலும் சென்னிமிசைக் கொண்ட வாதம் திருவாவணையே
படைய--
, வும் கள்வரையும் புள்வரையும் கட்டரையும் துட்டரையும் தள்ளி மிந்தத்
தலமேழினும் தன்ம வ-
சிய நடப்பக் கோசனங்கள் முதலாக கூற நின்ற நிரை மூன்றும் பூதலத்தில்
மிசை நிறைய
பொறை பூண்டு அறமளா முனிவின்றி இனி கொங்க முறைமையில்
சமையமினிது நடாக
நிகழா நின்ற பதினெண் விசையத்து எண்டிசை நிறைந்த வண்டு வராபதித்
திரு-
வாய்ப்பாடி நாடவரும் நாட்டு முதலிகளும் இராசகண்ட கோபாலரும் இராச
கண்-
ட கோபால முதலிகளும் மற்றும் நம்மக்கள் சிறப்பருள்ளாரும் னாயகத்து
வண்மை நிற-
கவும் கமல மங்கைபுயத் திருத்தவும் வையகத்துப் புகழ் நடாத்தவும்
மாறானார் நிற்கவும் சென்ற வி-
டத்தில் செருவெற்றியும் தேவேந்திரால் அருள் பெறுதலும் புகழும் பொய்யா
மொழியும் புத்திரலா-
பமும் சத்துரு நாசமும் மற்றும் எப்பேர்ப்பட்ட ஸவ* உஃயங்களுக்கும்
உரித்தாவதாகவும் செயங்-
கொண்ட சோழ மண்டலத்து காலியூர்க் கோட்டத்துக் காழியூர் நாட்டு
திருவோத்தூருடைய நாய-
னார் எங்கள் சாதிக்கும் எங்கள் வஸத்துக்கும் வேண்டும் நன்மைகளைச்
செய்தருளினபடியாலே கோ-
81
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
மாறபன்மர் தில-வேன ௮௯_வத்திகள் ஸ்ரீசுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு
௰௨ காத்திகை மாதம் ஆறாந்-
தியதி நாயற்றுக் கிழமையும் பெற்ற அத்தத்து நாள் திருவோத்தூர்
அமுதவல்லவன் திருமண்ட[ப]த்து நிறைவற நிறைந்-
து குறைவறக்கூடி இருந்து இன்னாயனார்க்கு உலையம் வைத்துக்
குடுத்தபடி திறத்துக்கு ஒரு கொறுக்கழிக்
கிடாரியும் ஆட்டுத் திறத்துக்கு ஒரு வேல் பிறிக்குபடியும் எருமை
படைத்தவன் ஒரு முலை மறுத்த கன்றும்
இப்படிக்கு மண்கலம் தகத்தும் வெண்கலம் பறித்தும் கொள்ளக் கடவதாகவும்
இப்படி வைத்துக் குடுத்-
தோம் எண்டிசை நிறைந்த வண்டுவராபதித் திருவாய்ப்பாடி நாடவரோம்
இப்படிக்குச் சம்மதித்தோம்
தொண்டை மண்டலத்தில் திருவாய்ப்பாடி நாடவரோம் இப்படிக்கு
சந்திராதித்தவரை நடக்கக்
கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளக் கடவதாகச் சம்மதித்து வைத்துக்
குடுத்தோம் எண்டிடை
ச நிறைந்த வண்டு வராபதித் திருவாய்ப்பாடி நாடவரோம் பணியால் இவை
சமையக் கணக்கன்
எழுத்து இவை நம்பிக்கோன் விழுப்பாதராயன் எழுத்து இவை வன்னிய
நாயக வேளான் எழுத்து இ-
வை பூபாலராயன் எழுத்து இவை விராகர் வேளான் எழுத்து இவை
பொன்னம்பலவரையன் எழுத்து
இவை உலகளந்த வேளான் எழுத்து இவை படலக்கோன் எழுத்து இவை
அமர்கோன் எழுத்து
இவை கொங்கராயன் எழுத்து இவை சேரகோன் எழுத்து இவை சமைய
நாராயணக் கோன் எழுத்து
82
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 49/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 22
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1818
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 92/1900
தமிழ் முன் பதிப்பு : 7/0
(தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 47
வீரபாண்டிய தேவர்
வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப தெற்கு ஜகதி.
திருவோத்தூருடைய நாயனார் கோயில் இறைவன் முன் தினமும் ஐந்து
நபர்கள் ஓதுவதற்கு, திங்கள் அகரம் என்ற ஊரில் உள்ள நஞ்சை புஞ்சை
நிலத்தின் மீது பெறப்படும் வரிகளை நீக்கி குலசேகர சம்புவராயன்
தானமளித்துள்ளான். செய்யாறு வென்றான் சதுர்வேதி மங்கலத்து வாரியனும்
கணக்கனும் பெற்றுக்கொண்டு நடைமுறைபடுத்திட ஆணையிட்டுள்ளான்.
1. ஷஹஸிஸ்ரீ குலசேகரச் சம்புவராயன் ஓலை அனுக்காவூர் பிறிந்த அகரம்
செய்யாற்று வென்றான் வதுவேபசி மங்கலத்து
2. வாரியனும் கரணத்தானும் கண்டுவிடை பெருமாள் வீரபாண்டியதேவற்கு
௨௰௨[வது]க்கு எதிராமாண்டு ஆடிமாதம் முதல் திங்கள் அக-
3. ரம் நான்கெல்லைக்கு உட்பட்ட நஞ்சை புஞ்சை நிலத்தில் கடமை ஆயம்
பொன்வரி உட்பட்ட எப்பேற்பட்ட வரிகளும் உட்ப-
4. ட உஃகவ௨௫வ.) ம2உந இறையிலியாக உடையார் திருவோத்தூருடைய
நாயனார் திருமுன்பே நாள் ஒன்றுக்கு ஐஞ்சுபேர் ௬ஐ-
5. யநம் பண்ணக்கடவர்களாகவும் இப்படி உடைய இன்னாயனார் கோயில்
திருமலையிலே கல்லு வெட்டுக்கொள்ள-
6. வும் சொல்லிவிட்டோம் இன்னாள் முதல் இப்படிச் செய்வதே
83
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 50/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 8748
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1885
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 87/1999-40
மொழி : தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 48
அரசன் : மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று கிழக்கு வெளிப்புறச் சுவர்.
குறிப்புரை : அரசி உலகுமுழுதுமுடையார் தனது பெயரான கலியுகராமன் திருத்தோள்
பிரியாத திருக்கானை என்ற பெயரில் 10/4 மாற்றுடைய 48 கழஞ்சு எடை
கொண்ட பொன்னிலான திருப்பட்டம் ஒன்றினைத் திருவோத்தூருடைய
நாயனாற்குக் கொடையளித்துள்ளாள்.
கல்வெட்டு :
1. ஷுஹிஸ்ரீ அலு-வன ௮-௯,வத்தி கோனேரின்மை கொண்டான் ஸ்ரீ-
2. வீரபாண்டிய தேவர்[க்]கு யாண்டு ௩௰எ வதுக்கு எதிர் ௮ வது ஷே
நாயற்று
9. பூவ*பக்ஷத்து திதியையும் நாயற்றுக் கிழமையும் பெற்ற பரணி நாள்
உடையார் திருவோ-
4. த்தூருடைய நாயனாற்க்கு கலியுகராமன் திருத்தோள் பிரியாத திருக்கானைப்
பேரில்
5. தம்பிராட்டியார் உலகுமுழுதுமுடையார் சாத்தின பட்டமுங் கெங்கா
தேவியாரும்
6. திருவிளம்பிறையாரும் ஆக ய மாற்று பொன் ௪௰௮ மு
84
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 51/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : $
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1841
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: -
தமிழ் முன் பதிப்பு ச
கிரந்தங் கலந்த தமிழ்
பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 49
சடையவர்மன் திரிபுவன வீரபாண்டியன்
வேதபுரீஸ்வரர் கோயில் மகா மண்டபம் தெற்குச் சுவர்.
அத்தி என்னும் ஊரில் இருக்கும் மன்றாடி (இடையர்) தென்னக்கோன் மகன்
ஒதுவித்தான் எனும் ஆரணதியாகிகோன் என்பவன் தென்னகோன்
என்பானிடமிருந்து பெற்ற 10 பசுக்கள் மற்றும் 50 ஆடுகளும், காங்கேயன்
என்பவரிடமிருந்து பெற்ற 11 பசு ஆக மொத்தம் 21 பசுக்கள், 50 ஆடுகளைக்
கொண்டு திருவோத்தூர் கோயிலில் தினமும் பால் மற்றும் நெய் அளக்க
உறுதியளித்துள்ளான்.
1. ஷஷிஹீ கோற்சடபன்மர் .தில-வன ஏக்கரவத்திகள் ஸ்ரீவீரபா[ண்]டிய தேவ-
சே Hm னே 62
. .
ற்க்கு யாண்டு ர இஷப நாயற்று உ௫வ*வக்ஷத்து ஓரியும் திங்-
கள் கிழமையும் பெற்ற உத்திரத்து நாள் ஜயங்கொண்டசோழ ம-
ண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துக் காழியூர் நாட்டு உடையார் திருவோத்தூர்
- உடைய நாயநாற்க்கு பால் அமுதும் நெய் அமுதுக்கு நாள் ஒன்றுக்கு
முரிவினா-
6. ல் அளக்க அத்தியில் இருக்கும் மன்றாடிகளில் தென்னகோன் மகன் ஓது-
7. வித்தானான ஆரணதியாகி கோனேன் கைக்கொண்ட தென்னகோன் விட்-
8. ட பசு ௰ம் ஆடு ர௬ம ம் மங்கலம்கிழான் காங்கயன் விட்ட பசு மக ஆக
85
9. சு ௨லக ஆடு ரும் ம் கைக்கொண்டு உழக்கு நெய்யும் நாணாழி பாலும்
ட ஆதி
10. சித்தவரையும் அளக்க கடவேன் ஆரணதியாகிகோனேன் இவை என்
எழுத்து
86
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 52/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 18
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி 1849
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 81/1939-40
மொழி தமிழ் முன் பதிப்பு த
எழுத்து ; தமிழ்
அரசு பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 50
அரசன் நான்காம் சடையவர்மன் திரிபுவன ஸ்ரீவீரபாண்டியன்
இடம்
வேதபுரீசுவரர் கோயில் மகா மண்டபம் கிழக்குச்சுவர்,
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துக் காழியூர் நாட்டு
திருவோத்தூருடைய நாயனார்க்கு பால்அமுது, நெய்அமுது அளிக்க வேண்டி
விண்ணபாடியில் இருக்கும் மன்றாடிகளில் (இடையர்) சித்திரமேழிக் கோன்
என்பானின் மகன் ஓதுவித்தான் என்கிற நாற்பத்தொண்ணாயிரக் கோன் என்பவன்
திருவோத்தூர் கோயில் பண்டாரத்திலிருந்து 30 பசுக்கள் பெற்றுக் கொண்டு
தினமும் உழக்கு நெய்யும், நான்கு நாழி பாலும் அளக்கச் சம்மதித்துள்ளான்.
கல்வெட்டு :
1.
ஷஹிஸ்ரீ கோற்சடபன்மர் ,தில-வனச் சக்கரவத்திகள் ஸ்ரீவீரபாண்டிய தேவற்க்கு
யாண்டு ௰௩ வது கன்னி நா-
யற்று வாவ*வக்ஷத்து நவமியும் திங்கள்கிழமையும் பெற்ற திருவோணத்து
நாள் ஜயங்கொண்டசோழ மண்டலத்துக்-
: காலியூர் கோட்டத்துக் காழியூர் நாட்டு உடையார் திருவோத்தூருடைய
நாயனார்க்குப் பால் அமுதுக்கும் நெய் அமுதுக்கு
நாள் ஒன்றுக்குமுரிவினாலே அளக்க விண்ணபாடியில் இருக்கும் மன்றாடிகளில்
சித்திரமேழிக் கோன் மகன் ஓதுவித்தான் ஆன
. நாற்பத்தென்னாமிரக் கோனேன் சிபண்டாரம் பதவாய் கைக்கொண்ட பசு
௩௰ இப்பசு முப்பதும் கைக்கொண்டு உழக்கு
நெய்யும் நானாழி பாலும் சஞஷ_ாதித்தவரை அளக்க கடவேன்
நாற்பத்தெண்ணாயிரக் கோனேன் இவை என் எழுத்து இது பன்மாஷோ
க்ஷ
87
த.நா... தொல்லியல் துறை தொடர் எண் :- 53/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 20
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1954
ஊர் திருவோத்தூர் . இ.க. ஆண்டறிக்கை: 94/1939-40
மொழி தமிழ் முன் பதிப்பு தத
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு பாண்டியர் ஊர்க் கல்வெட்டு எண்: 51
அரசன் முதலாம் மாறவர்மன் வீரபாண்டியன்
இடம் வேதபுரீஸ்வரர் கோமில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : வெண்குன்றக் கோட்டத்து பாராசூர் நாட்டு வள்ளை என்னும் ஊரில் இருக்கும்
மன்றாடி பெரியநாட்டுக் கோன் என்பானின் மகன் மலையன் எனும் ஆலால
சுந்தரக்கோன் என்பவன் 32 பசுக்களும் 1 காளையும் பெற்றுக் கொண்டு
திருவோத்தூர் கோயில் பண்டாரத்தில் “ஆரணதியாகி” என்னும் அளவையால்
தினமும் 4 நாழி பாலும் ஓர் உழக்கு நெய்யும் அளப்பதாக உறுதியளித்துள்ளான்.
கல்வெட்டு :
1.
2.
ஷஹிஸ்ரீ கோமாறபன்மர் திரிபுவனச் சக்கரவத்திகள் 8 வீரபாண்டிய தேவ[ற்]க்கு
யா-
ண்டு ௨௰ வது 8 நாயற்று உவ வக்ஷத்து ஒஸுசியும் திங்கட்கிழமையும்
பெற்ற அனுஷத்து நாள் ஜயங்டெ
காண்ட சோழ மண்டலத்து காலியூர் கோட்டத்து காழியூர் நாட்டு உடையார்
திருவோத்தூருடைய நாய-
. னார்க்கு வெண்குன்றக் கோட்டத்து பாராசூர் நாட்டு வள்ளையில் இருக்கும்
மன்றாடிகளில் பெருமாப்பிள்ளை-
. ஆன பெரியநாட்டுக்கோன் மகன் மலையன் ஆன ஆலால சுந்தரக் கோனேன்
இன்னாள் முதல் பால்
அமுதும் நெய்அமுதும் அளக்க பண்டாரத்தில் நான் கைக்கொண்ட சாவா
மூவாப் பசு ௩௰௨ இஷ-
88
7. பம் க ம் இப்பசு முப்பத்திரண்டும் இஷபம் ஒன்றும் கைக்கொண்டு நா(ன்)[ள்]
ஒன்றுக்கு ஆரணதியாகியா-
8. லே நானாழி பாலும் உழக்கு நெய்யும் சந்திராதித்தவரையும் நானும் என்
மக்கள் மக்கள் வழியா-
9. க அளக்கக் கடவேன் பெரிய நாட்டுக் கோன் மக(ள்)[ன்] மலையன் ஆன
ஆலால சுந்தரக்கோனேன் இவை
10. ஆலால சுந்தரக்கோன் எழுத்து இது பன்மாஹேயும றககஷ
89
த.நா... தொல்லியல் துறை தொடர் எண் :- 54/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 4
செய்யாறு வரலாற்று ஆண்டு
திருவோத்தூர் . இ.க. ஆண்டறிக்கை: 99/1900
தமிழ் முன் பதிப்பு : 7/109
(தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 52
இராசநாராயணன்
வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப வடக்குச் சுவர்.
அத்திப்பற்று பிரிவில் உள்ள நாவற்பாக்கம் என்னும் திருஞானசம்பந்தர் நல்லூர்
மற்றும் இவ்வூரின் பிரிவான குதிரைச்சேவகன் தாங்கல் ஆகிய இரு ஊரவருக்கும்
இராசநாராயணன் கொடுத்த ஆணையும். இவ்விரு ஊர்களில் வசூலிக்கப்படும்
வரிகளில் பாதியை பல கோயில்களுக்கு பூசைக்காக அளித்தது போக மீதியுள்ள
அனைத்து வரிகளையும், இக்கோயிலில் திருப்பாட்டு ஓதும் மாகேஸ்வரர்களுக்கு
காணி மடப்புற இறையிலியாக அளிக்கப்பட்டுள்ளது.
ர, ஹஹிஸ்ரீ ஸகலலோக வு-
. சூ,வதி ஸ்ரீஇராசனாராயணன் அத்தி[ப்]-
, பற்று நாவற்பாக்கமான திருஞானசம்பந்[த ]-
ர் நல்லூர் ஊரவற்கும் இவ்வூரில் பிறிவான
. [க]ள் ஊர் பலதளி பூசைப்பா[தி]யும் நீக்கி நாலா-
, வது சித்திரை மாதமுதல் கடமை ஆயம் கே[£*]-
௨ மி[ல்*] முற்றுவப்பேறு உள்ளிட்ட பல நெல்லாயங்களு-
2
3
4
5. குதிரைச்சேவகன் தாங்கல் ஊரவற்கும் தங்-
6
7
8
9
ம் பொன்வரி காத்திகைக்காணிக்கை வாசல்விநியே]ர-
90
10.
11.
12.
18.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
29.
24.
25.
20.
27.
28.
29.
30.
31.
32.
33.
34,
39.
கம் நாட்டுவரி வழிநடைக்கு இடும் பணம் முன்னிடும் பண-
ம் எடுத்தளவு விருந்துப்படி அரிசிகாணம் கைவிலைகா-
ணம் நல்லெருது நற்கிடா தேவைக்கிடும் பணம் அதிகா-
ரிக்கு குடுக்கும் முதல் மந்தைப்பணம் வாசற்பணம் வா-
சல் குழி ஊர்க்கணக்கர் ஆசுபொதுமக்கள் பேர்க்கட-
மை ஊர்க்கணக்கர் தட்டார்பேரால் ஊசிவாசி இநவரி
மேற்சுட்டிவரி காத்திகைப்பச்சை புதுநெல்லு சூலவ-
ரி மாவடை மரவடை தறிக்கடமை ஆயம் நூலாயம் செட்-
டிகள் வாணிகர் சேனையங்காடிகள் இவர்கள் பேற்கடமைம]
கண்மட்டவரி கருவூலவரி புழுகுகடமை செக்குக்கடமை ஏ[ரி]
மீன்காசு இடையர் பேற்கடமை பழவரி புதுவரி மற்றும்
இப்பற்றி[ல்]* கொள்ளும் பலவரிகளும் பலஉபாதிகளும் உட்-
பட திருப்பாட்டு ஓது[ம்]* மாஹேஸாறர்க்கு இவ்வூர் நஞ்சை
புஞ்சை தோட்டப்பற்று நாற்பாற்கெல்லை ஊர்அட-
ங்கலும் உதக௨௫வ._ ய24ஓாகம் காணி மடப்புறம் ஸ-
வ.32ாநீ்(னி)யழ இறையிலி ஆக -கையோலை குடுத்த ப[£]-
கம் ௪௮ இதில் சேவபாகம் ௨ விஷ-யாகம் ௧ நீக்கி
பாகம் ௪மரு ஆகப் பாகம் நாற்பத்தெட்டும் இவர்களு-
க்கு காணி மடப்புற இறையிலி ஸவ_21(ந்)னியமாக
குடுத்தோம் இவர்களுக்கு விற்றொற்றி பரிக்கிறையங்களு-
க்கும் தாந[£]*மந2விக்கிறையங்களுக்கும் ஸகலவ,ாத்திக்கும் உரித்தாவதா-
[க]வும் இப்படிக்கு கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொண்-
டு சந்திரா[தி]த்தவரையும் செல்லக் குடுத்தோம் இன்னா-
ள் முதல் இப்படி செய்க இத்தந்மத்துக்கு ௯ஷிதம் பண்ணி-
நாருண்டாகில் பஞ்சபாதகம் பண்ணிந பாவம் கொள்-
ளக்கடவர்கள் ஆகவும் இது பந்ீதாஹேயம ஈகக்்ஷ ௨
91
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 55/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 6
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1248
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 111/1989-40
மொழி தமிழ் முன் பதிப்பு ததன்
எழுத்து தமிழ்
அரசு சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 53
அரசன் இராசநாராயணன்
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : திருவோத்தூர் ஊரில் உள்ள கைக்கோளர்களிடம் தறி ஒன்றுக்கு
ஆண்டுடொன்றுக்கு ஆறேகால் பணமும், வீடு ஒன்றுக்கு வாசல் பணம்,
சூலவரி, குழிப்பணம் ஆகியவற்றுக்கு இரண்டு பணமும் ஆக ஆண்டு
ஒன்றுக்கு எட்டேகால் பணம் வரி வசூல் செய்திட ஆணையிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1
Ns ww
ஹஹிஸ்ரீ சகலலோகச் சக்கரவத்தி இராசநாராயண சம்புவராயற்-
க்கு யாண்டு ௬ மார்கழி மாதம் இருபதாந் தியதி திருவோத்தூர்க் கை-
கோளரில் க . . . கு இவ்வாண்-
டைக் காத்திகை மாத வரையும் கடமை கொண்டு இந்த மரியாதி
மார்கழி மாத முதலுக்கு தறிக்கடமை மாத இரட்ட சூலவரி வட்டம்
சப்படம் உட்படத் தறி ஒன்றுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஆறே கால் பணம்.
வாசல் ஒன்றுக்கு வாசல் பணம் சூலவரி குழிப்பணம் உட்பட இரண்டு
பணமும்
ஆக ஆண்டு ஒன்றுக்கு எட்டேகால் பணம் கொள்ளவும் இப்படிக்குச்
சந்திரா-
. தித்தவரையும் கொள்ளவும் இப்படி கொள்ளும் அளவுக்கு மார்கழி மாதம்
முது
92
10.
லுக்கு மேல் தறி உட்படத் தட்டிக் கண்ட தறிக்கும் மடிந்த தறி உட்பட
முழுத்தறி அறு-
- பத்து ஆறுக்கு அடைப்பப்பேறு கழித்து நின்ற தறி அறுபதுக்கும்
. கண்டு இத்தறியில் ஏறின தறிக்கும் அடைப்புபேறு கழித்து நின்ற தறிக்கும்
இம்மரியா-
தி கொள்ளவும் நிலையாந தறி அறுபத்து ஆறில் குறைந்த தறிக்கு
இருந்த குடியில் நிலை
. வரையும் கொள்ளவும் சொன்னோம் இப்படி செய்வதே
93
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 56/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 6
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி 1848
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 118/1939-40
மொழி தமிழ் முன் பதிப்பு :
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 54
அரசன் இராசநாராயணன்
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : புவனேகபாகு தேவர் பேரனும் அழகிய திருச்சிற்றம்பலமுடையார் ஐய்யன்
மகனுமாகிய புவனேகபாகு தேவர் என்பவருக்கு திருவோத்தூர் உடைய
நாயனார் கோயிலில் பூசை செய்வதற்கான உரிமை அளித்துள்ளதை இக்கோமில்
தானத்தாருக்குத் தெரிவிக்கும் மன்னன் வழங்கிய ஆணை.
கல்வெட்டு
1.
2.
3.
4,
ஷுஹிஸ்ரீ ஸகஓலோக ௮௯. வத்திகள் ஸ்ரீ ராஜநாராயணன்
உடையார் திருவோத்தூர் உடைய நாமினார் கோயில் தானத்தாற்கு தங்-
கள் கோயில் பலமுதல் பூசைக் கண்காணி ஆறாவது ஆடி மாதமு-
தலுக்கு ஷஈவநேக ஸாஹு தேவர் மகன் அழகிய திருச்சிற்றம்பலமுடை-
யார் ஐய்யனுக்கு வாய்த்த புவனேகபாகு தேவர்க்கு வாதிகவெரையும்
செல்லக் காணி ஆகக் குடுத்தோம் இன்னாள் முதல் இப்படி செய்வதே
94
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 57/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 6
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி, 1343
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 114/1939-40
மொழி : தமிழ் முன் பதிப்பு fo
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 55
அரசன் : இராசநாராயணன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : புவனேகபாகுதேவர் பேரனும் அழகிய திருச்சிற்றம்பல முடையார் ஐய்யன்
மகனுமாகிய புவனேகபாகுதேவர் என்பவருக்கு திருவோத்தூர் உடைய நாயனார்
கோயிலில் பூசை செய்வதற்கான உரிமை அளித்து, இக்கோயில் ஸ்ரீருத்ர
ஸ்ரீமாகேஸ்வரர்களுக்குத் தெரிவித்துள்ள மன்னன் வழங்கிய ஆணை.
1. ஹஷிஸ்ீ திருவாய்க்கேழ்வி முன்னாக சகலலோகச் சக்கரவத்தி ஸ்ரீமாஜ
நாராயணச் சம்பு-
2. வராயற்கு யாண்டு ௬ வது ஸிஹை நாயற்று ௬வ௱ வக்ஷத்து வதியும்
சனிக்கிழமையும் பெ-
3. ற்ற பூசத்து நாள் ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துக்
காழியூ-
4. ர் நாட்டு திருவோத்தூர் உடையார் திருவோத்தூர் உடைய நாயனார்
கோயில் பல முதல் பூசைக்-
5. கண்காணி தேவர் புவனேகபாகு தேவர் மகனார் அழகிய திருச்சிற்றம்பல
முடையார் ஆ-
6. ன ஐய்யனுக்கு வாய்த்த புவனேகபாகு தேவற்கு சந்திராதித்தவரையும் செல்லக்
காணி ஆட்
95
7. சி ஆக குடுத்தோம் இக்கோயில் ஸ்ரீம ௨. ஸ்ரீமாஹேஸ்ரறறோடி இப்படிக்கு
இவை
8. வஜ.களெலி லட்டஸ இப்படிக்கு இவை தில்லை நாயகப் பட்டன் எழுத்து
இப்படிக்கு
9. இவை சண்டேறா௱ பட்டன் எழுத்து கச்சி ஏகம்ப பட்டன் எழுத்து இது
பன்மாஹேயும க்ஷ
96
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 58/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 7
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1944
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 96/1900
தமிழ் முன் பதிப்பு : 7/106
(தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 56
இராசநாராயணன்
வேதபுரீஸ்வரர் கோமில் முன்மண்டப வடக்குச் சுவர்.
பல்குன்றக் கோட்டத்து அத்திப்பற்று நாட்டு நாவற்பாக்கம் மற்றும் குதிரைச்
சேவகன் தாங்கல் ஆகிய இரண்டு ஊர்களையும் சேர்த்து திருஞானசம்பந்த
நல்லூர் என்று பெயரிட்டு இராசநாராயண சம்புவராயன் 4-ஆவது
ஆட்சியாண்டில் திருவோத்தூர் கோயிலில் திருப்பாட்டு ஓதும் மாகேசுவரர்க்கு
(சிவனடியார்கள்) காணி மடப்புறமாக இறைநீக்கி அத்திப்பற்று நாட்டவர்களால்
வழங்கப்பட்டுள்ளது.
1. ஹஹிஞஸ்ரீ[॥*] ஸகலலோக ஏ-
சூ,வகி ஸ்ரீஇராசநாராயணன்
. சம்புவராயற்கு யாண்டு ௭ வது மகரநாய-
ற்று கவறவக்ஷத்து துவாெ-
. மூலத்து நாள் ஜயங்-
. கொண்டசோழ மண்டலத்து அத்[தி]*-
. ப்பற்று நாட்டவரோம் இப்பற்று
2
3
4
5. ஸமியும் திங்கள்கிழமையும் பெற்ற
6
7
8
9
, பல்குன்றக் கோட்டத்து நாவற்பாக்க-
97
10.
11.
12.
18.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
283.
24.
25.
20.
27.
28.
29.
90.
81.
92.
மும் இதில் பிறிவாந குதிரைச்சேவ-
க[ன்] தாங்கலும் முன்னாள் நாலாவது
நாளில் தம்பிரானார் திருப்பாட்டு ஓதும்
மாஹேயரரர்க்கு காணி மடப்புற இறை-
மிலி ஆக திருஞானசம்பந்த நல்லூர்
யென்று உதகவ௫வு தன்மதாநமாக சை
க(ய்)ஓலையும் திருமுகமும் குடுத்துஅருளி-
நபடிக்கு கல்வெட்டுகையில் இப்படிக்கு-
நாங்களும் இந்த கை(ய்)ஓலைப்படி பங்கு
௪௰௮ இ[தி]ல் சேவபாகம் ௨ விஷுய[£]கம் ௧
நீக்கி பாகம் ௪௰ரு ஆக பாகம் நாற்பத்து எட்டு-
ம் இவ[ர்]*களுக்கு விற்றொற்றிப் பரிக்கிறையங்-
களுக்கும் தாநமக£விக்கிறையங்களுக்-
கும் மற்றும் எப்பேற்பட்ட ஸகலப்பிறாத்-
திகளுக்கு உரித்ததாவதாகவும் இப்படிக்கு-
சந்(த்)திராதித்தவரையும் செல்ல நாவல் பா-
க்கமும் குதிரைச்சேவகன் தாங்கலும் உ-
ட்பட திருஞாநசம்பந்தநல்லூர் என்று சை
க(ய்)ஓலை பெற்ற மாணேயூரர்க்கு கா-
ணி மடப்புற இறையிலி இராசகரம் உட்ப-
ட ஸவ_ாந்(னி)ய இறையிலி ஆக உடையு[ா]*ர்
திருவோத்தூருடைய னாயினார் திருக்க-
ட்டளையிலே கல் வெட்டுவித்து தந்தோம்
98
33.
94.
35.
36.
97.
98.
அத்திப்பற்று னாட்டவரோம் இப்படிக்கு[ச்]
சந்திராதித்தவரை நடத்திக்கொள்ளும்ப[டி ]
தந்தோம் இப்படிக்கு இவை னாட்டுக்கு சமை-
ந்த னாட்டு கணக்கு தொண்டை மண்டல
பிரமாராயன் எழுத்து இது பன்மாஹே-
up க்ஷ; ௨
99
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 59/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 7
செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 1844
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 101/1999-40
தமிழ் முன் பதிப்பு உ வ
கிரந்தங் கலந்த தமிழ்
சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 57
இராசநாராயணன்
வேதபுரீஸ்வரர் கோமில் நடராசர் மண்டப தெற்குச் சுவர்.
திருவோத்தூர் ஊரில் உள்ள மன்றாடிகளில் (இடையர்) துவாரபதி வேளான்
என்பானின் மகன் வெண்ணைக் கூத்தன் என்கிற வேதவிநோதக் கோன்
என்பானும் இவன் தம்பி திருவோத்தூர் உடையான் ஆகிய இவ்விருவரும்
சேர்ந்து இக்கோயில் ஸ்ரீபண்டாரத்தில் 80 பசுக்களும் 2 காளைகளும் பெற்றுக்
கொண்டு தினமும் உழக்கு நெய்யும், நான்கு நாழி பாலும் அளக்க சம்மதித்துள்ளச்
செய்தி.
1. ஹஷிஸ்ரீ சகலலோகச் சக்கரவத்திகள் இராசநாராயணச் சம்புவராயர்க்கு யாண்டு
ஏழாவது கற்க-
2. டக நாயற்று உ௱௫வ*வக்ஷதீது வஷசியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற
பூசத்து நாள் ஜயங்கொண்டசோழ மண்-
9. டலத்து காலியூர்க கோட்டத்து காழியூர் நாட்டு உடையார்
திருவோத்தூரு[-]டய நாயனாற்க்கு இக்கோட்டத்து இன்நா-
4. டீடு திருவோத்தூரில் மன்றாடிகளில் துவாரபதி வேளான் மகன் வெண்ணை
கூத்தனான வேதவிநோதக் கோனும்
5. என் தம்பி திருவோத்தூர் உடையானும் இவிருவரோம் உடையார்
திருவோத்தூர் உடைய னாயநார் கோயிலி-
100
6. ல் ஸ்ரீபண்டாரத்தில் நாங்கள் கைக்கொண்ட சா(த)[வ]£ மூவாப் பசு முப்பதும்
8ஷம$ இரண்டும் கைக்கொண்-
7. டு நா[ள்] ஒன்றுக்கு ஞ*! நெமியும் ௪ உ*? பாலும் சன்திராதித்தவரையும்
அளக்க கடவோம் இவிருவரோம் இவை பன்மாஹே
8. பறற றக௦க்ஷ : ௨
டக உழக்குக்கான குறியீடு
*ே நாழிக்கான குறியீடு
101
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 60/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 18
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1850
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 120/1999-40
மொழி : தமிழ் முன் பதிப்பு : வ
எழுத்து : தமிழ்
அரசு : சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண்: 58
அரசன் : இராசநாராயணன்
இடம் : ஏகாம்பரேஸ்வரர் சன்னதி வடக்கு ஜகதி.
குறிப்புரை : வீரகம்ப நாயினார் என்கிற வீரவல்லாள தேவர் திருவோத்தூர் உடைய நாயினார்
கோயிலில் அமைந்துள்ள அண்ணாமலை நாயினார் இறைவனின் பூசைக்கும்
வழிபாட்டிற்கும் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வெட்டு முழுமை
பெறாமல் உள்ளதால் விவரம் அறியமுடியவில்லை.
கல்வெட்டு
1. ஹ[ஷிற்ீ] சகலலோக சக்கரவத்திகள் இராசநாராயணனர்க்கு யாண்டு ௰௩
திருவோத்தூர்
2. உடைய நாயினார் கோயிலில் வீர(ய)[க]ம்ப நாயினாரான வீர வல்லாள தே-
3. வர் எழுந்தருளிவித்த அண்ணாமலை நாயினார்க்கு பூசைக்கும் திரு
102
த.நா.௮. தொல்லியல் துறை
தொடர் எண் :- 61/2017
மாவட்டம் திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 17
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு கி.பி. 1354
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: -
மொழி : தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : தமிழ்
அரசு : சம்புவராயர் ஊர்க் கல்வெட்டு எண் : 59
அரசன் இராசநாராயணன்
இடம் 5
குறிப்புரை : இவ்வூர் கைக்கோளர்களில் ஒருவன் இக்கோயில் வழிபாட்டுக்கு 200 பணம்
தானம் அளித்துள்ளச் செய்தி. துண்டுக் கல்வெட்டாக உள்ளதால் முழு
விவரம் அறியமுடியவில்லை.
கல்வெட்டு :
1. ஹஹஷிஸ்ீ சகலலோகச் சக்கரவத்தி
சே (2-4 னே [ப]
. ப் (
. ண்டு ௰எ வது உடையார் திருவோத்தூருடையார்
இவ்வூர் கைக்கோள முதலிகளில் உதினார்வ
படி வெஞ்சனத்துக்கும் ஸ்ரீபண்டாரத்து-
க்கும் திரந்த மு ௨௱ இப்பணம் இருநூற்றுக்கு இ
103
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 62/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சித்ரபானு
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. (1856-77)
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 102/1939-40
மொழி தமிழ் முன் பதிப்பு 3
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 60
அரசன் புக்கண்ணன்
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : கைக்கோளர்கள் தங்களது பொருட்களை வெளியே எடுத்துச் சென்று விற்பனை
செய்வதற்கு செலுத்தும் வரி ஆண்டொன்றுக்கு 70 பணமும், கயிறு விற்பனை
செய்யும் வாணியர் (கற்றைவட வாணியர்) மற்றும் சேனைக் கடையார்
செக்குவரி ஆகியோர் மீதான வரி ஆண்டொன்றுக்கு 30 பணமும் ஆக
மொத்தம் 100 பணம் மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கூடுதலாக
பணம் பெறக்கூடாது என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
L
2.
3.
ஷஹி ஸ்ரீஐ 8ஹா ஊணலீமுற ஸ்ரீஅரியஇராய விபாட பாஷைக்குத் தப்பு-
வராயர் கண்ட மூவராயர் கண்ட ஸ்ரீஅரியராய குமார புக்கண்ண உடையார்-
க்குச் செல்லா நின்ற விகுலாக௫ [வரு]ஷ£ தை பூ ௰ ௫ திருவகத்தூர்
கைக்கோளர் கற்றை
வட வாணியர் சேனைக்கடையார் செக்கு உட்பட பட்[ட]டை நூல் ஆ-
யம் ஆட்டைச் சம்மாதம் பேராயச் சம்மாதம் கையேற்பு அதிகை மாத
மாத இரட்டி கண்ணாயக்கர் மகமை மற்றும் ஆயத்தை நோக்கிக் கொ-
ள்ளும் பல உபாதிகளும் உட்பட மலையாங்கட்டுக் குத்தகை வளையில்
சுற்று
104
8. அரசர் அருளி செய்மி பூறுவ மற்ற மரிஆதி ஆண்டு ஒன்றுக்கு கைக்கோளர்
போக்கு
9. கொள்ளும் 4 ஏய கற்றை வட வாணியர் சேனைக்கடை செக்குப் பட்டடை
உட்-
10. கொள்ளும் 0 ௩௰ ஆக பு ஈ இப்பணம் நூறுமே கொள்ளக் கடவது
ஆகவும் இது
11. ஒழிந்து வேறு ஒன்றும் சொல்லக் கடவது அல்ல ஆகவும் இதுக்கு
அழிவு
12. சொன்னார் உண்டுஆனால் கெங்கை கரையில் காராம் பசுவைக் கொன்றான்
புக்க
18. நரகம் புக்க கடவன் ஆகவும் இப்படிக்கு இவை வில்லவராயந் எழுத்து
இது பன்மாஸேயும மகக
105
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 63/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : (கியி. 1856-77)
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 104A/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/115
(தெ.க.தொ.)
எழுதீது : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 61
அரசன் : பொக்கணஉடையார்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் அம்மன் சன்னதி மேற்குச் சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து காலியூர் கோட்டத்து காழியூர் நாட்டு
திருவோத்தூருடைய நாயனார் கோயிலுக்குத் தேவதானமான ஊர்களாக இருந்த
திருவோத்தூர் மற்றும் வையலுர் ஆகிய ஊர்களுக்கு ஆற்றிலிருந்து சிருப்பாசூர்
வாய்க்கால் என்ற வாய்க்கால் வெட்டப்பட்டது. இந்த ஆற்றுக்காலில் இருந்து
வரும் நீர் சாதாரண காலத்திலும், வெள்ளக் காலத்திலும், வறண்ட காலத்தில்
சரிபாதியாக இரண்டு ஊருக்கும் பாயவேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு
1. ஹஹிஷஸ்ரீ [॥*] மகாமண்டலீசுரன் மகாராயண் அ[ரி]கராயன் குமார[ர்*]
பொககண உடையாரர்*]க்கு செல்லாநின்ற வ[ரு*]ஷத்து மிறுச்சிய
நாயற்று அபரபக்ஷத்து சனிக்கிழமையு[ம்*] சத்தமியும் பெற்ற பூசத்து
[நாள்] ஜயங்கொண்டசோழ மண்டலத்து காலி[ஊ]ர் கோ-
2. ட்டத்து [க]ரழியூர்நாட்டு திருவோத்தூருடைய நாயனார் தேவதானம் ஆன
திருவோத்தூர்க்கும் வையலூர்க்கும் சிருப்பாசூர் காலாக வெட்டுகிற
ஆற்று[க *]கால் திருவோத்தூருக்கும் வையலூர்க்கு இந்த
ஆற்று[க் ]*காலுக்கு வீர் பெருநீர்
3. அறுநீர் இரண்டு ஊரர்]க்கும் பாதிஆகப் பாய[க்]கடவதாகவும் இப்படிக்கு
இவை பன்மாகேசுர ஈககஷ [॥*]
106
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 64/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : -
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: -
மொழி : தமிழ் முன் பதிப்பு 3 4
எழுத்து : தமிழ்
அரசு : விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 62
அரசன் : சதாசிவராயர்
இடம் : நுழைவு வாயில் முன்மண்டபம் வலதுபுறச் சுவர்.
குறிப்புரை : வேலூர் பொம்மு நாயக்கரின் முகவரான திருவேணாதபிள்ளை என்பவர்
திருவோத்தூர் கோயில் இறைவனுக்கு பூசை மற்றும் வழிபாட்டிற்காக 22
பொன் தானம் அளித்துள்ளார்.
கல்வெட்டு
1. மாகாமண்டலேசுர சதாசிவ தே . . . ச்சியம் பண்
2. ஈ-௨உ நீ மேல் செல்லா நின்ற . . . ௨௮௨ ௫ வேலூர் எம்ம பொம்முநா-
3. யக்கர் அய்யநுக்கு புண்ணியமாக தேவபூசை ரட்டியப்பர் திருவேணாத
பிள்ளை பராபத்தித்தில்
4. . . . ல ௮ மலைக்கு தினப்படிக்கு மிட்ட கட்டளை நாள் ஒன்றுக்கு
வாழைப்பழம் ய ௫ சக்கரை பலம் ௫ 6
5. ண்ணை ஷ €' இந்தபடிக்கு திருக்கோமிலுக்கு உபையமாக குடுத்த ௨௰
௨ பரு இந்த பொந் இருபத்து இரண்டு
6. . . . அஞ்சுக்கு திருவோ . . . கைக்கோள முதலிகள் கையில் குடுத்து
ருக்கு
7. சேனைக்கடையர் . . . ய௫ மாதம் ஒன்று . . . குடுத்து வரும் ட கக்கு
குடுத்துவர கடைவர
107
. கவும் இகாமு . . . கறடஃ௨பு௬6 வட்டிக்கு சிலவாக னாள் ஒன்றுக்கு
சக்கரை .
ம் . . . னையும் குடுத்த . . . கவும் மீசுரபுரம் அடைப்புகள் வசம் குடுத்த
ஒரு
நாள் ஒன்று . . . ங்வர்க் கடைவர்களாகவும் இந்த படி தருமம் சந்தி
. றாதித்தவரையும் . . . டைவர்களாகவும் இந்த தருமத்துக்கு யாதொருத்தர்
அகிதம் பண்ணினவர்கள் கங்கை கரையிலே கோத்திற சித்திறவதை பண்ணி
. தோ(ழ)[ஷ]த்திலே போகக்கடவராக
108
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 65/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : -
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: -
மொழி சமஸ்கிருதம் (ம) தமிழ் முன் பதிப்பு தல
எழுத்து கிரந்தம் (ம) தமிழ்
அரசு விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண்: 63
அரசன் கிருஷ்ணதேவராயர்
இடம் வேதபுரீஸ்வரர் கோமில் நுழைவு வாயில் வலதுபுறச் சுவர்.
குறிப்புரை : தாணையம் (சேனை), இடங்கை வலங்கை, இடைதுறை, வெட்டிவரி போன்ற
வரிகளை அரசுக்கு செலுத்த வேண்டாம், அவற்றினை அகரங்களில் உள்ள
கோயில்களுக்கும், தேவதானங்களில் உள்ள அம்மன் வழிபாட்டிற்கும்
சர்வமாண்யமாக வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு
1.
2.
ஹெஹி பேபி ஹநஹ மணணிமணாலஃ சனதராந்
ஸகல வ வொஹண ஸஸக்ஷண விக்க்ஷ்ணறாதம்நா 2ம22மாஹெ
எதமா பட ஸஸமண வ,வீண கந் விசயாபரிச மஜவகி தே
. ண பாமொலி ஸெநுஷவ . . ஸெவமாந ஸகல நறபத்திரிமகாம சதுரீக
பானி தார திருபுரமும் வ, ஷெறாக விஜய வஹாந . . . க்ஷண
௨.௨. ஸ்ரீமத மஹா மண௰லேஸண்ற றாஜாயிறாஜ மாஜபரமே-
மூ ஸ்ரீவீரவ,_கா மேவ மஹாராயர் உரயிவிறாஜம் பணி அருளா நின்ற
௨.௨.௨ மேல் செல்லா நின்ற காலயுகி வருஷம் தை பஸ i
வாபக்ஷம் ஈமஸவுமி புண$காலத்திலே ௧-ஈண்டிர மண்டலத்திலே படவீடு
மாஜடத்தில் சந்குகிரி ராசியத்தில் ஸவாமாநெ ஸ்ரீஹரிம கேவ
வராஷணரு-
ணாம ம வஷானங்களில் ேவதையளுக்கும் ஹஷூ ஸ்ரீமன்
மஹாமண்டலேயா ஸ்ரீவீரவ, தாபராந வளிராமப்பய சேவ மஹாறாஜாவின்
குமா।
109
10.
11.
12.
18.
14.
15.
16.
17.
இம்மடி ஆஷய மேவ 8ஹாராஜா ஈடஸவஷூதி புணட காலத்திலே ஸஹிரணெரா
உகமாராபூவ*மாகப் பண்ணிந மதத்துக்கு எல்லா தேத்து
. க்குமாக திருவோத்தூர் வேதபுரீமுமன் குமுதப்படைமிலே சிலாஸாதநம்
முத்திரை மநுஷூன் நரசப்பனாந வரவிட்டு பண்ணிக் குடுத்தபடி நம்-
முடைய மணியகாற மனுஷ தாணைய மென்றும் மிடங்கை வலங்கை
என்றும் மிடைத்துறை வெட்டிவரி பலதளி பலவிதமாக சிறிது பொன்
வாங்கினாலென்று திருமலையிலே எல்லோரும் வந்து முன்[இ](மி)டுகையில்
வாங்கிந பொன்னும் திரும்பக் குடுப்பிச்சு முன்னுக்கும்
சந்திராதித்யவரைக்குத் தாணய முதலாகப் பேர் சொல்லி வாங்கிந
திரவியமெல்லாம் அரமனைக்கு வேண்டா என்று சிலாமமாதனம்
பண்ணிக் குடுத்தோம் ஓநபாலநம் யா29ஹெடஜாநா ஸ்ரீமாநு வாட தாந
சி ஹம வாஷெொதி வாரா வரத
வஹா ஹஊகைவலமி நீலோகெஸவெஷாஜதெ வஹமுஜாடி ந லெஜூூந
கணா றா விவ._.2த்தாவ ஸமஜும மாஸாக பு
ப KT
ஜூ 2ஹெக-ளு வாணாடி காலெகாலெ வாஷநீயொ வவசுஷி:1 ஹவஃநெகொற்
ஹாவிந: வாக்ஷி வெரூராற ஹஷூயொஹுூ
மொ பாவதே றா2வக- மிப்படியே ஸவ*மாக; அகரங்களில் தேவ
ஸஹாஹணநுக்கும் ஹவஃமாந, ஜேவேஹாநங்களில் தேவ
தைகளுக்கும் ஹவ*மாநஷமாக நடத்த ஸ்ரிலாசாதநம் பண்ணிக்குடுத்தோம்
ட
110
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 66/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1454
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1582
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 78/1939-40
தமிழ் முன் பதிப்பு த
தமிழ்
- ஊர்க் கல்வெட்டு எண்: 64
வேதபுரீசுவரர் கோயில் மகா மண்டபம் தெற்குச் சுவர்.
அய்யன் வெங்கபர் என்பவன் திருவோத்தூர் உடைய நாமினார் கோயிலில்
வைத்த திருவிளக்கினை தூசி என்ற ஊரைச் சார்ந்த செல்லக்கோன் என்பானின்
மகன் கோனேரி என்பவன் தொடர்ந்து எரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளான்.
1. சாகாத்தம் ச௪௱ருமி௪ல் மேல் செல்லாநின்ற பிலவ வருஷத்து மிதுன
2. நாயற்று பூ[று]வ பஷ்ஷத்[து] தெச[மி]யும் திங்கள் கிழமையும் பெற்ற
புணர்பூசத்து
9. நாள் அத்திபற்று திருவோத்தூர் உடைய நயினார் கோமி[லி]ல் திருவிளக்கு
4. அய்யன் வெங்கபர் அ[ய்]யன் தன்மமாக விட்ட தூசி செல்ல கோன் மகன்
5. கோனேரியை விட்டது இதுக்கு . . . காராம்பசு கொன்ற (தோ)
6. தோஷதி[லே]போவர்
111
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 67/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 3:
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 15-நூற்.
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 83/1939-40
மொழி : தமிழ் முன் பதிப்பு ட
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : ஊர்க் கல்வெட்டு எண் : 65
அரசன் :
இடம் : வேதபுரீசுவரர் கோயில் முதல் திருச்சுற்று கிழக்குச் சுவர்.
குறிப்புரை : திருவோத்தூர் கோயிலில் இருந்த பல பண்டங்கள் கடையை கண்காணிக்கும்
சாண்டில்ய கோத்திரத்து ஆரியன் முதலியார் திருவானைக்காவுடையன் என்பவன்
கோமிலுக்குக் கொடுக்கும் பொருட்களை அதே அளவு அளித்து, தொடர்ந்து
நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தினை கோயில்
கணக்கர் நாற்பத்து எண்ணாயிர பிரம்மராயன் எழுதியுள்ளான்.
கல்வெட்டு
1. ஊக வஹயொகாகடி ஹம . . . ஸ்ரீ வெஃவழா. . பமாஹநஓ விற
மமாஸநடி விமாவஹு வஷ*டி பங்குனி மாதம் முதல் தியதி முதலுக்கு
2. சாண்டிஷ மோகுத்து ஆரியன் முதலியார் திருவானைக்காவுடையானுக்கு
நமக்கு பல பண்டங்களும் கண்காணி காணிஆட்சி ஆக தனக்கு
இன்நாள் முதல் சந்திரா-
8. தித்துவரைக்கு தந்த அளவுக்கு இம்முதலுக்கு தனக்கு நாம் தந்த
முத்திரையும் இட்டுத் தாழ்வற நடத்திப்போகவும் நமக்கு சரக்கு
வேண்டுபவை தனணகாணி
4. ஆக கொண்டு இட்டு தாழ்வற நடத்த . . . இவை தானத்துக்கு சமைந்த
கோயில் கணக்கு நாற்பத்து எண்ணாஇர வ,ஹறாயந் எழுத்து
112
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 68/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி. ஆண்டு : சகம். 1519
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1597
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 79/1999-40
மொழி தமிழ் முன் பதிப்பு ததை
எழுத்து : தமிழ்
அரசு - ஊர்க் கல்வெட்டு எண்: 66
அரசன் -
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று தெற்கு வெளிப்புறச் சுவர்.
குறிப்புரை : கீழையாற்றூர் ஊரில் வசூலிக்கப்படும் வெட்டிவரி, சந்தவாசல், அரைவாசி
ஆகிய வரிகளின் மூலம் பெறப்படும் பணம், நெல், கொள்ளு ஆகியவற்றினை
திருவோத்தூர் உடைய நாயனார் முன் தினம் ஒரு திருவிளக்கு ளிக்க
மீசுரநாயக்கர் தன்மமாக அவரின் முகவர் தாத்தி நாயக்கர் அளித்துள்ளார்.
கல்வெட்டு :
1.
செகாற்த்தம் சருஈய௯ ன் மேற் செல்லா நின்ற நள வருஷம் மார்கழி மாதம்
ஸ்ரீம௯ மீசுர நாயக்கர் காரியத்துக்-
கு கடவ தாத்தி நாயக்கர் உடையார் திருவோத்தூருடைய நமினாற்கு
தினக்கட்டளையாக நிற்றம் ஒரு திருவிளக்கு
. சன்னதியிலே மீசுர நாயக்கர் தன்மமாக திருவிளக்குமிட அத்திப்பற்று
படைவீட்டுக்கு வெட்டிவரி மிறுக்-
கும் கீழையாற்றூர் வெட்டிவரி சந்தல்வாசல் அரை வாசி உட்பட மிரேகைப்படி
பணம் அரிசி கொள்ளு உண்டான தெ-
௨ ல்லாம் கோயிலுக்கு திருவிளக்குக்கு விட்டோம் மிந்த தன்மம் வருகிற
வருகிற மணியகாறர் கொல-
காறர் நாயக்கர் தன்மமாக சந்திறாதித்தவரையும் நடத்தக் கடவர்களாகவும்
மிந்த தன்மத்துக்கு யா-
தொருத்தர் அகுதம் பண்ணினவன் கங்கை கரைமிலே காராம் பசுவை
கொன்ற தோஷத்திலே போகக்கடவர்களாகவும்
113
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 69/2017
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம். 1520
செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 1598
திருவோத்தூர் க இ.க. ஆண்டறிக்கை: 99/1999-40
தமிழ் முன் பதிப்பு தள்
தமிழ்
- ஊர்க் கல்வெட்டு எண்: 67
வேதபுரீஸ்வரர் கோமில் நடராசர் மண்டப மேற்குச் சுவர்.
மீசுர நாயக்கர் சார்பாக அவரது முகவர் தாத்து நாயக்கர் என்பவர் திருவோத்தூர்
இறைவனுக்குத் திருநந்தாவிளக்கு ஒன்று வைத்துள்ளார்.
1. செகாற்தம் சருஈஉ௰ன் மேற்செல்லா நின்ற பிங்கள வருஷத்து மேஷ
நாயற்று . . .
2. காரியத்துக்கு கடவ தாத்து நாயக்கர் உடையார் திருவோத்தூருடைய
நமினாற்கு . . .
3. திருவிளக்கு சன்னதியிலே மீசுர நாயக்கர் தன்மமாக திருநுந்தா விளக்கு
4. டுக்கு சாதம் மிறுக்கிற தண்டலம் தென்னவராயகோன் மகன் சேவக்கோனை
5. யாக விட்டோம் மிவன் பிள்ளை பிள்ளை தலைமுறை சந்திராதித்தவரையும்
6. கு சாதம் மிறுக்க கடவனாகவும் இந்த தன்மத்துக்கு அமிதம் பண்ணினவன்
7. பிலே காராம்பசுவை கொன்ற பாவத்திலே போககடவர்களாகவும் தாத்து
114
த.நா.௮. தொல்லியல் துறை
தொடர் எண் :- 70/2017
மாவட்டம் திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சுகம். 1542
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1620
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 77/1939-40
மொழி தமிழ் முன் பதிப்பு :
எழுத்து தமிழ்
அரசு - ஊர்க் கல்வெட்டு எண்: 68
அரசன் - |
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் மகா மண்டபம் தெற்கு வெளிப்புறச் சுவர்.
குறிப்புரை : திருவோத்தூருடைய நாயனர்க்கு தினமும் திசவிளக்கு, அமுதுபடி, நெய்க்காக
வேண்டி சதாசிவ நாயக்கராய்யன் என்பவர் அத்திப்பற்று படைவீட்டு
இடைத்துறை ஊர் நிலம் தானமாக வழங்கியுள்ளார். இவ்வூரில் குடியிருக்கும்
மூவரை தொடர்ந்து நடத்திட இராக்குருபெருமாள் என்பவன் நியமித்துள்ளான்.
கல்வெட்டு :
1. செகாற்த்தம் சருஈ௪யஉ ன் மேல் செல்லா நின்ற பிறமாதி வருஷ சித்திரை
மீ” ௨௰ தியதி ஸ்ரீம௯
சதாசிவ நாயக்கர் காரியத்துக்கு கடவ மிராக்குருப்பெருமாள் உடையார்
திருவோத்தூருடைய ந-
௨ மினாற்கு தினக்கட்டளையாக நிற்றம் யாண்டு திச விளக்கும் அமுதுக்கு
படைத்த நெய்க்கும் வி-
. நாயக்கர் சத[ர][சிவ நாயக்கரய்யன் தன்மமாக அத்திப்பற்று படைவீட்டுக்கு
மிடத்துறை மிறுத்த குடிதந-
, தார் பென்னநம ...... பெரியாணையும் அரியாணையும் திருவிளக்குக்கும்
அமுதுக்கும் நெ-
உய்க்கும் விட்டேன் யிவர்கள் பிள்ளையள் பிள்ளையள் தலைமுறை
சந்திறாதிதவரையும் வேதபுரிநாதற்கு ஊழி-
115
7. யம் பண்ணி சாத்த கடமை பணமும் நெய்மிம் கோயிலுக்கு மிறுக்க
கடவர்களாகவும் நாயக்கர் சதாசிவ நாயக்கரய்ய-
8. ன் தன்மமாக விட்டேன் மிந்த தன்மத்துக்குமியாதொருத்தர் அகுதம்
பண்ணினவர்கள்
9. கெங்கைக் கரையில் காராம் பசுவை கொன்ற பாவத்திலே போகக்
கடவர்களாகவும்
10. இவை யிராக்குருப்பெருமாள் எழுத்து
116
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 71/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : விஜயவருடம்
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 16-17 நூற்.
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 109/1939-40
மொழி : தமிழ் முன் பதிப்பு :
எழுத்து : தமிழ்
அரசு : ஊர்க் கல்வெட்டு எண்: 69
அரசன் -
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : மருதரசர் படைவீட்டில் இருக்கும் கன்னட பிராமணன் அவதாது அண்ணப்பர்
மகன் சோமதேவர் என்பவருக்கு 1500 குழி நிலம் திருமுகக் காணியாக
திருவோத்தூருடைய நாயனார் கோயில் தானத்தார் வழங்கியுள்ளனர்.
இந்நிலத்தினைத் தனது சீவிதம் ஆக கொண்டு அனுபவித்துக் கொள்ள
அனுமதி வழங்கியுள்ளனர்.
கல்வெட்டு :
ம. விஜய வருஷூ அற்பசி மாதம் எட்டா[ம்] தியதி ஜயங்கொண்டசோழ
மண்டலத்து காலியூர் கோட்டத்து கா-
2. ழியூர் நாட்டு அத்திப்பற்று திருவோத்தூருடைய நாயனார் கோயில் தானத்தாரோம்
மருதரசர் படைவீட்டி-
3. ல் இருக்கும் கண்னடிய பிராமணரில் அவதாது அண்ணப்பர் மகனார்
சோம தேவர்க்கு திருமுக கா-
. ணி குடுத்தபடி உடையார் திருவோத்தூருடைய நாயனார்க்கு அடிக்கீழ்
நிலைக்கு நாள் ஒன்றுக்கு
8. ஐ ௩டக்கும் மாதம் ஒன்றுக்கு ப ௩க்கும் அடைத்த திருநாமத்துக்காணி
செய்யாற்று வென்றாநல்லூரி-
6. ல் சிற்றேரி கீழ் சென்னல் செறு € ௨ சந்திரசேகரன் 6 ௩௱ பெரிய ஏரிகீழ்
கீ ௯ ஆக டூ சரா
7. இக்குழி ஆயிரத்து அஞ்லூறும் இந்நிலைக்கு சீவிதம் ஆக கைக்கொண்டு
சந்திராதி-
8. த்தவரையும் ஆண்டு கொள்ளவும்
Hm
117
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை
செய்யாறு
திருவோத்தூர்
தமிழ்
தொடர் எண் :- 72/2017
ஆட்சி ஆண்டு
வரலாற்று ஆண்டு
இ.க. ஆண்டறிக்கை:
முன் பதிப்பு
ஊர்க் கல்வெட்டு எண்:
கி.பி. 16-17- நூற்.
76/1929-40
70
வேதபுரீஸ்வரர் கோமில் முதல் திருச்சுற்று தெற்கு வெளிப்புறச் சுவர்.
திருவோத்தூர் உடைய நாயனார் கோயிலில் சித்திரை மாதத் திருவிழாவில்
மூன்றாம் திருநாள் செலவுகளுக்காக இக்கோயில் தானத்தார் வசம் காழியூரில்
உள்ள நிலம் ஒன்றினை ராயசம் ராமசந்திர தீஷிதர்அய்யன் வழங்கியுள்ளார்.
1. விசைய வருஷூ தையி மீ” மக ௨ உடையார் திருவோத்தூர் உடைய
நயினார் கோயில் தானத்தாற்கு மி ராயஸடி ராமசந்திர தீக்ஷிதர் அய்யன்
தன்மமாக சித்திரைத் திருநாள் மூன்றாந் திருநாள் உபையத்துக்கு
காழியூர் பெரிஏரி எதுவாய்ப்பிறவடை கணபதிய
பிறவடை
. . கிழார் உள்ளிட்டார்
2. மேற்கு மாவிலங்கை மேட்டுக்கு கிழக்கு உள்பட்ட பிறவடையளும் அவுடத்திற்
உண்டான நிலம் உள்ளதும் காழியூர் ஊரவரை உடன்படுத்தி அவர்களைக்
* கல்வெட்டு முழுமை பெறவில்லை.
கொண்டு தானத்தாற்கு உதகம் பண்ணிவித்து மூன்றாம் திருநாள்
உபையத்துக்குச் செல்ல*
118
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 73/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 16-17 நூற்.
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 116/1999-40
மொழி : தமிழ் முன் பதிப்பு நட
எழுத்து : தமிழ்
அரசு : ஊர்க் கல்வெட்டு எண்: 71
அரசன் ற்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : திருவோத்தூருடைய நயினார் கோயிலில் (தேவார மூவர் முதலிகளில் ஒருவரான)
திருஞானசம்பந்தப்பெருமாளுக்கு சித்திரைத் திருநாள், ஆனித்திருநாள்
திருவிழாக்களில் பத்தாந் திருநாளில் நிறுத்த மண்டபத்தில் திருகண்சாத்து
நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் திருஞானம், சுகந்தம்,
அடைக்காயமுது, திருவிளக்கு ஆகியவற்றிற்காக 100 பணம் அளித்து 200
குழி நிலம் ஒன்றினை வாங்கி இந்நிலத்தின் மூலம் வரும் மேல்வாரத்தினைப்
பயன்படுத்திக்கொள்ள நமினார் திருச்சனை என்பவர் ஏற்பாடு செய்துள்ளார்.
கல்வெட்டு :
- பராபவ வருஷூ புரட்டாதி மீ” ௨௰ ௫/-ம்' மிந்திரபரம் உடையார் திருவி
௨.௨.௨. வேளார் சகடை நயினார் திருச்சனையாற்கு திருவோத்தூர் உடை
1
2
3. யார் திருவோத்தூருடைய நயினார் கோயில் தானத்தார் ஓம் சம்பந்தப்பெரு
4. மாள் நாயினாற்கு நடத்திற உபையத்துக்கு கல்வெட்டு பிறமாணம் பண்ணி
5
- குடுத்தபடி சித்திரை திருநாள் ஆனித்திருநாள் பத்தாந் திருநாளிலே
சம்பந்தப்பெரு
6. மாள் நயினார் எழுந்தருளி சன்னதி நிற்த்த மண்டபத்திலே திருக்கண்
சாத்திற உ
7. பையத்துக்கு திருஞானத்துக்கும் சுகந்ததுக்கும் அடைக்காயமுதுக்கும்
திருவிள
1. ௫-தேதிக்கான குறிமீடு
119
10.
12.
19.
14.
. க்கு ஆக மிந்த உபையத்துக்கு முன்னாள் திருவ[ண்]ணாமலை உடையான்
கையில் விட்ட 8 ௪ம௰
. வல்லமுடையார் மாணிக்க நாமினார் கையில் வரவிட்ட ஸீ சும ஆக ட௱
இந்த பணம் நூ-
ற்றுக்கும் விலையாக விற்ற மேலை கோமில் நங்கைக் 6' ஈ கீழைகோயில்
நங்கைக் € ஈ ஆக 6 ௨ இந்த
. இருநூறு குழியில் மேல்வாரம் கொண்டு இந்த உபையம் சந்திறாதித்தவரையும்
நட-
த்தக் கடவோம் ஆகவும் இவை சந்திரமவுலி ஆழ்வார் எழுத்து இவை
சைய்வசேகர பண்டிதன்
எழுத்து இவை தேவேந்திர பட்டன் எழுத்து
இவை திருடண்ணாமைல](க) பிரமாராயன் வீரட்டன் எழுத்து
120
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 74/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 16-நூற்.
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 121/1939-40
மொழி தமிழ் முன் பதிப்பு 8: ௮
எழுத்து தமிழ்
அரசு - ஊர்க் கல்வெட்டு எண்: 72
அரசன் *
இடம் வேதபுரீஸ்வரர் கோமில் நுழைவு வாமில் உள்பக்கம் இடதுபுறச் சுவர்.
குறிப்புரை : இவ்வூரில் இருந்த மூன்று பேர் தங்களுக்கு இவ்வூரில் பங்காக இருந்த
நிலத்தினை அடைமானம் வைத்திருந்தனர். அந்நிலத்தினை விற்று உரிய
காசுகள் பெற்றுக்கொண்டுக் கோமிலுக்கு சிந்திக்க வேண்டிய வரிமினைக்
கொடுத்துள்ளனர்.
கல்வெட்டு
1.
2.
3.
சுக்ல்ல வருஷூ காத்திகை மாதம் ௪ ௫” உடையார் . . . ஈயில் தண
பத்தூர் திரு. . . ணாதநும் திருவேங்கடமுடையா . . .
யெ ஒரு மாவரையும் நாங்கள் மாகாசெணத்தின் . . .
யேழுமா முக்காணி அரைக்காணியும் கணி . . . கிரம € ௭9 யும் நீக்கி
யெங்கள் மூன்று பேர்
மனையும் தறிக்குடியும் மற்றும் எப்பேற்பட்ட சகல சமுதாயப் பிறாத்தியு
முள்பட 'மலைத்தாங்களில் எங்கள் . . .
ணம் நூற்றெழுபதுக்கும் வட்டிக்கு சிலவாக மிந்தப் பங்கு காகயும் 6
௨௰ஷயும் மேலைத் தாங்கலில்
வித்து கொள்ள கடைவராகவும் அநுபவிக்கும் மிடத்திலிற்றை நாள்
௨.௨.௨றுக்கும் பத்து . . . அஞ்சு பணம் விழுக்காடு வட்டியுமிட்டு ஏறின
வட்டியு முதல் பணமும்
121
9. நின்றால் 8மரியாதியாதி . . . யிதுக்கும் வட்டிமில் கூட்டின டீ ஈசுமஆக
ட ௪௯௫ கை
10. . . . நத்தம் நத்தகுறை ஏரி எதிர் வாய் . . . பிறவடை
11. சகல சமுதாய பிறாத்தியமு . . . கொள்ள கடைவாராகவும் அனுபவிக்கும்
மிடத்து இதுக்கு
122
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 75/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு $=
வட்டம் வந்தவாசி வரலாற்று ஆண்டு : -
டி திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 98/1900
மொழி தமிழ் : i முன் பதிப்பு : 7/108
த (தெ.க.தொ.)
எழுத்து தமிழ்
அரசு - ஊர்க் கல்வெட்டு எண்: 73
அரசன் ட
இடம் வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : திருவோத்தூருடைய நாயனார் கோயில் நிர்வாகத்தினரான தானத்தார் புலியூர்
பெரும்பாக்கத்திலுள்ள 250 குழி நிலத்தினை பல்லவராயர் பிள்ளை என்பவரிடம்
100 பணம் பெற்றுக் கொண்டு கேதாரி நாதர் மடத்துக்காக விற்றுக்
கொடுத்துள்ளனர்.” இந்நிலத்தின் மீதான வரிகளைப் பெறுவதில்லை என்றும்
தெரிவித் துள்ளனர்.
கல்வெட்டு :
|
[ட தத த் த் - ட ந
குறோதனவருஷம். ஆவணி மீ” ௮ ௨ திருவோத்தூருடைய நாயினார்
. கோயில் தானத்தார் பல்லவராயர் பிள்ளைக்கு சண்டேசுர விலை-
ப் பிறமாணம் பண்ணிக்குடுத்தபடி காலாண்ட[*]ர்கள் தெருவில் பல்லவரா[ச]
௨ சிவன் கேதாரிநாதர் மடத்துக்கு புலியர் பெரும்பாக்கத்தில் நன்செய்
௨ நிலத்தில் கோலம் குழி ஈரும் மொடிசெறு குழி ஈரும் (பிராயன்) பிராயன்
6 ௨ குழி [ஈ]ரம முருக்கன்குண்டில் உ ரம ஆக குழி ர௱ இந்த குழி
அஞ்-
- லூற்றுக்கும் விலைப்படி ப௱ இப்பணம் நூற்றுக்கும் இந்த நிலம் சந்திறாதித்-
௨ தவரையும் அனுபவித்துக்கொள்ளக்கடவர் ஆகவும் இந்த நிலத்தை
123
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
. நோக்கிவரும் அரைமனையிற் பிறக்கும் பழவரி புதுவரி காணிக்கை தட்-
. டாயம் திருவோத்தூரில் இறுக்கும் பலவரிகளும் [வ]ச்ச வினி(வி)யோகமு-
. ம் பாடிகாவல் தலையாரி பேராமை எப்பேற்பட்ட சகலவரிகளும்
. கொள்ளக்கடவது அல்ல ஆகவும் இப்படி சம்மதித்து சண்டேசுரவிலை-
. ப்பிறமாணம் பண்ணிக்குடுத்தோம் பிள்ளை பல்லவராயர்க்கு திரு வோத்தூரு -
. டைய நாமினார் கோயில் தானத்தாரோம் இவை சந்திறமவுலி ஆழ்வார்
எழுத்து இவை
சைவசேகரபண்டிதர் எழுத்து இவை [க]ம்ப[நா]ரணனார் எழுத்து இவை
நாமினார் எழுத்து இவை கோயில்கணக்கு திருவுண்ணாழிப் பிரமராயன்
எழுத்து இவை டட. ரன் எழுத்து புவனாபதிதேவர் எழுத்த
குறோதன வருஷம் ஆவணிமீ” [௮ ௨] பிள்ளை பல்லவராயர் பிள்ளை
திருவோத்தூர்
காலாண்ட [£*]ர்களில் திருப்பாட்டு காங்கேயர் மகனார் பல்லவராசசிவனுந்
திருவிட்டுக்குடுத்தபடி நாம் திருவோத்தூரில் தானத்தார் பக்கல் கொண்ட
மனை
யும் புலியர் பெரும்பாக்கத்தில் நன்செய்நிலத்தில். கொண்ட ஒ ரம-ம்
மனையும் ன்
சந்திறாதித்தவரையும் தாமே அனுபவித்து நம்முடைய மடம் நன்றாக
நடத்த-
க்கடவர் ஆகவும் இப்படிக்குத் திருவிட்டு இட்டுக்குடுத்தமைக்கு இவை
பல்லவராயர் எழுத்து [1]
124
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 76/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 17-நூற்.
ஊர் திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 122/1939-40
மொழி தமிழ் முன் பதிப்பு க
எழுத்து தமிழ்
அரசு - ஊர்க் கல்வெட்டு எண்: 74
அரசன் ன்
இடம் வேதபுரீஸ்வரர் கோமில் வலது நுழைவு வாயில் உட்கோபுரம் கிழக்குச் சுவர்
குறிப்புரை : கோநேட்டி திம்மைய தேவமகாராயர் நிர்வாகத்தில் அவரது முகவரான அன்னதான
பேரேற்றுப்பிள்ளை என்பவர் இக்கோயிலுக்குச் சொந்தமான திரைச்சீலை,
திருப்பரிவட்டம், திருவெண்சாமரம், தேர்வடம், கொடி, குடை, திருவாடுதண்டு
ஆகியவைகளை இரவலாக யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று கோமில்
அதிகரிகள் மற்றும் கணக்கருக்கு கட்டளையிட்டுள்ளார். கல்வெட்டின் நடுப்பகுதி
கட்டடப் பகுதிக்குள் மறைந்துள்ளது
கல்வெட்டு
1. ௨ ஆனந்த வருஷூ தை . . ல் சுரார முராசு கோநேட்டி
2. திம்மைய தேவ2ஹா[ராயற்கு] . . . கற்த்தரான அன்னதான பேரே-
3. ற்றுப் பிள்ளை அதிகார கு . . . மக் கணக்கப் பிள்ளையளும் தவம்
4. க கட்டைளையிட்டபடி நாள் . . . ல் திரிச்சீலை முதலான திருப்பரி-
5. வட்டமும் திருவெண்சாமரமு . . . சோடிப்பும் . தேர்வடமும் கொ-
6. டி குடையிடக்கைய் மப் . . . முட்டும் திருவாடுதண்டும் யா-
7. தொருத்தர் மிரவிலே ன்று . . . மும் கேட்க வந்தவன் அபிமானமும் மிது
8. குடுக்க சொன்னவர்கள் ௮ . . . ம் திருவத்தூர் ஏழு வெட்டியாற்ரும்
குடுக் -
9. க கடைவர்களாகவும் . . . ல்வெட்டை அசிங்கதம் பண்ணினவர்கள்
10. கெங்கை கரையிலே தங்கள் . . . யும் தங்கள் கையாலே கொன்ற
பாவத்திலே
11.
போக கடைவர்களாகவும்
125
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 77/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1800
செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 1978
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 80/1999-40
தமிழ் முன் பதிப்பு ட
கிரந்தங் கலந்த தமிழ்
விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண் : 75
ஹரிஹரர்
வேதபுரீசுவரர் கோயில் முதல் திருச்சுற்று கிழக்குச்சுவர்.
நாவனை அக்ரகாரத்தில் வசித்து வரும் பூதிமாஷ கோத்திரத்து ஆசுவலாயன
குத்திரத்து ரிக்வேதம் கற்றறிந்த மாதரசர் வசவணங்கள் என்பவர் ஜயங்கொண்ட
சோழ மண்டலத்து காலியூர்க கோட்டத்து காழினர் நாட்டு திருவோத்தூர்
கோயிலுக்குத் திருநந்தவனம், சத்திரம், மடம் ஆகியவற்றினை நிர்வகிப்பதற்கு
கோயில் ஸ்தானிகர் வசம் நிலம் ஒன்றினை அளித்துள்ளார். தினமும்
இறைவனுக்குத் திருநந்தவனத்தில் இருந்து பூக்களைக் கொண்டு திருமாலை
சாத்திட திருமாலைப்புறமாக நிலம் தானமளிக்கப்பட்டுள்ளது. மேலும்,
சத்திரத்தினை நிர்வகிப்பதற்கு குடிமனை ஒன்றும் தானமளிக்கப்பட்டுள்ளது.
1. ஹஹஷிய்ீ ஹாஊணமலெறறற ௬றிறாய விலாடற் லாஷெிஷூக்குத் தப்புவராயர்
கண்டன் வவ வம) உஊஷிணொத்தற ஸ2-2,ாமிவசி
ஸ்ரீவீமஹறியப்ப உடையர் உரயிவிமாஜு பண்ணா நின்ற ஸகாவூ
சூக௱ன் மேல்
2. செல்லா நின்ற காஓஒயுக்த வஷூஏ 8ஷல நாயற்று ௬வ௱ வக்ஷத்து வகசியுடி
திங்கள் கிழமையும் பெற்ற திருவோணத்து நாள் நாவனை ௯.ம, ஹாறத்தில்
பூகிராஷ மோகுத்து சூழுலாய ஹுக.த்து 8ஹெகி மாதரசர்
வஸவணங்கள் ஜயங்கொண்டசோழ ம-
3. ண்டலத்து காலியூர்க் கோட்டத்து காழினர் நாட்டு திருவோத்தூர் உடையார்
திருவோத்தூருடைய நாயனார்க்கு திருநந்வநத்துக்கும் குத்துக்கு
ஊத்துக்கும் ஹானிகர் பக்கல் கொண்டு விட்ட ஆற்றுக்கு வடக்கு
ஏரிகரைக்கு தெற்கு ஸெவாயிறாஜா கொல்-
126
4. லைக் கோட்டத்துக்கு மேற்க்கு திருவல்லமுடையார் ஜீவநத்துக்கு கிழக்கு
கிளிச்சிறாக்கைத்தாக்கு நான்கு எல்லைக்கு உட்பட்ட நிலமும் மரமும்
கொண்டு இன்னாயனார்க்கு நாள் வழி திருப்பள்ளித்தாமந் சாத்தி
திருமாலைப்புறமாகவும் மரத்தில் உள்ள பழங்கள் ஆடி அருள அமுது
5. பித்து சூவரகூரவஹாயி ஆக நடக்க கல்லுவெட்டிக் குடுத்தோம் இதுவும்
ஹத, மடத்துக்கு கொண்ட வடக்கு திறந்த சிறகினில் விக்ஷ£ஸத்துக்கு
கிழக்கு காலாண்டார் மனைக்கு மேற்கு மனைகமுகு சேரலந் குடிமனை
ஒன்றும் மனைப் பட[ப்]பையும் ஸகுத்துக்கு விட்டோம் இப்படி . . .
6. லைப்புறமும் மும் கொண்டு விட்டோம் இன்த ம$29 சூவகாக௯௯ ஹாயி
ஆக நடக்கும்படி கொண்டு குடுத்தோம் வஸவனங்கள் இது
பன்மாஹேஸற ஈகக்ஷ உ
127
த.நர.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 78/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம். 1290
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1908
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 90/1939-40
மொழி : தமிழ் முன் பதிப்பு தன
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : விசயநகரர் ஊர்க் கல்வெட்டு எண் : 76
அரசன் : கம்பணன்
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் முதல் திருச்சுற்று கிழக்கு வெளிப்புறச் சுவர்.
குறிப்புரை : காஞ்சிகுறி பாரத்துவாசி சைவாதிராஜன் என்பவருக்கு அத்திபற்று திருவேங்கட
நல்லூர் ஊரில் நாட்டு அளவு கோலால் அளக்கப்பட்ட 4 வேலி நிலத்தினை
இறைநீக்கி வழங்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு ' :
1. ஹஷிஸ்ீ 2௯ ஹாணலேமுாற் அரிறாய விபாடன் லாெிஷக்குத் தப்புமராயர்
கண்டன் பூவ” ஊஷிண வயிசொத்தற ஸஹ . . .
2. நாயகன் ஸ்ரீவீரபொக்கண உடையார் குமார கம்பண உடையர்
வடயிவிறாஜம் பண்ணி அருளா நின்ற காணு ௬௨௭௭௯ மேல்
செல்லா
9. நின்ற கீலக வருஷத்து கன்னி நாயற்று உ௫வ*வக்ஷத்து திகியெ
யும் திங்கட் கிழமையும் பெற்ற பூசத்து நாள்
4. காஞ்சிகுறி லாறத்துவாசி ஸெவாயிமாஜற்கு ௨ஃகவ-9வ-8க
வாதசிகவெரையும் செல்லக் குடுத்த நிலம் நாட்[டு அள*]-
5. வு கோலால் நிலம் நாலு வேலிக்கு அத்தி பற்றில் திருவேங்கட நல்லூர்
நன்செய் புன்செய் உட்பட ஸவ" 8[ஈந;]
6. அகர இறையிலி லட்டவரத்தி ஊர் அடங்கலும் சன்திராதித்தவரையும்
நடக்க விட்டோம் இவை பன்மாஹேறற [மடெக்ஷ]*
128
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 79/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 17-18- நூற்.
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை:
மொழி : தமிழ் முன் பதிப்பு 3 -
எழுத்து தமிழ்
அரசு : 2 ஊர்க் கல்வெட்டு எண்: 77
அரசன் ஸ்
இடம் : காங்கியம்மன் கோயில் நுழைவு வாயில் வலதுபுறம் உள்ள நவகண்டச்சிற்பம்.
குறிப்புரை : இருஞ்சிபுரத்தைச் சார்ந்த வீரன் ஒருவன் தனது தலையை அரிந்து இறைவிக்கு
காணிக்கை கொடுத்துள்ளான்.
கல்வெட்டு
1. பராப வருஷ
2. டி சித்திரை மாதம் ௨௰௫
3. தியதி இருஞ்-
4. சி பரத்தில்
5. இருக்கும்
129
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 80/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு த
செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 1125
திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 88/1999-40
தமிழ் ப முள் பதிப்பு பல
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 78
விக்கிரமசோழன்
வேதபுரீஸ்வரர் கோயில் நடராசர் சன்னதி மேற்குச் சுவர்.
ஜயங்கொண்டசோழ மண்டலத்து காலியூர் கோட்டத்துக் காயிரம்பேடு நாட்டு
அரியாவூர் ஊரைச் சார்ந்தோர் திருவோத்தூர் கோயிலில் இருக்கும் சிவயோகி
சூரசாரம்பி ஆரனைதியாகி ஆண்டார் என்பவர் இக்கோயிலில் செந்நெல் அமுது
செய்விக்க வேண்டித் திருவோத்தூர் கோயில் பண்டாரத்திலிருந்து அன்றாடு
நற்காசு 180 காசுகள் பெற்றுக்கொண்டு 5 வேலி ஒரு மா அளவு நிலம்
கோயிலுக்கு விற்றுக் கொடுத் துள்ளனர்.
1. ஷஹஹிஸ்ரீ பூமாலை மிடைந்து பொன்மாலை திகழ்தரப் பாமாலை மலிந்த
பன்மணித்திரள புயத் திருநிலமடந்தையோடு ஜயமகளிருப்பத் தன்வரை
மார்-
2. வந்தன் தெனப் பெற்றுத் திருமகளோடு தனிமிருப்பக் கலைமகள் சொற்றிறம்
புணர்ந்த கற்பிணளாகி விருப்போடு நாவகத் திருப்ப அகிலபுவனமுங்
கவிப்ப-
3. தோர் புதுமதிபோல வெண்குடை மீமிசை நிழற்றத் திசைதோறுந் திகிரியோடு
செங்கோல் நடப்பக் கருங்கலியொளித்துப் பிலத்திடைக் கிடப்பக்குற-
4. த்திடைத் தெலுங்க வீமன் விலங்கல மிசை ஏறவுங் கலிங்கர் பூமியைக்
கனலெரி பருகவும் ஐயம்படைப் பருவத்து வெம்படை தாங்கி வேங்கை
மண்டலத் தாங்கிளிதிருந்து வ-
5. ட திசைவ்விருப்பருத்தருளித் தென்றிசைத் தருமமுந் தவிழ்ந்தானமுந்
தழைப்ப வேதமும் மெய்ம்மையுமாதியுகம் போலத்த தலைத்தலை சிறப்ப
வந்து ச-
130
டக
12.
18.
14.
15.
16.
17.
18.
டர்மணி மகுடம் முறைமயிற்குடி மன்னுமிர்க்கெல்லாமின்னுமிர்த் தாய்
யொற்றண்ணளி பரப்பித் தனிவந்து தான் கொற்றவாய் தலபுறத் து ம-
ணி நடவோடுங் கமுர்ச்முஸ்க விசயமும் புகழுமென்மோலோங்கச் செழியர்
வெஞ்சுரம்புகச் சேரலர் கடல்புக அழித்தருளி சிங்கணர் அஞ்சி டெ
நஞ்சலமரக் கங்கர் திறைமிடக் கன்னடர் வெந்நிடக் கொங்கரொதுங்க
கொங்கணர் சாயமற்றெத்திசை மன்னருந் தந்தந் தமக்கராணனத் திருமலர்ச்
டே
சவடி உரிமமிலிறைஞ்சித் தொல்லை ஏழுலகுந்தொழுதெழத் தோன்றிய முல்லை
வாரநங்க முக்கோக்கிழாநடி உமையோடு சங்கரன் இமயச்சீமை
. யத்திருந்தனநெனப் பொருந்தி உடநிருப்ப ஆங்கவன் மகழுங் கங்கையொப்பாகிய
தெரிபயரத்தில் தந் தியாகபதாகை புரிசூழல் மடப்பிடி புனித குணவனி-
தை திரிபுவனமுழுதுடையாளிவன் திருவுள்ளத்தருள முழுதுடையாளேன்
உடநிருப்ப வீரஷஸிஃஹாஸநதீது முக்கோக் கிழாநடிகளோம்
வீற்றிருந்தருளி-
ய கோப்பரகேஸரி வநறாந கதி கி,ல-நச் சசூவர்த்திகள் ஸ்ரீவிக்கிரமசோழ சேவர்க்கு
யாண்டு ஏழாவது கட்டின் உணா மண்டலத்துக்-
காலியூர் கோட்டத்துக் காயிரும்பேடு நாட்டு அரியாவூர் மன்றுனா வணக்களமர்
கேட்டு நிகழ்ந்த நிலவிலை ஆவணக்கை எழுத்து இவ்வூ-
ர்க்குச் சமைந்து ஆணிகிழவன் ஏறன் பித்தனும் அவனிவீமனும் ஏறன்
நிமத்தனும் தியம்பன் சூராவனும் கருவூர் ஆராவமுதும் நிமித்தன் காக்கு
நாயகனு-
ம் ஆதித்தனானும் இவ்வனைவரோம் ஊர்க்குச் சமைந்து இக்கோட்டத்துக்குக்
காழியூர் நாட்டு திருவோத்தூர் திருவோத்தூருடையார் ஆதிகசாஸம-
ணேறாறற்கு நிலம் நாங்கள் விற்று குடுத்த பரிசாவது இக்கோயிலில்
கும்பிட்டிருக்கும் மிவயோமி ஹ-மஸஹாரம்பி ஆரணதியாகி ஆண்டார்
ஷிக்கஷ புக்-
கு ஆருடையாரைச் சென்நெல்லமுர்த்து செய்விக்க நிலங் கொண்டு தேவர்
ஸ்ரீமண்டாரத்து ஒடுக்கி இருந்த காசில் நாங்கள் யாண்டு ஏழாவது
எங்களூர்ப்
பட்டிறைக்கு இவ்வாளுடையார்க்கு சென்நெல்லமுர்து செய்தருள விளைநிலம்
குடுக்க நாங்கள் கொண்ட அன்றாடு நற்காசு நூற்று முப்பது இக்கா-
131
20.
21.
22.
28.
24.
25.
26.
27.
28.
29.
சு நூற்று முப்பதுங் கொண்டு நாங்கள் விற்றுக்குடுத்த நிலமாவது எங்கள்
காணியான தண்டலத்தில் தென் கழனியில் தெற்கில் ஜயங்கொண்ட சோழப்
பேராற்றுக்குத் தெற்கிற் கொல்லைத் தரத்தில் கொல்லையில் நாங்கள் விற்றுக்
குடுத்த பூமிக்கு எல்லையாவது தென்பாற்கெல்லை காரணை மடுவின்
தெ-
ன் நாசறுதியே கிழக்கு நோக்கி திருவுனாயகர் மடப்புறத்துக்கு நீர் பாயும்
வாய்க்காலின் வடகரைக்கு வடக்கும் கீழ்பாற்கெல்லை வழிச்ச கிழான்
நம்பி திருத்தி
ண கீழ்வரம்புக்கு மேற்கும் வடபாற்கெல்லை மேற்படி செறுவின்று
வடவரம்புக்கு தெற்கும் இவ்வரம்பே மேற்கு நோக்கி வேப்பங்கன்றிலே
பற்று மேற்கு நோக்கிப் போய் வடமேலை மூலை விளாக கொல்லையின்
தென்நாசறுதிக்கு தெற்கும் மேல்பாற்கெல்லை பள்ளிபழயஞ்சி திருத்தின
டே
மல் வரம்புக்கு கிழக்கும் இன்நாற்பேரல்லைக்குட்பட்ட உண்ணிலம்
ஸ்ரீபாதக்கோலால் நஞ்சை விளைநிலம் குழி எண்ணாயிரத்தொரு நூரும்
புஞ்சை
நிலம் செய்யாற்றுக்கு வடக்கும் பெருவழிக்கு வடக்கு மேட்டில் நிற்கும்
வேட்பாலை நடுவாக புஞ்சை விளைநிலங் குழி இரண்டாமிரமும் ஆக
நஞ்சை
புஞ்சை விளை நிலம் குழி பதிநாமிரத்தொரு நூற்றிநால் நிலம் ஐஞ்சே
ஒரு மாவும் இன்நிலங்களுக்கு நீர்பாயக் கொல்லை நடுவே மேற்கு
நோக்கி ஜயங்டெ
காண்ட சோழப் பேராற்றிலே வர நீர்பாய வாய்க்கால் கல்லிக்
கொள்ளப்பெறுவதாகவும் இவ்வாய்காலால் பாயும் நீர் இன் நிலங்களுக்கல்லது
மற்-
று நீர் பாயப்பெறாததாகவும் முற்சொல்லப்பட்ட ஐஞ்சே ஒரு மாவுக்கும்
எம்மில்லிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு நூற்று முப்பது
இக்கா-
சு நூற்று முப்பதும் ஆவணக்களியே பொருளறக்கொண்டு விலையற
விற்று விலையாவணஞ் செய்து குடுத்தோம் குடுத்த பரிசாவது நாங்கள்
வி-
132
90.
81.
92.
33.
94.
35. . .
36.
87.
ற்றுக் குடுத்த ஐஞ்சு வேலியும் ஒரு மாவுக்கும் ௯,ய உ,வுமும் இறை
ஆஹுமும் கொண்டு இன்நிலத்துக்கு வஉாகித்தவரை இறை இழிச்சி
நீர்நிலை செ
நல்லந்தராயம் சில்லிறைநற்சோறுமாட்டென்றும் வெட்டி முட்டையாள் என்னும்
திருக்கொற்றவாய்ப்பாற்போந்த மற்றும் எப்பேற்பட்ட குடிமைகளும்
சால்லிப் பெறாததாகவும் இன்நிலஞ் சுட்டிவந்த நாங்களே இறுக்கவுஞ்
செய்யவுங் கடவோமாகவும் ஸம்மதித்து விற்று விலையாவணஞ் செய்து
குடுத்தோம் முற்சொல்லப்பட்ட பரிசே இருகாலாவதும் முக்காலாவதும்
எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு நூற்று முப்பதும் . .
பொரு
ளைக் கொண்டு விற்று விலையாவணஞ் செய்து குடுத்தோம் ஊர்க்குச்
சமைந்த இவ்வனைவோம் இவர்கள் வேண்ட இவ்வாவணங்கேய்
எழுதிநேன் இவ்வூர் ஸமிவவாஹணந்
ற ஹன் திருமகாளமுடையான் லட்டநேன் . . . எழுத்து இப்படி
அறிவேன் இவ்வூர் வைகாநஸ . . . காஸ்டபன் அழகிய மணவாள
லட்டநேன் . . . எழுத்து
இப்படிக்கு இவ்வூர் ஆணிகிழவன் கருவூர் ஆராவமுதன் எழுத்து இப்படிக்கு
'இவ்வூர் ஆணிகிழவன் தியம்பன் குராவன் எழுத்து . . . இவை
ஆணிகிழவன் பரமண்டலாதித்தன்
. ௨.௨... இவை ஆணிகிழவன் நிமத்த . எழுத்து இப்படிக்கு இவை ஆணி
கிழவன் ஏரன் நிமத்தன் எழுத்து இப்படிக்கு இவை ஆணி கிழவன்
்... ஆவனி நிமத்தன் எழுத்து
த.நா... தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை
கல்வெட்டு
திரு ங்கை
செய்யாறு
திருவோத்தூர்
சமஸ்கிருதம்
கிரந்தம்
தொடர் எண் :- 81/2017
ஆட்சி ஆண்டு
வரலாற்று ஆண்டு
இ.க. ஆண்டறிக்கை:
முன் பதிப்பு
ஊர்க் கல்வெட்டு எண்:
வேதபுரீஸ்வரர் கோயில் சந்தனம் அரைக்கும் கல்.
கிபி. 14-15
சந்தனம் அரைக்கும் கல்லினைத் தானம் அளித்த செய்தி.
1 அர சனி ஏ எிறின . . . எச்
134
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 82/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 2
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 1248
ஊர் : திருவோத்தூர் இ.க. ஆண்டறிக்கை: 85/1900
மொழி : தமிழ் முன் பதிப்பு ௩. 794
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 80
அரசன் : திரிபுவன ஸ்ரீராஜேந்திரசோழதேவர் (மூன்றாம் இராசேந்திரன்)
இடம் : வேதபுரீஸ்வரர் கோயில் மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : நடுவில் நாட்டு வேசாலி நாட்டு வாகூரில் இருக்கும் மன்றாடி பாதாளி எச்சிநம்பி
என்னும் அமுதவல்லக்கோன் என்பவன் ஜயங்கொண்டசோழ மண்டலத்து
காழியூர் கோட்டத்து காழியூர் நாட்டு திருவோத்தூருடையார் இறைவனுக்கு
திருநந்தா விளக்கு ஒன்று வைப்பதற்கு 90 ஆடுகள் தானமளித்துள்ளான்.
இக்கோயில் திருநந்தாவிளக்குக் குடியைச் சார்ந்த திருவெண்காட்டுக்கோன்
என்பவன் இவ்வாடுகளைப் பெற்றுக்கொண்டுத் தேவையான நெய் அளிக்க
ஒப்புதல் அளித்துள்ளான்.
கல்வெட்டு :
1. ஹஸிஸ்ரீ கி தி,ஹவரநவசூவத்திகள் ஸ்ரீ ராஜே... சோழமேவற்கு யாண்டு
இரண்டாவது ஜயங்கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துக்
காழியூர் நாட்டுத் திருவோ-
a. த்தூருடையார்க்கு நடுவில் நாட்டு வேசாலிநாட்டு வாகூரில் இருக்கும்
மன்றாடி பாதாளி எச்சில் நம்பியான அமுதல்லவக்கோன் வைத்த
திரு நுந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட
3. ஆடு தொண்ணூறு ஆடு தொண்ணூறும் கைக்கொண்டு இத்திருநந்தாவிளக்கு
ஒன்றும் வர ரூ.டாசிசூவரை செலுத்தக்கடவேனாக கைக்கொண்டேன்
இத்தேவர் திருந-
4. நீதாவிளக்குக்குடி திருவெண்காட்டுக்கோனேன் இவை என்னெழுத்து இது
பன்மாஸேயு। ஈகக்ஷி ॥
135
த.நா.௮. தொல்லியல் துறை
குறிப்புரை
கல்வெட்டு :
1. ஷஹுஹிஸ்ரீ[॥*] கோவிசைய கம்பவர்மர்க்கு யாண்டு இருபதா[வது ] படுவூர்க்
கோட்டத்து காவதி-
திருவண்ணாமலை
செய்யாறு
பிரம்மதேசம்
: - தமிழ்
கிரந்தங் கலந்த தமிழ்
பல்லவர்
கம்பவர்மன்
தொடர் எண் :- 83/2017
ஆட்சி ஆண்டு : 20
வரலாற்று ஆண்டு : கியி. 866
இ.க. ஆண்டறிக்கை: 227/1915
முன் பதிப்பு : 80/148
ஊர்க் கல்வெட்டு எண்: 1
சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவர்.
படுவூர் கோட்டத்து காவதிப்பாக்கத்து ஆளுங்கணத்து உறுப்பினர்களில் ஒருவன்
ஸ்ரீபோந்தைபெருமானடிகள் கோயிலுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பதற்கு
11 கழஞ்சுப் பொன் கொடையளித்துள்ளான்.
2. ப்பாக்கம் யாளும்கணத்தா
9. மல்லச் சதி[வேதிமங்]கலத் துத் திருப்போந்தை-
4. [ப்பெருமாநடிகள் ஸ்ரீகோயிலில்த் தண்ணீர் அட்டுவ .
பதிநொரு கழ-
5. ஞ்சு இப்பொன்னால் வந்த பலிசை கொண்டு த[ண்ணிர]ட்டுவதாக வைத்தேன்
இத-
6. 23(ம)ம் இரக்ஷித்தார் ஸ்ரீபாஓமூஜி என்தலை மேலன
136
டட [வதாக பொன்]
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 84/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 20
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 891
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 297/1915
மொழி தமிழ் முன் பதிப்பு : 80/158
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 2
அரசன் இராஜகேசரிவர்மன் (முதலாம் ஆதித்தன்)
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் தினமும் நண்பகலின் போது ஒரு
பிராமணனுக்கு உணவளிக்க வேண்டி இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து
யாளும்கணத்து உறுப்பினர் மணற்பாக்கத்தைச் சர்ந்த குமாரடி பட்ட வாஜபேஜியர்
மகன் திருப்போந்தைச் சோமாசியார் என்பவன் திகைத்திறல் ஏரிமின் கீழிருந்த
நிலம் ஒன்றினை வழங்கியுள்ளான்.
கல்வெட்டு
1.
2.
3.
4,
6.
ஹஹிஸ்ரீ[॥*] கோராஜகேஸரி வ2ற்க்-
கு யாண்டு இருபதாவது தாமர் கோட்ட-
த்துத் திருவேகம்பபுறத்து ராஜ2-
ஒவக- வேதி மங்கலம் யாளும்கண-
த்தாருள் மணற்ப்பாக்கத்துக் குமாரடி ஒட்ட வாஜ-
லேஜியார் மகநார் திருப்போந்தைச் சோமா-
. சியார் ஸ்ரீபோன்தைப் பெருமா[ன*]டிகள் ஸ்ரீகோயி[லி*]-
௨ல் நிசதி ஒரு ஸூராஹணன் 8மநானத்து அடிமு-
௨ ண்பதற்கு' []வத்த திகைத்திறல் ஏரி கீ-
ஆகாரம் உண்பதற்கு
137
1), ஆடி கட்டடக் லூர்ப் பாராயணச்செல் . . . .
லல ப் திருப்போந்்[தை*] . . . .
த கத ல இருநூற்று அறுபத்து இர . .
18. ண்ட[ரை*]க் குழியாலும் வந்த ஹோமம் கொ-
14. ண்டு சந்திராசித்தவற் இய்ஸ்ரீகோமில் ௧-
15. ணவாரியப் பெருமக்களே ரக்ஷிப்பதாக
16. வைத்தேன் திருப்போந்தைச் சோமாசியேன்
17. இ?) ரக்ஷிப்பாரடி என்றலைமேலின
138
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 85/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 27
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 898
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 2380/1915
மொழி தமிழ் முன் பதிப்பு : 30/151
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்:
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 3
அரசன் இராஜகேசரிவர்மன் (முதலாம் ஆதித்தன்)
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : இவ்வூர் நல்லூழான் ஊரடி என்பானின் மகன் அட்டமூர்த்தி என்பவன் நிலம்
ஒன்றினை வாங்கி தனது மனைவியின் பெயரால் அறக்கட்டளை ஏற்படுத்தி,
இதன் மூலம் தினம் ஒரு பிராமணனுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்துள்ளான்.
கல்வெட்டு
த
ஹஸிஷஸ்ரீ [11*] கோராஜகேஸரிவநற்க்கு யாண்டு இருபத் தேழாவது
திருவேகம்பபுறத் து ராஜமல்லச்சதுவே (தி)
. மங்கலத்துத் திருப்போந்தைப் பெருமானடிகள் கோயிலில் இவ்வூர் த . .
. கை நல்லூ-
ழான் ஊரடி மகன் அட்டமூத்தி வைத்த விருத்தூணுக்கும் திருவிளக்குக்
. ஊர்க்கற்செ-
..ம்மை பதின்கழஞ்சும் திருப்போந்தைஅடிகள் கோயிலின் கிழக்கு இவன்
றக. பட் மண்டை
ஸவ௯,துஜியார் பக்கல் விற்றுக் கொண்டுடைய இருநூற்றெழுபத்தைஞ்சு
குழி 5505௨0 வந்த ோ[ம]ங் கொண்டு நிசதம் ஒரு ஹா-
. ஹணனை எட்டுவதாகவும் ஒரு நந்தாவிளக்கெரிப்பதாகவும் வைத்தேன்
இத29 [ஈக்ஷித்தார் ப]ாததூளி என் தலைமேலன் [॥*]
139
த.நா.அ௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 86/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 880
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 908
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 203/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/125
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு த் ஊர்க் கல்வெட்டு எண்: 4
அரசன் நப்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் வடக்குச் சுவர்.
குறிப்புரை : சோழ நாட்டு வடகரை இன்னம்பர் நாட்டைச் சேர்ந்த காரி இலாடஆதித்தன்
என்பவன் திருவேகம்பபுரம் இராஜமல்லச் சதுர்வேதி மங்கலத்து திருப்போந்தைப்
பெருமானடிகள் இறைவனுக்குத் திருநந்தாவிளக்கு ஒன்று ளிக்க 1272 கழஞ்சுப்
பொன்னினை இக்கோயில் கணப்பெருமக்கள் வசம் அளித்துள்ளான். இப்பொன்னின்
வட்டியைக் கொண்டு விளக்கெரிக்கக் கணப்பெருமக்கள் சம்மதித்துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஸ்ரீ சகர யாண்டு எண்ணூற்று முப்பது திருவேகம்பபுறத்து இராஜமல்ல
வதுவே.தி மங்கல-
2. த்துத் திருப்போந்தைப் பெருமானடிகளுக்குச் சோழ நாட்டு வடகரை இன்னம்பர்
நாட்டு ௨௨ 14
3. டடான் காரி இலாடதித்தனேன் வைத்த ந[ந்*]தாவிளக்கு ஒன்றுக்குங்
குடுத்த ஊர்க்க[ற்செம்மை பொன் பந்]-
4. நிரு கழஞ்சரையாலும் வந்த வுரதிகொண்டு இப்பெருமானடிகள் கணப்
பெருமக்களாரான வ௩,
5. . . . தமி நகாவிளக்கொன்று மெரிப்பி[ப்* ]பா[ர்*]களாக வைத்தேன் இதம்
ரக்ஷித்தாரடி யென்முடிமே
6. . . - இஜுத்துக்கு அஹிதம் வேண்டுவார் கங்கையிடைக் குமரிஇடைச்
செய்தார் செய்த பாவமடுவார் ॥-
140
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 87/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 890
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 908
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 228/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/149
எழுத்து : தமிழ்
அரசு 3 - ஊர்க் கல்வெட்டு எண்: 5
அரசன் 3 ன
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஸ்ரீபோந்தைப் பெருமாநடிகள் கோயிலில் நந்தா விளக்கெரிக்கக் கொடுக்கப்பட்ட
.... 1218 கழஞ்சுப் பொன்னினைக் கணப்பெருமக்கள் பெற்றுக்கொண்டு அதனின்
வட்டியின் வாயிலாக விளக்கெரிக்கச் சம்மதித்துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ[॥*] சகரயாண்டு எண்ணூற்று முப்பது திருவேகம்பப்புறத்து
ராஜமல்லச் ச[து]வ.திமகங்கலத்துத் திருப்போந்தைப் பெருமாநடிகள்
ஸ்ரீகோயில் திருவம்பலப் பொ . . ......... ௨௨௨
2. பன்னிரு கழஞ்சரை இப்பொன்னால் வந்த வுரதி கொண்டு ஒரு நஷா
விளக்கு வ,ாதித்தவற் இத்தளி கணப்பெருமக்களே முட்டாமை
எரிப்பா]ர்களாக வைத்தேன் இஜ$8 . ௨௨.
ஆ
டம! ல்க க்கு கல் மாசியார் இது ரக்ஷிப்பார் அமுமேமயாகஞ் கனி லம்
பெறுவதாகப் பாலித்தோம் கணப்பெருமக்களோம்
141
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 88/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம். 880
செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 908
பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 211/1915
தமிழ் முன் பதிப்பு : 30/133
கிரந்தங் கலந்த தமிழ்
- ஊர்க் கல்வெட்டு எண்: 6
சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
சிவக்குறி காமடிபெருமான் மற்றும் இவனது இளைய சகோதரன் பெருமாள்
ஆகிய இருவரும் கம்மாளர் சபையிடமிருந்த வாங்கிய நிலத்திற்கு இராஜமல்லச்
சதுர்வேதிமங்கலத்து ஐஞ்சஷ்டசதத்து சபையினர் வரிவிலக்களித்தனர். இந்நிலம்
ஸ்ரீபோந்தை மகாதேவர் வழிபாட்டிற்குத் தினசரி 2 நாழி அரிசி வழங்கிட
தானமாக வழங்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஹஹிஸ்ரீ[॥*] மக௱யாண்டு [எண்]ணூற்றுமுப்பது திருவேகம்பப்புறத்து
ராஜமல்லச் சதிவே,திமங்கலத்து அஞஷஸதத்து மமலையோம் படுவூர்க்
கோட்டத்துக் . . . ஷன் சிவக்குறிக் காமடிபெ[ரு]மக்களே [எ]ம்மூர்க்
கம்மாளர் ஸலையோம் பக்கல் விற்றுக்கொண்டுடைய அமரங்குழி
எண்ணூற்றிருபத்தைந்து குழியும் இக்கம்மாளர் பக்கல் மேற்ச்சொ-
2. ல்லப்பட்ட காமடிபெருமாநும் இவன்றம்பி பெருமாளும் விற்றுக்
கொண்டுடையர்களாமிந இவ்வமரங்குழி எண்ணூற்றிருபத்தஞ்சு குழியும்
அஞஷமதத்து . . . . மாதும் பெருமாநும் [வி]. . .'. லடு
பாடகங்களுக்கு மேற்க்கு கலிச்சங்காலுக்கு கறைக்கு இக்கா(ல்)லோடு
மடையக்கல்லு நீக்கிய மஞ்சிக்கத்தில் விற்றுக்கொண்டுடைய
இருநூற்றெழுபத்தைந்து கு[ழி]-
142
3. யுமாக இவ . . .. று குழியும் இக்காமடிபெருமாநும் இவன்[றம்பி]
பெருமாளும் எம்மூர் ஸ்ரீபோந்தை 8ஹாசேவர்க்கு நிசதி இருநாழி
குத்தலரிசியா . . த்தமையில் [இ] . . . . . . யும் இறையிலியாகப்
பணித்தோம். அஞஷமதத்து ஸலை[யோ]ம் பாததூளி என்தலை மேலந
[1*]
143
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 89/2017
மாவட்டம் திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சுகம். 880
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 908
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 212/1915
மொழி தமிழ் முன் பதிப்பு : 30/134
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு ம் ஊர்க் கல்வெட்டு எண்: 7
அரசன் -
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
குறிப்புரை : கணக்காயன் சாத்தன் கணவதி எனும் பேரரையன் என்பவன் ஸ்ரீபோந்தைப்
பெருமானடிகள் கோயிலில் திருநந்தா விளக்கெரிக்க 12) கழஞ்சுப் பொன்
கொடையாக அளித்துள்ளான்.
கல்வெட்டு :
1. . . . . னூற்று முப்பது திருவேகம்பபுறத்து இராஜ[மல்லச்] சதிவே_திமங்க
2. லத்துத் திருப் . . . . ௬மாநடிகளுக்கு செங்காட்டுக் கோட்டத்துக் கோட்டு
கணக்காயன் சாத்தன்
3. கணவதி ஆகிய . . . பேரரையனேன் வைத்த நந்தாவிளக்கு ஒன்று . . த்த
ஊர்க்கல்ச்செம்-
4. பொன் பன்னிரு கழஞ்சரை இப்பொன் பன்னிரு கழஞ்சரையால் வந்த யூதி
கொண்டுப் பெருமானடிகள் ௧-
5. ணம் பெருமக்களானாரேய் அ;ாஜித்தவற் நந்தாவிளக்கு ஒன்று
மெரிப்பிப்பார்களாக வைத்தேன் இத2-
6. ம் ரக்ஷித்தாரடி யென் முடிமேலன இ$த்துக்கு அஹிதம் வேண்டுவார்
கங்கையிடைக் குமரிமிடைச் செய்தார் செய்த பாவம்படுவார்
144
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 90/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 2
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 909
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 2338/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/154
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 8
அரசன் : மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் நடைபெறும் ஸ்ரீபலி வழிபாட்டின்
போது மேளம் கொட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கு நிலதானம்
அளிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு
1. [ஹஷிய்ீ[॥*] மதிரைகொண்]ட கோப்பரகேசரிவ? ற்கு யா[ண்டு ௨ ஆவது]
தப்த இஇது மித தக த்து ஸ்ரீபோந்தைப் பெருமானடிக . . . . . ..
2. [மீ ஸலி]கொட்டுவதற்கு சிலவாக [சை ]வத்த ஹூசியாகின்றது [நி]ச்சம்படிக்கு
[மேவர் ஸ்ரீ]. . . . நூற்று முப்பத்து நாலேகால்(க) குழியும் நான்கு
க...
145
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 91/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 4
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 911
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 2381/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/152
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் பத்க் ஊர்க் கல்வெட்டு எண்: 9
அரசன் ; பரகேசரிவர்மன் (முதலாம் பராந்தகன்)
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : கல்வெட்டு முழுமை பெறாமல் உள்ளது. திருநந்தாவிளக்கு ஒன்று ளிக்க 15
ட் கழஞ்சுப் பொன் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 90 கழஞ்சுப் பொன் வேறொரு
பணிக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனின் விவரம் அறிய
இயலவில்லை.
கல்வெட்டு
1. ஷஹுஹிஞஸ்ரீ[॥*] கோ[ப்* ]பரகேசரிபநற்கு யாண்டு னாலாவது இராஜமல்லச்சதுவே
2. ரிமல்லன் வச்ச ம2மாவது ஒரு நன்தாவிளக்குக்கு பதினைஞ்சு க . . .
3. தைஞ்சு கழஞ்சு மாக ஊர்க்கற்செம்மை தொண்ணூற்றுக் கழஞ்சு இதனால்
வன்த . . . .
146
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 92/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 4
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 911
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 232/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/153
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 10
அரசன் : பரகேசரிவர்மன் (முதலாம் பராந்தகன்)
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : புலியூர் கோட்டத்து வாயினா நல்லூர் ஊரைச் சார்ந்த குண்டின கோத்திரத்து
இருஷிகேசவன் என்னும் பிராமணன் இக்கோயிலில் சன்தி விளக்கு ளிக்க
வழங்கிய 15 கழஞ்சுப் பொன்னின் வாயிலாக வரும் வட்டியைக் கொண்டு
செயல்படுத்திட வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு. :
8 ஹி ஸ்ரீ [॥1*] கோப[ப் *]பரகேசரிப.நற் கு யாண்டு னான்காவது
இராஜமல்லச்சதுவேபதிமங்கலத்து [திருப்போந்தை ] பெருமானடிகள்
ஸ்ரீகோயிலில் புலியூ-
2. ர்க் கோட்டத்து வாயினானல்லூர் குணின(ர்) கோத்திரத்து நின்றயில்
இருஷிகேமவ . ட. [ச]ன்தி வி[ள*]க்குக்கு வைத்த பொன்
ஊர்க்கல்-
8. செம்மை பதினைஞ்கழஞ்சு இதனால் வன்த பலிசையாற் வரர£கிஷருள்ள[ள*]ள
. . இருஷிகேஸ-வனேன் ॥-
147
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 93/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு த
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 911
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 298/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/159
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 11
அரசன் : மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : கல்வெட்டுச் சிதைந்து காணப்படுகிறது. இக்கோயிலில் திருந்தா விளக்கெரிக்க
90 ஆடுகள் வழங்கித் தினம் உழக்கு நெய் அளக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஷுஹிஸ்ரீ[॥” ]
டக க ட்டு வஷாகிகவரை . . . .
நிர? ஓ! எட்டப் திருநந்தாவிளக்-
7. கெரிக்க வைத்த ஆடு ௯௰ இ௰கம் ர-
8. க்ஷித்தார் ஸ்ரீவா”உமென்தலை மேலன
9. இவ்வாடுமே இதன்றென்றான் . . [ட்ட]மு-
10. க்கால் நிசதம் உழக்கு நெய் அ[ட்டு]
11. வேன்னாநேன் . ஸன அர . ,
12. ணிலலி 9 .....
148
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை
செய்யாறு
பிரம்மதேசம்
தமிழ்
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர்
தொடர் எண் :- 94/2017
ஆட்சி ஆண்டு : 1[8]
வரலாற்று ஆண்டு : கியி. 9[20] ஆம் நூற்.
இ.க. ஆண்டறிக்கை: 229/1915
முன் பதிப்பு : 80/150
ஊர்க் கல்வெட்டு எண்: 12
மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
கல்வெட்டு சிதைந்தும் முழுமை பெறாமலும் உள்ளது. இக்கோமிலைச்
சார்ந்த பெண் ஒருத்தி தானமளித்துள்ளாள். தானத்தின் விவரம் அறிய
இயலவில்லை.
1. ஹஹிஸ்ரீ[॥*] மதிரை கொண்ட [பர* ]கேசரிபநற்கு யாண்டு பதி[ன்மூன்றா]- .
2. வது திருவேகம்பப்புறத்து ஈாஜ2ஓ[அது]வேஃதி மங்-
3. கலத்து ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோமி-
4. ல் புறுப்பள்ளி
5. ஈம்பச்சேர் மாவி ப
6. பழுத்தாள் நங்
[ep PP
149
த.நா.அ௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 95/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 16
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 922
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 226/1915
மொழி தமிழ் முன் பதிப்பு : 30/147
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 19
அரசன் முதலாம் பராந்தகன்
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஏரி வாரியத்தின் கணக்குகளை எழுதும் கணக்கனுக்கு (மத்யஸ்தன்)
அஞ்க்ஷ்ட்டசத்து சபையினர் மதிப்பூதியம் நிர்ணமித்துள்ளனர். அவனுக்கு
தினமும் 4 நாழி நெல்லும், வருடத்திற்கு 7 கழஞ்சும் பொன்னும், ஒரு சோடி
(ஜ் இணை) ஆடையும் வழக்கிடத் திமானித்துள்ளனர். மேலும் கணக்குகளைச்
சமர்ப்பிக்கும் போது தன்னுடைய நேர்மையினை நிரூபிப்பதற்கு பழுத்தக் காய்ச்சிய
இரும்பு கம்பியினை (மழு) பிடித்திட முன்வரவேண்டும். அவ்வாறு பிடிக்கும்
போது கைகளில் காயங்கள் ஏற்படவில்லை எனில் நிரூபிக்கப்பட்டதாகக் கருதி
கூடுதலாக ஊக்கத்தொகை (பாதசேஷா) வழங்கப்படும். அவ்வாறு இன்றி
காயம் ஏற்பட்டால் தவறு செய்ததாகக் கருதப்பட்டு, அதற்காக 10 கழஞ்சுப்
பொன் தண்டமாக வசூலிக்கப்படும். ஆனால் உடல் ரீதியான தண்டனை (சீர
தண்டம்) வழங்கப்படாது என்றும் முடிவெடுத்துள்ளனர்.
கல்வெட்டு :
த்
2.
3.
4,
ஹஹிஸ்ரீ[॥*] மதிரை கொண்ட
கோப்[ப*]ரகேஸரிவ?ற்கு யா-
ண்டு பதினா(ஆ)றாவது
மாஜூஒவக வேதி மங்-
௨ கல[த்*]து அய்ந்தஷமத்து
ஸலெயோம் ஒட்டிய ஹூ -
150
. வஹஜெஹெயாவது எங்கள் ம-
மஹர் ஏரிக்கணக்கு எழுது-
வார்க்கு ஓட்டிக் குடுத்த பரிசாவ-
. து நியதி கொற்று நெல் நான்(ந)-
னாழியும் ஆண்டு வரை செம்-
பொன் ஏழுகழஞ்சும் ஒரணை
க கூறையும் குடுப்போமாகவு-
, ம் இக்கணக்கு எழுதினான் ஓ-
. ருவனும் கணக்கு காட்டி மழு
. வேற்பானாகவும் மழுவேற்-
. று வென்றான் ॥ஸலனாம வா
மேஷம் குடுப்போமாகவு-
. ம் மழுவேற்று தோற்றானை
. எரி முதல் பெரிதாக இல்-
லாமையில் இகசோஷத்
. துக்கு ஆக பதின்க[ழஞ்]சு பொ-
ன்னே தண்டம் கொள்வோ-
. மா[க*]வும் ஒட்டினோம் ஸறிர த-
. ஸ்டம் செய்[ய]ப் பெறா[தோ]
. மானோம் அய்ஞ்சஷஸத்து
. ஹஹஹெயோம் ஸஹஸெ
௨ பணிப்-
151
152
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 96/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ட டமி
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 924
பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 224/1915
தமிழ் முன் பதிப்பு : 30/145
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 14
மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து சங்கரப்பாடியில் (எண்ணெய் வணிகர்
வசிக்கும் பகுதி)வசிக்கும் பேராய்ய நல்லூழான் ஊரடி என்பானின் மகன்
அட்டமூர்த்தி என்பவன் இக்கோயிலில் உள்ள தட்சணாமூர்த்தி இறைவனுக்கு
அமுதுபடி மற்றும் வழிபாட்டுச் செலவுகளுக்காக 925 குழி நிலம் தானமாக
|
வழங்கியுள்ளான். | |
|
1. ஷஹிஞஸ்ரீ[॥*] மதிரைகொண்ட கோப்-
2. பரகேஸரிஉர.ற்கு யாண்டு பதினேழா-
9. வது திருவேகம்பபுறத்து மாஜ£ஓ-
4. வகுவேதி மங்கலத்து சங்கரப்பா-
5. டி பேராய்()ய நல்லூழான் ஊரடி ம-
6. கன் அட்டமூர்த்தியேன் இவ்வூர் ஸ்ரீ-
7. போந்தை சக்ஷிணாச௫கி.பயாற்க்கு திருவ-
8. முதுக்கும் சோவானத்துக்குமாக
9. [வைத்த வகி வேற வா[ய்]க்காலின்
153
. தெற்கு நறையூர் நம்பியார் பா[ர]த்து
. நறையூர் வணிமமஓனார் பக்கல்
4 என்றமப்பன் விற்றுக்கொண்டு உடைய
. முன்னூற்று இருபத்தைந்து கு-
பழியும் [சை]வத்தேன் அட்டமூத்தி
. யேன் நான்னுள்ளளவும் கடை-
. காண்பேனானேந் இத? ஈக்ஷிப்பா-
ர் பாததூளி எந்தலை மேல[ன] உ
154
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 97/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 25
வட்டம் $ செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 992
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 222/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 80/143
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 15
அரசன் : மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
குறிப்புரை : மாங்காடு என்னும் ஊரைச் சேர்ந்த கண்யன் இரணசர்மன் என்பவன் வழங்கிய
10% பொன்னினை இவ்வூர் கணப்பெருமக்கள் பெற்றுக்கொண்டு இதனின்
வட்டியைக் கொண்டு ஸ்ரீபோந்தைப் பெருமாநடிகள் கோமிலில் நந்தா விளக்கு
ளிக்க உறுதியளித் துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ[॥*] மதிரைகொண்ட கோப்பரகேஸ-
ரிவ$ற்கு யாண்டு இருபத்து ஐஞ்சாவ-
து திருவேகம்பபுறத்து ஈாஜூ2ஓவுது-
வேபுதிஹ்கலத்து ஸ்ரீபோன்தை பெ-
ருமானடிகள் கோயிலில் மாங்காட்டு
மணன் இரணச2ன் ௰$மாவது ஒருநொ-
௨ ன்தா விளக்குக்கு [ன*]வத்த பொன் எடர்பு-
. (ர)ம் பதின்முக்கழஞ்சு இதனால்
௨ வந்த பலிசையாவது சசாசிகூருள்-
ளளவும் இஸ்ரீகோயில் கணப்பெரும-
க்களே எரிப்பதாக வைத்தேன் ம[ஈ]ங்காட்டு
989 531 ஐ ௭ 3 ஷே ஜு
நஸ். ஷ்... ஷ்
2 8 6
. மணன் இரணவ2_னேன்
155
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 98/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 25
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 982
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 2385/1915
மொழி தமிழ் முன் பதிப்பு : 80/156
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 16
அரசன் மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : தாமர் கோட்டத்து இராஜமல்ல சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீ போந்தை மகாதேவ
பட்டாரகர் இறைவனுக்கு சூரிய கிரகணத்தின் போது திருநந்தா விளக்கு
ஒன்று இரவு பகலும் எரிக்க, சோழநாட்டு கிழார் கூற்றத்து கிளிநல்லூர் ஊர்த்
தலைவன் செம்பியன் கிழார் நாட்டுக்கோன் என்பவனிடமிருந்து 15 கழஞ்சுப்
பொன்னினை வதியூர் ஊர்ச் சபையார் பெற்றுக்கொண்டு தினம் உழக்கு எண்ணெய்
கோயிலுக்கே வந்து அளப்பதாக உறுதியளித்துள்ளனர். இதனுடன் பித்தளை
(தரா) நிலை விளக்கு ஒன்றும் தானமளிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு
1.
2.
3.
ஷஹிஸ்ரீ[॥” ] மதிரை கொண்ட கோப்பரகே-
ஸரி பர்(ம்)மற்கு யாண்டு இருபத்தைஞ்-
சாவது சோழநாட்டுக் கிழார்க் கூற்றத்து-
௨ க் கிளிநல்லூர்[ப் பெரதிகாரஞ் செய்த கிளிநல்லூர் கிழ-
, வனான செம்பியன் கிழார் நாட்டுக்கோன் தா-
மர்க் கோட்டத்துத் திருவேகம்பபுறத்து
... ராஜமல்லவக-8வ_சிமங்கலத் து
. ஸ்ரீபோன்தை ஹாஜேவேலடா-
156
. ரகர்க்கு வல்லவரையரிடைக் [க]டவர-
. யூ ஹணத்தில் திருநன்தா விளக்கு ஒ-
. ன்று இரவும் பகலுஞ் சந்ஜாசிது[ர்*] உள்ளளவுமே
. நிசதி உழக்கு நெய்யால் எரி[ப்*]பதற்கு வைத்-
. த பொன் பதினைங்கழஞ்சு இப்பொன் பதினை-
ங்கழஞ்சு[ள]தைஞ் முதலாகக் கொண்டு இப்பொ-
. ன்னாற் பொலினட்டுத் தேவர் உழக்கினால் நிசதி உழ-
. க்கெண்ணை ஸ்ரீகோஇலுக்கேய் கொடுவந்து சந்திரா-
. தி[த்*]தவல் அட்டுவோமானோம் ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நீ-
ட ர்வேளூர் நாட்டு வதியூர் ஸலெயோமும் ஊரோமும் இதற்-
. நிறம்பில் ம?பாஷனத்தே நிசதிப்ப-
. டி இருபத்து . நாலேகால் காணஈணப்பட ஒட்டி இ-
. ட்டுக் குடுத்தோம் வதியூர் ஊரோம் இவ்வெ-
. ண்ணை முட்டில் செற்ற ஆளுக்கு நிசதி இரண்டு சோ-
று குடுப்போமானோம் வதியூர் ஸலெயோ-
. ம் இது பன்மாயேறம ஈகக்ஷ தரா நிலைவிள-
. க்கெ[*]ன்று
157
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 99/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 29
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 996
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 202/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/124
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 17
அரசன் : மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
இடம் 3 சந்திரமெளலீஸ்வரர் கோயில் வடக்குச் சுவர்.
குறிப்புரை : நாரணமங்கலத்து ஊரைச் சேர்ந்த ஹரிதாச பட்டன் என்பவன் இராஜமல்லச்
சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபோந்தை பட்டாரகர் கோயில் இறைவனுக்கு குடிஞைக்
கல்லால் நிறுக்கப்பட்ட 5 கழஞ்சுப் பொன்னிலான பட்டம் ஒன்றினை
வழங்கியுள்ளான்.
கல்வெட்டு :
i, ஹஹிஞஸ்ரீ [11*] மதிரை கொண்ட கோப்பரகேசரிவநற்க்கு யாண்டு
இருபத்தொன்பதாவது இராஜ-
2: மல்லச்சதுவே_திமங்கலத்து ஸ்ரீபோந்தை கட்டக் ஸ்ரீகாயடம் மாராய்கின்ற
கணப்பெருமக்களோம்
3. நாரணமங்கலத்து ஹறிகாஸ லடன் ப மூன்று சந்தியும்
சாத்துவதற்கு இட்ட பட்டம் தன்-
4. றுளை குடிஞை க[ல்*]லால் அய்ங்கழ[ஞ்*]சு இது அழித்தோம் வெவ்வேற்று
வகை இருபத்து நாலு காண-
5. ம் பரேயுமறே ஒணி[ப்*]பதாக ஒட்டிக் குடுத்தோம் கணப்பெருமக்களோம்
॥-
158
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 100/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி /
ர்ச் 2 $
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 38
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 940
பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 218/1915
தமிழ் முன் பதிப்பு : 90/140
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 18
3 முதலாம் பராந்தகன்
சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
தாமர் கோட்டத்து திருவேகம்பபுறத்து இராஜமல்லச் சதுர்வேதி மங்கலத்து
ஆளுங்கணத்து உறுப்பினர்களில் ஒருவனான கூடலூர் ஊர்த் தலைவன்
மணிபட்ட சர்வகிறுதுக்கள் என்பானின் மகன் அழகசர்ம கிரமவித்தன் என்பவன்
ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் திருநந்தா விளக்கு ளிக்க 12 கழஞ்சுப்
பொன் தானமளித்துள்ளான்.
1. ஷஹஹிஸ்ரீ[॥*] மதிரை கொண்ட ே
2. காப்பரகேஸரிவ? ற்கு யாண்-
8. டு முப்பத்து மூன்றாவது தாம-
4. ர் கோட்டத்து திருவேகம்பபுறத்-
5. [து] ராஜ2ஓவுக வேதி மங்கல-
6. ம் யாளுங்கணத்தாருள் கூடல்கி-
7. மார் மணிசிவலட ஸவசூதுக்க-
8. ள் மகன் அளக? சூமவித்த-
9. ன் ஸ்ரீபோன்தைய் பெருமானடி-
159
10.
11.
12.
18.
14.
15.
16.
7.
18.
19.
களுக்கு ஒரு நொநாவிளக்கு[க்கு*] வைய்-
த்தபொன் பன்னிரு கழஞ்சு இ-
ப் பொன்னால் வன்த பலிசை-
ப் பொன் கொண்டு இர(£)வும் பக-
லும் முட்டாமை எரிக்க வைய்த்-
தேன் இத29 நஈக்ஷிப்பார் ஷு_ா-
தித்தவற் காலமும் நிற்பதாகவும் இ-
தற்கு கேடு வேண்டுவார் மெங்மாகந[£]
த்து செய்தா[ர்*] செய்த பாவங் . . . .
பரிசு வைத்தேன் அளகமு2 சமவித்தனேன்
160
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 101/2017
மாவட்டம்
வட்டம்
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 37
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 944
பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 217/1915
தமிழ் முன் பதிப்பு : 30/139
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 19
மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப மேற்குச் சுவர்.
இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து ஆளுங்கணத்து உறுப்பினர்கள் ஒருவனான
கூடலூரைச் சார்ந்த மணிசிவபட்ட சர்வகிரதுக்கள் என்பவனின் மகன் மகாதேவ
பட்டன் என்பவன் ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோமிலில் நந்தாவிளக்கு
எரிக்க 14/2 கழஞ்சுப் பொன் அளித்துள்ளான். முன் கல்வெட்டில் மணிசிவ
பட்ட சறுவகிறத்துக்கள் என்பானின் மகன் மகாதேவ பட்டன் பற்றி
கூறப்பட்டுள்ளது. இவனின் இரு மகன்களும் ஆளுங்கணத்து குழுவில்
உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டு
கி.பி. 944-ஆம் ஆண்டைச் சார்ந்த முதலாம் பராந்தகனின் 97-ஆம்
ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். அதாவது முன் கல்வெட்டு முதலாம்
பராந்தகனின் 38-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஆகும். (கி.பி. 940-ஆம்
ஆண்டைச் சார்ந்தது.)
1. ஷஹஹிஸ்ரீ [॥*] மதிரை கொண்ட கோப்பர-
. கேஸரிமன்மற்க்கு யாண்டு மு[ப்ப*]த்தேழா-
௨வது தாமர்க் கோட்டத்துத் திருவேகம்-
, கலம் யாளுங்கணத்தாருள் கூடல் கிழார்
.. மணிசிவலட ஹவசூ.துக்கள் மக-
2
3
4. பபுறத்து ாஜூ2ஓவுக-வேதி மங்-
5
6
ச்
ன் ஹாஜேவலடன் ஸ்ரீபோந்தை-
161
8. ய் பெருமாநடிகளுக்கு ஒரு நொகா விளக்குக்கு
9. த்த பொன் பதினாற் கழஞ்சரைய் இ-
10. ப்பொன்னால் வன்த பலிசைப் பொ-
11. ன் கொண்டு சகஷாகிகவற் இரவும் பகலும்
162
வை-
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 102/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 38
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 945
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 225/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/146
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 20
அரசன் : மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : காவிரி வடகரை மழநாட்டு கற்குடியில் வசிக்கும் மூத்த குஞ்சிரமல்லன்
என்பவன் ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோயிலுக்குத் தானம் வழங்கியச்
செய்தி. கல்வெட்டு முற்றுபெறவில்லை, ஆதலால் முழுவிவரம்
அறியஇயலவில்லை.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ[॥*] மதிரை-
2. யும் ஈழமும் கொண்-
3. ட கோப்பரகேசரி பன்ம-
4. ற்க்கு யாண்டு ௩௰௮
5. ஆவது தாமர் கோட்ட-
6. தீது திருவேகம்பபுறத்து
7. மாஜூஓவுக-வேதி-
oo \
. மங்கலத்து ஸ்ரீபோந்-
9. தை பெருமானடிகளுக்கு
த
10. காவிரி வடகரை மழனா-
163
11. ட்டு கற்குடி கற்குடையான்
12. மூத்த [குஞ்]சிரமல்லனிர-
18. த்து . . கூ(ற)சர்மனா . . .
164
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 103/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ததத
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : 10-நூற்.
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 198/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/120
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 21
அரசன் : மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் வடக்குச் சுவர். ;
குறிப்புரை : கல்வெட்டு மிகவும் சிதைந்துக் காணப்படுகிறது. தாமர் கோட்டத்து
திருவேகம்பபுறத்து இராஜமல்ல சதுர்வேதி மங்கலத்திலுள்ள ஸ்ரீபோந்தை
ஆண்டார் கோயிலுக்குத் தானம்! வழங்கியச் செய்தி. தானம் பற்றிய விவரம்
அறியஇயலவில்லை.
கல்வெட்டு :
1. ஷஹஹிஸ்ரீ[॥*] [மதிரை கொண்ட] கோப்பரகேசரி] . . . . . [தா]மர்க்
[கோட்டத்து] . ....... ராஜமல்லச்[ச துர்வே ]-
2. தி மங்கலத்து ஸ்ரீபோந்தை ஆண்டார் திருவுண்ணாழிகை .........
3. . .. சதி நாலேகால் காணம் குறைவறாத மணப்பெருமக்களை ஃண்டமிடப்
பெறுவாராகவும் இப்பரிசு ஸிலாலேவெெய் வி . . .
4. ஸ்ரீகாரியஞ் செய்கின்ற மணப்பெருமக்களோம் இ2?_த்துக்கு ௯ஹிதம் நின்றார்
மெங்கா கநஷாஷரத்து செய்தார் செய்த பாவ . .......
165
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 104/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு :
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : 10- நூற்.
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 1
மொழி : தமிழ் முன் பதிப்பு 1 80/125
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 22
அரசன் : முதலாம் பராந்தகன்
இடம் 3 சந்திரமெளலீஸ்வரர் கோயில் சுவர்.
குறிப்புரை : சோழ நாட்டு இங்கநாட்டு நெல்வேலி ஊரைச் சார்ந்த சோழசிகாமணி பல்லவரையன்
என்பவனிடமிருந்து இக்கோயிலில் உள்ள ஏரிவாரியப் பெருமக்கள் 20 கழஞ்சுப்
பொன் பெற்றுக்கொண்டு நந்தா விளக்கு ஒன்றுக்கு எண்ணெய் வழங்க
சம்மதித்துள்ளச் செய்தி.
கல்வெட்டு :
1. ஷஹுஹிஸ்ரீ[॥*] மதிரைகொண்ட கனகு யாண்டு . . . சோழநாட்டு
இங்கணாட்டு
2. நெல்வேலி உடையான் சோழசிவாணிப் பல்லவரையனாகிய . . . இருபதின்
கழஞ்சு இப்பொன் இ-
3. ர௬பதின் கழஞ்சும் கொண்டு சந்திராதித்தவத் ஒரு நொந்தா விளக்கு ளி .
. திநமைமில் ஏரிவாரியப் பெரு-
4. மக்களே நிசதம் உழக்கெண்ணையாக திங்கள் எழுநாடுரி எ . . ணை
இவ்வெண்ணை முட்டாமே
5. அட்டுவோமானோம் அட்டோமாகில் மநாஸநத்து நிசமம்
கெங்கைஇடைக் குமரிஇடைசெய்தார் செய்-
6. த பாவத்தில் படுவோமாநோம்
166
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
4. இத்திருவிளக்குக்கேய் வழியும் இவரே வைத்த பொன் இரு கழஞ்சு ॥-
திருவண்ணாமலை
செய்யாறு
பிரம்மதேசம்
தமிழ்
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர்
தொடர் எண் :- 105/2017
ஆட்சி ஆண்டு : 26
வரலாற்று ஆண்டு : 10- நூற்.
இ.க. ஆண்டறிக்கை: 219/1915
முன் பதிப்பு : 30/141
(தெ.க.தொ.)
ஊர்க் கல்வெட்டு எண்: 23
சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
இக்கல்வெட்டு முழுமை பெறாமலும் சிதைந்தும் காணப்படுகிறது.
ஆளுங்கணத்தைச் சார்ந்த ஒருவன் திருநந்தா விளக்கு ளிக்க பொன்
தானமளித்தச் செய்தி.
கேஸரிவஹற்கு யாண்டு இருபத்தாறாவது ராஜம[ல்* ]லச் ப
மங்கலம் யாளுங்கணத்தாருள் ம் ி. .
குடுத்த பொன் . . .
. திருப்போந்தைப் பெருமானடிகளுக்கு ஒரு ந[ந்*]தா விளக்கெரிப்பதற்க்குக்
கழஞ்சிநாலும் வந்த பலிசை கொண்டு ஒரு ந[ந்*]தா விளக்கு
எரிப்பதாக வைத்தேன் இத5)65ம் இறக்ஷிப்பார் . .
167
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 106/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ததத
செய்யாறு வரலாற்று ஆண்டு : 10-நூற்.
பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 220/1915
தமிழ் முன் பதிப்பு : 30/142
(தெ.க.தொ.)
தமிழ்
- ஊர்க் கல்வெட்டு எண்: 24
சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
வள்ளிவயம் என்னும் ஊரைச் சேர்ந்த நல்லூழான் பெருமான் என்பவன்
அமாவாசைத் தினங்களில் இரண்டு பிராமணர்களுக்கு உணவளிக்க வேண்டி
இரண்டு கழஞ்சுப் பொன் கொடையாக அளித்துள்ளான். இவன் அளித்த
பொன்னின் வட்டியைக் கொண்டு உணவளிக்க ஸ்ரீபோந்தை பெருமானடிகள்
கணப்பெருமக்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஹஹிஸ்ரீ வள்ளிவயத்து நல்லூழான் பெருமான்
2. வைத்த பொன் இருகழஞ்சு இப்பொன்னுக்குப் பலிசைஆக அமாவாஸி
3. தோறும் இருவர் ஷாஹணரைய் ஊட்டுவிப்போமாநோம் திருப்போந்தைக்
கணப்பெருமக்களோம்
168
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 107/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு தனை
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 10-நூற்.
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 234/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு ர : 80/155
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ் -
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 25
அரசன் : முதலாம் பராந்தகன்
இடம் ₹: சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்குச் சுவர்.
குறிப்புரை : வெண்குன்றக் கோட்டத்து இலங்காட்டு ஊரைச் சார்ந்த நற்றூழான் நக்கெருமான்
என்பவன் ஸ்ரீபோந்தைப் -பெருமானடிகள் கோயிலில் நன்தாஜோதி விளக்கு
வைக்க 80 கழஞ்சுப் பொன் அளித்துள்ளான். இக்கோயில் கணப்பெருமக்கள்
இப்பொன்னினைப் பெற்றுக்கொண்டு இதனின் வட்டியின் மூலம் விளக்கெரிப்பதாக
உறுதியளித்துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ[॥*] மதிரை கொண்ட கோப்பரகேசரி வபுற்கு [யாண்டு] . . . .
வது திருவேகம்ப . . . . . . ௮க-4வசிமங்கலத்து ஸ்ரீபோ[ந்தைப்
பெருமா]னடிகள் ஸ்ரீகோயிலில் வெண்குன்றக் கோட்டத்திலங்காட்டில்
நற்றூழான் நக்கெரு-
2. மான் வச்ச ம$மாவது ஒரு நொன்தா ஜோதி விளக்குக்கு வச்சபொன்
எண்[ப]தின் கழஞ்சு இதனால் வந்த பலிசையால் வகூடாதிகருள்ளவும்
இத்திருக்கோயில் கணப்பெருமக்களே ஸிப்பதாகவும் வைத்-
3. தேன் நக்கெருமானேன் ஐத2.௦ ஈச்ஷித்தார் ஸ்ரீவாஉயசஸி தலை மேலின
169
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 108/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 3 -
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 10-நூற்.
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 2386/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/157
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 26
அரசன் : பரகேசரிவர்மன்
இடம் 3 சந்திரமெளலீஸ்வரர் கோயில் தெற்க்குச் சுவர்.
குறிப்புரை : கல்வெட்டு முழுமை பெறாமல் உள்ளது. கல்வெட்டு வரிகளின் இறுதி
பகுதியும் சிதைந்துள்ளது. மழநாட்டு உம்பள நாட்டைச் சார்ந்த சிலருக்கு
இராஜமல்லச் சதுர்வேதி மங்கலத்து ஐஞ்சஷ்டசதத்து மகாசபையார் நிலம்
விற்பனை செய்த செய்தி.
கல்வெட்டு :
1. ஷஹஹிஸ்ரீ[॥*] கோப் . .
2. கேஸரி பநற்கு யா. ...
3. து கோட்ட நாள் ௮௨ தா.....
4. த்து திருவேகம்பபுறத்து [ராஜம]-
5. ஓவுக-4வேதி மங்கலத்து [அ]-
6. ஜஷமாதத்து . ஹஊாஹூெெ!ப்]-
7. பெருமக்களோம் விற்றுக்கு[டுத்]-
8. த ல நிலவிலையாவண[ம் ம]-
9. ழ நாட்டும்பளநாட்டு மடரி ௦... .
170
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 109/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு தள்
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 10-நூற்.
ஊர் 3: பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 239/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/160
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 27
அரசன் : மதுரை கொண்ட கோப்பரகேசரி (முதலாம் பராந்தகன்)
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : கணக்கு பணி செய்பவர்களுக்கு கணவாரியப் பெருமக்கள் அளிக்கும் ஆடை
மற்றும் மதிப்பூதியத்தினை அஞ்சஷ்ட சத்து மகாசபையார் நிர்ணயித்துள்ளனர்.
இதனை மீறுபவர்கள் மீது 108 காணம் தண்டம் வசூலிக்கப்படும் என்றும்
எச்சரித் துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஹஹிஸ்ரீ[॥*] மதிரை கொண்ட கோப்பரகேஸரி வ2 . . . . . ஆவது
தாமர்க் கோட்டத்து திருவேகம்பபுறத்து மாஜமல்லச் ச.துவே.திமங்கலத்து
கஞ்சஷ
2. ப்பான் . . டிப்பார்கள் ஆகவும் கணக்குச் செ ..... க்கு கணவாரியப்
பெருமக்கள் தந்த கூறையும் கொற்றுமே கொண்டிதும்
ஷஹுவஷஹெ பண்ணி
3. இதன்றென்றான் ஸ்ரீபொத்தகப்படியேடு . ......... நூற்றெட்டுக்காணம்
தண்டப் படுவாராகவும். இப்பரிசு ஓட்டினோம் ௮ . . . . . . ஸ்லெயயோம்
171
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 110/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு :
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 10-நூற்.
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 240/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/161
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 28
அரசன் : முதலாம் பராந்தகன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : சோமாசி சானி என்னும் பிராமணப் பெண் ஒருத்தி இராஜமல்லச் சதுர்வேதி
மங்கலத்து ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோயிலில் விளக்கெரிக்க 12 கழஞ்சுப்
பொன் தானமளித்துள்ளாள். எளர்புரம் என்பது பொன்னினை அளக்கும்
எடைக்கல்லாகும்.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ[॥*] கோப்பரகேசரிவ?ற்க்கு யாண்டு பத்த . . . . . த்து
ராஜல்லசதுவேதிமங்கலத்து ஸ்ரீபோந்தை . . ட.
2. ம2மாவது ஒரு நராவிளக்குக்கு எளர்புரம் பன்னிரு . . . . செய்து
வஷூதிகருள்ளளவும் இத2ஒம் வை[த்jதேன் ஊ . . . ..
3. ச்சோமாசி சானி ஒரு நொதாவிளக்குக்கு வைத்த பொன் எளர்புர[ம்] . . .
172
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 111/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ட
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 10-11-நூற்.
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 196/1915
மொழி சமஸ்கிருதம் முன் பதிப்பு : 90/118
(தெ.க.தொ.)
எழுத்து கிரந்தம்
அரசு - ஊர்க் கல்வெட்டு எண்: 284
அரசன் -
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் வடக்குச் சுவர்.
குறிப்புரை : போந்தை நாதரை வனநாயகர் என்றும், தானாக தோன்றியவர் என்னும் கருத்தில்
“அஜ” என்றழைக்கப்படுகிறார். போந்தை நாதர் திரேதாயுகத்தில் தேவர்களாலும்,
துவாரபார யுகத்தில் ரேவாஸ எனினும் முனியாலும் வழிபடப்பட்டவர் என்றும்,
கலியுகத்தில் இங்கு சந்தன குழம்பால் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளார் என்றும்
சமஸ்கிருத மொழியில் அமைந்த இக்கல்வெட்டுக் கூறுகிறது.
இக்கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இதனின் காலம் கி.பி. 10-11
ஆம் ஆண்டு என்று கூறலாம்.
கல்வெட்டு
1.
2.
சூஜாவழிஈ உஜய விவஜேடி ஸ்ரீ-
வெொடெ நாடி பஉஷெ, காயாஷி,-
ஃயமாவி,௧௦ ஹி2ஃக ஓலாமமஜா-
வரறெ ஹாக்ஷாஜெஸஹாஃமு .நீகி[ஷி* ][பம]௩
சூதக கெ றெவமாசெெத[:*] ஷஓ சாஷா
ய௦ வந நாயக: ௯லிமாமெஹல௦
ஷஹாஉஷ மநாதிலி:
173
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 112/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு ரீ
வட்டம் ₹ செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 956
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 207/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/129
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : இராட்டிரகூடர் ஊர்க் கல்வெட்டு எண்: 29
அரசன் : கன்னரதேவன் (மூன்றாம் கிருஷ்ணன்)
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
குறிப்புரை : நரசிங்கய்யன் என்பவரிடமிருந்து 21 கழஞ்சுப் பொன்னினை இக்கோயில்
கணப்பெருமக்கள் பெற்றுக் கொண்டு அதனின் வட்டியிலிருந்து ஸ்ரீபோந்தைப்
பெருமானடிகள் கோயிலில் விளக்கெரிக்கச் சம்மதித் துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஹஹிஸ்ீ[*] கன்னரசேவர்க்கு யா-
2. ண்டு பதினேழாவது தாமர் கோட்டத்-
9. து திருவேகம்பபுறத்து ராஜ£ஓ ௮-
4. துவேதிமங்கலத்து ஸ்ரீபோந்தை
5. பெருமானடிகளுக்கு மருதாந்மைய
6. வீரஸுத லேோமவமு௩ விநமக ஸ்ரீ-
7. ஓக்ஷணை ஸ-க ஸமிறிநறஸி[ங்]ஹைய-
8. நீ ஒரு நந்தா விளக்கு[க்கு*] வைத்த
9. [பொன் எடர்புரம் இருபத்து
174
10.
ஒரு கழஞ்சு இப்பொன்னால் வ-
ந்த பலிசை கொண்டு சந்திர[ா*]கித்-
. தவற் இரவும் பகலும் ஸ்ரீகோமி-
. ல் கணப்பெருமக்களே எரிப்பதா-
. க வைத்தோம் இக்கோயில்
. கணப்பெருமக்களே இவ்விள-
. க்கு ளிப்போமானோம் இத்ம2-
ம் ரக்ஷிப்பாரடி என் தலைமேல-
ன இத்ம[ர்* ]மத்துக்கு விரோதம் வேண்-
. டினார் கெங்கா கநறூந்தரத்து செய்-
த பாவம் கொள்வான் [॥*]
175
த.நா.அ. தொல்லியல் தறை தொடர் எண் :- 113/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 2
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 961
i : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 2238/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/144
ட் (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு “3 சோழர் த ஊர்க் கல்வெட்டு எண்: 30
அரசன். ; பார்த்திவேந்திரவர்மன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோமில் கருவறை வடக்குச் சுவர்.
குறிப்புரை : இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து திருவேகம்பச் சேரியைச் சார்ந்த வியாபாரி
் மங்கலபிரியன் கலிவிலங்கி என்பவனின் மகன் அலங்கார செட்டி என்பவன்
ஸ்ரீபோந்தைப் பெருமாநடிகள் கோயிலில் நந்தா விளக்கு எரிக்க 15 கழஞ்சுப்
பொன்னினைக் கணப்பெருமக்கள் வசம் அளித்துள்ளான்.
கல்வெட்டு
1. ஹஹிஸ்ரீ[॥*] வீரபாண்டியனைத்
2. தலை கொண்ட கோ2(ஈ)ஹாராஜற்கு யாண்டு ௨ ஆவது ராஜமல்ல வதுவே_தி
மங்கலத்து
வே
. திருவேகம்பச்சேரி ஷாவாரி மங்கலஷி_யன் கலிவிலங்கி மகன் இன்நாங்கூர்
ஆகிய அல-
4. ங்கார செட்டி போந்தைப் பெருமானடிகளுக்கு ஒரு நுந்தா விளக்குக்கு
வைத்த பொன் பதி-
5. னைங் கழஞ்சு இப்பொன் பதினைங்கழஞ்சாலும் வந்த வுரதிப் பொன்
கொண்டு ஸ்ரீகோ-
6. மில் கணப்பெருமக்களே வஞராகிதுவரை எரிப்பிதாக வைய்த்தேன் அலங்கார
செட்டி -.
176
7. யேன் இதூ ஈக்ஷிப்பார் ஸ்ரீபாதம் என்றலை மேலன் அறமறவெற்க அறமல்லது
து
8. ணையில்லை
177
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 114/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 8-2
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 961
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 195/1915
மொழி தமிழ் முன் பதிப்பு : 30/17
(தெ.க.தொ.)
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 91
அரசன் பார்த்திவேந்திரவர்மன்
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டபத் வடக்குச் சுவர்.
குறிப்புரை : தாமர் கோட்டத்து திருவேகம்புரத்து இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து
ஐஞ்ஜஷ்டசதத்தும் என்னும் மகாசபையினர் 8674 கழஞ்சுப் பொன்னினை
வரிகளுக்கு முதலீடாகப் பெற்றுக்கொண்டு கோயிலுக்கு உரிய நிலங்களுக்கு
நிலங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் உறுதியளித் துள்ளனர்.
கல்வெட்டு :
L
2.
3.
4.
ஷஷியீ[॥*] பாண்டியனைத் த-
லை கொண்ட வாதிவேந வ-
நற்கு யாண்டு இரண்டாவது தாமர்
கோட்டத்து திருவேகம்பபுறத்து
ராஜ2ஓவதுவேஃதி மங்கலத்து ஐஞ்சஷச[த]த்து ஊஹாஸலெ
. பெருமக்களோம் எம்மூர் ஸ்ரீபோஸெ ஊஹாஜேவர்க்கு யாங்கள் ௧-
- டவ எண்(ம்)பத்தறு கழஞ்சே முக்கால் பொன்னும் இவருடைய ஹூதி-
௨ கள் எப்பேர்பட்டின(த் துக்கும் இறைஆவடமாக கொண்டு இன்றின்முன்
இவ-
178
9. ருடைய லூசி எப்பேர்பட்டினவும் வக,ாதிதருள்ளளவும் இறைலியா-
10. க பணித்தோம் இனிக்குடுக்கும் மூஓகள் இறைஇழிச்சே(0)ய் குடுப்பாராகவும்
11. இ ஸ்ரீகோயிலுக்கு மணமென்று பேசப்பிறாததாகவும் ஸ்ரீகாய;ம் ஸஹெ-
12. வாரியமே இட்டு கடைகாண்(ம்)பிப்போமாக்வும் இதற்றிறம்பிநாரை ஸா,தா-
13. மஷரே இருபத்து ஐங்கழஞ்சு பொன் அன்பிற் இ;?)-
14. த்து[க்*]கு ௯ஹிதநின்றார் மா கூநழாகத்திடை [செய்தார் செய்த பாபம்-
15. படுவாராகவும் பணித்தோம் ஊரஸலெ பெருமக்களோம்: வபெவ்யுள்விருத்--
16. து பணிகேட்டு எழுதினேன் கெ.றாஜு வபுகா 8ம$ஹன் மூவாமிரவனே-
17. ன் ॥-
179
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு :
அரசன் 3
இடம் 3
குறிப்புரை :
கல்வெட்டு ;
திருவண்ணாமலை
செய்யாறு
பிரம்மதேசம்
தமிழ்
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர்
பார்த்திவேந்திரவர்மன்
தொடர் எண் :- 115/2017
ஆட்சி ஆண்டு 5 த
வரலாற்று -.ஆண்டு- : கி.பி, 908
இ.க. ஆண்டறிக்கை: 199/19[$ .
முன் பதிப்பு : 90/11,
(தெ.க.தொ.)
ஊர்க் கல்வெட்டு எண்: 92
சந்திரமெளலீஸ்வரர் கோமில் கருவறை வடக்குச் சுவர்.
தாமர் கோட்டத்து திருவேகம்பபுரம் இராஜமல்லச் சதுர்வேதி மங்கலத்து
ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோயிலில் உள்ள ரிசபவாகன தேவர் திருமேனி
வழிபாட்டிற்காகவும், நந்தாவிளக்கு எரிப்பதற்காகவும் சிங்கபெருமாள் என்பவன்
127 கழஞ்சுப் பொன் தானமளித்துள்ளான்.
1. ஷுஷிஸ்ரீ[॥*] கோப்பார்த்திவேஷ, [ஈதிபதி] பந்[மர்*]க்கு யாண்டு ௪ ஆவது
தாமர்-
2. கீகோட்டத்து திருவேகம்புறத்து [இ]ராஜ[2ஓவக ]வே[.* ]திமங்கலத் து
ஸ்ரீபோந்தை து
னே
இஷலவ[]-
. பெருமா(ன)நடிகளுக்கு சிங்கபெருமாள் ம . . திரு . . .ன் திருமேனி
4. ஹன[ர்*]க்கு ஒரு திருவமிர்து[க்*]கும் ஒரு நந்தாவிள[க்கு]க்கு[ம் இடுவித்த]
பொன் பன்னிரு கழஞ்செய் கால்
5. இப்பொன் கொண்டு பர[வி] புலத்து மேர்க்கடைய முன்னூறு . . . குழி
விற்று குடுத்தோம் 2ஊஹரஸ்லெ
180
10.
. பெருமக்கள்[ளோம்] விற்று இறைஇழிச்சி குடு[த்தோம்] இந்நிலம் கொண்டு
ஒருபொழ்து [ந் ]
திருஅமிர்து ஐய்விழக்கு! அரிசியால் [காட்டுவதா]கவும் ஒரு நந்தா விளக்கு
எரிப்-
. பதாகவும் இப்பரிசு ஸஷிராதிகர் உள்ள[ள* ]வும் [நி]-
..ற்பதாக வைத்தோம் ஹாஸலெ பெரும[க்களோம்] கடன் ஸ்ரீகோயில்
வாரியப் பெ[ரு]-
மக்களேய் ரக்ஷிப்பாராகவும் ஊத்து[க்கு கேடு நினைத்தார் இத்திருவமிர்தும்
திருவி-
ளக்கும் இறக்கினார் பாவத்திற் படுவார் [இஜ?6 ஈக்ஷி]ப்பார் [ஸ்ரீ]பா25
என்றலை மேலன[॥*]
1: ஐய் உழக்கு - என்று படிக்க
181
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை
செய்யாறு
பிரம்மதேசம்
தமிழ்
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர்
பார்த்திவேந்திரவர்மன்
தொடர் எண் :- 116/2017
ஆட்சி ஆண்டு
வரலாற்று ஆண்டு
இ.க. ஆண்டறிக்கை:
முன் பதிப்பு
(தெ.க.தொ.)
ஊர்க்கல்வெட்டு எண்:
சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
காட்டமய்யன் எபவன் திருவே தவ சவகிரு துயாஜியர் என்பிடமிருத்
1018% குழி நிலம் வாங்கி ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் இறைவனுக்கு
இரவு சந்திக்குத் தேவையான அமுதுபடிக்கும், திருநந்தா விளக்கு வைக்கவும்
இந்நிலத்தினை கோயிலுக்குத் தானமளித்துள்ளான். மேலும், இவ்வூர் சபையார்
இந்நிலத்தின் மீதான வரியை நீக்கியுள்ளனர்.
4
கியி. 908
205/1915
30/127
33
1. ஹஷிஹீ[॥*] பாணியனை தலைகொண்ட பாதிவேஷாகிபதி வூ -
2. ற்கு யாண்டு ௪ ஆவது தாமர் கோட்டத்து திருவேகம்பபுறத்து ஈாஜ2ஓ -
3. சதுவேபதி மங்கலத்து ஸ்ரீபோந்தைப் பெருமாநடிகளுக்கு
4. ௬தறாத, திரிகஷதி' திருவ?து நாநாழி யுரிக்கும் ஒரு நொ-
5. நீதாவிளக்கு[க்*]குச் சின்னமைய்யப் பேற்கடை மகந்
6. காட்டமைய்யன் வைத்த ல-கியாகின்றது பனை-
7. யுடை நல்லூ(ர்)ரேரிகீழ்த் தேவியார் தூம்பி-
8. ன் கிழக்கு வெம்பன் குழிப் பாடகத்து பாக்க-
1. திரிசந்தி-என்று படிக்கவும்
182
. த்து திருவேங்கடமாமவ ஸவ௯,துயாஜியார் பக்-
. கல் விலைகொண்டுடைய ஆமிரத்தொருபத்தெட்-
. டே முக்காற் குழி நிலமுஞ் சகர£சிகூவற் ஸலெயார்
இப்ல-கிக்கு இறையிலியாகப் பணித்தமையா-
௨ல் இறையிலியாக்கிப் பணித்து வைத்தமைமி-
௨ல் இறையிலியா[க *]வத்த(ரத)து இ௰$$த்துக்கு விரோத-
ஞ் செய்தாரை ஸா,தா8கறெ ௰3_ஹனமுள்ளி-
. ருந்து அன்றா[ள்]கோவுக்கு நிசதமிருபத்தைங். ௧-
. மஞ்சு பொன் தண்டமிடப் பெறுவதாகப் பணித்தோ-
ம் ஸலஸெயோம் இமஜத்துக்கு. விரோயஞ் செய்தா
டர் கங்கா கராஷாஸம் நடுவுபட்டா[ர்*] செய்தார் செய்த
. பாபத்தில் படுவாராகவுடி ௨ இப்படி ஸலெெய்-
௨ யுள்ளிருந்து
..ஹலெெ பணி-
ப்ப வெழுதிநே-
௨ன் நாதகணப்-
. போசன் ஏழா-
. மிரவநேன்
. இவையென்
௨ னெழுத்து
. இவை ஸா”
, திருணஷ
௨.௨.௨. ஆசான்
. எழுத்து [॥*]
183
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 117/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 6
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு .: கி.பி. 965
ஊர் 2. பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 208/1915 ....
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/130
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 34
அரசன் : பார்த்திவேந்திரவர்மன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப மேற்குச் சுவர்.
குறிப்புரை : வேதம் நன்கறிந்த இரண்டு பிராமணர்களுக்கு நண்பகலில் உணவளிப்பதற்காக
தாமர் கோட்டத்து இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து ஐஞ்சஷ்டசதத்து என்னும்
நிர்வாகச் சபையினர் 440 குழி நிலம் அளித்துள்ளனர். இவ்வூரில் உள்ள பெரிய
மண்டபத்தில் ஒரு பகல் வேளையில் சபை உறுப்பினர்கள் ஒன்று கூடி
முடிவெடுத்துள்ளனர். மேலும் கணவாரியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு
இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஹஹிஸ்ரீ[॥*] கோபாதி வேக வர்க்கு யாண்டு ஆறாவது தாமர்க் கோட்டத்துத்
திருவேகம்பபுறத்து ராஜ2-
62
.
ஒச்சதுவேகி மங்கலத்து குஞ்சஷனத்து 2ஹாஸடெிெப் பெறுவோம்
எம்- : . ட
3. மூர் பெருமண்டபத்தே பகல் பெருங்குறி கூடி இருந்து இவ்வூர் குவல
கிழார் மணிமிவ லட்ட ஹவபசுஉ-
4. யாஜியார் மகந் 8ஹாமேவ சூ2வித்தநீ ர கைத்திறோத்துமத் குற்றப்பாக்
கிழான் ப்மிவல,க சூ2வி ்
5. தீதன் தரவுக்கு கூறப்பட்ட பாடகத்து [மே]க்கடையத் தந் அமிசந் நானூற்று *
நால்ப்பது குழி இரண்டாஷ-
184
12.
ரம் இவ்வூர் ஸ்ரீபோந்தைப் பெருமாநடிகள் ஸ்ரீகோயில் இரண்டு ஹாஹணர்
விருந்துண் உண்ப-
, தாக வச்ச நானூற்று நால்ப்பது குழியாலும் வக இறை(ய்)மா [வொ]ரு மா
நிலமும் -ஆசத,காலமு-
- மாக இறை ஒழி[ய*]ப் பணிய்த்து இறைஇழிச்சி இணாஷணர் இருவர்க்குமா
உத்தம ஒ ஒருவநே 8மமாஷத்தில் வ-
. ஈவேறரர் அமுது செய்வத[ர்*]க்கு முன்பு கறியும் நெ[ய்*]யும் தமிரு[ம்*]
இரண்டு பாக்கும் நாலு வெற்றிலையும் இப்பரி-
சு உத்தம முட்டாமே நிசதம் ஒரு வாஷணன் வேலம் வல்லான்
ஆச, காலமும் அபூவி,களே ஊட்டுவதா-
- க இநாநூற்று நால்பது குழியும் [இ]றை இழிச்சி குடுத்தோம் அஞ்சஷஸத்து
ஷஹோஹலெலெப் பெருமக்களோம் இபப்*]படி-
க் செய்வாரே ஊட்டப் பணித்தோம் இஸடெப் பணிக்க எழுதிநேந்
ஆயிரத்திருநூற்றுவ [திக [திற*]லோத்தமநேந் 1-
(85
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 118/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 12 நாள் 184
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 971
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 241/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/162
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 35
அரசன் ₹ பார்த்திவேந்திரவர்மன்
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : வெளியன் நுளம்பர் விசுத்தமதி பண்டிதர் என்பவன் ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள்
இறைவனை மூன்று சந்தியும், அர்த்த யாமத்திலும் வேதத்தில் வல்லவனாய்
உள்ளவன் அபிஷேகம் செய்வதற்காக 525 குழி நிலத்தினை வரிநீக்கிப் பெற்று
தானமாக அளித்துள்ளான். கணப்பெருமக்கள் கண்காணிக்க ஏற்பாடு
செல்ப்பட்டள்து.
கல்வெட்டு :
1. ஹஹிஸ்ரீ[॥*] கோபாதி,வேந்உாதி பன்மற்கி யாண்டு பன்னிரண்டு நாள்
நூற்று எண்பத்துநாலு தாமர்க் கோட்டத்து திருவேகம்பபுறத்து
2. இராஜமல்ல சதுற்வேதி மங்கலத்து ஸ்ரீபோந்தைய் பெருமானடிகளுக்கு
பொத்தன் மடுவுடைய வெளியன் னுளம்பர் விம
9. தமதிபண்டிதர் இறையிலியாக ஸலெலெயார் பக்கல் மஞ்சிக்கமான கடுகிலி
குழி அஞ்லுற்றிருபத்து அஞ்செய் . . .
4. குழியும் ஸ்ரீபோந்தைய் பெருமானை மூன்று ஸந்யியும் அத_யாமமும்
வேதம் வல்லானாய் நல்ல . . .
5. ன் அஹிஷேகம் செய்வாநுக்கு கடைக்காக வைத்தேன் விஸய-$மதி
பண்டிதநேன் இமநம் அவ்வாண்டு . . . .
186
6. ஸ்ரீகோமில்வாரியஞ் செய்கின்ற கணப்பெருமக்களேய் கடைக்காண்பாராக
- வைய்த்தேன் இ .....
7. த்துக்கு தீங்கு நினைத்தார் மெங்மா கன்நியான்தம் நடுவு செய்தார் செய்த
பாவம் கொள் . . . .
8. இத?) மக்ஷிப்பருடைய ஸ்ரீவாத தூளி என்சிரஸின அறம் மறவேல் ௮
9. ய் இல்லை இத29 ஸ்ரீவாஹேறாறற டைய ணக ॥-
187
த.நர.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 119/2017.
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 138
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 972
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 199/1915
மொழி தமிழ் முள் மதிப்பு 1” உ: ட்
(தெ.க.தொ.) . ...
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் கார்க் கல்வெட்டு எண்: 98
அரசன் பார்த்திவேந்திரவர்மன்
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர்.
குறிப்புரை : இக்கல்வெட்டு முழுமை பெறவில்லை. மிகவும் சிதைந்து காணப்படுகிறது.
பறியலூர் ஊரைச் சார்ந்த ஜாதவேத கிரமவித்தன் என்பவன் ஸ்ரீபோந்தைப்
பெருமானடிகள் கோயிலில் நடைபெறும் பெருவீற்றை நாள் விழாவின் போது
பெருந்திருவமுது செய்வதற்காகத் தானமளித்துள்ளச் செய்தி.
கல்வெட்டு :
1.
2.
3.
ஷஹிஸ்ரீ[॥*] கோப்பாதிவேரூாதி
அதிபதி பநற்க்கு யாண்டு ௰௩:
ஆவது. பறிய(ல்)லூர் ஜாதவே-
த௲மவி(ய)த்தன் ஸ்ரீபோந்தைப்-
. பெருமானடிக(ள்)ளூுடைய பெருவீ-
ற்றை நாளைத் திருவோலக்கத்து ஞா-
பக... ரியும்மதற்க்குத் . . .
நெ. . . பெருந்திரு[வ]மிர்[தி]-
௨ற்க்கு வைய்த்த . . .
188
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 120/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
கல்வெட்டு
திருவண்ணாமலை . ஆட்சி ஆண்டு : 18 வருடம் 120 நாள்.
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 972
பிரம்மதேசம் இ.க. ண்ட்திச்மை 194/1915
தமிழ் - முன் பதிப்பு : 30/116
(தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் : ஊர்க் . கல்வெட்டு எண்: 37
பார்த்திவேந்திரவர்மன்
சந்திரமெளலீஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர்.
திரைராஜ்ய கடிகாவின் மத்யஸ்தன் (கணக்கர்) சதுரன் மூவாமிரவன் என்பவன்
ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் இரண்டு நந்தா விளக்குகள் வைப்பதற்கு
80 கழஞ்சு துளைநிறைப் பொன் தானமளித்துள்ளான். கணப்பெருமக்கள்
நந்தாவிளக்கு எரிப்பதைக் கண்காணிக்கவும், ஸிக்கவில்லை எனில் தெண்டம்
வசூலிக்கவும் சிரதாமந்தர் எனும் நிர்வாகப்பிரிவினருக்கு உரிமை
வழங்கப்பட்டுள்ளது.
1. ஷுஹிஸ்ரீ[॥* ] கோப்பாதி,வெஷி_திபதற்கு
2. யாண்டு ம௩ ஈ* ஈ௨௰ தாமர் கோட்டத்து தி-
9. ௬ருவேகம்பபுறத்து மாஜ2ஓவ-
1 51. ஷூ. ட. ஷூ
. தாஃவேபுதி மங்கலத்து கெறாஜுவ்புகா-
- மஹந் ஸ்ரீகயிகாரியாகி[ய] சதுரன் மூவாயிரவந் இவ்வூர் ஸ்ரீ-
போந்டெகப் பெருமானடிகளுக்கு இரண்டு நஷாவிளக்கு இரவும்
பகலுஞ் வஞூ[தி]ஆவத் எரிப்பதற்கு தஷபொன் மநகட்டளை
- துளை நிறை முப்பதிந் கழஞ்சு இப்[பொ]ன் முப்பதிந் கழஞ்சும் இதே-
9. வர்க்கே குடுத்து இஜேவருடைய லூசி திருசுற்றாலைமின் தெற்கில் நங்-
* ££ -நாளுக்கான குறிமீடு
189
10. கை செய்யாளாகிய அறுநூறு குழியு முள்ளெ! இறையிலியாந-
11. மையில் இச்செறுவில் போக லோமங்கொண்டு இரண்டு நந்தா
12. விளக்கும் எரிப்பதாக மிலாலேலகெ செய்து குடுத்தோம் 8ஹா-
12. வெல பெருமக்களோம் இது அவ்வாண்டு கணவி-
14. யஞ் செய்யும் பெருமக்களேய் எரிய்ப்பிக்க கடவாராகவும்
15. எரிய்ப்பியாது முட்டில் மர,தாமரரேய் அவ்வவாண்டு செய்யு-
16. ங் கணவாரியப் பெருமக்களையே பெறுவகை நிசதம் அரை-
17. க்காற்ப் பொன் அன்றாழ்கோவுக்கு மன்றப் பெறுவாராகவும் இ-
18. ப்பரிசு மமிலவாலேஷெ செய்விய்த்துக் குடுத்தோம்
19. ஊஹாஸலெப் பெருமக்களோம் பெருமக்கள் பணிப்ப
20. எழுதினேன் கெெ.றாஜ$வடுகா மய்ஹுந் திருவேகம்ப கற்பி-
21. ச்சனேன் ॥ ௨ இப்படிய்
க ல அப ட,
!- முன்னே - என்று படிக்கவும்
190
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 121/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 18
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 972
ஊர் 3: பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 197/1915
மொழி : தமிழ் (ம) சமஸ்கிருதம் முன் பதிப்பு : 90/119
. (தெ.க.தொ.)
எழுத்து : தமிழ் (ம) கிரந்தம்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 38
அரசன் 3 பார்த்திவேந்திரவர்மன்
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் வடக்குச் சுவர்.
குறிப்புரை : ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோயில் இறைவனை மூன்று சந்தியும், அர்த்த
சாமத்திலும் அபிஷேகம் செய்யும் பிராமணனுக்கு நெல் மற்றும் கூறை
(துணி) ஆகியவை வழங்குவதற்குத் தானமாக 30 கழஞ்சுப் பொன்
அளிக்கப்பட்டுள்ளது. இப்பொன் தன்மக்கட்டளைக் கல்லால் நிறுத்து தரத்தினை
இராஜமல்ல சதுர்வேதி மங்கலத்து திரைராஜ்ய கடிகாவைச் சார்ந்த மத்தியஸ்தன்
- பொற்கோயில் மூவாமிரவன் என்னும் சதுரன் என்பவன் சரிபார்த் துள்ளான்.
கல்வெட்டு. :
1. ஷுஹிஸ்ரீ[॥*] ஸ்ரீவாரு: வாதிவேராயிவதி நறவதெ தாயா நஷ
ராஸெமாஜெஸிஜா ஜ2ூஜெஸற[மு]ணவுநிகெக ஒட கபடி
2. ஏஸி பொற்கோயில் மூவாயிரவ . ஈ-யமமா: வா௫ஜித-ஷ ஹா[ஹ]ணாய
தி,மமாநிஷா ஸ-வந_௦ மண[ம] நிஓயொலாந வ ஸெ);கஷி . . .
9. மோசிபரத யாண்டு ௩வது தாமற்க்கோட்டத்து - [திரு]வேகம்ப[பு றத்து
மாஜ[2]ஓவு-வே[ஃ]தி மங்கலத்து கதெற[ா]ஜுவ்புகா 2யடஷன்
சதுரனாகிய . . .
4. . . க் கோயில் மூவாமிரவன் இவ்வூ[ர்] ஸ்ரீபொந்[ண]த பெருமான[டி ]க[ளை* ]
கதி,[ஸ௩பியு]ம் ௬௨யாமமும் ௬லிஷேமஞ் செய்[யு]ம் வஹணனுக்கு
நிசதி . . . ..
191
5. லும் ஆறுமாஸத்து ஒரணை கூ[றை]யும் வரராகி[த்தவற்] தேவரே குடுப்பாராக .
[இத்]டேவர்க்குக் குடுத்த பொன் ம[$]க்கட்டளை துளைநிறை முப்பதின் -
கழஞ்சு இ-
6. வ்வாண்டு மணவாாரிய]ஞ் செய்[யு]ம் [ம]ணப்பெரும[க்க]ளே இன[ஷாஷனு]
்் [வ]றுப்பாரகவும் . . , றைவறது முட்டில் . . . . .
192
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 122/2017
மாவட்டம் திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 18
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 972
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 242/1915
மொழி தமிழ் முன் பதிப்பு : 30/163
(தெ.க.தொ.)
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 39
அரசன் பார்த்திவேந்திரவர்மன்
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஸ்ரீபோந்தைப் பெருமானடிகள் கோயிலில் விளக்கெரிக்கத் தன்மகட்டளை என்னும்
நிறுத்தல் அளவையால் நிறுத்திய 15 கழஞ்சுப் பொன்னினை சேவன் என்பவன்
தானமாகக் கொடுத்துள்ளான்.
கல்வெட்டு :
1. ஷஹிஞஸ்ரீ[॥*] கோப்பாதி) வேணி . ... .
2. ர் பநற்கு யாண்டு ௩ தாமர் . .....
3. மங்கலத்து ஸ்ரீபோந்தைப் பெருமா .. ..
4. ம்பந் சேவந் சஷாதித்தவல், கண்ல மி
8. ற்கு வைத்த பொந் மரக்கட்ட . . . .
6. ங்கழஞ்சு இப்பொந் பதினை . . . ..
7. விளக்கு எரி[ப்போமானோம்] ராஜ . . . . .
%
193
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 123/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 17
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 974
பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 206/1915
தமிழ் முன் பதிப்பு : 30/128
(தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 40
இராசகேசரிவர்மன் (சுந்தர சோழன்)
சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
இராசகேசரிவர்மன் என்று குறிப்பிடப்பட்டுள்ள இக்கல்வெட்டு சுந்தரசோழனின்
கல்வெட்டாக இருக்கலாம். கச்சிபேட்டு திருவேகம்பத்து திருவுண்ணாழிகை
சபையைச் சார்ந்த பாரத்வாஜி சதாசிவன் என்பவன் ஒரு குறிப்பிட்ட நிலத்தினை
விலைக் கொடுத்து வாங்கியும், மற்றொரு நிலத்தினைப் பரிவர்த்தனையாக
மாற்றியும் ஆக இவ்விரு நிலங்களையும் இக்கோயில் இறைவனுக்குத்
திருமெய்ப்பூச்சு பூசுவதற்கு வேண்டிய சந்தனம் வழங்கிட வழிவகைச்
செய்துள்ளான்.
1. ஹஹிய்ீ[॥*] ராஜகேஸரிவன்2[க்குயா]-
2. ண்டு பதினேழாவது கச்சிப்பேட்டு -
டத் திருவேகம்பத்துக் திருவுண்ணா-
3
4. ழிகையுடைய ஹாறதாஜி ஹலாமிவ-
5. நீ தாமர் கோட்டத்துத் திவேகம்பப்பு-
6. றத்து மாஜ$ஒச்சக- வேதி மங்கலத்து ஊ-
7. ரார் கூரி பேசங்குமாரவாய்பேசியார் தர-
8. வில் புதுப்பள்ளிச் சிறுநாவல் பக்கல் வி-
194
௨.ற்றுக் கொண்டுடைய ஒரு பங்கினாலும் பங்கி[ல்]
. நிலம் அய்ந்தா[ம் ப]ாடகத்து யான்மி . . .
௨ம் பரிவதனையாலு நா. . ....
௨ய் குழி பொத்தகத்து என் . . ....
வ்வூர் ஸ்ரீபோந்தைப் பெரு . . . . .
. நந திருமெய்பூச்சுக்குச் ச௩[ந*]த்துக் . . .
. த்தேன் வஞூகித்தருள்ளளவும் [வரத ப-
ற்றி இறை நீங்கலான லோமங் கொண்டு ஸ்ரீ-
. கோயிற் கணவாரியப் பெருமக்களோடும் [இ]-
தும் றக்ஷிப்போமாக ஒட்டிக்குடுத்தோம்
ஹாதகிலோகத்தால் வந்த நெ[ல்*]லைம்பதி[ன் கா]-
டி கழஞ்சுக்கு முப்பதின் காடி வண்ணம் வ-
ந்த பொன் கழஞ்சரை இது திங்களோபாதி-
தி அரைக்கால்ப் பொன்னால் சநநங்
. மிதற் நிறம்பில் மங்[கையிடைக் கும]
ரி இடைச் செய்தார் செய்த பாவத்து-
ப் படுவோமானோம் இத2 மூல
. கணவாரியரோமை பதா ஹஸ்ரரே]-
. நிசதங் குன்றிப் பொன் மன்[றி] ஒட்டி-
. க்குடுத்தோம் இத[2*]ம் [ஈக்ஷி]ப்பார்
ஸ்ரீ பாதம் என்றலை [மேல]ன
. அறமறவேற்க
195
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 124/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 1
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 996
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 190/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 80/112
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 41
அரசன் : முதலாம் இராசராசன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர்.
குறிப்புரை : கல்வெட்டு முழுமையாக இல்லாமல் ஒரு பகுதி மட்டும் உள்ளது.
திருவேகம்பபுறத்து ராஜமல்லச் சதுர்வேதிமங்கலம் என்ற ஊர்ப்பெயர் மட்டும்
காணப்படுகிறது.
கல்வெட்டு :
1. ஹஷியஸ்ீ[॥*] சாலைகலமறுத்த கோராஜராஜகேராரிபநமற்கு யாண்டு மக
ஆவது ....
2. கோட்டத்து திருவேகம்புறத்து மாஜூஓமாதுர்வேதிமங்கல[த்]து . . .
196
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 16
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1001
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 199/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/121
(தெ.க.தொ.)
எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊர்க் . கல்வெட்டு எண்: 42
அரசன் முதலாம் இராசராசன்
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் வடக்குச் சுவர்.
குறிப்புரை : ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் மூன்று சந்திகளின் போது திருப்பதியம்
பாடும் இருவருக்கு 1200 குழி நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு
அல் இங வயி ப மட் உம்ம் க கில் மனக்கொளக் காந்தளூர்ச் சாலை
கக்கி 4 கங்கபாடியும் நுளம்பபாடியுந் தடிகைபாடியும் வேங்கை
நாடுங் குடமலை நாடுங் கொல்லமுங் கலி-
கல்மடு மடிக் திரு தெண்டாற் கொண்டு [தன்னெழில் வள]ருழியுளெல்லா யாண்டுந்
தொழுதெழில் வணங்கும் யாண்டே செழிஞரைத் தேசுகொள் கோஇராஜராஜ
ராஜகேஸரி[வ*]நர்க்கு யாண்டு 6௬ ஆவது தாமர்க் கோட்டத்து
திருவேகம்ப
தவ வல் மங்கலத் . . . . மூன்று ஸஷியு(ம்) ஷிருப்பதியம் பாடுவாரிருவர்க்கு
வைத்த பூமிய்வது கிரன்பாடி குழி ஆயிரமும் அரைய் தூம்பில் முடக்கு
வாய்க்கால் கரை குழி இருநூற்றுச் சின்னமும் ஆக குழி ஆயிரத்திரு
தீ ல்ல லால் கலக க இதுகள் க சில ல வகுக்க பய
தொடர் எண் :- 125/2017
197
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 126/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 18
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 10038
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 192/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/114
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ் ;
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 43
அரசன் 2 முதலாம் இராசராசன்
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர்.
குறிப்புரை : தும்பூர் ஊரைச் சார்ந்த கம்பன் மலையன் மற்றும் நக்கன் பவித்ரம் எனும்
இராஜராஜ தலைக்கோலி லக்ஷ்ணத்தாள் ஆகிய இருவரும் இராஜமல்லச்
சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலில் நந்தாவிளக்கு
வைப்பதற்காக 12 கழஞ்சுப் பொன் தானமளித்துள்ளனர். நடனத்தில் சிறந்து
விளங்குபவர்களுக்கு அளிக்கப்படும் உயரிய பட்டம் தலைக்கோலி என்பது
... ஆகும்.
கல்வெட்டு :
1. ஹஹிஸ்ரீ[॥*] திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கேயு-
2. ரிமை பூண்டமை மனக்கொள காஷளூர் சாலை கலமறுத்தருளி வேங்கை
நாடுங் கங்கபாடியு நுளம்பபாடியு கடிகைபாடியுங் குடமலைநாடுங் கொல்ல-
9. முங் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமுந் திண்டிறல் வென்றித்
தண்டாற் கொண்டு தன்னெழில் வளர் ஊழியுளெல்-
4. லா யாண்டு ஷொழுதெழ விளங்கும் யாண்டே செழிஞரைத் தேசுகொள்
கோறாஜமாஜ மாஜகேஸறிவநற்கு யாண்டு அ ஆவது
5. தாமர்க் கோட்டத்துத் திருவேகம்பபுறத்து மாஜமல்ல வக-ஃவே_திமங்கலத்து
2ஹாஸ்லெயோம் எங்களைத் தனிசுடைய-
6. தும்பூரூடையான் கம்பன் மலையனும் நக்கன் பவித்திரமான மாஜஙாஜத்
தலைக்கோலியும் ஓக்ஷணத்தாலுடைய பொ-
198
7
10.
11.
12.
1.
14.
ன் யம் இப்பொன் பன்னிரு கழஞ்சுக்கும் பொலிசைக்கும் எங்களூர்
ஸ்ரீபோஷை வ௱ஙேரரர்க்கு நாங்கள் எரிப்பதா-
ன திருநஷாவிளக்கு ஒன்றும் வஷிறாகிகஷவற் நிசதம் உழக்கெண்ணையா
லெரிப்பதாகவும் இவ்விளக்கு ஒன்று
. ஆட்டாண்டு தோறும் மரகோய;வய்யக் கடவ ஷ_வதற வாரியப்
பெருமக்களே இவ்வெண்ணை அட்டுவித்து
எரிப்பிக்க கடவார்களாகவும் இவ்விளக்கு எரிப்பியாது முட்டில் ஸம, ஜா2றெ
மநாஸகமுள்ளிட்ட தாம் வேண்டு
கோவுக்கு நா . . . . ப்பேர்ப்பேர் உணமிடப்பெறுவதாகவும் இத்த-
ண்டமிறுத்தும் இவ்விளக்கு வஞ_ாதித்தவற் எரிப்பதாக இப்பரிசு ஸ்ரி-
லாஜேவவெ செய்யப் பணித்துக் குடுத்தோமிவூர் ஊஹரஸடலெெப் பெ-
ர௬ுமகீகளோம் ஸலெலெயிருநீது பணிப்பணி கேட்டேழுதினேன்
கேசுவபட்ட[னேன்* |
1. ஒன்றினால்-என்று வாசிக்க
199
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 127/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு தா அதர்
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1012
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 204/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/126
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 44
அரசன் : முதலாம் இராசராசன் ்
இடம் 3 சந்திரமெளலீஸ்வரர் கோயில் வடக்கு மற்றும் மேற்குச் சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து தாமர் கோட்டத்து தாமர் நாட்டு கரைக்கோட்டு
பிரமதேயம் என்கிற பராக்கிரமசோழச் சதுர்வேதி மங்கலத்து கோயிலில் ஒரு
நந்தா விளக்கெரிக்க 10 கழஞ்சுப் பொன்னினை காமக்கொடி சானி என்னும்
பிராமணப் பெண் தானமளித்துள்ளாள். இந்த 10 பொன்னினைக் கொண்டு 90
ஆடுகள் வாங்கி விளக்கெரிக்கத் தினம் உழக்கு அளவு நெய்மினை அளிப்பதாக
தில்லைச்சேரியைச் சார்ந்த இடையன் ஒப்புக்கொண்டுள்ளான்.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ[॥*] திருமகள் போலப் பெருநிலச் செல்வியு[ந்தனக்]கேயுரிமை
பூரண்ட]மை ம[னக்கொள காகளூர்ச்சாலை கலமறுத்தருளி வேங்கை
நா-
2. டுங் கங்கபாடியுங் நுளம்பபாடியு ஷடிகைபாடியுங் குடமலை நாடுங் கொல்லமு[ங்
கலி]ங்கமு[ம் எண்டிசை. “புகழ்தர ஈழமண்டலமு மிரட்டபாடி
ஏழரையிலக்கமுஷி-
3. ண்டிறல் வென்றித் தண்டாற் ல்ல தண்ணெழில் வளர் ஊழியுள்ளெ[ல்லா]
யாண்டு தொழுதக விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள்
ஸ்ரீகோராஜமாஜகேஸரி உரமாக ஸ்ரீகோராஜமாஜசேவற்-
4. கு யாண்டு ௨௮௭ ஆவது ஜயங்கொண்டசோழ மண்டலத்து தாமர்க்
கோட்டத்து [தாமர்] நாட்டுக் கரைக்கோட்டு ஸ பஹஜேயம் பாராகூமசோழ
நச வேதி மங்கலத்து ஸ்ரீபோந்தையாள்வார் ஸ்ரீகாய
200
10.
ங் கடைக்காண்கின்ற எமிற்றிருப்போந்தை நிலயக,மவித்தனும் நல் . . . .
த்திருவேங்கட மாதவ ஸவ_கூ.துவும் ம[ண]ர்ப்பாத்து மிதுணி உலாமற்
ம வித்தனும் வாரியமாக
. கெடறாஜு மடுகா 2ம$ஹஷனான வேங்கடவன் திரிவிக்ரமநான ஏழாயி[ரவன்]
௨௪
கணக்காகவும் மாறதாஜி த . . . [பெருமான் ஹராஹணி காமக்கொடி
சானி தன் பேரால் திருநஷாவிளக்-
, கரையினுக்கு உட்கோளாக இப்பொன் முக்கழஞ்சரையே நாலுமஞ்சாடியும[னு ]
ம் மமிவஹாஹணன் பட்ட [மரிவன்] கொண்ட காசு பத்தினால்
பொன் ஐஞ்கழஞ்சே காலும் திருமெ . .
ய்காக்கும் வெள்ளாளன் ஒற்றிபெம்மானை ௨ண்டமாகக் கொண்ட காசு ௧
னால் . . . அரைக்கழஞ்சேய் குன்றியும் இத்தேவற்கு பொலி வாரியால்
முதலான பொன்னிலிட்ட பொன் ஒன்-
பது மஞ்சாடியு மாறுமாவுமாகப் பொன் பதின் கழஞ்சுக்கும் கொண்ட
சாவாமூவாப் பேராடு தொண்ணூறும் இத்தேவற்கு வசூ£கிகவந் திருநகா
விளக்கு க நுக்கு ஒன்றினால் நிசதம்
நெய் உழக்காக அட்டக்கடவநாக தில்லைச்சேரிமிருக்கு மிடையன் ௮ .
௨ ணிலியான திருப்பொ . . . மன்றா[டி] விசமிருவிட்டன் இவை
அவ்வாண்டு ஸ்ரீகாயங்கடை-
க்காணக்கடவ கணப்பெருமக்களேய் முட்டாமை எரரிப்பி]க்கடவார்கள் இவை
ஏழாமிரவநெழுத்து [॥*]
201
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 128/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 29
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1014
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 216/1915
மொழி தமிழ் முன் பதிப்பு : 30/138
(தெ.க.தொ.)
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 45
அரசன் முதலாம் இராசராசன்
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
குறிப்புரை : இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து “ஆளுங்கணம்” நிர்வாகக் குழு
உறுப்பினர்களில் ஒருவனான பரியலூர் திருப்போந்தை என்பவன் திருநந்தா
விளக்கெரிக்க 90 ஆடுகள் வழங்கியுள்ளான்.
கல்வெட்டு :
L
2.
ஹஹிய்ீ[॥*] திருமகள் போலப் பெருநிலச் செ-
ல்வியுந் தனக்கேய் உரிமைபூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை
கலம-
இுத்தருளிய வேங்கை நாடுங் கங்கபாடியு[ம்] நுளம்ப பாடியும்
- தடிகை பாடி[யுங்] குடமலை நாடுங் கொல்லமும்(ங்) கலிங்கமும் எண்டிசை
புகழ்தர ஈழம-
௨ ஸ்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும்(ந்) திண்டிறல் வென்றித் தண்டாற்
கொ-
ண்ட தன்னெழி]ல் வளருழி ஊழினழி எல்லா(வி) யாண்டுந் தொழுதகை-
உய் விளங்கு மி[யா]ண்டேய் செழிஞரைத் தேசுகொள் ஸ்ீறிகோவி மாஜமாஜகே-
௨ சரி உரறான (ஸ்ரீ ]மாஜமாஜசேவற்க்கு யாண்டு இருபத்தொந்பதாவது
202
9. [நாள் பத்து ஜய]ங்கொ]ண்டசோழ மண்டலத்து தாமர்க் கோட்டத்துத்
திருவே-
ந ஆட்டு தடம் க [ரை]க்கோட்டு ஸூஹூ[,ய]மா . . . . . தி மங்கலத்து
ஸ(ரிாருங் ம-
11. ணத்தாருள் பறியலூர் திருப்போந்தைச் சந்திமாதிகர் உள்ள[ளவும்] ஒரு
திரு நு-
12. [ந்தா வி]ளக்கு எரிக்க வைத்த ஆடு தொண்ணூறு இது சாவா மூவா .
.18. நிசத நின்றாநால் உழக்கு நெய்யட்டக் கடவாநாக தில்லைச் செ . .
இருக்கும்
14. . . . அமறாயந் அரணிலியான திருப்போந்தை மன்றாடி வருமாக . . . .
ன்இஸை . . . இத்தற்ம-
15. ம் ஈக்ஷிப்பார் ஸ்ரீ பாதம் எந்தலை மேலந
-203
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 129/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு த:
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 1015
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 191/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 80/113
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ் \
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 46
அரசன் : முதலாம் இராசேந்திரன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் வடக்குச் சுவர்.
குறிப்புரை : வல்லவரையர் வந்தியதேவரின் மனைவி இந்தளதேவி என்பவள்
ஜயங்கொண்டசோழ மண்டலத்து தாமர் கோட்டத்து பிரமதேயமான பராக்கிரம
சோழச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீபோந்தை மகாதேவர் கோயில் இறைவனுக்கு
அமுதுபடிக்காகவும் உச்சி சந்தி வழிபாட்டிற்காகவும் வேண்டி ஐந்து
கழஞ்சுப்பொன் கொடையளித்துள்ளாள்.
கல்வெட்டு :
1. ஹுஹிஜஸ்ரீ[॥* ] கோப்பரகேஷரிவடரான ஸ்ரீராஜேவிரசோழ தேவர்க்கி யாண்டு
௩ ஆவது நாள் [௩௱]-
2. ரய ஜயங்கொண்ட 'சோழமண்டலத்து தாமர்க்கோட்டத்து கரைக்கோட்டு
பெஹூயமான பராக்கிரமசோழ சது-
3. வேதி மங்கலத்து ஊஊ ஹெ பெருங்குறி பெருமக்களோம் எழுத்து
எம்மூர் ஸ்ரீபோ-
4. ந்தை 2ஊஹாஜேவற்கு வல்லவரஸர் [வந$]65வர் தேவியார் இந்தள தே[வியா]-
5. ர் இத்தேவர்க்கு உச்சியம் போழ்து திருவமுது . . நிசதம் நாழி அரி[சிய]-
6. ட்டி அட்டு அமுது செய்விப்பதாக குடுத்த பொன் அ॥[ய்*]ங்கழஞ்சு
இப்பொந் அ[ய்* ]ங்கழஞ்சும்
204
10.
12.
14.
, ஸலெயோமே கொண்டு இப்பொந்நுக்கு பொலிசையாக இத்தேவர்க்கு
[சந்த,ாதித்தவற்]
. உச்சியம்போது அமுது . . ம் அரிசி உ . . . ந்நிசத நாழி அரிசி
அட்டவும் நி . .
ஸலெயோமே அட்டுவ்தாகவும் இவ்வ[ரி]சிப் பங்குநித் திங்கள் பங்குனி
உத்திரத்தின் முன்பே ஓராட்டைக் கொ . . . ணைக்கு . . . அரிசி
முக்கலநே இரு . . .
றுணி அரிசியும் இத்தேவர் மரக்கால் சிரிபோ(ழ்)ந்தயந் மரக்கா(ல்)லால்
சந்திராதித்த[ற்] குடுப்போமாநோம் இப்பரிசு குடுப்பதற்கு இப்பரிசு . . .
[செய்து குடுக்கவென்று ஸடெெயுள் எ . . . சங்கர . . . ச்சேரி செட்டசன்
மக்கிரமவித்தநும் பாக்கத்து . . . ரக் கிரமவித்தநு[ம்] காம . . . ர
இளைய . . க்கிரம
ப்பணியால் பணிக்க ஸ்ரிலா[6*]லகை செ[ய்*]து குடுத்தோம் மாஹ'ஸடமஸெ
பெ[ரு*]ங்குறிப் பெருமக்களோம் . . . தளதேவி ...... உச்சியம்போழ்து
சாத்திஅருள கரந்தை உள்ளிட . . .
ம் மழச்சாணி 0 . . . ஒரு பூமாலை சாத்துவதாக குடுத்த பொந்
முக்கழைஞ்சு இத்தேவியாள் ஒருச்சொ . . .ய ... நெக்குங் . . .
ஞ்சு இந்நெ . . . மாலையுமாக பொந் ஐகழெழெ . . .
நீறுக்கு பொலிசைக்குச் சிலவாக இத்தேவர்பண்டாரத்தே இடுவிப்பா . . .
[நீத] ஸ்ரீகோமில் வாரியபெருமக்களேய் ॥-
மகாசபை - என்று படிக்க
205
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை
செய்யாறு
பிரம்மதேசம்
தமிழ்
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர்
முதலாம் இராசேந்திரன்
தொடர் எண் :- 130/2017
ஆட்சி ஆண்டு : 4
வரலாற்று ஆண்டு : கி.பி. 1016
இ.க. ஆண்டறிக்கை: 200/1915
முன் பதிப்பு : 80/122
(தெ.க.தொ.)
ஊர்க் கல்வெட்டு எண்: 47
சந்திரமெளலீஸ்வரர் கோயில் வடக்குச் சுவர்.
கல்வெட்டின் ஒரு சிறு பகுதி மட்டும் உள்ளது. இக்கல்வெட்டில் முதலாம்
இராசேந்திர சோழனின் பெயர் மற்றும் ஆட்சியாண்டு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1. ஷஹிஸ்ரீ[॥*] கேரப்பரகேசரிபர . . .
2. ந்த,(£) சோழ தேவற்க்கு யாண்டு ௪ ல[ர*]வது . . .
206
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 131/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 8
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1020
ஊர் : பிரம்மதேசம் ் இ.க. ஆண்டறிக்கை: 201/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/123
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு . எண்: 48
அரசன் : முதலாம் இராசேந்திரன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் வடக்குச் சுவர்.
குறிப்புரை : கல்வெட்டு மிகவும் சிதைந்தும், முழுமையடையாமலும் காணப்படுகிறது.
சோழ மண்டலத்து உய்யக்கொண்டார் வளநாட்டு, வெண்ணாட்டு பிரமதேயமான
கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த நாரக்கன் என்பவன் தாமர்
நாட்டு கரைக்கோட்டு பிரம்மதேயம் எனும் பராக்கிரமசோழச் சதுர்வேதி மங்கலத்து
ஸ்ரீபோந்தையுடையா் கோயீலுக்குத் தானமாக வழங்கிய நெல்லினை மூலதனமாகக்
கொண்டு, தினமும் நான்கு வேளையும் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்கு
ல “ஸ்ரீவைகுந்தம்” கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதற்கு வழிவகைச்
ட் த செய்துள்ளான்.
கல்வெட்டு $
1. ஷஹிஞஸ்ரீ[॥* ] திருமன்னி வளர இருநில மடந்தையும் பொ[ற்]சயப் பாவையும்
சீர்தநிச் செல்வியும் த . , . . . . வனவாசியும் கள்ளிச் சூழ் மதிட்-
2. கொள்ளிப் பாகையும் நண்ணரர்*]க் கருமுரண் மண்ணைக் கடக்கமும்
பொருகடல் ஈழத்தரைசர் தம் முடியும் ஆங்கவர் தேவி
ந்திரனாரமும் தெண்டிரை ஈழமண்-
8. டலம் முழுவதும் எறிபடை கேரளன் முறைமையில் சூடுங் குலதனமாகிய
பலர் புகழ் முடியும் செங்கதிர் . . . . . . . செருவிற்சினவில் இருபத்தொ[ரு* ]
காலரைசுகளை
4. [கட்ட] பரசுராமன் மேவ . . . . கொண்ட கோப்பரகேசரிவநரான ஸ்ரீராஜேஷ, சோ-
207
5. [ழதெவற்க்கு யாண்டு ௮ ட்டா , ....... த்தாமர் நாட்டுக் கரைக்கோட்டு
ஸஹ ஜேயமான பராக கிரமசோழ [சது]வேஃதிமந்கலத து
ஸ்ரீபோந்தை[யு]டைய . . . . ணி ஸ்ரீசோழ் மண்டலத்து உய்யக்கொண்டார்
வளநாட்டு வெ-
6. [ண்ணா]ட்டு ூ_ஹசேயம் கேரளாந்தகச் சதுவேதி மங்கலத்து . . நாரக்கண்
டன் ஸ்ரீபோந்தை உடைய 3ைோசேவர்க்கு
7. [இவ்]வூர் லவன் ரேர் தண்ணீர்க் ற்று. தின்றும் ஹமி.
உக்கு - இருதூணிக் குறுணியும் தண்ணீரமுதுக்குக் கு-
8. [றுணி]யுமாக ஸாமி ' நாலினுக்கும் நிசதம் முக்கலநே தூணி ஓத நட கக்
ல்லி வக கலத்து ஸலெயோம் ஸ்ரீபோஷை ஆஃ
9. [தி]வணேயுாரர் கையால் யாங்கள் கொண்டுகடவ கா ,.......௨ல
நெல்லுக் கலமாக அறுபதின் . . . . ..
208
டி
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
க்க
செய்யாறு
பிரம்மதேசம்
தமிழ் 5
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர்
௨... கேசரிவர்மன்
தொடர் எண் :- 132/2017
ஆட்சி ஆண்டு : 8
வரலாற்று ஆண்டு : 10-நூற்.
இ.க. ஆண்டறிக்கை: 209/1915
முன் . பதிப்பு : 30/181
(தெ.க.தொ.)
ஊர்க் கல்வெட்டு எண்: 49
சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
ஸ்ரீபோந்தையாண்டார் கோயில் திருவுண்ணாழிகையுடையார்களில் திருவொற்றியூர்
சிவன் என்னும் சிவபிராமணன் தானம் அளித்துள்ளான். தானத்தின் விவரம்
அறிய இயலவில்லை.
கல்வெட்டு :
1. [ஷுஷி]ஸ்ரீ [கெஸரி பர[ற்]கு யாண்டு ௩ ஆவது
-. கோட்டத்து திருவேகம்புறத்து இராஜமல்லச் ச-
தாமர்க்
அ. துவேபதி மங்கலத்து ஸ்ரீபோந்தையாண்டார் திருவுண்ணாழிகையுடைய
ம்ிவவடா ன் திருவொற்றியூ[ர்] சிவனெ[னு]ம் விடங்க . . . ,
209
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 133/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 26)
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. (1005-15)
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 210/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 80/132
(தெ.க.தொ.)
எழுத்து : தமிழ்
அரசு : . சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 50
அரசன் : முதலாம் இராசராசன்
இடம் 3 சந்திரமெளலீஸ்வரர் கோயில் மேற்குச் சுவர்.
குறிப்புரை : இக்கல்வெட்டு வாசகம் முழுமையடையாமலும், சிதைந்தும் காணப்படுகிறது.
இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீபோந்தையுடைய மகாதேவர் கோயிலில்
திருநந்தாவிளக்கு ஒன்று எரிக்க 12 '/2 கழஞ்சுப் பொன்னினை இந்தள தேவியார்
என்னும் அரசியார் அளித்துள்ளார். இவ்வூர் மற்றொரு கல்வெட்டில் (ஊர்க்
கல்வெட்டு எண். 46) வல்லரையர் வந்திய தேவர் மனைவி இந்தல தேவியார்
நண்பகல் உணவு மற்றும் வழிபாட்டிற்கு 5 கழஞ்சுப் பொன் தானம்
அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கல்வெட்டு
1. . . . ஸ்ரீ திருமகள் போலப் . . . . மை மனக்கொள காந்தளூர் சாலை
கலம[றுத்த]ருளி கங்கபாடியும் நுளம்பபாடியும் [வேங்க]-
2. நாடுங் -கொல்லமும் கலிங்கமும் இலட்டபாடி ஏழரை . . . எண்டிசை
புகழ்தர [ஈ]ழமண்டல(ம)மும் திண்டிறல் வென்றி தண் . . .
9. ழில் வளரூழி எல்லா . . . . தொழுத . . . மியாண்டேய் செழிஞரை[த்தேசு]
கொள் [ஸ்ரிரகோவிராஜஇராஜகேசரி . . . . . .:
4. கு யாண்டு இருபத் . . . வது தாமர்க் . ..... திருவேகம்ப புறத்து
“ராஜமஒ சதுர்வேதிமங்கல[த்து] . . .
5. மாசேவர்க்கு . . . . . . [வ]ல்லவ[ரை]யர் வ . .. .. வர்
210 ்
றக பப. எ.டு யார் இஷளஜேவியார் .
௨ ஞா விளக்கெரி . . . . [த]பொன் பன்னிரு கழஞ்சரை இப்பொன் பன்னிரு
கழஞ்சரை .'.
யால் ,. இபொ டட. ஸத்வஸரம் ஸ்ரீசோழீயா . . . . ப்பெரு-
௨யமேவர் பண்டார . . . . . . லேய் கொண்[டு] விளக்கும் . . . . .
எரிப்பாராக]வும் இவிளக்கு . . . . . ..
211
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 134/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 20
செய்யாறு வரலாற்று ஆண்டு : 10-நூற்.
பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 214/915
தமிழ் முன் பதிப்பு : 90/126
(தெ.க.தொ.).
கிரந்தங் கலந்த தமிழ்
- ஊர்க் கல்வெட்டு எண்: 51
சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப மேற்குச் சுவர்.
திருவேகம்பபுரத்து இராஜமல்லச் சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீபோந்தை
மகாதேவருக்குத் தினமும் நான்கு வேளையும் பூசை செய்யும் பிராமணனுக்கு
புதுப்பள்ளியைச் சேர்ந்த திருவடி என்பவன் வழங்கிய 287/2 குழி நிலம்
வரிவிலக்கு அளித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
யாண்டு இருபதாவது திருவேகம்பப்புறத்து இராஜமல்லச் ச.துவேதி
மங்கலத்து . . .
. ஹாஜேவரை அதஹஹஷி ஹாஹணந் உபாஸிப்பதற்க்குப் பு துப்பள்ளி
திருவடிச் . . .
. ... இறைஇழிச்சி வைத்த குழி இருநூற்று எண்பத்தேழரைக் குழியும்
, தெற்க்கில்ப் புலம் வைத்தான் படினர் சத்திபட்டன் ௮௨ சாமத்துக்கு
212
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 135/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு த்
வட்டம் 3: செய்யாறு வரலாற்று ஆண்டு : 10-நூற்.
ஊர்... :. பிரம்மதேசம் 'இ.க. ஆண்ட்றிக்கை: 215/1915
மொழி ' . 3 தமிழ். முன் பதிப்பு : 30/1837
; (தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : : . சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 52
அரசன் 3 பார்த்திவேந்திரவர்மன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப மேற்குச் சுவர்.
குறிப்புரை : திருநந்தவனம் அமைப்பதற்கு 350 குழி நிலம் கொடையாகத் தரப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஷுஷிஸ்ரீ[॥*] கோபாதிவே[ஜாயிபதி]வ2_[ர்க*]கு யாண்டு . . .
2. தை பெருமானடிகளுக்கு திரு . . . வச நரவாநம் . . .
3. குழியும் . . , அர்ச்சிப்பார்க்கு [சை ]வத்த வதி சொ . காரும் -
4. ௫” மு[ந்*]நூற்று ஐம்பது குழி . . . பாடகத்து ஸ்ரீபோ . . .
213
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 136/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 5 வருடம் 280 நாள்
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1017
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 243/1915
மொழி தமிழ் முன் பதிப்பு : 30/164
(தெ.க.தொ.)
எழுத்து கிரந்த்ங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க்கல்வெட்டு எண்: 58
அரசன் முதலாம் இராஜேந்திரன் Ki
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டபத் தெற்குச் சுவர்.
குறிப்புரை : வல்லவரையர் வந்தியதேவரின் தேவியார் மந்தர கோவநார் குந்தவை தேவியார்
என்பார் ஜயங்கொண்டசோழ மண்டலத்து தாமர் கோட்டத்து திருவேகம்பபுறத்து
கரைக்கோட்டு ' பிரமதேயம் ஆன பராக்கிரமசோழ சதுர்வேதி மங்கலத்து
ஸ்ரீபோந்தை மகாதேவர்க்கு திருநந்தா விளக்கு ஒன்று எரிக்க 90 ஆடுகள்
கொடையளித்துள்ளார். (ஊர்க்கல்வெட்டு எண்: 46 (ம) 50) களில் வல்லவரையர்
வந்திய தேவரின் மற்றொரு தேவியார் இந்தளதேவியார் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1
2.
3.
ஷஹிஞஸ்ரீ[॥*] திருமந்நி
[வளர] இரு நிலமட[ந்தை-
யும் போர்ச்செயப்பா-
. வையும் சீர்த்தனிச்செ-
௨ ல்வியும் தந்பெருந்- ப
தேவியராகி இன்புற நெ-
- [டுதி]யுலூழியுளிடைது-
றை நாடுந் துடர்வன வேலிப்ப-
ட்ர் வனவாசியுஞ் சுள்ளிச்சூழ் ம-
214
10.
12.
20.
27.
திள் கொள்ளிப்பாக்கையு நண்ண-
. ற்கருமுரண் மண்ணைக் .கடக்க-
மும் பொருகடலீழத் தரசர்தம்முடியும் ஆ[ங்க]வர் தேவியரோங்கெழில் மு[டியு
முன்னவர் பக்கல்] தெந்நவர் வைத்த சுந்தர முடியு மிந்திரநாரமு-
. தெண்டிரை ஈழமண்டல முழுவது மாப்பொரு தண்டாற் கொண்ட
கோப்பரகேசரி பந[ரான ]
ஸ்ரீராஜேந்த சோழதேவற்க்கு யாண்டு ரு ஆவது ஈ ஊந௩௰
ஜயங்கொண்ட சோழமண்டலத்து தாமர்க் கோ-
.. [ட்டத்நது [திருவேகம்ப]புரத்து
. கறெக்கோட்டு வ,ஹதேயமாந பராக்கி[ர]-
. மசோழ சதுவேதிமங்கலத்து ஸ்ரீபோ[ந்]பகெ 8ஹாே-
. வர்க்கு உடையார் வல்லவரெெயர் வர தேவர்
, மந்தர கோவநார் குஷாசேவியார் [சி அடிகள்]
௨ கஞ்சிய அப்பெயரசியா . பதி . . . . க் அட்டுவ
- சாவாமூவாப் பேராடு தொண்ணூ
- றும் சஷிராதித்தவற் ஒரு திருநு-
ந்தா விளக்கு எரிக்கின்ற உழ-
க்கால் நிசத உழக்கு நெய் அட்-
215
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் : எண் :- 137/2017 :
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணமலை ஆட்சி ஆண்டு 22
செய்யாறு வரலாற்று ஆண்டு :. கியி. 1024
பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 254/1915
தமிழ் முன் பதிப்பு. : 0/76.
(தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு: எண்: 54
முதலாம் இராசேந்திரன்
சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப கிழக்குச் சுவர்.
ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்து காமிரம்பேடு நாட்டு
வயலூர் ஆளுங்கணத்து உறுப்பினர் எட்டுக்கூர் தாயபிரான் கிரமவித்தனின்
மனைவி மாதேவி சானி என்னும் பிராமணப் பெண ஒருத்தி திருநந்தாவிளக்கு
ஒன்று வைக்க துளை நிறைப் பொன் 12% கழஞ்சுப் பொன் அளித்துள்ளாள்.
தாமர் நாட்டு கரைக்கோட்டு பிரமதேயமான பராக்கிரம சதுர்வேதி மங்கலத்து,
பெருங்குறி மகாசபையார் இந்த பொன்னினைப் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்கத்
தேவையான 80 கலம் நெல்லுக்காக 825 குழி நிலத்தினை இனறைதீக்கி
விற்றுக் கொடுத்துள்ளனர்.
1. ஷஷிஞஸ்ரீ[॥*] திருமன்னி வளர இருநில மடன்தையும் போற் செயப்பாவையுஞ்
சீர்த்தனிச் செல்வியும் தன் பெருதேவியராகி மின்புற நெடுதியலூழியுள்
ளிடைதுறைநாடு துடர்வனவேலிப் படர்வன வாசியுஞ் சுள்ளிச்சூழ் மதிள்
கொள்ளிப்பாக்கையும் நண்ணற் கருமுரண் மண்ணைக்கடக்கமும்
பொருகடல் ஈழத்தரைசர் தம் முடியு மாங்கவர் தேவியரோங்கெழில்
முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைய்த்த சுரை முடியுமி ஷிரனாரமு
தெண்டிரை ஈழமண்டலமுழுவதுமெறிபடைக் கேரளன் முறைமையின்
சூடுங் குலதனமாகிய பலர்புகழ் முடியும் செங்கதிர்மாலையும்
சங்கதிர்ேவேலைத் தொல்பெருங்காவற் பல்பழஷீவிற் செருவில் சினவில்
இருபத்தொருகாலரைசு களைகட்ட பரசுராம-
216
2. ன் மேவருஞ் சாவிமற்றிவரண் கருதி இருத்திய செம்பொற்றிருத்தகு முடியும்
பயங்கோடு பழிமிக முயங்கிமில் முதுகிட்டொளித்த சயசிங்கனளப்பரும்
புகழோடும் பிடி[மில்*]இரட்டபாடி யேழரை மிலக்கமும் நவநெதிக்
குலப்பெருமலைகளும் விக்கிரமவீரச் சக்கர கோட்டமும் முதிர்படவல்லை
மதுரமண்டலமுங் காமி வளைய நாமணைக்கோணையும் வெஞ்சிநவிரப்
பஞ்சப்பள்ளியும் பாசுடைப் பழந மாசுணிதேசமு மயர்வில் வண்கீர்[த்* [தி
ஆதி நகரவையில் சஷிரன் தொல்குலத்திஷிரதரனை விளையமர்க்களத்துக்
கிளையோடும் பிடித்து பலதனத்தோடு நிறைகுலதனக்குவையும் இட்டரும்
- செறிமிளை ஒட்ட விஷ்ஷெயமும் பூசுரர் செர்நற் கோசலைநாடும் .
தன்மபாலனை வெம்முனை அழித்து வண்டுறை சோலை தண்ட புத்தியும்
இரணசூரனை முரணுறத்-
3. தாக்கித் திக்கனைக்கீர்த்தி தக்கணலாடமும் கோவிந்தசன்[தன்* ] மாவிழிந்தோட
ல் வங்கார இரால வங்காளதேசமும். தொடுகடல் காவல் கடுமுர[ட்* ]கிடாரமும்
அலைகடல் நடுவில் பலகலஞ் செலுத்தி சங்கிறாம
விஷெயதுங்கபன்மநாகிய . . . . வாகையம் பொருகடல் கும்ப கரியோடும்
அகப்படுத்துரிமையிற் பிறக்கிய பெருநெதிப் பிறக்கமும் ஆர்த்தவனப்
போர்த்தொழில் வாசலில் விஜ்ஜாதிர தோரணமும் மொய்தளை புனமணி
புதவமும் கனமணிக் கதவமுந நிறைநீர் விஷையமும்
துறைநீர்[ப]ண்ணையும் பன்மலையூரெமில் தொன்ம-
4. லையூரும் ஆழ்கடலகழ்சூழ் மாசிரிடிங்கமும் கலங்கா வல்வினை இலங்கா
சோகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப்பாளமு காவலு புரிசை மேவலம்
பங்கமும். வளை[ப்]பந்தூறுடை விளைப்பந்தூறும் கலைதக்கோர் புகழ்
தலைத்தக்கோலமும் சிகமாவல் விளைமாதமிலிங்கமும் கலாமுதிர் கடுந்திறல்
விலாமுரிதேசமும் தெணகலார் பொழில் மாணக்கவாரமும் தொடுகடல்
காவல் கடுமுரட் கடாரமும் மாப்பொரு தண்டாற்
5. கொண்ட கோப்பரகேசரி பன்மராந உடையார் ஸ்மிறிறாஜேன்திர சோழ தேவற்கு
யாண்டு ௨௰௨ -(காலியூர் கோ[ட்*]டத்து காமிரம்பேட்டு நாட்டு வயலூர்)
6. ஆவது ஜயங்கொண்டசோழ மண்டலத்து தாமர்கோட்டத்து தாமர் நாட்டு
கரைகோட்டு பிரமதேயமான பர[£க்*]கி[ர*]மசோழ சதுர்வேதிமங்கலத்து
2ஹாஸ்லெ பெருங்குறி பெரும[க *]களோம் இல-மி
நிலைவிலையாவணம் இவ்வூர் ஸீ போலை 2ஊஹாஜேவர்[க் *]கு
217
இம்மண்டலத்து காலியூர்க்கோட்டத்து காயிரம்பேட்டு நாட்டு
வயலூ[ரி]யாளுங்கணத்தாருள் எட்டுக்கூர் தாயபிரான் கூமவித்தன்
வடாஹணி மாதேவி சானி திருநுன்தாவிளக்கு ஒன்றுக்கு குடுத்த
பொன் காசு ௧-
7. ல்லால் துளைநிறை பன்னிரு கழைஞ்சு இப்பொன் பன்னிரு கழைஞ்சும்
இதேவர் பக்கல் கொண்டோம் கொண்ட பரிசாவது இவ்வாண்டு முதல்
கழைஞ்சு பொன்னுக்கும் யாண்டு தோறும் தேவர்பண்டாரத்து அளக்க..
கடவோமான நெல்லு முப்பதின் கலம் இன்நெல்லு மு[ப்*]பதின் கலத்துக்கு
ஆக நாங்கள் மாறாதமாக ஜேவர்க்[கு*] விற்றுக்குடு[க் *]கிந்ற
ஹுூமியாகின்றது சுந்தரசோழ பேரேரி கீழ் ராஜமல்லப்பெருவதிக்கு மேற்கு
மேவியார் தூம்பில் நாராச வ[£*]க்காலு[க்*]கு தெற்கு கண்டதுடுவு
மயிற்-
8. அனுபவித்துப்ப . . பி . . . ந்து வருவரரின்றியே இருபது ஸம்
நா[ய*]கம் வந்தமைமில் ஸலெயோம் கட(வ)மைக்காக சேவரர்*]க்கு
விற்று விலையாவணம் செய்து குடுத்தோம் இன்நிலத்துக்குக்
கீழ்பாற்கெல்லை நீரோடு வ[ரய்*]க்காலுக்கு மேற்கு தெந்பாற்கெல்லை
கண்ணாற்று வா[ய்*]க்காலுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை
நீரோடுவாக்காலுக்கு கிழ[க்* கும் வடபாற்கெல்லை பெருவா[ய்* ]க்காலுக்கு
தெற்கும் ஆக் இந்நாற்பாற்கெல்லையுள் அக[ப்*]பட்ட நிலம்
எண்ணூற்றருபத்தைஞ்சு குழியும் விற்று விலையா-
9. மிருகாலாவது முக்காலாவது முற்சுட்ட[ப்*]பட்ட நாற்பாற்கெல்லையுள்
அகப்பட்ட இத்தனையும் விற்று விலையாவணம் செ[ய்*]து குடுத்தோம்
10. இந்நிலம் முன்பே இறைஇலி ஆதலால் இறையும் மற்றும் எப்பேற்(ற்)
பட்டனவும் இடையுறும் வராமை காத்து
11. குடு[க்*]க[க்*] கடவோமாநோம் ஹாஸடெெெப்பெருங்குறி பெருமக்களோம்
218
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 138/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 26
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1039
ஊர் : பிரம்மதேசம் ல் ஆண்டறிக்கை: 259/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/175
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 55
அரசன் : முதலாம் இராசேந்திரன்
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : வெற்றியூரைச் சார்ந்த வாட்கை காரிகுடி கரிகுடையான் என்பவன் இவ்வூரின்
மேற்கேயுள்ள சுப்பிரமண்யதேவர் இறைவனுக்கு திருஅமுது மற்றும்
வழிபாட்டிற்காக பராக்கிரமசோழ சதுர்வேதிமங்கலத்து மகாசபையாரிடமிருந்து
1225 குழி நிலம் ஒன்றினை வாங்கி இத்தேவற்குத் தானமளித்துள்ளான்.
இக்கல்வெட்டின் இறுதிமில் மேலும் ஒரு தானம் வழங்கப்பட்ட செய்தி
குறிப்பிடப்பட்டுள்ள து. சுப்பிரமண்யதேவர் என்கிற சோழகேரளந் கோயிலில்
திருநந்தாவிளக்கெரிக்க இக்கோமில் சிவபிராமணன் 100 குழி நிலம்
பெற்றுக்கொண்டு விளக்கெரிக்கச் சம்மதித் துள்ளான்.
கல்வெட்டு
1. ஷஹிஸ்ரீ[॥*] திருமந்நிவளர விருநில மடன்தையும் போர்ச் செயப்பாவையும்
சீர்த்தனிச் செல்வியும் தன்
2. பெருஷேவியராகி இன்புற னெடு துயலூழியுள் இடைதுறைனாடு வடர்வன
வேலிப்
3. படர்வனவாசியு சுள்ளிச்சூழ்மதிள் கொள்ளிப்பாக்கையும் நண்ணர்க் கருமுரண்
மண்ணைக்கடக்கமும் பொருகடலீழத்த-
4. ரைசதம் முடியும் ஆங்கவர் தேவியர் ரோங்கெழில் முடியும் முன்னவர்
பக்கல் தெந்ன[வர்] வைத்த சுந்தரமுடியும் இ-
219
10.
12.
18.
15.
. நீதிரந் ஆரமும் தெண்டிரை ஈழமண்டல முழுவது எறிபடைக் கேரளந்
முறைமையில் சூடுங்குலதனம[£*]கிய பலர்புகழ் மு-
. டியும் செங்கதிர் மாலையும் சங்கதிர்வேலைத் : தொல்பெருங்காவல் பல்பழந்
தீவும் செருவில் சினவெலிருபத்தொரு கால்
. அரைசுகளைகட்ட பரசுராமன் மேல்வரும் சாந்திமற் வல் கருதி இருத்திய
செம்பொற்றிருத்தகு முடியும் செ-
. யங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்டொளித்த. மமயசிங்கள் அளப்பெரும்
புகழோடும் பிடியில் இலட்டபாடிய் ஏ-
. ழரையிலக்கமும் நவனெதி குலப்பெரு மலைகளும் . . . . . சக்கரகோட்டமும்
முதிர்வடவ[ல்*]லை மதிரை மண்டலமும் காமிை
ட வளைய நாமணைக்கோணையும் வெரு[விற்*]சினவி பஞ்சப்ப[ள்*]ளியும் .
பாசுடைபழந மாசுணிதேசமும் அயர்வில்வண்கீர்த்தி
.. (அயர்வில் வண்கீர்த்தி) ஆதிநகரவையில் சந்திரன் தொல்குலத்திந்திரதனை
விளையமர் களத்தில் கிளையோடும் பிடித்து பலதனத்-
தோடு நிறைகுலதனக் குவையுங் சிட்டரும் செறிமிளையொட்ட விஷையமும்
பூசுரர் செருநல் கோசலைநாடும் தம்மபாலனை வெம்முனையழித்து
வண்டுறை [சோ]-
லைத் தண்டபுத்தியு மிரணசூரனைத் முரணுறத்தாக்கி திக்கணைக் கீர்த்தி
தக்கநலாடமும் கோவிந்தசன்மந் மாவிழிந்தோட தங்காத சாரல்
வங்காளதேசமும் I
. தொடுகடல் சந கொட்டல் மயிபாலனை வெஞ்சம[ர் *].
விளாக [தீ *]தஞ்சுவித்த[ரு*]ளி ஒண்டிறல் யானையும் ன்
பண்டாரமும் நித்தில [நெடுங்கட ]-
லுத்திர லாடமும் வெறிமலர் தீத்த[த்*] தெறிமலர் கங்கையு(ம்) மலைகடல்
நடுவில் பலகலஞ் செலுத்தி சங்கிராம விசைய்யோத்துங்க விந்மந்
கிடாரத்தரை-
220
17.
18,
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
. சனை வாகையம் பொரு கடறும்பக்கரியோடகப்படுத் துரிமையிற் பிறக்கிய
பெருநெதிப் பிறக்கமு மார்த்தவனகனகர் போர்த்தொழில் வாசலில்
விச்சாதிர தோரணமு மத்தொளிற் புனமனிப் புதவமுங் கனமணிக்கத[வ* [மு
நிறைசீர் விசையமுந் துறைநீர் பண்ணையும் வன்மலை யுரெ-
மிற்றோன் மலையூரும் ஆழ்கடல்சூழ் மாயிருடிங்கமுங் கலங்காவல் வினை
மிலங்காதேசமுங் காப்புறு நிறைபுனல் மாப்பப்பாளமும் காவலம் புரிசை
மேவி-
லிம்பங்கமும் விளைப்பந்தூறுடை வளைப்பந்தூறுங் கலைத்தக்கோர் புகழ்
தலைத்தக்கோலமும் தீதமர் வல்வினை ம[ர*]தமாலிங்கமுங் கலாமுதிர்
கடு-
நீதிற லிலாமுரி தேசமு தெனக்கவார்பொழில் மானக்கவாரமுந் தொடுகடற்
காவற் கடுமுர[ட்*]கடாரமு மாப்பொரு தண்டாற்கொண்ட கோப்பரகேசரி
பந்மரான உடையார் ஸ்ரீ-
ராஜேந்திரசோழ தேவர்க்கு யாண்டு ௨௬ ஆவது ஜயங்கொண்ட சோழ
மண்டலத்துத் தாமர்க் கோட்டத்து தாமர் நாட்டு பராக்கிரமசோழர[ச்]-
பரதுவேதிமங்கலத்து ஹாஸலெயோம் யாண்டு ௨௰௩ ஆவது நம்மூர்
பெருமண்டபத்தேய் கூட்டக்குறைவறக்-
கூடி இருந்து நம்மூர் மேலை ஸ-,௨ண$சேவற்கு திருவமுதுக்கு
சோழ மண்டலத்து வெற்றியூர் வாட்கை காரிகுடி காரிக்குடையான்
[பட்டன்] தேவ-
ன் தேவர்பண்டாரத்து குடிஞைக்கல்லால் துளைநிறை வைத்த பொன்
எண் கழைஞ்சு இப்பொன் எண்கழஞ்சும் வஷஸெயோமே-
ய் கொண்டு இப்பொன்னுக்கு வைக்கின்ற ஹூசியாகின்றது இவ்வூர்
வடபிடாகை சிறுநென்மலி விளைநிலம் ஆயிரத்து இருநூ-
ற்று இருபத்தஞ்சு குழி[க்*]கும் கீழ்பாற்கெல்லை சிறுநென்மலி கயத்து[க்* ]கும்
இக்கோட்டத்து கரிவேடுநாடு அறியூர் எல்லைக்கு மேற்கு தென்பாற்கெல்லை
221
27.
28.
2.
30.
31.
32.
33.
34,
35.
36.
97.
இந்நாட்டு மும்மடிசோழபுரத்தெல்லைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை
படுவூர்க்கோட்டத்து படுவூர் நாட்டு வ,ஹேயம் முஞ்ஞை தண்டலத்து -
எல்-
லைக்கு கிழக்கும் வடபாற்கெல்லை கு[மரத]ண்டவாய்க்காலுக்கு தெற்கும்
நடுவுபட்ட நிலம் ஆயிரத்து இருநூற்று இருபத்தஞ்சு குழியும் இடேவர்
யூ
ண்டாரத்து யாண்டு ௨௰௬ ஆவது ஸலெயோங்கொண்ட காசு
எட்டு(ம)க்கும் மேற்படியூரில் திருவமுதுக்கு வைத்த கொல்லைநிலம்
இரு ... ௨. கு-
ழிக்கும் கீழ்பாற்கெல்லை மணற்பா[க்க*]த்து இளையநம்பி
[சூ]தக்கிரமவித்தன்[னா]விக்கும் உள்ளாளூர் [தேவேவர]க்கிரமவித்தன்
ஹூசிக்கும் தேவதானம் . . . .
[நில]த் துக்கும் மேற்கும் தென்பாற்கெல்லை குமரதண்ட வாய்க்காலுக்கு
வடக்கும் மேல்பாற்கெல்லை முஞ்ஞை தண்டலத் தெல்லைக்கு கிழக்கும்
வடபாற்-
கெல்லை வெ[க்க ]மங்கலத்து கயத்துக்கு தெற்கும் இந்நான்கெல்லையுள்ளும்
நடுவுபட்ட நிலத்தில் வடக்கடைய [தென் வடலேய்] அரைக்கோல் அகலம்
நீரோ-
டு வாய்க்கால் . . . . போகப் பெறுவார்களாகவும் இப்பரிசு விற்று
விலையாவணஞ் செய்து குடுத்தோம் 2ஊராஸலெயோம் இஸ-
லெயில் எழுந்து பணிச்சோம் பாக்கத்து காமகோடி பட்டநும் மாங்காட்டுச்
செட்ட[ச]நக் கிரமவித்தநும் பறியலூர் அக்கிசநக் கி-
ரம வித்தனும் பறியலூர் மாமவக் கிரமவித்தனும் இவர்கள் பணியால்
எழுதிநேன் இவ்வூர் 2ஐூஷன் ஸ்ரீபோந்தை ஏகாம்பரனான 8ஹாஜன-
ப்பிரியநேன் இவை எந்நெழுத்து ஜயங்கொண்டசோழ மண்டலத்துத் தாமற்
கோட்டத்து தாமர் நாட்டு பராக்கிரமசோழச் சருப்பேதிம-
ங்கலத்து ஹ-ய,ணை$)ேவராந சோழ கேரளந்(ர்) திருமுந்நாழிகை உடைய
சிவவ_ரஹணர் காமருபந் அரைசு மாறதாசி அம்பல
222
38. கூத்தநும் [பல்லவரம்] உடையான் இனர் செய்தும் ஒக்க அனுபவித்து
காஸயபன் சிரிசம் பட்டந்நும் நாகதேவன்நும் யாண்டு வரை உடைய
39. . . . செய்து ஒக்க அநுபவித்து . . . . அக்க . . . . மங்கலத்து பிலாங்
கொ[ல்*]லையில் கிழக்கடைய குழி[நூறுங்] கொண்டு ஒரு நந்தாவிளக்கு
40. தந்தாம் என்ன பாதி எரிப்போமாநோம் இவ்வனைவோம் இப்பரிசு ஸ்ரீகாரியம்
செ[ய்* ]கின்ற வ ணை, சோமி . . .
41. டி கல்வெட்டி குடுத்தோம் இவநைவோம் இவ்வூர[ர்*] 2மட[ஷ]காந
ஸ்ரீபோன்தை உதைய/[தி*]வாக[ர*]ன்நேன் மிவை எந்நெழுத்து ॥-
223
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 139/2017
மாவட்டம் : திருவண்ணாமலை .. ஆட்சி ஆண்டு : 25
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி, 1097
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 245/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/166
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு ' எண்: 56
அரசன் 3 முதலாம் இராசேந்திரன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில், முன் மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : தாமர் கோட்டத்தை வகை செய்த பணிமகன் சிறுவயலூரைச் சார்ந்த மதிசூதன்
ஆதித்தன் என்பவன் கோயில் நிர்வாகத்தினரிடம் 716 கழஞ்சு இரண்டு மஞ்சாடிப்
பொன் அளித்தான். இவனிடமிருந்து கோயிலில் திருமண்டபம் கட்டுவதற்கு
இப்பொன்னினைப் பெற்றனர். இப்பொன்னின் வட்டியிலிருந்து வரும் வருவாமினை
ஞாயிறு தோறும் நடைபெறும் வழிபாட்டிற்காகவும் பிற வழிபாட்டுச்
செலவுக்காகவும் பயன்படுத்திக்கொள்ள வழிவகைச் செய்துள்ளனர்.
கல்வெட்டு
1. ஷஹிஸ்ரீ[॥*] திருமந்னி வளர இருநிலமடந்தையும் போர்செயற்பாவையும்
சீர்த்தனிச் செல்வியும் த[ந்]பெருந்தேவியராகி இன்பு- ்
2.ற நெடுதியலூழியு ளிடைதுறைநாடுஞ் துடற்வனவேலிப் படர்வனவாசியும்
சுள்ளிசூழ்மதிள் கொள்ளிப்பாக்கையும் நண்ணரர்*|க்கருமுர-'
©
3. ண் ம[ண்*]ணைகக்கடக்கமும் பொருகடல்லீழத்தரையர் தம் முடியு[ம்*]
ஆங்கவ[ர்*] தேவியரோங்கெழில் முடியும் மு(ந்)ந்னவந் பக்கல் தெந்நவந்
வைத்த சு- ் ்
4. ந்தரமுடியும் இந்திரந்நாரமும் தெண்டிரை ஈழமண்டல முழுவது [எறி* படை
கேரளந் முறைமையில் சூடுங்குலதானமா[கி* ]ய பலர்புகழ் [முடியு]- .
224
12.
18.
14,
, ம் செங்கதிர்மாலையுஞ் சங்கதிர்வேலைத் தொல்பெருங்காவல் [பல்]பழந்தீவும்
செருவில்ச் சினவி லிருபத்தொருகால் அரைசுகளை கட்டப் பரசுராம-
ன் மேல்வருஞ் சாஸிமற்றிவரண் கருதி இருத்திய செம்பொற்றிருத்தகு
முடியும் பயங்கொடு பழிமி[க] முயங்கிமில் முதுகிட்டொளித்த [ஜ]யசிங்-
.. [கன்]அளப்பெரும் புகழோடும் பிடிஇரட்டபாடி ஏழறையிலக்கமும் நவநெதி
குலப்பெருமலைகளும் விக்கிரமவீரர் சக்கரகோட்டமும் முதிர்படவல்லை
மதுரமண்[டல]- ்
மும் காமிடை வளை நாமணைக்கோணையும் வெஞ்சிநவிரர் பஞ்சப்பள்ளியும்
பாசுடைப்பழன மாசுணிதேசமும் அயர்வில்வண்கீர்த்தி ஆதிநகரகவையில்
[சந்]திரன் தொல்[குல]-
. த்திந்திதனை விளை[ய]மர்க்களத்துக் கிளையோடும் [பிடி]த்துப் பலதனத்தோடு
நிறைகுலதனக்குரைக]யுங் கிட்டெருஞ்செறிமிளை ஓட்டவிஷையமும்
[பூசுரர் செ-
.. [ருநல்]க் கோசலைநாடு[ஸ]நீமபாலனை வெம்முனை யழித்து வண்டுறை
சோலைத் தண்டபுத்தியும் ரணசூரனை முரணுகத்தாக்கித் திக்கனை
கீர்த்தித் தக்கநலாடமும்
. கோவிகசைந்தன் மாவிழிந்தோடத் தங்காதசாரல் வங்காள தேசமு ஷொடுகடற்
சங்குவோட்டன் மமிபாலனை வெஞ்சமவிளாகத் தஞ்சுவித்தருவி ஒண்டிறல்
யானையும் பெண்-
டிர் பண்டாரமும் நித்தில நெடுங்கடலுத்திரலாடமும் வெரிமலர்த்தீர்த்த தெறிபுனற்
கங்கையும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராம
விசையோத்.துங்க பந்ம[நா]-
கிய கடாரதீதரையனை வாகயம்பொருகடற் கும்லக் கரியோடும்
அகப்படுத்துரிமையி[ந்] பிறக்கிய பெருநெதிப்பிறக்கமு ஆர்த்தவரகநக[ர்*]ப்
போர்த்தொழில் வாசலில் விச்சாதிறற்-
த்தோரணமும் மொ[ய்*]த்தொளிர் புனமணிப்புதவமும் கனமணிக்கதவமும்
நிறைசீர்விசையமு துறை [நீர்ப்பன்னையு மன்மலையுரெ[மிற்றோன்] மலை
கல்
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
29.
கடலகழ்சூழ் மாமிருடிங்கமும் கலிங்கா வல்வினை இலங்காசோகமும்
கொப்புறு நிறைபுனல் மாப்பபாளமும் காவலம்புரிசை மேவிலர்பங்கமும்
விளைப்பந்தூறுடை வளை-
ப்பவறுங் கலைத்தக்கோர் புகழ் தலைத்தக்கோலமுந் தீதமர்வல்வினை
மாதம[ா*]லிங்கமுங் கலாமுதிர்கீகடுந்திறல் இலாமுரிதேசமுந்
தெ[ன]க்கவ[ா*]ர் பொழில் மானக்கவாரமும்
தொடுகடற்காவற் கடுமுரட்கடாரமும் மாப்பொருதண்டாற் கொண்ட
கோப்பரகேசரிபநரான உடையார் ஸ்ரீமாஜேஷ_சோழ கேவர்க்கு யாண்டு
௨௰ரு ஆவது [௩௱௩௰] ஜயங்-
கொண்ட சோழமண்டலத்துத் தாமர்க் கோட்டத்துத் தாமர் நாட்டுப்
பராகீ கிரமசோழ வதுவே.திமங்கலதீது ஸ்ரீபோந்தை உடைய
ஊஹாேவர்ர்* ]க்கின்னாள் முதல் மரஷ,ாதித்தவற் உள்ள
ஆதித்த வாரங்கள் தோறு[முரைச்சுழிச்சேரிச்சூழ்] ஆதித்தவாரப் பெரும்பலி
யெழுகருளுகைக்கித்தேவர் ஸ்ரீகோயில்வாரியருந் தேவர்கலிகளோடு
இக்கோட்டம் [வகை] செய்த பணிமகன் சிறுவயலுடை-
யான் மதிசூதன் ஆதித்தநிடை இத்தேவர் திருமண்டபமெடுக்க கொண்ட
பொன் ஏழுகழஞ்சரையே இரண்டு மஞ்சாடி இப்பொன் கொண்ட பரிசாவது
கழஞ்சின் வாய்த் திங்களாறுக்குப் பொன்
பலிசையாக யாண்டுவரை வந்த பொன் முக்கழஞ்சே யெட்டு மஞ்சாடி இது
பொன் கழஞ்சினுக்கு நெல்லுப்பதின்முக்கலனேய் தூணியாக வ நெல்லு
நாற்பத்தைங்கலனே தூணியுமிக
தேவர் பண்டாரத்தே அருமொழிதேவன் மரக்காலாலே யளந்திவை
யோராண்டைக்காக வந்த வாட்டாண்டுதோறும் பஷ. ாதித்தவற் நிவகஞ்
செலுத்துவதற்கு நிவகஞ்செய்தபடி உடையார்க்குத் தி-
ருப்பள்ளித்தாமத்துக்கு நெல்லு நாழியுஸிருமெய்ப்பூச்சுக்கு நெல்லுரியு'
ஷிருவிளக்கெண்ணை நாழிக்கு நெல்லு முக்குறுணியு ஷிருவமிர்தரிசி
குறுணிக்கு நெல்லுப்பதக்கு நாநாழியு ஷிருவிழாவெழுவருளு-
226
24. ம் சஷிரசேகரதேவ[ர்*]க்குத் திருவமிர்தரிசி மிருநாழிக்கு நெல்லஞ்ஞாழியுங்
கறியமிர்து மூன்றினுக்கு நெல்லிருநாழியும் நெய்யமிர்து ஆழாக்கெமிரு
செவிடரைக்கு நெல்லறு நாழியுந் தமிரமிர்து மூவுழக்கு நெல் நாழியு-
25. ரியும் அடைக்காயமிர்து வெறுங்காயாறினுக்கு நெல்லுரியும் வெற்றிலையமிர்து
பன்நிரண்டுக்கு நெல்லுழக்கும் குசக்கலத்துக்கு நெல்நாழியும் விறகுக்கு
நெல்லு மூவுழக்கே யாழாக்குந் தேவியெழுஷருளுவிக்கு மாணிகள்
26. இருவர்க்கு நெல்லுக்குறுணியு ஸிருவிளக்கு பிடிப்பாரிருவ[ர்*]க்கு நெல்
நாநாழியு ஷிருப்பள்ளித்தொங்கலிடுவாரிருவ[ர்*]க்கு நெல்லஞ்ஞாழியு
ஷிருக்கொடி பிடிப்பாரிருவ[ர்*]க்கு - நெல்முன்நாழியும் உவச்ச[ர்*]க்கு
நெல் குறுணியும் இப்படி சி-
27. றுவயலூருடையான் மதிசூதன் ஆதித்தன் வைச்ச மநத்துக்கு இந்நிவஷப்படி
ஆட்டாண்டுதோறும் வக ஆதித்தவாரம் ஸுஷ.£தித்தவற் இத்தேவர்
பண்டாரத்திலேயட்டி இன்நிவந்தஞ் செலுத் துவதாகக் கொண்டோ-
28. ம் இத்தேவர்க்கு ஸ்ரீகாய;ம் பார்க்கும் ஸ்ரீகோயில்வாரியருள்ளிட்ட
தேவர்கநிகளோம் ஊ௰நடி றக்ஷிப்பானடி எஷலைமேலின மதத்துக்கு
விக்கம்' பண்ணுவார் கங்கைஇடைக் குமரிமிடைப்பட்ட பாவத்திற்படுவார்
இ-
29. வை இவ்வூர் கரணத்தான் வேங்காவலிருவி_ க்கிரமநா வஹவி பி. யன்
எழுத்து ॥- அத்
1. விக்னம்-என்று படிக்கவும்
227
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 140/2017
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 27
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1099
பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 264/1915
தமிழ் முன் பதிப்பு : 30/188
(தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 57
முதலாம் இராசேந்திரன்
3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப வடக்குச் சுவர்.
ஜயங்கொண்டசோழ மண்டலத்து தாமர் கோட்டத்துப் பராக்கிரமசோழச் சதுர்வேதி
மங்கலத்து ஸ்ரீபோந்தையுடைய மகாதேவர்க்கு திருவிழாவின் போது
கொடியேற்றுவதற்குத் தேவையான நூலேற்றுக்கு (கமிறு) சோழமண்டலத்து
அருமொழிதேவ வளநாட்டு புலியூர் நாட்டு மிளை ஊரைச்சார்ந்த அருமொழி
தேவனிடம் இருந்து இவ்வூர் சபையார் 10 காசுகள் பெற்றுக் கொண்டு 600
குழி நிலத்திற்கு வரிவிலக்கு அளித்து கொடுத்துள்ளனர். மேலும், கல்வெட்டின்
இறுதியில் மற்றொரு தானம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீபோந்தை உடையார்
மகாதேவர் கோயிலில் திருநந்தா விளக்கு ஒன்று வைப்பதற்கு வல்லவரையர்
வந்திய தேவர் நம்பிராட்டியார் உமாதேவியார் என்பவர் 10% கழஞ்சு, 6
மஞ்சாடி அளவு பொன் தானமளித்துள்ளார். வந்திய தேவரின் தேவியர்களாக
இந்தள தேவியார், குந்தவை தேவியார் இருவர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
1. ஹஹிஸ்ரீ[॥*] திருமந்நிவளர இருநில மடந்தையும் போற்செயப்பாவையும்
சீர்த்தனிச் செல்வியும் தன்பெருந்தேவியராகி இன்புற நெடுதுயில்
ஊழியுளிடைதுறைநாடும் துடர்வனவேலிப் படர்வனவாசியும் சுள்ளிசூழ்மதிள்
கொள்ளிபாக்கையும் நண்ணற்கரு முரண்மண்ணைக் கடக்கமும்
பொருகடலீழத்தரையரர்*]த முடியும் ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பக்கல் தெ[ன்ன*]வன் வைத்த சுன்திர முடியும் இந்திரநாரமும்
தெண்டிரை ஈழமண்டல முழுவது எறிபடை கேரளன்
228
2. முறைமையிற் சூடுங்குலதனமாகிய பலர்புகழ் முடியும் செங்கதிர் மாலையும்
சங்கதிர் வேலைத் தொல்பெருங்காவல் பல்பழந்தீவும் செருவில் சினவி
இருபத்தொருகாலரைசுகளைகட்ட பரைசிராமன் மேல் -வருஞ்சாந்தி
மற்றீவரணர் கருதி இருத்திய செம்பொற்றிருத்தகு முடியும் பயங்கொடு
பழிமிக முயங்கியில் முதுகிட்டொளித்த சீர்சிங்கன் அளப்பெரும் புக(ழ்)ழோடு
பீடி இரட்டபாடி ஏ(ழ்)ழரை இலக்கமும் நவ நெதிய்குலப்பெரும-
3. லைகளும் ' விக்கிரமவீரசக்கரக்கோட்டமும் முதுரைவடவல்லை மதுரை
மண்டலமும் காமிடைவளைய நாமணைக்கோணையும் வெஞ்சிலை
வீர பஞ்சப்பள்ளியும் பாசுடைப்பழன மாசுணிதேசமும் ஆயர்வில் வண்
கீர்த்தி ஆதிநகரவையில் சந்திரன் தொல்குலத்தந்திர திரதனை' விளையமர்க்
களத்துக் கிளையோடும் பிடித்து பல சனத்தோடு றை குலதனக்
கூவையும் கிட்டரும் செறிமிளை ஒட்டவிஷையமும் பூசுர சேர்நல்
கோசலை நாடும் தன்மபாலனை வெம்முனை அழித்து வண்டுறை
சோலை தண்டபுத்தியும் இரணகுரனை முரணுகத் தாக்கி திக்கணை
கீர்- பத
4. த்தி தக்கணலாடமும் கோவிந்தசந்தன் மாவிழிந்தோட தங்காத சாரல்
வங்காளதேசமும் தொடுகடற் சங்கு கொட[ட்*]டல் மகிபாலனை வெஞ்சம
விளாகத்தஞ்சுவித்தருளி ஒண்டிறல்யானையும் பெண்டிர் பண்டாரமும்
நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர்த்தீர்த்[தத்* ]த்தெறிபுனல்
கங்கையும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராம
விசையோத்துங்க மீன்மனாகிய கிடாரத்தரையனை வாகையம் பொருகடல்
கும்பக் கரியோடும் அகப்படுத்துரிமைமில் பிறக்கிப் பெருநிதி பிறக்கமும்
ஆத்தவர்நகர் போர்த் தொழில் வாசலில் விச்சாதிரத் தோரணமும்
மொ[ய்* ]த்தொளிப் புனைமணிப்புதவமும் கநமணி-
5. கீகதவமும் நிறைசீர்விசையமும் துறைநீர்ப்பன்னையும் பன்மலை
ஊரெயிற்றோன்மலை ஊரும் ஆழ்கடலகழ்சூழ் மாயிருடிங்கமும் கலங்கா
வல்வினை மிலங்காசோபமும் காப்புறு நிறைபுனல் மா[ப்* ]பப் பாளமு(மு)ங்
1. இந்திர ரதனை- என்று படிக்கவும்
2. குவை- என்று படிக்கவும்
229
காவலம் புரிசை மேவிலிம்பங்கமும் விளைப்பந்தூறுடை வளைப்பந்தூறும்
கலைத்தக்கோர் புகழ் தலைத்தக்கோலமு தீதமர் வல்வினை
மாதம[£]ளிங்கமும் கலாமுதிர். கடுந்திறல் இலாமுதிர் தேசமும் தேநெக்க
வார்பொழில் மாநக்கவாரமும் தொடுகடல்காவல் கடுமுரள் கடாரமும்
மாப்பொருதண்டா[ற்*]க்கொண்ட கோப்பரகேசரி பந்ரான உடையார்
ஸ்ரீறாஜே[லி]ரசோழ தேவரர்*]க்கு யாண்டு ௨௰௭
6. ஆவது ஜயங்கொண்டசோழ மண்டலத்து தாமர்கோட்டத்துத் தாமர்நாட்டுப்
பராக்கிரமசோழச்சதுப்பேதிமங்கலத்து ஸ்ரீபோந்தையுடைய 2ஊஹாூவர்க்கு
சோழமண்டலத்து அருமொழிதேவ வளநாட்டு புலியூர் நாட்டு
மிளைமுடையான் [பூவலான்] அருமொழி இத்தேவ[ர்* ]க்கு நூலேற்றுக்கு
வைத்த காசு ௰ கொண்டு இத்தேவ[ர்*]க்கு நூலேற்று [ஸூ]. . . க்கு
சஷிராதித்தவற் இறையிறுக்க வைத்த லூசி ஸ்ரீகுந்தவை பேரேரி கீழ்
கோட்டையூர் வதிக்கு மேற்கு பரமேஷர வா[ய்]க்காலுக்கு வடக்கு . .
. கணபதி (து) 2மஹஹஷைன் கேரளாந்தக . . . குலோத்தம . . .
7. சூற்றி பனங்காடன் பூமி குழி ஈ[ரு]ய மேற்படி ஏரிகீழ் மேற்கு பரமேசுவர
வாய்க்காலுக்கு வடக்கு க கண்டத்து காளத்து நின்ற சன்மன் ஹுூகி
குழி ௨௰-ம் ஸ்ரீசுந்தரசோழபேரேரி கீழ் கோட்டையூர் வதிக்குக் கிழக்கு
பரமேுர வா[ய்]க்காலுக்கு வடக்கு க கண்டத்து மங்கலத்து வீரபத்திரன்
லூசி குழி உ௱ரும் குழியும் ஆகக்குழி சுரம் சந்திராதித்தவற்
இறையிறுத்துக் குடுப்போமானோம் இவ்வூர் ஸலெயோம் கர . . ஊர்
௨௰ னால் உடையார் வல்லவரையர் வர$ேவர் நம்பிராட்டியார் உலதேவி-
8. யார் ஸ்ரீபோந்தை உடையார்.8(ஈ)ஹாசேவற்கு திருநந்தா விளக்கொன்றிநுக்கு
வைத்த பொந் பதின் முக்கழைஞ்சே ஆறு மஞ்சாடி இப்பொன்
பதின்முக்கழைஞ்சே . . ......௨.. சநாதித்தவரையும் எரிப்பதாநோம்
ஸஊத்ஸரந்தோறுஞ் ஸ்ரீகாரியஞ் செய்யும் இகோமில் வாரியரோம் _
230
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 141/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு .: 30
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1042
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 246/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/167
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 58
அரசன் : முதலாம் இராசேந்திரன்
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஸ்ரீபோந்தையுடைய மகாதேவர் இறைவனுக்கு உச்சியம் பொழுது படைக்கும்
அமுதுபடிக்காக இவ்வூர் ஆளுங்கணத்து உறுப்பினர் ஏழரை விசத்து
ஆளக்கான கிரமவித்தனிடமிருந்து நிலம் ஒன்றினை இக்கோயில் சிவபிராமணர்கள்
பெற்றுக்கொண்டு, இதனின் வரியின் மூலம் வந்த நெல்லினை
பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. இத்தேவ[ர்*]க்கு யாண்டு ௩௰ ஆவது ஜயங்கொண்டசோழ மண்டலத்து[த்
தாமர்]க கோட்டத்து பராக்கிரமசோழ சது வே.திமங்கலதீ து
ஸ்ரீபோஷையுடைய 2ாடேவர் கோயிலில் திருவுண்ணாழிகைய் . . . .
2... கழனிசிவனும் சிகடம்பட்டனும் மாறதஜியும் திகைக்கூத்தனும்
அக்காளிபட்டனும் உள்ளிட்ட சிவப்பிராமணரோம் இவ்வூரியாளுங் கணத்தார்
ஏழரை விசத்து ஆள[க்கான]க் கிரமவித்தன் பக்கல் வி . . . . ,
8. லில் . . . . உச்சம் போது . . . . சோகி முட்டாமை சன்திராதித்தவற்கும்
[ம]ட்டக்கடவோமாகவும் இஜஷங் கொண்டு இதுக்கு வக பொலிசையால்
அருமொழிதேவன் மரக்கா[லால்] குறுணி நெல்லாக கொண்டு
231
4. இலைக்கறியும் நெய் வ செவிடும் மோர் நாழியும் வெறுங்காய் இரண்டும்
வெற்றிலை நாலும் இப்பரிசு சந்திராதித்தவற் . . . . . - 5 மாநோம்
5... . உடையார் சீகோமில்வுண்ணாழிகை உடைய சிவபிராமணந் காசிபந்
பராக்கிரமசோழ பட்டநேனும் காசிபன் திருப்போந்தைபட்டனும் பராக்கிரமன்
அகத்த
கழ் எல தடுப்ப ல எழும் இப்பரிசு கொண்டு சஷிராதித்தவற் செலுத்த[க்]
கடவோமாகவும் இக்கோயிலில் முந்பு நின்று . . . செவ்வோமை ஸ்ரீமாயே-
7. ச்சரோம் இக்கோயிலில் திருவுண்ணாழி . . ... ௨௨ ௨௨௨௨.
232
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 142/2017
குறிப்புரை :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 30
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1042
பிரம்மதேசம் I இ.க. ஆண்டறிக்கை: 248/1915
தமிழ் முன் பதிப்பு : 30/170
(தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 59
முதலாம் இராசேந்திரன்
சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப தெற்குச் சுவர்.
முதலாம் இராசேந்திரனின் மெய்க்கீர்த்தி மற்றும் மன்னனின் பெயர் மற்றும்
ஆட்சியாண்டு 30 என்பதுடன் முடிவடைகிறது.
கல்வெட்டு :
1. ஷஹஹி[ஸ்ரீ *] திருமன்னிவளர இருநிலமடந்தையும் போர்ச் செயப்பாவையும்
சீர்த்தனிச் செல்வியுந் தன் பெருந்தேவியராகி இன்புற நெடுதுயர் ஊழியுள்
இடைதுறை நாடும் துடர்வனவேலிபடர் வனவாசியுஞ் கள்ளிச்சூழ்
மதிட்கொள்ளிப்பாக்கை [யும் நண்ணர்]க்கருமுரண் மண்ணைக்கடக்கமும்
பொருகடலீழத்தரையர் தமுடியும் ஆங்கவர் தேவியரோங்கெழில் முடியும்
உட ட PP உக
2. [இவிரன்நாரமும் தெ]ண்டிரை ஈழமண்டல முழுவது[ம்*] எறிபடை கேரளந்
முறைமையில் சூடும் குலதனமாகிய பலர் புகழ் முடியும் செங்கதிர்
மாலையும் செங்கதிர் வேலைத்தொல் பெருங்காவல்பல்பழத்திவும் செருலே'
சினவில்லிருபதீ தொருகா[ல்லரை]சுகளை கட்ட பரசுராமன்
[மேல்வருஞ்சாந்தி] மற்றிவரண் க[ருதி] இருத்திய செம்பொ
1. செருவில்-என்று படிக்க.
233
. [மு]துகிட்டொளித்த சயசிங்கன் அளப்பெரும்புகழோடும் பிடியில் இலட்டபாடி
ஏழரைப்புகழ் ம[ந்*]நவரே குலப்பெருமலைகளும் விக்கிரமவீரர்
சக்கரகோட்டம் மஃதுர் வடவல்லை மதுரமண்டலமு கேடலரும் காமிடை
வளைய் நாம[ணைக்] கோணைமும் வெஞ்சிநவிரர் பஞ்சபள்ளியும்
பாசடைப்பழன மாசுணி தேசமு[ம்*] அயர்வில் வண்கீர்த்தி . . . . .
. னை விளையமர்களத்துக் கிடையோடும் பிடித்துப் பலதனத்தோடுநிறை
குலதனக் குகையுங் கிட்டருஞ் செறிமிளை ஒட்டவிஷஷெயமும் பூசுரர்சேர்
நல்க்கோசலை நாடுந்த[ந்]மபாலனை வெம்முனையழித்து [வண்டு]றை
[சோலைத்] தண்டபுத்தியும் இரணசூரனை முரணுகத் தாக்கித் திக்கணை
கீர்த்தித்தக்கணலாடமும் கொ . . . . ..
. தே[சமு]ந் கஷொடுகடல் சங்கொடடல் மயிபாலனை வெஞ்சமர்
விளாகத்தஞ்சுவித்தருளி ஒண்டிறலியானையும் பெண்டிற் பண்டாரமும்
நித்தி[ள] நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமல௰ர்த்தீர்தீதத்
தெறிபுனைகங்கையும் அலைகடல் நடுவுள் பலகலஞ்செலுத்திச் சங்கிராம
விசையோத்துங்க பன்மனாகிய கடாரத்தரைசனை வாகையம் பொருகடல்
கும்பக்கரியோ . . . . .
. மும் ஆ[ர்*]தீதவன் அகனகர் போர்தீதொழில் வாசலில்
விச் சாதிரதோரணமுமொ[ய் *]த் தொழிற் புனைமணிப்புதவமுங்
கநமணிக்கதவமு நிறை ..... [துறை [நீர்ப் பண்ணையும் [வன்மலை [யில்
யிற்றென்மலையூரும் ஆழ்கடல் அகழ் சூழ்மாயிருடிங்கமு[ம் கல]ங்கா
வந்வினை இலங்காசோகமுங் காப்புறு நிறைபுனல் மா[ப்* ]பப்பாளமுங்கா
வலம்புரிசை மேவிலிம்பங்கமும் விளப்பைவாறுடை வளப்பஷாறுங்
கலைத்தக்கோர்புகழ் தலை . . .....
. க்கடுவிறலிலாமுரிதேசமு[ந் தெ]னக்கவார் பொழில் மானக்கவாரமுந் தொழுகடற்
காவற் கடுமுரட் கடாரமு மாப்பொருதண்டாற்கொண்ட கோப்பரகேசரிபநரான
உடையார் ஸ்ரீராஜேரு,சோழ தேவர்க்கு யாண்டு ௩௰ [ஜெயங்கொண்ட
234
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 143/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 26
வட்டம் 3: செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 1044
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 260/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 80/184
(தெ.க.தொ.)
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 60
அரசன் : முதலாம் இராசாதிராசன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : தாமற் கோட்டத்து தாமர் நாட்டு பராக்கிரமசோழச் சருப்பேதி மங்கலத்து
பெருங்குறி சபையார் தீத்தக் குளத்தின் வடகரையில் இருந்த புளியமரத்தின்
கீழ் கூடினர். முதலாம் இராசேந்திர சோழன் இறந்த பின்னர் உடன்கட்டை
ஏறின மன்னரின் தேவியார் வீரமகாதேவியார் இறப்பிற்காக தாகம் தீர்க்க வேண்டி
தண்ணீர் பந்தல் அமைக்க இவரது உடன்பிறந்த சகோதரர் மதுராந்தகன்
என்னும் பரகேசரி வேளான் என்பவனுக்கு நிலம் விற்றுக் கொடுத் துள்ளனர்.
இந்நிலத்திற்கான தொகை மற்றும் வரிகளுக்கானத் தொகையினை
பெற்றுக்கொண்டு வரிகளைத் தாங்களே செலுத்துவதாக மகாசபை பெருங்குறி
பெருமக்கள் சம்மதித்துள்ளனர்.
| ஆட்டு [தி]ங்களேர் தருதன்றோங்கல் வெண்குடைக்கீழ் நிலமகள் நிலவ
மலர்மகட்புணர்ந்து செங்கோலோச்சி கருங்கலி கடி மிந்[நு
2. ப]ல்லூழியுட் டென்னவர் குலமகன் மானாபரணன் பொன்முடியானாப்
பரு[மணிப்]பசுகலைப் பொருகளத்தரிவ வேணாட்டரைசனை
8. [செணாட்டொதுக்கி மேவுபுகழிராமகுட மூவர்கெட முனிவ வேலைகெழு
காஷளூர் சாலைக் கலமறுத்து-
4. தீதன் குலத்தவனிவேந்தன் நன்குறுத(தை)கைமை அரைசியலுரிமை
வரிசையிலெய்தி வில்லவர் மீனவர் வெ-
235
10.
11.
12.
18.
14.
15.
. ஞ்சினர் சளுக்கியர் வ[ல்]லவர் முதலினர் [வ]ணங்க வீற்றிருந்வ தரா
தல[ம்]வளர ஜயங்கொண்டசோழன் வயங்கு பெரும்புகழ் (கோராஜ)
. கோராஜகேஸறிபநரான உடையார் ஸ்ரீமாஜாயிறாஜ[6]ஃவற்கு யாண்டு ௨௰ச
ஆவது ௱ஈ௨௰ னால் ஜயங்கொண்டசோழ மண்டலத்துத் தாமற்
கோட்டத்து-
. த்தூமர்: நாட்டுப் பராக்கிரம சோழச் சருப்பேதி மங்கலத்து 2ஹாஸடலெப்
பெருங்குறிப் பெருமக்களோம் ஹூ விலையாவணக் கைஎழுத்து
உடையார் ஸ்ரீரா-
ஜே, சோழமேவர் சிவலோகத் துக்கு எழுந்தருளின திருப்பள்ளிபடையிலே
உடனே ஸ்ரீவாடத்தேறிடும் சிவலோகத்துக்கு எழுஷருளின நம்பிராட்டியார்
வீாரஹா-
. ஜேவியாற்கு ஸ்ரீ2உஹதாஹத்துக்கு இவருடன்பிறக ஸேநாபதிகள்
மதுராககனான [பரகேசரி]வேளார் வைத்த த[ண்ணீர]ர்ப் பவல்
ஸ்ரீ மாஜாயிறா[ஜ]-
தண்ணீர்ஏரி வீரம[ா*]தேவிப் பேரேரிக்கு . . . . . பாக்கு நிலமாகவும்
விற்றுக்குடுப்ப-
தற்கு நம்மூர் ரீபாஷைஉடைய ோதேவர் . . .யு..... . யோலை
தீத்தக்குளத்திந் வடகரைப் புளிக்கீழ் கூட்டக்குறைவறக் கூடி இக்கோ-
ட்டம் வகை செய்கிந்ற [பழுஷரு ழான் மொடநாராயணநுங் கூடவிருந்து
[இசைவு தீட்டு] எழுத்து மணற்புரத்து [ஜெயநம்பித்தக் கி[ர* ]மவித்தநும்
ஹி-
ரஸாரநம்பி சீராமக் கிரமவித்தநுமய்யலூர் இளைய 8ஷமவாஹந லட்டநும்
பணிப் பணியால் விற்றுக் குடுத்த நிலத்துக்கு
கீழ்பாற்கெல்லை , இற்றிடைக் காலார் எல்லைக்கு மேற்கு தெந்பாற்கெல்லை
ஸ்ரீபோந்தை :' இறையிறுத்திலா ஜேவதாநமாந சிறுதாவூர்-
ப் பழ(நி)த்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை மணற்குந்றுக்குக் கிழக்கும்
வடபாற்கெல்லை இறைநிலமாந ஏத்தக்கிணத்துக்குத் தெற்கும் ௮
236
கத தரக் யில் நடுவுபட்ட நிலத்தால் நீர்நிலம் குழி ஆயிரத்து ஐஜஞ்னுற்று
. அறுப்புக்குழி எண்ணாமிரமும் குதளு
ந அவல் கக்கல் கத்ர் ஓ இந்நிலத்தினால் . . . நாவற்கழநி . . . .
19. . . யாகத் திருத்திக்கொள்ள இந்நிலம் திருத்திக்கொள்ளப் பெறுவானாக
. ௨.௨. நெல்லும் பொந்தும் திருவேகம்பமுடையார் [இச்சீவித] முள்ளிட்டுத்
திருக்கொற்ற வா-
20. சலில் போந்த குடிமை எப்பேற்பட்டதும் வெட்டி யமஞ்சியும்
எச்சோறுமற்று ஊரிடுவரியும் உள்ளிட்டு மற்று மெப்பேர்ப்பட்ட இறையும்
நாமே குடு-
2, ப்போமாகவும் இந்நிலத்தால் வந்த சய ஆஷுமும் இறைய் ஆவருமும்
நாமே ஹம்மறக் கைக்கொண்டு வரரதித்தவற் இறையிலியாக சிலாலேகை
செய்து குடுத்தோம் ஊஹாஸஹலெ-
22. யோம் ஹாஸ்லெயார் பணிக்க எழுதிநேந் இவை வையாஸந் மெளதம
[நம்பிநேய] லட்டநேந் இவை எந்நெழுத்து 1-
237
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 144/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 30 நாள் 165
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 1048
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 259/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/183
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 61
அரசன் : முதலாம் இராசாதிராசன்
இடம் 3 சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : கரைக்கோட்டு பிரமதேயம் எனும் பராக்கிரமசோழச் சதுர்வேதி மங்கலத்து
மகாசபையார் இவ்வூரின் மேற்கில் அமைந்துள்ள திருவாய்பாடி தேவர்
(கிருஷ்ணன்) கோயிலில் கூடி, இவ்வூர் ஸ்ரீபோந்தை உடையார் கோயிலில்
உள்ள ஆடவல்லான் பராக்கிரமசோழ விடங்கர் (நடராஜர்) திருமேனிக்கு
உச்சி வேளையின் போது அமுதுபடி வழிபாட்டுச் செலவினங்களுக்காக வேண்டி
இவ்வூரின் பொது நிலத்தில் (ஊர் மஞ்சிக்கம்) 2000 குழி நிலத்தினை
மாதவசர பட்டன், இளைய நம்பித்தக் கிரமவித்தன், இளைய சந்தான கிரமவித்தன்
ஆகியோருக்கு விற்பனை செய்து கொடுத்துள்ளனர்.
கல்வெட்டு
1. ஷுஹிஸ்ரீ[॥*] திங்களேர் தரு தந்றொங்கல் வெண்குடைக் கீழ் நிலமகழ்
நிலவ மலர்மகட் புணர்ந்து . . . .
2. கோலொச்சி கருங்கலி கடிந்து தன் சிறிய தாதையையும் திருத்தமையனையும்
குறிகோள் தன்னிளங் . . . .
9. ளையும் நெறியுணர் தன்றிருப்புதல்வர் தம்மையும் துந்றெழில் வானவன்
வில்லவன் மீனவன் கங்கன் இலங்கை . . .
4. கிறைவன் புலங்கெழிற் பல்லவன் கன்னகுச்சியார் காவலநென பொன்னணி
சுடர்மணி மகுடஞ் சூட்டி படர் . . . .
238
12.
18.
15.
16.
17.
. ஆங்கவற்[க] நாடருளி பாங்குற மன்னு பல்லூழியுட் தென்னவர் மூவருள்
மானாபருநன் பொன்முடியானா . . . .
௨ மதுட் பசுந்தலை பொருகளத்தரிந்து வாரளவிய கழல் வீரகேரளனை
முனைவையிற் பிடித்து தன்
, வாரகைத்த கடகளிற்றாலுதைப்பித்தருளி அந்தமில் பெரும்புகட்
சுந்தரபாண்டியன் ஒற்றை வெண்[கு]-
௨ டையும் கற்றை வெண்கவரியும் சிங்காதனமும் வெங்களத்திழிந்து தண்முடி
விழத் தலைவிரித்தடி தளர்ன்தோட . . . .
௨ யில் முல்லையூர்த் துரத்தி ஓல்கலில் வேணாட்டரைசைச் சேணாட்டொதுக்கி
மேவுபுகழ் இராமகுடமூவர் கெட முனிந்து விட கெ... .
உ. நாடு விட்டோடி காடுபுக்கொ[ளி*]ப்ப வஞ்சியம் புதுமலர் மலைந்தாங்கு
ட மு வில்லவன் . . . மடி கொண்டு ம கடநட
கெழு காந்தளூர்ச்சாலை கலமறுப்பித்து ஆகவமல்லனும் அஞ்ச
கெவுதன்றாங்கரும் படையாலாங்கவன் சேனையுள்
கண்டப்பையனும் கங்காதரனும் வண்டமர் களிற்றோடு மடியத் திண்டிறல்
விருதர் விக்கியும் விசையாதித்-
- தனும் தருமுரட் சாங்கமையனு முதலினர் சமரபீருவொத்துடைய நிமிர்
சுடர்ப்பொன்னோடு ஐங்கதிப் புரவியோடு
பிடித்துத் தன்னாடையிற் ஜயங் கொண்டு ஒன்னார் கொள்ளிப்பாக்கை உள்ளெரி
மடுப்பித்து ஒரு தனித்தண்டால் பொ-
௬ கடலிலங்கையர் கோமான் விக்கிரமஸாஹ-வின் மகுடமும் காண்டகு
தன்னதாகிய கன்னக்குச்சிமினு-
மார்கலி மீழஞ் சீரிதென்றெண்ணி உளங்கொள் தன்னாடு தன்னுறவோடும்
புகுந்து விளங்குமுடி குவித்த வீரசலாமேகன்
. பொற்களத்தஞ்சி காற்களிறிழிந்து கவ்வையுற்றோடி காதலியோடுந் தன்
றவ்வையைப் பிடித்து தாயை மூக்கரிய ஆங்கவ-
239
19.
20.
21.
22.
23.
24.
25.
20.
27.
28.
29.
30.
81.
மான நீங்குதற்காக மீட்டு வந்து வாட்டொழிலுழந்து வெங்களத்துலந்தவச்
சிங்களத்தரைசன் பொன்னணி முடியும் கன்-
னரன் வழிவந்துரை கொள்ழத்தரசனாகிய சிரிவல்லவன் மதனராசன் எல்லொளித்
தடமணி முடியுங் கொண்டு வடபுலத்து இரு
காலாவதும் பொருபடை நடாத்தி தண்டர் தினகரன் நாரணன் கணவதி
வண்டலர் தெரியல் மதுசூதனனென
பலவரைசரை முனைவிய துரத்தி வம்பலர் தருபொழில் கம்பிலி நகருள் ''
சாளுக்கியர் மாளிகைத் தகர[ர்* ]ப்பித்திரெதமில் வில்லவர்
மீனவர் வேளச்சளுக்கியர் வல்லவர் கோசலர் பங்களர் கொங்கணர்
சிங்கண[ரைய]ணர் அந்திர முதல்லிய அரசர்னா-
டு நிறைகளும் ஆறிலொன்றவநிமிட கூறுகொள் . . . நான்மறையவர்
முகந்து கொளக் குடுத்து வி-
யலோ[க*]த்து விளங்க மனுநெறி . . . . ஜயங்கொண்ட சோழன் உயர்ந்த
பெரும் புகழ்கோ-
விராஜகேஸரிபநமரான உடையார் ஸ்ரீமாஜாயிறாஜசேவற்க்கு யாண்டு
[முப்பதாவது நாள் நூற்றருபத்தஞ்சினால் உலகு-
டையார் திருமடைப்பள்ளிப்புரம் ஜயங்கொண்டசோழ மண்டலத்து தாமர்
கோட்டத்து தாமர் நாட்டு கரைக்கோட்டு எய,ஹ-
யமான வறாசூ,5சோழ சதுப்பேதிமங்கலத்து மாஹஸலெப் பெருங்குறி
பெருமக்களோம் நம்மூர் மேலைத் திரு-
வாய்ப்பாடி ஜேவர் கோயிலில் கூட்டக் குறைவற கூடியிருந்து நம்மூர் ஸ்ரீபோந்தை
உடையார் ஆதிகாஸ மணேஹாறநுக்கு யெ
ழுத்திட்டு யாங்கள் விற்கின்ற ஊர் மஞ்சிக்கமாகின்ற வுதியாவது நம்மூர்
கடிப்பேரியான ஸ்ரீமம-ராந்தகப் பேரேரிக் கீழ் கலி(ங்)ங்கி-
லுக்கு வடக்க கோலால் நிலம் குழி இரண்டாமிரமும் இக்கோலால் குழி
இரண்டாயிரமும் தேசவதிக்கு கீழ்பாற் கெல்லை கொல்லை நி[லத்]
33.
34,
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
துக்கு கிழக்கு வடபாற்கெல்லை விளைநிலத்துக்கு தெற்கும் இந்நாற்பாற்
கெல்லைக்கு உட்பட நடுவில் கொல்லை நிலம் குழி . . . ௩ ....
ஆ-
மிரமும் பதினறுசாண் கோலால் விற்று விலையாவணஞ் செய்து குடுத்தோம்
இருகாலாவது முக்காலாவது முற் சொல்லப்பட்ட இந்னாற்-
பாலெல்லையுள் [இறைவெட்டி] கோலால் நிலம் குழி இரண்டாமிரமும்
விலையாவணஞ் செய்து குடுத்து எம்மிலிசைந்து விலைப் பொ-
ருள் முற்றும் அறக்கொண்டு [இ]துவே பொருள்மாவறுதிப் பொருள்
செலவோலையாவதாகவும் இதுவல்ல(£)து வேறு பொரு-
ள்மாவறுதிப் பொருள்ச் செலவோலை காட்டென்னப் பெறாதோமாகவும் பெரி
கொட்டி விற்று விலையாவணஞ் செய்து [தந்]தோம் இன்னிலம் இறைமி-
லி தேவதானமாக இறை தவிர்ந்து ஜேவேதாந நிலமாகப் பெறுவிலைக்
காணி ....
அவைக்கண் மாமவஸர லட்டனும் மாடலம்பாத்து இளை[ய] நம்பித் தக்
கிரமவித்தனும் செங்காட்டுச்சேர இளைய [ஸந்மாந] பெருமாந் கிரம-
வித்தநும் மணியரசந் நிலம் இக்கோயிலில் ஆடவலார் பராக்கிரம சோழ
விடங்கர்க்கு உச்சியம்போதை ஸந்யிக்கு திருவமுதுக்கு அரிசி நானாழிக்கு
அறுகுறுணி இருநாழியும் நெய்யமுது முச்செவிடும் கறியமுதுக்கு நெல்
ஒரு செவிடும் ஆக நெல் . . .
ரண்டுக்கு நெல்லு மூவுழக்கும் அடைக்காயமுது வெறுங்காய் நாலும்
வெற்றிலை பன்னிரண்டுக்கு
. நிவந்தம் முட்டாமை இஞஸ்ரீகோமில் வாரியஞ் செய்வாரே அடுத்து . . .
செய்வார்களாகவும் [மிலாடேகை] செய்து குடுத்தோம் 8ஹாஷஸ0லெலெப்
பெருங்குறிப் பெருமக்களோம்
ப கிலே கு சத நல்லூர் கிழவந் சாத்தந் பவழகுந்றும் இவை பணியால்
௨.௨... தேவன் இவை என் எழுத்து
241
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
திருவண்ணாமலை
செய்யாறு
பிரம்மதேசம்
தமிழ்
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர்
முதலாம் இராசேந்திரன்
தொடர் எண் :- 145/2017
ஆட்சி ஆண்டு 3
வரலாற்று ஆண்டு : கியி. 11-நூற்.
இ.க. ஆண்டறிக்கை: 255/1915
முன் பதிப்பு : 80/177
(தெ.க.தொ.)
ஊர்க் கல்வெட்டு எண்: 62
சந்திரமெளலீஸ்வரர் கோமில் முன் மண்டப கிழக்குச் சுவர்.
திருமலைக்குச் சென்று தீர்த்தமாடக் கூட்டமாகச் செல்லும் வைணவர்களில்
இவ்வூரிலுள்ள ஜனநாதன் மண்டபத்தில் வந்து தங்கும் 100 வைணவர்களுக்கு
உணவளிக்கவும், தீர்த்தமாடி விட்டு திரும்பும் போது தங்கும் 100
வைணவர்களுக்கு உணவளிக்கவும், புரட்டாசி மாதம் திருவோணத்து நாளன்று
தீர்த்தமாட வரும் 100 வைணவர்கள், ஐப்பசி மாதம் திருவிழாவின் வழிபடவரும்
வைணவர்கள் ஆகியோருக்கு உணவளிக்கவும் உணவு செய்யத் தேவையான
பொருட்கள் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ[॥*] திருமன்னி வளர இருநில மடந்தையும் போர்ச் செயப் பாவையுஞ்
சீர்த்தனிச்செல்வியும் தன்பெருந் தேவியராகி இன்புற நெடுதுயர் ஊழியுள்
இடைதுறை நாடுந் துடர்வன வேலிப்படர் வனவாசியுஞ் சுள்ளிச்சூழ்
மதுள் கொள்ளிப்ப[£*]ககையும் நண்ணற் கருமுரண்
மண்ணைக்கடக்கமும்
2. கேரளன் முறைமையின் சூடுங் குலதநமாகிய பலர்புகழ் முடியுந்
செங்கதிர்மாலையும் சங்கதிர்வேலைத் தொல்பெருங்காவற் பல்பழஸிவும்
செருவிற் சினவில் லிருபத்தொருகாலரைசு களைகட்ட பரசுராமந்
மேல்வருஞ் சாந்திமற்றிவரண் கருதி இருத்திய செம்பொற்றிருத்தகு
முடியும் பயங்கொடு பழிய்மிக முயங்கிமில் முதுகிட்டொளித்த சயசிங்கந்
னளப்பரும் புகழோடும் பஞ்ச-
242
3. ப்பள்ளியும் பாசடைப்பழன மாசுணி தேசமும் அயர்வில் வணீகீர்த்தி
ஆதிநகரவையிற் சந்திர[ன்* ]றொல் குலத்திந்திரதனை விளையமர் களத்துக்
கிளையோடும் பிடித்து பலதனத்தோடு நிறைகுலதநக் குகையுஞ்' சிட்டருஞ்
செறிமிளை ஒட்ட விஷயமும் பூசுரர்சேர் நற் கோசலைநாடு ஞம்மபாலனை
வெம்முனையழித் து வண்டுறை சோலைத் தண்டபுத்தியும் இரணசூரனை
முரணு . . .
4. யறு நாழிக்கு நெல்லிரு தூணிக்குறுணி முந்நாழியும் புழுக்குக்கறி
யொந்றுக்கு நெல் ஐஞாழியும் மிளகு கறியொந்றுக்கு நெல் ஐஞாழியும்
புளித்த கறியொற்றுக்குப் புளியுட்பட நெல்லுக்குறுணியொரு நாழியும்
இலைக்கறிக்கு நெல்லிரு நாழியும் மிளகாழக்குக்கு நெல் நானாழியும்
உப்பி[ரு] நாழிக்கு நெல் நானாழியு[ம்] நெய்யுழக்குக்கு நெல்க்குறுணியும்
மோர் பதக்குக்கு நெல்க் குறுணி மிருநாழியுஞ் சற்கரை நாற்பலத்துக்கு
நெல்க்குறுணியும் வெ(ற்)றுங்காய் நாற்பதுக்கு நெல்க் குறுணியும்
வெற்றிலைப் பற்றிரண்டுக்கு நெல் நானாழியும் அடுவாநொருவனுக்கு
நெல்க் குறுணியும் ஆக அ[8ா]வாஸெ ஒந்றுக்கு நெல்க் கலநே
யெழுகுறுணி முந்நாழியாக ௯லவாஸெட பந்நிரண்டுக்கு நெல்ப்
பத்தொந்பதிந்கலநே குறுணி நானாழியுந் திருவேங்கடமலைத் தீத மாடப்
பெருங்கூட்டமாய் வந்து ஜநநாதந் மண்டபத்துண்ணும் ஸ்ரீவெஷவர்
னூற்றுவர்க்குப் பேராலரிசி நாழியுரியாக அரிசி கலநே தூணிப்பதக்கறு
நாழிக்கு நெல் முக்கலநே மிருதூணிப்பதக்கே முந்நாழியும் பயறு
குறுணிக்கு நெல்ப்பதக்கும் புழுக்குக் கறியொற்றுக்கு
5. நெல் முக்குறுணியும் மிளகுக்கறி யொந்றுக்கு நெல் மு[க்* ]குறுணியும்
புளித்தகறியொந்றுக்குப் புளியுட்பட நெல்த்தூணியும் இலைக்கறி
யொந்றுக்கு நெல்க்குறுணியும் மிளகு மூ[வு*]ழக்குக்கு நெல்
முக்குறுணியும் உப்புக் குறுணிக்கு நெல்ப் பதக்கும் நெய் மிருநாழிக்கு
நெல்லிருதுணியும் மோர் கலத்துக்கு நெல் தூணிப்பதக்கும் புளிங்கறிக்கு
மோருக்கு நெல் தூணிப் பதக்கும் சற்கறை இருபத்திரு பலத்துக்கு
நெல் தூணியும் வெறுங்காயிருநூற்றுக்கு நெல் ஐங்குறுணியும்
வெற்றிலைப் பற்றெட்டுக்கு நெல்ப் பதக்கும் அடுவாரிருவர்க்கு நெல்
துணியும் சுண்ணாம்புக[கு*] கு[றுணி] நானாழியும்
விறகிடுவாநொருவநுக்கு நெல்ப்பதக்கும் இலைக்கறியிடுவா நொருவர்னுக்கு
243
நெல்]ப் பதக்கும் ஆக நெல் எண்கல[நே]மி[ரு தூணி முந்னாழியும்
இவர்கள் தீ[தி,]மாடி மீண்டுவந்தார் ஸ்ரீவெஷவர் னூற்றுவர்க்கு
[8]மற்படியாக்கி நெல்லெ[ண்]கலநே மிருதூணி முற்னாழியும் புரட்டாதித்
திருவோணத்திநாள் தீ.திமாடவன்த ஸ்ரீவெஷவர் னூற்றுவர்க்கு '
மேற்படியாக்கி நெல்லெண்கலநே மிருதூணி முந்னாழியும் ஐப்பசித்
திருநாளில்த் திருவிழாவெழுந் திருநாளாறில் நாளொந்றிலுண்ணும்
்ீவெ . . .. .
244
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 146/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 2[1]
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 104[9]
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 250/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு . : : 90/172
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 63
அரசன் : முதலாம் இராசாதிராசன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : தாமர் கோட்டத்து தாமர் நாட்டு பராக்கிரமசோழச் சதுர்வேதி மங்கலத்து
ஸ்ரீபோந்தையுடைய மகாதேவர் கோயிலில் நடைபெறும் திருவிழா நாட்களில்
வழிபட வரும் சிவனடியார்களுக்கு உணவளிக்க வேண்டி ஊரார் 15 கழஞ்சுப்
பொன் பெற்றுக்கொண்டு வரிநீக்கி ஆயிரம்குழி நிலத்தினைக் கோயிலுக்கு
விற்றுக் கொடுத்துள்ளனர்.
கல்வெட்டு : .
1. ஹஹிஸ்ரீ[॥*] திங்களேர்தரு தன்றொங்கல் வெண்குடைக் கீழ் நிலமகள்
நிலவ மலர்மகட்புணர்வ செங்கோலோச்சி கருங்கலிகடிவ தன் சிறிய
தாதையு ஷிருத்தமைய[நு]ங் குறிகொள் த-
2. ன்னிளங்கொக்களையும் நெறியுணர் தந்திருப்புதல்வரையு வன்றெழில் வாநவன்
வல்லவந் மிநவந் கங்கனிலங்கையற்கிறைவன் புலங்கழற் பல்லவன்
கன்னகுச்சி-
9. [யர்க்காவலன்]னெனப் பொன்னணிச்சுடர் மணிமகுடம் சூட்டிப் படர் புகழாங்கவற்
கவர் நாடருளிப் பாங்கறு மாதாதை முன்வஷ பொதலர் தெரியல் விக்கிரம
நாரணன் சக்கரன்
ட டல லத ௬ மணிமெளலி வாழியர் பூவே, சோழனெனப் புனந்து மன்னுபல்
ஊழியிற்றென்னவர் மூவருள் மானாபரணன் பொன்முடி ஆனாப் பருமணிப்
பசுந்தலை பொருகளத்தரிந்து அள-
245
ட ளட ௫ மிற் பிடித்து தனத்தி வாரணக் களிற்றாலுதைப்பித்தருளி அந்தமில்
பெரும்புகழ் சுந்தர பாண்டியன் கொற்றை வெண்குடையும் கற்றை
வெண்கவரியும் சிங்காதனமு-
கொண்க இழிந்து தன்முடிவிழத் தலைவிரித்தோடி தொல்லை முல்லையூர்
துரத்தி ஒல்கலில் வேணாட்டைரைசை சேணாட்டொதுக்கி
மேவுபுகழிராமகெட மூவர்கெட முனிந்து விடல் கெழு
7 படக் கொண்டு தன்னாடுவிட்டோடி காடுபுக்கொளிப்ப வஞ்சியப் புதுமலர்
மலைந்தாங்கு எஞ்சலில் வேலைகெழு காந்தளூர்ச்சாலை கலமறுப்பித்தாலவ
மல்லனுமஞ்ச அவன்றாங்கரும்
த வ இடப் புள் கண்டப்பய்யனுங் கங்காதரனும் வண்டமர் களிற்றோடு மடிய
திண்டிறல் விடுதர் விக்கியும் விசையாதித்தனும் [தருமுரட்சாங்க மய்யனும்]
முதலினர் சமரஷிருவொத்துடைய நிமிர்
. [அய்ங்கரிப்]புரவியோடும் பித்தத் தன்னாடையிற் சயங்கொண்டு ஒன்னார்
கொள்ளிப்பாக்கை ஒள்ளேரி மடுப்பித்தொரு தனித்தண்டாற்
பொருகடலி[ல]ங்கையர்கோமான் விக்கிரம பாகுவின் மகுடமும் [முன்]-
. னி உளங்கொள் நாடு தன்னுறவோடும் புகுந்து விளங்குமுடி கவித்த
வி[ர]சிலாமெகற் பொருக்களத்தஞ்சித்தார் களிறிழிந்து ப்பம்
காதலி[யோடுந் ]
. முக்கரிய ஆங்கரிய ஆங்க[வ*]மா[ன] நீங்குதற்காக மீட்டுவவ
வாட்டொழில் புரிந்து வெங்களத்துலக சிங்களத்தரைசன் பொன்னனி
சுடர்மணி முடியும் கந்னரன் (கன்னரன்) வழிவந்-
டட டட ராஜன் வெல்லொளித் தடமணி முடியுங் கொண்டு வடபுலத்து
இருகாலாவதும் பொருபடை நடாத்தி கண்டரன் தினகரன் நாரணன்
கணவதி வண்டலர் தெரியல் மதிசூதனனென்றே
உ புகளாரம் பூண்டு கடகமந . . . த்தானாயில் மூன்றாம மயைனுமென்றேதிர்
விளகின்வெற்றும் பகற் . . . நும்பிய . . . . பரும்பி சிங்களர் அஷ
246
16.
17.
18.
19.
20.
21.
. ௨... கொண்டராசனும் குறிசிலை மு . . . . யனும் தண்ட நாயக ராத்தள
இறாயனும் விதடப்பயினும் வீர மாணிக்கனுமனைப் பிடைஇ சோஸனஷரர்
மை I
, கனுமாதாவும் எனும் வாழ்தலியாபுனை கழல் செரச்செரு[டெனை]
போர் மகளி தொது வண்ணந்பபிடித்து ஏழரை மிலக்கமும் புகழ்படச்
சினவிபுண்[8றப்ப . . . வினியபொ]-
மிவதைத்து சிணரு ஐப் பயப்பாலருபாளிணங் முரணயிற்ப்ப அங்கவ . . .
கரவையனாக கழைஞ்சு பொன் ௪௰[]தய மு[ன்] நாட்டு வெத்தியலிரை
வில்லவர் மீளவ[ர்]டை-
நீதுரர் ஐய்யணர் சிங்களர் பங்களர் அஹிரர் முதலியர் அரைசரிடு
திறைகளுமாறிலொன்று [அவனியுள் கூறு] கொள் பொருள்களும்- உகந்து
நான்மறையவர் முகந்துகொளக் குடுத்து வீ-
ற்றிருக ஜயங்கொண்டசோழனென்றுயர்க பெரும்புகட் கோவிராஜகேசரிபநரான
உடையார் ஸ்ரீராஜாயிராஜதேவற்கு யாண்டு [௩]௰க ஆவது
ஜயங்கொண்டசோழ மண்டலவ தாம-
ற்கோட்டத்து தாமர் நாட்டு பராக்கிரமசோழச் சது[வேஃ]தி மங்கலத்து
ஸ்ரீபோந்தையுடைய மஹாதேவர் திருவிழா சேவிக்க வஷ அடியார்
ஸ்ரீதாயோர[ர்]க்கு அமுது செய்தருள நாற்பத் . . . .
பக்கல் யாங்கள் கொண்ட [பொ] . . . இப்பொ .
. கழஞ்சுங் கொண்ட பரிசாவது . . . . நாரணகுட்டி செறுவுங்குண்டில்
. க்காலுக்கு மேற்கும் தெந்பாற்கெல்லை பள்[ளவாக் கா]லுக்கு வடக்கும்
மேல்பாற்கெல்லை இவ்வூர் சோழகேரளவிண்ணகர் ஆழ்வார் பூமிக்கும்
ஏரிபட்டிக்கு[ம்*] கிழக்கும் வடபாற்கெல்லை
தெற்கும் இன்னாற்பால்கெல்லை நடுவுபட்ட னிலம் பழங்கோல்
' பதி[ந]று சாண்கோலால் குழி ஆயிரமும் இப்பொந் பதி[ந்]கழஞ்சும்
கொண்டு இப்பொந்நுக்கு விருத்தியால்
247 தன் எ
தது த தம. பொந்த குடிமை எப்பேர்பட்டிதும் நாங்களேமி[ருந்து ]இன்னிலம்
இறையிலியாக. விற்று விலையா[வ*]ணம் செய்து குடுத்தோம்
இன்நிலஞ்சுட்டி (ர்) நீர்விலை [அந்]தராயம் உழவிறை
25. . . . . நிலத்துக்கு கடைநீர் தலைநீர் பாச்சிகொள்ளப்பெறுவதாகவும் இப்பரிசு
இசைவ விற்று விலையாவணஞ செய்து குடுத தோம்
ஆதிஜாஸசண்டேருரநுக்கு முற்சொல்ல[ப்*]பட்ட உள்
38. , . . . அறிவேன் னெர்பொன்னதெனிவை என்[னெழுத்[து இப்படி அறிவேன்]
மல்லன் கானப்பி[ரி*]யநேன் இ[ப்*]படி அறிவேன் சஷிரநேன் இப்படி
அறிவே-
27. . . . . இப்படி அறிவேன் திருப்பொரிசிற்றியேன் இப்படி அறிவேன் சிமாதவன்
சோமநேன் இப்படி அறிவேன் சாத்தன் கம்பநேன் இப்ப . . . .
248
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 147/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 31
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1049
பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 251/1915
தமிழ் முன் பதிப்பு : 30/173
(தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 64
முதலாம் இராசாதிராசன்
சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப தெற்குச் சுவர்.
கல்வெட்டின் சிலபகுதிகள் கட்டத்திற்குள் மறைந்தும் சிதைந்தும்
காணப்படுகிறது. ஸ்ரீபோந்தையுடைய மகாதேவர் கோயிலில் நடைபெறும்
திருவிழாக்களின் போது வழிபடவருபவர்கள் தெண்ணாயிரவன் மடத்தில்
உணவு உண்பதற்காக வேண்டி 46 குழி நிலத்தின் மீதான வரிகளை நீக்கி
மடப்புறமாக ஒன்பது கழஞ்சுப் பொன் பெற்றுக்கொண்டு ஓமாநண்டத்தூர்
ஊரார் விற்றுக் கொடுத்துள்ளனர்.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ[॥*] கோப்பரகேசரி பன்மரான உடையார் ஸ்ரீராசா[தி* ]ராச தேவர்க்கு
யாண்டு முப்பத்தொன்றாவது காலியூர்க் கோட்டத்து காமிரம்பே[டு] நாட்டு
மொ-
. ம நாட்டு பராக்கிரமசோழ சதிர்(வ்)வேதி மங்கலத்து ஸீ போலைஉடைய
மாதேவர் திருவிழா சேவிக்கவஷ அடியார் ஸ்ரீப-
. , தெண்ணாமிரவன் மடப்புறமாக ஆதிதா[ஸ]சண்டேசுவரன் பக்க[ல்] .
௨... கொண்ட [பொ]ன் ஒன்பதின் கழஞ்சு இப்பொன் ஒன்பதின் கழ-
க்கு கீழ்பார்க்கெல்லை நோதிபாடிக்கு போனவதிக்கு மேற்கும்
தென்பாக்கெல்லை செ[று]வுழாந் கண்டராச்சன் பூமிக்கு வட-
249
தல்
10, .’.
௨ க்கு கிழக்கும் வடபார்க்கெல்லை பெருந்தூம்பின் நின்று மேடுகளுக்கு
நீர்பாஞ்ச வாக்காலுக்கு தெற்கு இநாற்பார்க்கெல்லைக்கும் நடுவுபட்ட
நிலம் தடி மூ-
ற்று நாற்பத்தாறு குழியும் பொன் ஒன்ப[தி]ன் கழஞ்சு கொண்டு
இப்பொநுக்கு [வி]ருத்தி[க்]கும் இப்பூமியால் வக எப்பேற்பட்ட இறையும்
. செய்து குடுத்தோம் [இப்பரி]சொட்டி நீர்விலையும் அஷராயமும்
சில்லிறையும் உழவிறையும் காட்டிக் கொள்ளப் பெறாதோமாகவும் மின்
நில-
, உர்கள்ளாகவும் இப்பரிசு இசை வி.[ற்று]க்குடுத்தோம் ஒமாநண்டத்தூரோம்
இவர்கள் சொல்ல எழுதிநேன் செறுவுழாந் கண்டராச்சந்-
. ௨ ழான [மு]க்கடம்பநேன் இப்படி அறிவேன் சூற்றி அட்ட மூர்த்தியேன்
இப்படி அறிவேன் . . . [செழு]வநேன் இப்படி அறி[வேன்] . . .
. கிழான் கண்டராதித்தநேன் இப்படி அறிவேன் பிச்சனய்யநிக்கியேன்
இப்படி அறிவேன் மணிமுத்த. மூர்த்தியேன் இப்படி அறிவேன் சிவப்பிராமண-
அறிவேன் . . . .. . சோகியெம்ப . . .
250
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 148/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 382
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி, 1050
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 263/1915
மொழி தமிழ் முன் பதிப்பு : 30/187
(தெ.க.தொ.)
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 65
அரசன் முதலாம் இராசாதிராசன்
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : பராக்கிரம சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் அயோத்தி ஆழ்வார் கோயில்
கல்வெட்டு
1.
2.
3.
(இராமர் கோயில்) முன்பு கூடி, போந்தை உடையார் கோயிலில் உள்ள
திருச்சிற்றம்பல முடையார் (நடராசர்) திருமேனி வழிபாட்டிற்குத் தேவையான
அமுதுபடி வழங்கிட 2000 குழிகளை விற்று விலையாவணம் செய்து
கொடுத்துள்ளனர்.
ஷஹிஸ்ரீ [॥*] திங்கள்ஏர் பெறவளர் அங்கதிர-
ளவுள் தொல்குளம் விளங்கத் தொற்றி மல்கிய வ-
டதிரை கங்கையுந் தெந்றிசை இ[ல]ங்கையும் குணதிசை[ம* ]கொஷயும்
. குடதிசை கடாரமும் தண்டாற்கொண்ட தாதைதந் மண்டல வெண்குடை
நிழ-
௨ற்கீழ்த் தந்குடை நிழற்ற திசைதோறுஞ் செங்கோலோச்சி தெ[ந்]னவந் மாந[£]
பரணன் பொன்முடி பசுந்தலை பொருகளத்தரிந்து வாரளவிய கழல் வீர-
. கேரளனை . . . ஆனைக்கிடுவித்து வேணாட்ட[ர*]சை சேணாட்டொதுக்கி
பூவகத்தரசைச் சேவ-
. கவலைத்து வேலைஎழு காகளூர்சாலை கலமறுப்பித்து திகழ் ஜயங்கொண்ட
சோழ
251
10.
12.
1.
20.
21.
22.
. நேன் மதிகெழு கோவிராஜகேசரிபநரான உடையார் ஸ்ரீமாஜாயிறாஜ ஜேவர்க்கு
யாண்டு ௩௰
௨ ஆவது ஜெயங்கொண்ட சோழமண்டலத்து தாமர்க் கோட்டத்து தாம[ர்*]
நாட்டு [பரா]க்கிரமசோழச-
. [ரு]ப்பேதிமங்கலத்து ஊஹாஸடெெப் பெருங்குறி பெருமக்களோம் நம்முர்
திருவயோத்தியா-
ழ்வார் கோயில் முந்பே கூட்டகுறைவறக் கூடிமிருவ நம்மூர் ஸ்ரீபோந்தை
உடையர் ஆ]திதாஸசண்டே
யரர[ர்] பக்கல் பொந்கொண்டு இத்தேவர் கோயிலில் எழுஷருளி நிற்கும்
திரிச்சிற்றம்பலமுடையார்-
. க்கு திருவமுது செய்தருள வேண்டுவத|[ற்*](க்)கு குடுத்த பூமியாவது
நம்முர் கீழைகழநியால் வெ-
, ண்குளத்தூட்டு நீர்கோவைக்கு மேற்கும் தெந்பார்கெல்லை மேற்படி ஏரிநீர்கோ-
. வைக்கு வடக்கும் மேல்பார்கெல்லை . ன்றி நிலத்துக்கு கிழக்கும்
[வடபார்]கெல்லை சிர[£]-
ட்
. மசேரி ஏரிகரைக்கு தெற்க்கும் இந்நான்கெல்
. [லை]யுள் நடுவுபட்ட நிலம் முந்பு கொல்லையும். காடுகோளும் ௧ . . . .
ர கோல-
. [மு]மாய் கிடக நிலம் குழி இரண்டாமிரமும் விற்று விலையாவணம்
செய்து*]
[கு]டுத்தோம் ஹாஸூெெ பெருங்குறி பெருமக்க(ள்)ளோம் ஷவெவெயுள்ளி
[றையூர்] சிவாமிருத கிரமவித்தநும் பரியலூர் ஸவடகிரதுபட்டனு . . .
றையூர் பாராயணகிரமவித்தனும் பணிய பணிகேட்டு எழுதிநோ[ம்] இவ்வூர்
ம2-
252
23. யஷந் ஸ்ரீபோஷைஅரசு ஆந திரிசிற்றம்பல பொற்கோயிற் . . . . . . நேனன்]
24. [இ]வை என்னெழுத்து இப்படி இவ்வூர் பாரசிவற் குற்றி ஒற்றி[யே]ந் இப்படி
25. வேந் வைய்காசந் திருவிக்கிரமபட்டநேந் இப்படி யறிவேந் . . . . .
26. . . . நற்சிவநேன் இப்படியறிவேந் ஊர்ப்பிராமணந் பல்லபுரமுடையாந[ந * ]ந்
தரியநாந வளவ மா-
27. ணிக்க ஸூ_ஹராயநேன் இப்படியறிவேந் வேழ்க்கோவந் சீபோந்தை கொம்மநேந்
இப்படியறி-
28. வேந் இவ்வூர் தச்சன் பழம[லைகூத்தந்நேன் இப்படியறிவேந் நல்[]வய்காசநன்
கேசுவபட்டநே[ன்] இப்படி
29. யறி[வேந்] . . . . . ௨. இப[ப்ப]டியறிவேன் உலகுடைமாதேவி பெருன்
த(ா)நத்து திருசிற்றம்பல பெ-
30. ருமக்கள் வைச்ச தந்ம[ம்] 1-
253
த.நர.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 149/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 92
வட்டம் ' : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1050
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 249/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/171
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் , ஊர்க் கல்வெட்டு எண்: 66
அரசன் : முதலாம் இராசாதிராசன்
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : போந்தை ஆழ்வார் கோயிலில் சபையினர் கூடியிருந்தபோது குண்டூர் மாதவ
கிரமவித்தன், கோமங்கலத்து ஆதித்த கிரமவித்தன், எயில் திருவேகம்ப
கிரமவித்தன் ஆகிய இம்மூவரும் இவ்வூர் சப்தமாதர் (ஏழு கன்னிகையர்)
கோயில் இறைவிகளுக்கு திருநந்தா விளக்கு ளிக்க வழிவகைச் செய்துள்ளனர்.
இக்கல்வெட்டு முழுமைபெறாமல் உள்ளது.
கல்வெட்டு :
1. ஹஹிஸ்ரீ[॥*] திங்களேர்பெற வளரங்கதிர்க் கடவுட்டொல்கும். விளங்கத்
தோ[ன்]றி வடதிசை கங்கையுந் தென்றிசை இலங்கையும் குணதிசைக்
கடாரமும் குடதிசை மகோதையுந் தண்டாற் கொண்ட தாதை தன்
வெண்குடை நிழற்கீழ் தன்குடை நிழற்றி திசைதோறுஞ் செங்கோல்
நடத்தித் திகைமுடி . .
2. ட்டரைசைக் சே(ஈ)ணாட்டொதுக்கிப் பூவகத்தரைசைச் சேவகவலைத்து
வேலைகெழு காகளூர்ச்சாலை கலமறுப்பித்துக் (கெழு) ஜயங்கொண்ட
சோழநேன் மதிகெழு கோவிராஜ[கேஸ ]ரி[வகமாந] உடையா[ர்* ]
ஸ்ரீமாஜாயிமாஜேவற்கு யாண்டு முப்பத்திரண்டு ஜயங்கொண்ட
சோழமண்டல[த்*] . . .
3. ப்பெருமக்களோம் எம்மூர் திரு[ப்போந்தை ஆழ்வார் கோயிலிலே] கூட்டக்
குறைவறக் குடியிருந்து ஸடலெயுள்ளெழுவ குண்டூர் மாதவக்
கிரமவித்தனும் [கோ]மங்கலத்து ஆதித்த ௯,2வித்தனும் எயிற்
திருவேகம்பக,மவித்தனும் பணிப்பணியால் நம்மூர் ஸவுமாதிருக்களுக்கு
254
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 150/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 38
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1051
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 247/1915
மொழி தமிழ் முன் பதிப்பு : 30/169
(தெ.க.தொ.)
எழுத்து கிரந்தங் கலந்த தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 67
அரசன் முதலாம் இராசாதிராசன்
இடம் சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : ஸ்ரீபோந்தையாண்டார் கோயில் வளாகத்தில் இருக்கும் பவித்திரமாணிக்க
மடத்தினை நிர்வகிப்பதற்காக மடப்புற இறையிலியாக 3549 குழி நிலத்தின்
மீதான அனைத்து வரிகளும் நீக்கி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிலங்களின்
விளைச்சல்களுக்கும் வரிவிதிப்பதில்லை என்று மகாசபை பெருங்குறி பெருமக்கள்
ஒப்புக்கொண்டுள்ளனர்.
கல்வெட்டு :
1.
ஹஹிஸ்ரீ[॥*] திங்களேர் [தரு தன்றொங்கல்] வெண்குடைக் கீழ்
நிலமகணிலவ மலர்மகட்ப்புணர்ந்து செங்கோலோச்சி [கருங்கலிக]-
. டிவ தந்தையர் தமயர் தம்பியர் தன்திரு மைந்தரென்றிவரை மணிமுடி
சூட்டிக் கன்னிகாவலர் தென்[னவர்]
மூவருள் வானகம் இருவருக்கருளிக் கானகம் ஒருவனுக்களித்துப்
பொருசிலைச் சேரலன் வேலைகெழு காந்தளூர்ச் சாலை [கலம]-
றுத்தருளி இலங்கையர்க் கரசையும் அலங்கல் வல்லபனையும் கன்னகுச்சியர்
காவலனையயும் பெ]
ரன்னணி முடித்தலை தடிந்து தன்கொடிப்படை ஏவிக் கன்னாடகர் விடுகடகரி
புரளத் தன்னாடையிற ற[மிழ்ப் பரணி]
255
11.
12.
. கொண்டொன்னார் வச்சிர நெடுவாள் விச்சயன் வெரு[வி* ]நெளித்து அஞ்சி
ஓடத் தன் வஞ்சியம் படையால் ஆங்கவந் [பிதாவை]
. மாதாவோ[டு*]ம் சதர்மலி வீங்குநீர்ப் பூண்டுர் வெஞ்சமத் தகப்படுத்து
[அயப்படை ஆலவமல்லன் பயத்]-
. தோடும் வரவிடும் ஒற்றரை வெருவரப் பிடித்து ஆங்கவர் மார்பிலாஹவ
மல்லன் யாங்நுனம் அஞ்சினன் என்ன ந[ன்கெ]
. முதிச் செலுத்தி தன் புலிக்கொடிப் படைஞர் ஒட்ட வரிவாரணவரசைக்
கடல்புரைச் சிறுதுறைப் பெருந்துறை[த் தெய்வ]
. விமரசியென்று உறுதுறை மூன்றிலும் உயர்புனலூட்டி ஆங்கவனேத்தக்
கிரியிலே சங்கு கயலெ-
முதி உயர்ஜயத்தம்பம் எழில்பெற நிறுத்தித் தன்கழல் பணிந்தொழு
குமரைசரோடு சென் [நாடிப்]
பொருபுலி வீரக்கொடியோடு தியாகக்கொடி யெடுத்தொன்னலர் கவர்ந்த
தொன்னெதி-
.. னோக்கி துயர்வினில்லவன்விடு தண்டத்துக்கு அவன் வெல்புரவி நுளம்பனும்
காளிதாசனு[ம் விளம்பரும் தார்ச்]-
. சாமுண்டனும் போர்க் கொம்மைய்யனும் வில்லவரயனும் முதலியான பலரும்
திரிந்து
. உப்பளர் கொய்மலர் பசுந்தலை தராத தமிலப்பன் தடிந்து முன்கொண்டு
- தகைவன தப்பைமுன்[அப்பகை]
... செகுத்துப்பளன் வழியிற் தப்பிய வரசர் ஆங்கது மீட்க மாட்டாது தனது
பூங்கழல் சரணெநப் புக்[கவர்க்கருளித் தடமுடி]
. மீட்டுக் குடுத்து . ..... முடிக்க ..... திருத்தடங்கவனதப்பையைப்
ம் ஜலி அட அபல இரட்டபாடியெரிமடுவித்து விரட்டம் ஏழரை இலக்கமும்
செவ்விதாண்டு விசுவலோக[த்து விளங்கி மனுநெறி நின்]-
256
19.
2.
21.
22.
28.
24.
25.
26.
27.
28.
29.
30.
றமுமேதஞ்செய் தரைசுவீற்றிருக ஜயங்கொண்டசோழ நுயர்ஷ பெரும்புகழ்
ஈஸ கல ல கக லெ
்ரீமாஜாயிமாஜஜவேற்க்கு யாண்டு ௩௰௩ ஆவது ஜயங்கொண்ட சோழ
மண்டலத்து தாமர்க் கோட்டத்து . . . . . கட்ட சக க்
[சோழச் சருப்பேதிமங்கலத்து மஹாஸடெப் பெருங்குறிப் பெருமக்களோம்
இவ்வூர் நெற்கோட்ட . . . . . ..
ஸ்ரீபோந்தையாண்டார் கோயிலில் பவித்திரமாணிக்க மடத்துக்கு மடப்புறமாக
ஆதிலாஸசண்டேமுஜேவர்
மடத்துக்கு மடப்புறமாக விட்ட நில[ம்*] ஆவது இவ்வூர்
ஸ்ரீமதுராந்தக[த்துக்கு*]ப் போனக் கீழ்மூலை மடையில்
விட்ட நிலம் ஓட்டைத்தூம்பு ஸ்ரீராமவாய்க்காலுக்கு வடக்கும்
[ப]த்தாங்கண்ணாறு . . .......௨௨..
ணியின் திருக்காளப்பெற்று பூமிக்கு கிழக்கு ஆறாம் வதி ஹாறதுவாஜி
திருவெங்கடகிரமவித்தன் தி . . . 4...
க்கும் கிழக்கு கடையவும் வரிசையும் தரம் [பெறாது] கிடக கொல்லையுங்
குழியும் க[ர]ணியும்மான நிலத்தில் . . . . 4...
து நானூறு இங்கே பதிந்ஓராங் கண்ணாற்றும் இரண்டாம் வதி நாரணலட்ட
கிரமவித்தந் . . . 4...
த்து [அய்ப]தும் இதநுக்கு வடக்கு .பன்நிரண்டாங்கண்ணாற்று அஞ்சாம்
வதி மாங்காட்டு திருமாற்பேற்று கா . . . . . ..
ச்சேரி மணற்பா[க்*]க[த்*]து திரும சா[லை] கிரமவித்தந் பிராமணியும்
நாலாம் வதி . . . .யார் தேவிக்கும் . . . . . ..
விதி நாம்பாத்து ஸ்ரீபோந்லைக்கிரமவித்தன் பூமிக்கு கிழக்கும் தெற்கு
பன்நிரண்டாங்கண்ணாற்றுக்கு . . 4.
257
31.
32.
99.
94.
35.
36.
37.
38.
39.
கலித் ம் ஆக கண்ணாறு முன் நால் குழி மூவாயிரத்து அஞ்னுற்று
நாற்பத்தொன்பதின் [குழி][யு*]ம் ஆக கொ-
ண்டு இக்கொல்லை நிலம் வி[லை]க்குடுக்க எந்று ஸபையுள் எழுவ
குண்டூர் மாதவக்கிரம . . . .
வாமந பட்டநும் ஆற்றூர் சூரிய தேவக்காடக சோமாசியாநும் விற்றுக்
குடுக்க [வென்று] பணிக்க
க்குடுத்தோம் மாஹாஸஹ0வெவெப் பெருங்குறிப் பெருமக்களோம் இந்நிலஞ்சுட்டி
திருகொற்றவாள் கொற்று
எப்பேர்ப்பட்டது இந்நில சுட்டி கொள்ளக் குடுத்தோம்மாகவும் இந்நிலம்
ஆயிநரகாலம்' இறையிலியாக
மாஹாஸடலெப் பெருங்குறிப் பெருமக்களோம் இந்நிலம் உழுகுடிகளை
நீர் விளைக்கும் உழவிறை
[ம]ாட்டு மாயிர[த்* ]தொன்று கொள்ளப்பெறாதோமாகவும் இப்பரி[சு] விற்று
விலையாவணம் செய்து குடுத்தோ[ம் பெ]
ருமக்களோம் இவர்கள் பணி[க்*]க பணிகேட்டு எழுதிநேன் இவ்வூர்
மம$ஹனே[ன்* ] ஸ்ரீபோந்தை ஆதிவண்டேஸாறபெருமா-
ளேன் இவை எந்நெழுத்து யாண்டு ௩௰௪ [நாள் . .] இவை மண்டபத்தே
கூட்டக்குறை[வற]க் கூடியிருஸம் . . .
1. ஆசந்திரகாலம்- என்று வாசிக்கவும்
258
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 151/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 34
வட்டம் + செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1052
ஊர் 3 பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 262/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/186
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 68
அரசன் 3 முதலாம் இராசாதிராசன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : தாமர் நாட்டு பிரமதேசம் பராக்கிரமசோழ ச.துர்வேதிமங்கலத்து ஸ்ரீபோந்தை
உடைய மகாதேவர் கோயிலில் “ஸ்ரீபலி” வழிபாட்டின் போது எழுந்தருளும்
ஸ்ரீபாசுவத மூர்த்திகளுக்கு சிறுகாலைச் சந்தி வழிபாட்டின் போது
திருவமுதுக்காக வேண்டி, ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புழற்கோட்டத்து
நியமம் ஊரைச் சார்ந்த மாதேவன் திருவந்தாள் என்பவளிடமிருந்து 12
கழஞ்சுப் பொன்னினை இக்கோயில் சிவபிராமணர்கள் பெற்றுக்கொண்டு திருவமுது
அளிப்பதாக உடன்பட்டுள்ளனர்.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ[॥*] திங்களேர்தரு தன்றொங்கல் வெண்குடைகீழ் நிலமகள் நிலவ
மலர்மகட் புணர்ந்து செங்கோல்ஓச்சி கருங்கலி கடிந்து தந்தையார்
தமம-
2. ந்தம்பியர் தந்றிருமைந்தர் எந்றிவரை மணிமுடிசூட்டி கந்நிய காவலன்
தென்னவர் மூவருள் வாநகம் இருவருக்கருளி காநகம் ஒருவநுக்களித்துப்
பொ-
8. ர௬ுசிலை சேரலந் வேலைகெழு காந்தளூ[ர்* ]சாலை கலம்மறுப்பித்திலங்கையர்க்
கரசையும் அலங்கல் வல்லவனையும் கன்னக்குச்சியர் காவல(ந்)னையும்
பொந்னணி
4. முடித்தலை தடிந்து தந் கொடிப்படை ஏவி கந்நாடகர் விடு கடகரி புரள
தந்நாடையிற் தமிழ்ப்ரணி கொண்டொதந்நார் வச்சிரநெடுவாள் விச்சை-
259
[=]
~
11.
12.
14,
. வெருநெளித்தஞ்சி ஓட தந் வஞ்சியம்படையாலாங்கவந் பிதாவையும்
மாதாவோடு சதாமலி வீங்குநீர் பூண்டூர் வெஞ்சமத்தகப்படுத்தயற்
படையாகவமல்லன் பயத்-
. தோடு வரவிடும் ஒற்றரை வெருவரப் பிடிப்பித்தாங்கவர் ம(£)ருவிலாஹவ
மல்லன். யாங்கணுமஞ்சிநநெந்ந நந்கெழுதிச் செலுத்திய பிந்னைத் தந்
புலிக் கொடிப்படைஞர்ரொட்ட-
- [வா]ரணவரைசை கடல்புரைச் சிறுதுறை பெருந்துறை தெய்வ வீமகசி
யெந்று உறுதுறை மூந்றிலும் . .. . . ஆங்கவரேத்தக் கிரியின்
ஒங்கி கலுழுவை யெறெழுதி உயர் ஜயஷம்பம் எழில்பெற நிறுத்தி தந்கழல்
பணிந்தொழுகுமரைசர்களோடு சென்றாடி பொருபுலி வீரக்கொடியே
தியாகக்கொடி எடுத்தே
.. [ஒந்நலர் கவ[ர்*]ந்த தொந்நிதிப் பிறக்கம் இரவலரா நெசர்கி மீந்து விரவலில்
அவந்விடு தண்டத்தவந் வெல்புரவி நுளம்பநுங் காளிதாஸநும்
.. முண்டனும் பொற்கொம்மயநும் வில்லவராஜநும் மதில்நன் வெல்சமத் தெரியல்
போக அவ்வவர் பெருநெதி கவர்ந்து குச்சரநுப்பளன் கொய்மலற்
பசுந்தலைதார்த்தயிலப்-
பனைத் தடிந்து. முன்கொண்டு தகைவன தப்பை முந் தைப்பவு மப்பகை
செகுத்துப் புளந்வழியில் தப்பில் மல்லரைசர்களாங்கது மீட்க மாட்டாது
பூங்கழல் சரணெனப்புகுத அரணவர்க்களித்-
து தடமுடி மீட்டுக்குடுத்து முடிக்கிடங் குடுத்திடுத்து தகைவன தப்பையை
பறித்துடந்கொண்டு போ[ர* ]த்துறை புநல் இரட்டபாடி ளிமடுத்தவ் வீரட்டம்
ஏழரைஇலக்கமு இநிதிநிதாண்-
ட்டு விழலோகத் து விளங்கு மநுநெறி நின்றஹமேதஞ் செய்தரசு வீற்றிருந்த
ஜயங்கொண்டசோழந் உயர்ந்த பெரும்புகழ் கோராஜகேசரி
பந்மராந[ந*]முடையார் ஸ்ரீசாஜாயிறாஜமேவற்கு யாண்டு ௩௰௪ ஆவது
ஜயங்கொண்ட சோழ-
மண்டலத்து புழற்கோட்டத்து நியமத்தின் [கீழ்]வெள்ளாட்டி மாதேவந்
திருவன்தாளேந் இம்மண்டலத்து தாமற்கோட்டத்து தாம[ர்] நாட்டு
பிரதேசம் வ௱ாசகூமசோழச் சருப்பே-
260
15.
16.
17.
18.
19.
20.
திமங்கலத்து ஸ்ரீபோந்தை உடைய மாதேவர் ஸ்ரீகோயிலில் ஸ்ரீபலி
எழுந்தருளும் ஸ்ரீபாசுவதமூ[ர்]த்திகளுக்கு சிறுகாலை ஸந்தி ஒந்றிநுக்கு
திருவமுதுக்கு அரிசி இ-
ரூ நாழிக்கு நெல்லு ஐஞ்ஞாழியும் கறியமுது ஒற்றுக்கும் நெய்அமுது
ஒரு செவிடரைக்கும் அடைக்காய் அமுதுக்கு வெறுங்காய் இரண்டும்
வெற்றிலை நாலுக்கும் நெல்லு நாழி உழக்காழாக்கும் ஆக ஸந்தி
ஒந்றினுக்கு
நெல்லு அறுநாழி உழக்கு ஆழாக்குக்கு வைத்த செழுமை பொற்
பந்நிருகழஞ்சு இப்பொந் . . . நிசதம் கைக்கொண்டு இப்பரிசு நிவந்தம்
சந்திராதித்தவற் செலுத்த“ கடவோமாக இக்கோயில் திருவுண்-
ணாழிகை உடைய சிவஹாணன் காஸ்ரபந் கழநி[திருத்து ] பராக்கிரமசோழ
பட்டநும் காணாபந் திகடம்ப பட்டநாந திருச்சிற்றம்பல பட்டநும் காணாபந்
வில்வ [ப*]ட்டநும் [நாராணன்] அரிந்தம பாரதாஜியும் . . . க் கூத்தனும்
காஸ்ாபந் சுந்5-
[ர]தேவநாந வாநிகயேஹர . . . . காஸாரூபந் அ[ற]காளி பட்டனும் காமமபந்
திருப்போந்தைப்பட்டனும் இவ்வனைவோம் இப்பொந் பந்நிரு கழஞ்சும்
[களரி]கைச் செல்லக் கொண்டு இந்நிவந்தம் செலுத்துவதா-
நோம் இக்கோயில் . . . . முள்ளாரோம் இப்பொந் பந்நிரு கழைஞ்சாலும்
பலிசையால் நிசதம் நெல்லு அறுநாழி உழக்கு ஆழாக்கால் இந்நிவந்தம்
சந்திராதித்தவற் முட்டாமேச் செலுத்துவ-
. தாநோம் இக்கோ[யில்] . . . . . இவர்கள் பணிக்க . . . இக்கோயில்
ஸ்ரீகரணத்தாந் . . . . திவாகரந்நான [கமலப்]பிரியந்நேன் இவை
யெந்நெழுத்து
௨.௨... ௨ளிக்கக் கடவோமாநோம் . . . .
261
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 152/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 8 -
செய்யாறு வரலாற்று ஆண்டு : -
பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 257&/1915
தமிழ் முன் பதிப்பு : 80/180
(தெ.க.தொ.)
கிரந்தங்கலந்த தமிழ்
சோழர் ஊர்க்கல்வெட்டு எண்: 69
முதலாம் இராசாதிராசன்
சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப கிழக்குச் சுவர்.
பராக்கிரமசோழச் சதுர்வேதிமங்கலத்து பெருங்குடி பெருமக்கள் 4000 குழி
நிலம் விற்றுக் கொடுத்துள்ளனர். அந்நிலத்தின் எல்லைகளாக இராஜேந்திரசோழப்
பேரேரி, முருகம்பாடி வதி, பாலன் வதி போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்வெட்டு :
1. ஷுஹிஞஸ்ரீ[॥*] திங்களேர்தரு தன்றொங்கல் வெண்குடை கீழ் நிலமகள் . .
2
ட்]
4. .
4
. கலிகடிந்த மந் . . . பல்லூழிமிற் றெந்நவர் குலமகள் மாநர் பா . . . .
பூகளத்தரிந வேணாட்டரைசனை சேணாட்டொதுக்கி மேவுபுகழி ரா
- ் நிலத்தள் குலத்தவந் . . . . ன் கு . க்கைமைஅரசி . . .
- உ ஞ்சின சாளுக்கியர் வல்லவர் முதலின[ர்*] [வணங்க] . . . . , ,
௨ ங்கபெரும்புகழ் கோவிராஜகேசரி[வர]ரான உடையார் ஸ்ரீராஜ . . . .
7. ண்டசோழ மண்டலத்து தாமர் கோட்டத்து தாமர் நாட்டு பராக்கிரம
சோழச்சதுப்பேதி மங்கலத்துப் பெருங்
262
19.
14.
16.
. குறிப்பெருமக்களோம் நிலவிலையாவணக் கையெழுத்து . .
௨ கில் திருமகிழ் . . . கீழ் கூட்டக் குறைவறக் கூடியிருந்து . . .
ஜி ௨௪௪௦1
. றவிற்றுக் குடுக்கின்ற நிலமாவது மு . து தரம்பெறொது வலெலெப்பெ
.. ராஜே, சோழபேரேரிகீழ் மு[ருக]ம்பாடிவதிக்குக் கிழக்கு . . .
கொல்லை நிலமாய் கிடக நிலந் ௪௬ நாலாமிரமும் ஸ்ரீபோந்தை . . . .
காடோடுவிற்றுக் குடுத்தோம் 2ஊஹாஸடலெயோம் கீழ்பாற்கெல்லை குமுதந்
௦...
.ல்லைக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை எங்கள்ளூர் பாலந் வதிக்குக் கிழக்கும்
நாற்பாற் கெல்லைக்கும் நடுவுபட்டநிலம் . . . . ற்று சாண் கோலால் . . .
263
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 153/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு -
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 11 ஆம் நூற்.
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 267/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 80/191
(தெ.க.தொ.)
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் £ ஊர்க்கல்வெட்டு எண்: 70
அரசன் : இராஜாதிராஜதேவன் !
இடம் : கல்யாணவரதர் கோயில் சுவர்.
குறிப்புரை : மூன்று துண்டுக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் இராசாதிராசனின்
பெயரும், ஆதித்தகிருகம் என்னும் கோமிலைப் பற்றியும் தெரிவிக்கின்றன.
கல்வெட்டு
I
2 லக்க சாமுண்டநும் பெ...
2. . . . நரான உடையார் மாஜாயிறாஜ&வர்க்கு யா . . .
த் க் லூறு திருத்தி பயிர்செய்து இறையிலியாக . . .
க் லாப் பரிஹாரமும் பெருவதற்கு இத் . . . .
II
1. . . . . தாருப்பன காப்பமலர்ப் பதந்தலை தாரத்த . . .
ததத சோழச்சதுவேதிமங்கலத்து ஊாஸடெ. . . , ,
ர பனம் யானும் ௨-ஈஸாறம் இத் தத்தபெருமானாகிர . .
4. கு இவாய்[க்*]காலுக்கு தெற்கு றா சு ஆங்கண்ணுற்று . . .
264 பம்
॥॥
1. ... . . நென் . . . .த்து சாலைக்கீழ் அரற் . . . .
22௮ *அம் குழியும் இவாதித்த ஐஷத்தில் ஸ்ரீ . . . .
3... நத்தகுழி ஆயிரத்து எ[ழு*]நூற்றறு ப . . . .
265
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 154/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 3
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1055
ஊர் 3: பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 257/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 80/179
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 71
அரசன் : இரண்டாம் இராசேந்திரன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோமில் முன் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : தாமர் நாட்டுப் பராக்கிரமசோழச் சருப்பேதி மங்கலத்து மகாசபை பெருங்குறி
மக்கள் ஸ்ரீபோந்தை உடைய மகாதேவர் மண்டபத்தில் கூடி, இக்கோயில்
இறைவனுக்கு திருவாராதனைச் செய்வதற்காக வேண்டி 1126 குழி நிலத்தினை
வாங்கி அர்ச்சனை போகமாக வழங்கியுள்ளனர். இந்நிலத்தின் மீதான வரிகளைச்
சபையாரே அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
கல்வெட்டு :
தில ல்க கலச கோப்பரகேசரி பநமாந உடையார் ஈாஜேஷாஜேவ|ற்கி யா]ண்டு
௩ ஆவது
2. நாள் நூற்று முப்பத்து மூன்றிநால் ஜயங்கொண்டசோழ மண்டலத்து . . .
. தாமர் நாட்டு பராக்கிரமசோழச் சருப்பேதி மங்கலத்து மஹாஹஸலெலெப்
பெரு-
3. ங்குறி பெருமக்களோம் நம்மூர் ஸ்போ~wெ உடைய தேவர் . . . ஃ
ருக்கை மண்டபத்து கூட்டக் குறைவறக் கூடிமிருந்து ஸ்ரீபோஷை
, கோயில் திருவாராதநை செயு-
க மி. எம் லல சநால் . . . .. ஸ்ரீபோஷையுடையார் ஆதிசண்டேயரர் பக்கல்
கொண்ட . . . . பதும் கொண்டு இத்தேவர் இவ்வூர் யாளுங்கணத்தாருள்
266
. வணியன் [வீர]சோழ செரி . . . மாமயில் காமக்கோ[ட்*]டக் ௯,மவித்தந்
பக்கல் விலைகொண்டுடைய பூமி மணற்பா[க்க*]த்து வதிக்கு கிழக்கு
பரமேழர வாய்க்காலுக்கு வடக்கு ௩ ங்கண்ணாற்று பூமி குழிமுந்நூ-
. ற்று ஒருபத்தெட்டுக்கும் கீழ்பாற்கெல்லை இத்தேவர் பூமிக்கு மேற்கும்
தென்பாற்கெல்லை ம . . பாத்து கேசுவசோமாசி பூமிக்கு வடக்கும்
மேல்பாற்கெல்லை மணற்பா[க்க*]த் து வதிக்கு கிழக்கும் வடபாற்கெல்-
. லை . . . . வாய்க்காலுக்குத் தெற்கும் இன்னான் கெல்லையுள் நடுவுபட்ட
குழி முன்னூற்று ஒருபத்தெட்டும் அபிமானமேருச் சதுவே_4திமங்கலத்து
திருவேங்கட ௯,
. மவித்தன் பிராமணி பக்கல் விலை கொண்டுடைய பூமி றாஜமல்லப்
பெருவதிக்கு மேற்கும் . . . .
. மத்தமக்கு ஏறியவதிக்குத் தெற்கும் இரண்டாங் கண்ணாற்று . . . .
ன்னூற்று எட்டுக்குழிக்கும் கீழ்பாற்கெல்லை . . . . .
, யந் பள்ள வாய்க்காலுக்கு மேற்கு தெந்பாற்கெல்லை பள்ள வாய்க்காலுக்கு
வடக்கு மேல்பாற்கெல்லை நீரோடுவாக்காலுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை
கண்-
ணாற்று வாய்க்காலுக்குத் தெற்கும் இன்னான்கெல்லையுள் நடுவுபட்ட குழி
எண்ணூற்று எட்டுக் குழியும் ஆக தடியிரண்டினால் குழி ஆயிரத்தொரு
நூற்று இருபத்தாறும் சந்திராதித்த-
வரை இத்தேவ(£)ற்கு அர்ச்சநாபோகமாக இந்நிலத்துக்கு ஸஷஸெயோமே
இறை இறுப்போமானோம் ஸஹெஉள்ளெழுவப் பரியலூற் சுநரக்கிரமவி-
. த்தனும் கூடலூர் இஷிகேசுவபட்ட . . . மறலட்டநேன் இப்படியறிவேந்
இவ்வூர் . . . . கவந் ஸுரிய தேவ...
267
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 155/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 4
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1056
பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 258/1915
தமிழ் முன் பதிப்பு : 30/182
(தெ.க.தொ.)
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர் ஊர்க்கல்வெட்டு எண்: 72
இரண்டாம் இராசேந்திரன்
சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப வடக்குச் சுவர்.
ஜயங்கொண்டசோழ மண்டலத்து தாமர்க் கோட்டத்து தாமர் நாட்டு
திருவேஃகா ஆற்றின் தென்கரையில் உள்ள பராக்கிரமசோழச் சதுர்வேதி
மங்கலத்து ஸ்ரீருத்சோலை மகாதேவர் கோயிலுக்குக் காலியூர் கோட்டத்து
கழுமல நாட்டு வெண்குளத்தூர் சபையார் 40 காசுகள் பெற்றுக்கொண்டு 25
வேலி நிலம் விற்றுக் கொடுத்துள்ளனர்.
1. புவியாளுடைச் சோழகன்னகுச்சியராஜநென்றும் மன்னு தன் காத[ல*]ர் தந்முந்
மேதகு சதுரராஜம . . . .
2. ச்சிலைக்கை சேனைச்சேவகனை நிருபேந்த,சோழ (சோழ)நென்றும்
பருமணிசுடர் மணிமகுடம் சுட்டி படிமிசை . . . . . .
ட்ட அல தோடு ரட்ட மண்டலமெய்தித் திங்களும் நாடும் மதிகளும் ம[நே]மமும்
இழத மளவி தெவம .......
4. பவமிக்கு தெந்றெரி விழித்தெழு செப்பருகீர்த்தி கோப்பதகவையில் உடந்ற
தால வ் டங்கி பொருதவந் செஞ்சரமாரி தந்குஞ்சரமுகத்தி . . . . .
5. [ள்]புயத்திலும் தைக்கவும் தந் உடக் களிறெறிய தொடுகழல்விரர் மடியவு
பகையாதொரு தநி அ[நே*]மம் பொருபடை வழ .....
268
10. .
12.
15.
16.
. பி ஜய சிங்கனும் பொற்புயக்கேசியும் தாற்தலபந்மனும் மாநவந்நவரில் மண்டலிகள்
தொகையநும் மா . . . ..
, லிரட்டையனும் சிட்டியல் நந்நியநுளம்பனும் இருவர் முதல் எ[ண்*]ணிலி
அரைசரை விண்ணடகத்தேற்றி . . . . . .
யில் படைக்குண்டம் எந்றிந்நவ(ன்)ரொடஞ்சிய சளுக்கிகுல (குல)குலைவ
துலை மயிர் . . . . நுற நெளித்த ௮௧-
. லொதுக்கி கால்பறித்தோடி மேல்கடல்பாயத் துரத்திய பொழுதுல் செருக்களத்து
அவந் விடு சத்துருபுயங்கரந் நகர
. பத்திராம் பகட்டன் கழல்மெட்டி நடைப்ப . . . ளம் வராஹ வேல்கொடி
முதல் ராஜபரிச்சிந்நமுன் . . . . .
௨... குழாமும் பாவையரிட்டமும் முனைவை[யிற்] கொண்டு
விசெ௯ஷிஷேகஞ் செய்து தெந்றிசை . . .
லங்கையிற் [அ]டற்படை கலங்காழ் வீரசலாமேகனை காற் களிற்றோடும்
பகைக்கதிர் முடித்து கடுவிடுந்தொல் இலங்கைக் . . . . .
. பகைகளத்திடைப் பிடித்து சாவாப் பெருபுகழ் வளர்த்த கோப்பரகேசரி வநறாந
உடையார் ஸ்ரீராஜேஷ,மேவற்கு . . . . .
௨ ண்டு நாலாவது ஜயங்கொண்டசோழ மண்டலத்து காலியூர்க் கோட்டத்துக்
கழுமலநாட்டு வெண்குளத்தூர் 2௱ஹ[ர* ]ஸலெயோம்
ஸ்ரீபோந்தை கூட்டக்குறைவறக் கூடிமிருவ இமண்டலத்துத் தாமற்
கோட்டத்து தாமர் நாட்டுப் பராக_மசோழச்ச துவேதி மங்கலத்துத்
திருவே[க்*]காவிந் தெ . . .
ஸ்ரீருஉ, சோலை ஊாஹமேவர் ஆதிதாஸசணேமுறஜேவர் பக்கல் நாங்கள்
கொண்ட காசு நாற்பது இக்காசு நாற்பதும் கொண்டு நாங்கள்
விற்றுக்குடுத்த வகி ஆவ-
து எங்களூர் காடேறு கொல்லை மிப்பாழ் கிட காணியும் இதந் கீழ் ஒரு
ந . . . நெல் விளைஞ்ச . . . நிலமும் வரகுள்ளிட்டப் புன்செய் நிலம்
விளையும் நிலமும் கொல்லை-
269
18.
20.
21.
22.
28.
24.
25.
20.
யும் விற்பதற்குக் கீழ்பாற்கெல்லை கீழைமுகட்டுக் கொல்லைக்கு மேற்கு
தெந்பாற்கெல்லை ஸஸு,2ணட வா[ய்]க்காலுக்கு வடக்கும்
மேல்பாற்கெல்லை குத்திநல்லூர் எல்லை
. க்கும் கிழக்கும் வடபாற்கெல்லைக்குக் பெரியேரி நீர் போகைக்குத் தெற்கும்
இந்நாந்கெல்லை உள்ளும் நடுவுபட்ட நிலத்துக்கு .ஹஉவரத்துக்கு
காசு பத்து
இறை கூஷத்துக்குக் காசு முப்பதும் கொ[ண்*]டு இந்நான்கெல்லை
உள்ளு[ம்*] நடுவுபட்ட நிலம் மிகுதிக்குறை உள்ளடங்க இருபத்தைவேலி
நிலம் விற்றுக்குடு-
தீதோம் இருகாலாவதும் முக்காலாவதும் தாமற் கோட்டத்துத் தாமர் நாட்டு
பராக்கிரமசோழச் சருப்பேதிமங்கலத்துத் திருவேகாவிற் தெந்கரை
ஸ்ரீ உசோலை 2£ர)ஹ[ர*]62வர் ஆதி-
தாஸ மணெஸாஙக்கு விற்று விலையாவணம் செ[ய்*]து குடுத்தோம் இந்நிலம்
இப்பரிசு விற்றுக்குடுத்து இதந்நால் வந்த விலைப்பொ[ரு*]ள் முற்றும்
ம[ற]
கொண்டு இதுக்கு இதுவே பொருள்மாவறுதிப் பொருட் செலவோலையுமா
இலத! இ பகு அர க்கு வேண்டும் இறை ஆரமும் அஹூவழமும்
அறக்கொண்டு விற்று வி-
[லையாவணம்] செய்து குடுத்தோம் இந்நிலத்தேறின குடிகளை எச்சோறும்
கூற்றுநெல்லும் வெட்டி அமைஞ்சி உள்ளிட்டு கோமில் வாசலாற்போக
குடிமை எப்பேர்ப்பட்ட -
தும் ஊரிடுவரிப்பாடும் காட்டப் பெறாததாகவும் இவ்விலைக்காணப் படி
கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளப் பெறுவாராகவும் இப்பரிசு
ஸலெெயார் நின்று
பாடகத் திருநீலகண்டக்கிரமவித்தனும் பாடகத்து ஸோ2விக்கிரமவித்த
சோமாசியாரும் இறாயூர் வெண்ணையக்கிரமவித்தனும் பாடகத்து
சோமினாறக்கிரமவித்தநும் பூதலூ[ர்*]
270
27.
28.
29.
30.
31.
32.
32. ஃ ௩
94.
முத்த ஸ்ரீமரநம்பிக்கிரமவித்த நும் பணியால் இப்பரிசுட்டி விற்றுக் குடுத்தோம்
மேற் சொல்லப்பட்ட ஸ்ரீறா[ஆ,*]சோலை 8ஹாமேவர் ஆதிதாஸ
பமணேயுாக்கு முற்சொல்லப்பட்ட
வெண்குளத்தூர் 2ஊஹாஸடெெப் பெருங்குறிப்பெரு மக்களோம் இப்பரிசு
ஷூெெ உள்நின்று பணிகேட்டெழுதினேன் இவ்வூர் 2மஷன் சிவக்-
கொழுந்து சந்திரசேகரநேன் இவை என்னெழுத்து இப்படி அறிவேன்
பாடகத்துத் திருவேங்கடக் கிரமவித்தநேன் இப்படி யறிவேன் பாடக-
தீதுத் திருப்பொரிக் கிரமவித்தநேன் இப்படி அறிவேன் பாடகத்து
திருப்பனங்காடக் கிரமவித்தநேன் இப்படியறிவேந் பாக்கத்து ஏதக்கிரமவி-
த்தநேன் இப்படி அறிவேந் இவ்வூர் காவிரகண்டி காமக்கோடநேன் இப்படி
அறிவேந் குவண்டூர் சீதரக் கிரமவித்தநேந் இப்படி யறிவேந் மணபாத்-
தருளாளக் கிரமவித்தநேன் இப்படியறிவேந் மாகறதிருவனேன் இப்படி யறிவேந்
மறவாப்பாக்கத்து பொன்னையக் கிரமவித்தநேன் இப்படியறிவேந் வை-
தாஸன் ந[டுவா]யூர் கல்லூர் சக் . . . பட்டநேன் இப்படியறிவேன்
மொமல்லுயநுபட்டநேன் இப்படியறிவேந் சொமல்லுந் கேசுவநேன்
இப்படியறிவேந் சுந்தரத்தோள் தாஸக்கிரம ஸ்ரீரா2.ஸலாஸநேன் ॥-
271
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 156/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 5
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி, 1057
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 244/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/165
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 72
அரசன் : இரண்டாம் இராசேந்திரன்
இடம் 3 சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப மேற்குச் சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து தாமர்க் கோட்டத்து தாமர் நாட்டு பராக்கிரம
சோழ சதுர்வேதி மங்கலத்தில் இருந்த பெருமண்டபத்தில் மகாசபை பெருங்குறி
பெருமக்கள் கூடி, 10 காசுகள் பெற்றுக் கொண்டு திருவெ..காவின் தென்கரையில்
உள்ள பவருத்திர சோமீசுரதேவர் கோயிலுக்கு 14000 குழி. நிலத்தினைத்
தேவதானமாக வழங்கியுள்ளனர்.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ[॥*] திருமகள் மருவி-
2. ய செங்கோல் வேந்தன் முன்
3. போந சேனை பின்னதுவாக
4. முன்னேஷி செந்று இரட்டபாடி
5. ஏழரை இலக்கமுங் கொண்டு கொல்லாபுரத்து ஜயஹூலம் நாட்டி எதிரமர்
6. பெறாது எண்டிசைவயிற் பறையது கறங்க பேராற்றங்கரைக் கொப்பத்து
ஆஹவ-
7. மல்லனை அடற்சேனையெல்லாம் பாரது
8. நிகழப் பசும்பிணமாக்கி ஆங்கது கண்-
272
10.
11.
12.
18.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24,
25.
26.
டு நின்ற ஆஹவமல்லன் புறக்கிட்டோட அவனா-
னை[யு*]ங் குருதையு மொட்டக நிரைகளும் பெண்டிர் பண்டாரமும்
விலாவமும-
டங்கலுங் கைக்கொ[ண்டு*] விஜயாலிஷேகம் பண்ணி வீரஹஸிஹாணனத்து
வீற்றிருந்த-
ருளிய கோப்பரகேசரி வ2ஃமான
உடையார் ஸ்ரீராஜேஷ., தேவர்க்கு யாண்டு ர ஆவது ஜயங்-
கொண்டசோழ மண்டலத்து தாமர்க் கோட்டத்து தாமர் நாட்டு பராக்கி[ரம
சோ]
ழச் சதுவேகிமங்கலத்து பெருமண்டபத்தே 2ஊஹாஸடலெப் பெருங்குறி
பெ(ய)ருமக்களோங் கூட்டக் குறைவறக் குடியிருந்து திருவெஃகாவின்
தெந்-
கரையில் லவருத்திர சோமீசுரதேவர்க்கு தேவதானமாக நம்ம தர்ம்ம . .
யுள்பாலும் பிடாகை கொல்லைநிலம் வேண்டுந தூரேரி
நீர்நி[ர்* ]க்கும் எங்கணிலத்துக்கு மேற்க்குந் தெந்பாற்கெல்-
லை திருச்சிற்றம்பலச்சேரிமில் கிழக்கடைய பமிரேற்றிந நிலத்து
க்கு வடக்கு மேல்பாற் கொல்லை நிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்-
லை இவ்வூர் கொல்லைநிலத்துக்-
கு தெற்குமாக இன்னான்கெல்லையுள்ளும் நடுவுபட்ட நிலத்துக் கல்-
லுங் களருந் நீக்கி இவ்வூர் ம[ண்ட]பத்து கல்வெட்டிந படிக்கி கோலால்
ப
திநாமிரங் குழி[யி* நாலு ஆதிஉஸமமண்ணேயரர் பக்கல் பத்துக்காசு செ
காண்டு இப்பதிநாயிரங் குழியும் ஆசந்திர காலம் இறையிலி-
a3
27.
28.
41.
42.
43.
யாக இத்தேவர்க்கு விற்றுக்குடுத்தோம் இந்நிலத் துக்கு நீர்பாய்வா-
ய் வாக்கால் அழிச்சியாற்றிலே கல்லணை கழி நீர்க்கிய்ந்தவாறு வா-
, ய்க்காலில் நீர்பாச்சிக் கொள்ளப் பெறுவதாகவும் இவ்வாய்க்கா-
. லி[ல்*] நீர் மற்றையார் விட்டுப் பாச்சப் பெறாதாராகவும் கேசமங்கலத்து
. . . .ங்குத்த நல்லூரே மேற்ப்போன வழிக்குக் கிழக்கு கேச
. மங்கலத்து குடிகளிருந்த விட்டுக்குக் கீழே .... . கழத்திலே . . . .
௨க்குமாகக் கல்லி கிழக்கு நோக்கிப் போக இந்நிலத்துக்கு நீர்பாய . . . .
, வாய்க்கால் கல்லி நீர் பாய்ச்சி கொள்வார்களாகவும் இநீர் மற்றையர் திண்டிப்
பா-
, ச்சப்படப் பெறாதார்களாகவும் இப்பூமி உழுங்குடிகளுக்குக் குடி . . . .
. மிரமும் இப்பூமிமிந் மேலைக்கொல்லையிலே நாநூறு குழி
. குடிமிருக்கையாக கொண்டு குடியிருத்திக் கொ-
உள்ளப் பெறுவதாகவும் இப்பூமி உழுங்குடிகளையே அமஞ்சியும் . . .
. ம்பிலும் வெட்டிக்கொள்ளப் பெறுவார்களாகவும் இக்காசு பத்தும் பரா. . . .
. க்கிரமசோழச் சேரி பாக்கத்து மூத்தமணி சிவதேவக் கிரமவித்தனும் செ]
சகெறாஜு கடிகை மூஷன் திரிவிக்கிர்மன் சிவசரணமாந பராக்கிரம
டட
இப்படி அறிவேன் இவ்வூர் . . . . திரிவிக்கிரமபட்டநேந் இப்படி அறிவே .
கேசவபட்டநேந் இப்படி அறிவேன் இவ்வூர் . . .
274
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 157/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு த
வட்டம் : செய்யாறு .... வரலாற்று ஆண்டு : கியி. 1060
ஊர் 3: பிரம்மதேசம் --- இக, ஆண்டறிக்கை: 2578/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/181
(தெ.க.தொ.)
எழுத்து : -கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 74
அரசன் : இரண்டாம் இராசேந்திரன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப கிழக்குச் சுவர்.
குறிப்புரை : ஸ்ரீபோந்தை பெருமானடிகள் கோயிலுக்குரிய நிலத்திற்கு இக்கோயில்
பண்டாரத்திலிருந்து பொன் பெற்றுக்கொண்டு பராக்கிரமசோழ சதுர்வேதி
மங்கலத்து பெருங்குறி சபையார் வரிவிலக்கு அளித்து ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
இந்நிலத்தின் வருவாயைக் கொண்டு வேதம் வல்ல பிராமணருக்கு
உணவளிக்கவும், இறைவனுக்கு சந்தனம், சிகாரி ஆகியவை வழங்கிடவும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1, உடையார் ஸ்ரீமாஜேல... மேவற்கு யாண்டு எடாவது நாள் [௯]௰ரு னால்
ஜயங்கொண்டசோழ மண்டலத்து தாமர் நாட்டு பராக்கிரமசோழச் சதுப்பேதி
மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களோம் இ . . .
2. லஷத்து தாலியும் பூசம் பெற்ற விசாழக்கிழமை நான்று நம்மூர் உடையார்
ஸ்ரீபோஷஷெயுடையார் கோயிலிலே கூட்டக் குறைவறக் கூடிமிருவ பணிப்
பணியால் பணி . . . .
3. ஸ்ரீபோஷய் உடையார் பண்டாரத்துப் பொன்கொண்டத்தேவர் நிலங்களில்
வஷ . . . . நெல்லு ஸலெயோமே [இறு]ப்பதாக இந்நெல்லுக்கு
மந்திராதிதவர் வேதம்வல்ல நா . . . . .
275
10.
11.
. வகளை கோயிலிலே ஊட்டவும் இவர்ப் பறியலுக்கு மண்டயபட்டன்
பறி[ய* ]லும் மணல்பாக்கத்து வதிக்கு கிழக்கு பரமே வாய்க்காலுக்கு
வடக்கு மூன்றாங் கண்ணாற்று குழி நாநூ . . . .
, ம் ஸலெயோமே இறையிறுக்க இத்தேவர் பண்டாரத்துப் பொந் கொண்டு
இறை நிலத்துக்கு வக இறை எப்பேர்ப்பட்டதும் ஸலெயோமே யிறுக்க
இ .... த்துப்போக . . . .
. மெய்ப்பூச்சுக்கு நித்தம் ஒருபலச் சணைமும் நித்தம் கழஞ்சு சிதாரியும்
சாதித்தவர் செல்வதாக இ . . . நிவஷம் இரண்டு வஷாதித்தவர்
செல்வதாக இப்பரிசு பணிப்பணியால் ப . . . .
. ணம் பண்ணிக்குடுத்தோம் பெருங்குறிப் பெருமக்களோம் ஹூறியலடைந்
னெழுத்து பணிய நகரம் . . ர. கூடலூர் [ஆளி கேசுவப்ட்டதும்
முடிகொ[ண்*]ட சோழச்சேரி பறியலூர் .
டநும் ராஜே, சோழச்சேரிமில் திருவேகம்ப்பக்கிரமவித்தநு[ம்* ] பணியால்
பணிகேட்டெழுதிநேந் [அஹ[]க._ மாதம, ! கடிகை 2யஷன் சிவமான
மூவாயிரத்தறு நூற்றுவநே[ன்]
. இப்படி அறிவேந் வைகா[ன]ஸன் மெளதமந் கேவ பட்டநேந் இப்படி
அறிவேந் ஆழியன் கூத்தநேந் இப்படி அறிவேந் குசவந் கொம்மண சி
.. போந்தையேன்
இப்படி அறிவேந் கொல்லன் குபாலி பொந்நயேன் இப்படி அறிவேந்
வைம-த்[தந்* ] திருவிக்கிரம பட்டநேன் இப்படி அறிவேந் காமயபந்
காமயபட்டநேந்
இப்படி அறிவேந் தட்டான் கணவதி சேரியேன் இப்படி அறிவேந் பரமமிவந்
சுற்றி ஒற்றியேந்
1. த்ரைராஜ்ய-என்று படிக்க.
276
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
குறிப்புரை :
கல்வெட்டு :
திருவண்ணாமலை
செய்யாறு
பிரம்மதேசம்
தமிழ்
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர்
இரண்டாம் இராசேந்திரன்
தொடர் எண் :- 158/2017
ஆட்சி ஆண்டு : 15
வரலாற்று ஆண்டு : கி.பி. 1067
இ.க. ஆண்டறிக்கை: 256/1915
முன் பதிப்பு : 80/178
(தெ.க.தொ.)
ஊர்க் கல்வெட்டு எண்: 75
சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் .மண்டப கிழக்குச் சுவர்.
காலியூர் கோட்டத்துக் கழுமல நாட்டுச் சதுர்வேதிமங்கலத்து வெண்குளத்தூர்
எனும் ஸ்ரீபரமேஸ்வரச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார் 80 காசுகள்
பெற்றுக்கொண்டு தாமர்க் கோட்டத்துத் தாமர் நாட்டு பராக்கிரமசோழ சதுர்வேதி
மங்கலத்து வேகவதி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள ருத்ரசோலை
மகாதேவர்க் கோயிலுக்கு நில விற்பனைச் செய்துள்ளனர்.
1. ஷஹிஞஸ்ரீ[॥*] திருமகள் மருவிய செங்கோல் வேஷந் . . திருத்தமை[ய*]
நோடும் இரட்டபாடி ஏழரை இலக்கணமும் கொணி[டு]
2. கொல்லாபுரத்து ஜயஷம்பம் நாட்டி எதிரமர்பெறாது கொப்பத்து
விஜையா-
3. ஷிஷேகம். [செய்]
ஆஹவமல்லனை யருஞ்சேனையு [மா]னையும் கு[தி]ரையும் கொண்டு
4. து வீரஸிஹாஸநத்து வீற்றிருந்தருளிய கோவிராஜகேசரிபராந உடையார்
ஸ்ரீசாஜேந தேவற்கு [யாண்டு ௨௰ தாவது ஜயங்கொண்ட
5. சோழமண்டலத்து காலியூர்க்கோட்டத்து கழுமலநாட்டு வெண்குளத்தூராகிய
சீ பரமேஸறச்சதுவேதி மங்கலத்து மஹாஸ-
277
6.
7.
11.
18.
. தீதே கூட்டக்குறைவற கூடியிருந்து இம்மண்டலத்து தாமர்க் கோட்டத்து
தாமர் நாட்டு பராக்கிரமசோழ சதுர்வேதி மங்கலத்து திரு[வெக்]கா
ம் ருத்திர சோலை மஹாதேவர்க்கு ஆதிதாஸசண்டேமுரதேவர் பக்கல்
கொண்ட காசு முப்பதுங் கொண்டு நாங்கள் விற்றுக்குடுத்த . . .
த... செயிது எங்க . . . பாடகத்துச் சந்னயக் கிரமவித்தன் நிலத்துக்கு
கிழக்கு மேற்கு நோக்கிப்போந வதி [மங்கலத் . . .] ்
௨. கரைக்கு வடக்கு இ நிலத்து நின்ற பயந் மரங்களுமேரிகரைக்கு கிழக்கு
படாகத்து திருவேங்கடகிர[ம]
வித்தனும் ஸ்ரீவைகுந்தத்து தேவர் நிலத்துக்கும் கொட்டுக்காலுக்குத் தெற்கும்
[வாத்துதெசு]கேசுவக்கிரமவித்தனும்
[இந்த] வாய்க்காலுக்கு வடக்கு இராயூ[ர்*] சாமுண்டக் கிரமவித்தனும்
உறுப்புட்டுர் கூளசந்ம நிலத்துக்குங் காலுக்குங்
- [கரை]க்கு மேற்கு முறுப்புட்டுர் காளெரு . . . வார் நிலமடங்கல்
இந்நாந்கெல்லைக்கும் நடுவுபட்ட நிலமி[கு*]திக்கு
வாய்க்குழியு[மிது ] குள்ளவ[ய்கு] நாங்களும் விற்று விலையாவணஞ்
செ[ய்*]து குடுத்தோமிருகாலாவது முக்கால[வதும்]
௨ தாமர் நாட்டுப் பராக் . . . சோழச்ச . . . மங்கலத்து திருவெ
௨.௨.௨. உ தெந்கரை திருவெ . . . மஹாதே . . . திதாஸ ஸணேயார்க்கு நாங்
. கள் விற்று விலையாவணஞ்செய்து குடுத்தோம் இந்]நிலத்துக்கு விலை
யித்து இறை ஆஷு[முட்பட்ட] மிருபதி[ன்] ஆக . . . ஆசிரு கலமே
உ பேர்பட்ட விலையுங் கொள்ள . . . குடுத்தோமா . . . லம் இப்பரிசு விற்றுக்
குடுத்து . . .
தி நால்லாவது இறை ஆஹ... ஆவ மற . . . இந்நிலத்துக்கு இதுவே
விலை
278
20.
21.
22.
28.
24.
25.
26.
27.
28.
29.
உறுதி பொருட்செலவோலை இதுவேயா . . . இந்நிலத்துக்கு இதுவே
விலை
விந் நிலத்துக்கு சிறுகுடிகள் தரணி நாகனெ . . . கொண்டு
விலைக்கற விற்றுக் குடுத்து . . .
யுங் கொள்ளவும் அட்டவும் பெறாதே . . . தாமாகவும் . . . கல்லிலும்
செம்பிலும் வெ . . .
தாகவும் இப்பரிசு இறையாவ '. . . நின்று வேங்கடக் கிரமவித்த .
வேங்கடக்கிரமவித்தனும் இராயுர் வி . . . த்தனும் பணிப்பணியால் . .
றுக்குடுத்தோம் தாமர் கோட்டத்து தாமற் . . . . க்கிரம சோழச்
சதுவேரதி . .....
வக்காவின் தென்கரை [உரு] சோலை . . . சாரிதாஸந் சளே
. . . வெண்குளத்தூ[ர்] மஹாஸ . . ஸலெயுணிந்று பணிகேட்
வும் ஸலெயுள்ளெழுவ சந்[தி]ரசேகரநேந் . . . . . நெழுத்து இந்நிலத்துக்கு
வுகளில் பாச்சவும் நெற்க்கூ[லி] பெறுவதாக . . . து . . . கிணறுள்ளள
ய வதாகவும் இப்பரி . . . விற்று . . . து மஹாஸலெயோம் . . .
து சந்திரசேகரநேந் . . . நீ . . . து இப்பரிசு விற்று . . .
௨ம் பாடகத்துக் காமக்கோ . . . ராக்கிரம . . . . இவெ எந் ....
279
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 159/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 3
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 11-நூற்.
ஊர் 1 : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 246A/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/168
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 76
அரசன் : முதலாம் இராசேந்திரன்
இடம்: சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப தெற்க்குச் சுவர்.
குறிப்புரை : கல்வெட்டு முழுமை பெறாமலும்” சிதைந்தும் காணப்படுகிறது. இவ்வூர்
மகாசபை பெருமக்கள் ஸ்ரீபோந்தை மகாதேவர் வழிபாட்டிற்காக வரிவிலக்கு
அளித்து நிலத்தினைக் கோயிலுக்கு விற்பனைச் செய்துள்ளனர்.
த வ மாக இக்குழி விளைநிலத்துக்கு வடக்குக் காடுதிருத்தி வைச்ச
குழி ஆயிரமும் வையிராகரத்துக்கு மேற்க்கு கழநிக்கு கிழக்கு
ஈச்சங்காட்டுக் கிடந்த நிலம் திருவமுதுக்கு வைத்த குழி ஆயிரமு(ம்)
2. மாக காசும் அமஞ்சியும் எச்சோறும் உள்ளிட்டுக் காட்டப் பெறாதோமாகவும்
இப்படியே ஸ்ரீபோந்தையுடைய மாஹதேவர் கோயிலிலே சூ-
3. திதாஸண்டேமுரர் பக்கல் கொண்டு ஆசந்திரகாலம் இறையிலிஆக
விற்றுக்குடுத்தோம் ஊஹ[ர*]ஸடலெெப் பெருங்குறிப் பெருமக்களோம்
ஸலெயு. . . . .
4. [சே]ரழகேரளச்சேரி மணற்பாக்கத்து தேவந் . . . . . ... . மணற்பாக்கத்து
அக்க[லூ]ர் ஷஹஸ,லட்டன் பணிப்பணியால் பணிக்க [இப்]பணி
கேட்டெழுதிநேன்] . . . .
5. சோழ மூவாயிரத்து [முன்னூற்று]வந் இவை எந்நெழுத்து இப்படி அறிவேந்
இவ்வூர் [மமிவ]ஸரஹணந் பல்லவபுரமுடை . ... . உடை . . தநேந்
இவை ௭-
280
6. [ன்னெழுத்து]. . . . . ... இப்படி அறிவேநிவை
அறிவேந்நிவ்வூர் . . . . . . இப்படி அறிவேன்
7. இப்படி . . . .
281
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 160/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு தன்
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1070
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 264-67/1977-78
மொழி : தமிழ் .... முன் பதிப்பு :
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 77
அரசன் : முதலாம் குலோத்துங்கன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் அருகே நடப்பட்டுள்ள கல்.
குறிப்புரை : துண்டுக் கல்வெட்டு. முதலாம் குலோத்துங்கனின் மெய்க்கீர்த்தி ஒரு பகுதி
மட்டும் உள்ளது. நிலம் ஒன்று விற்பனைச் செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு :
1.. செயமகளை இளங்கோப் பருவத்து
2. வாளுறை கழித்து தோள்வலி காட்
3. பாவைமிந் தன் தனிமையுந் தவிரப புணி
4. ஞ்செல்ல வெண்குடை மிருநில விளாகம்
5. தெந்னவந் கருஷல் பருஷலைத்திடத் தந்பொ
6. ங்கணும் பட்ட வெங்களிறும்
7. எளிட்ட . . . பல பல முதுகும் பய
8. சைக் கைக்கொண்டி(ரா)ய திருப்புய
9. வார் ஸ்ரீகுலோத்துங்கசோழதேவர்
10. கள் ஆடவல்லாள் கங்கைகொண் _-
11. ங் கணமென்நும் பாணியி
282
12
18
14
15.
. விப்பஞ்சவரைவரும் பெ. . . .
. தியூம் மத்தவெங்கரி படுன
௨ மிரமும் தியாகமும் விளங்க
ஹுூதி நிலவிலையாவணக் கைய் யெ
283
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 161/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 48
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1118
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 261/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/185
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 78
அரசன் : முதலாம் குலோத்துங்கன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : சோழமண்டலத்து சிந்தாமணி வளநாட்டு மீசெங்கிளி நாட்டு பருத்திக்குடி
ஊரைச் சார்ந்த கோமில் கொண்டான் என்பவனிடமிருந்து தாமர் நாட்டு
தினசிந்தாமணி சதுர்வேதிமங்கலத்து போந்தை உடையார் கோயிலில் திருநந்தா
விளக்கெரிக்க இக்கோமில் சிவபிராமணர்கள், ஸ்ரீமாகேசுவரர்கள் கண்காணி
செய்வார், கோயில் வாரிய பெருமக்கள் ஆகியோர் 100 காசுகள் பெற்றுக்கொண்டு
விளக்கெரிப்பதாக உடன்படிக்கை செய்து கொடுத்துள்ளனர்.
கல்வெட்டு
1. ஹஹிஸ்ரீ[॥*] புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள். நிலவமலர்
மகள் புணர உரி[சை]மயில் சிறந்த மணிமுடி சூடி மீனவர்
2. னிலைகெட வில்லவர் குலைதர ஏனை மன்னவரிரியலுற்றிழிதரத் திக்கனைத்து
தன் சகனடா(ர்)த்தி விஜலியேகம்' பண்ணி வீரஸிங்ஹாஸன-
3. த்து உலகுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோவிராஜகேசரி பன்மரான
சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்கதேவற்கு யாண்டு நாற்ப-
4. த்தெட்டாவது ஜயங்கொண்டசோழ மண்டலத்து தாமர் கோட்டத்து தாமர்
நாட்டு தினசிந்தாமணி ச.துர்வேதிமங்கலத்து
1. சக்கரநடாத்தி விஜயாஜிஷெகம்- என்று படிக்க
284
. உடையார் ஸ்ரீபோந்தை உடையார் கோயிலில் சிவபிராம்மணன் ௨க்ஷிணா
மூர்த்திபட்டனும் திரிச்சிற்றம்பல பட்டனும் திருவுணாயக பட்ட-
னும் சூரியதேவபட்டனும் போந்தை(ந்தை )னாயக பட்டனும் இவ்வனைவோம்
ஸ்ரீகோமிலில் ஸ்ரீமாஹேறாற கங்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகோயில்
7. வாரியப் பெருமக்களுக்கும் கரணத்தானுக்கும் தீட்டுக்குடுத்த பரிசாவது
இவ்வாண்டு மாசிமாசத்து பூர்வபக்ஷத்து திங்கள் கிழமையும் சித்தி-
. ரையும் பெற்ற நாள் . . . . . சோழமண்டலத்து சிந்தாமணி வளநாட்டு
மீ[செங்கிளி நாட்டு பரித்திக்குடி பரித்திக்குடையான் வேளான் கோயில்
கொண்-
லத்த “ பொன் கொண்டு பொலியூட்டாக சந்தி மிரண்டுக்கு எரிக்கக்
கடவோமான விளக்கு இரண்டுக்கும் கைக்கொண்ட அன்றாடு நற்காசு
நு[ர*]று இக் . ..
285
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 162/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 6
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 1124
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 261/1977- 78
மொழி ; தமிழ் முன் பதிப்பு ௨2
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 79
அரசன் 3: விக்கிரமசோழன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் திருச்சுற்று தெற்குச்சுவர்.
குறிப்புரை : தாமர் கோட்டத்துக் கரைக்கோட்டை பிரமதேயம் தினசிந்தாமணிச் ச.துர்வேதி
மங்கலத்து உடையார் ஸ்ரீபோந்தை உடைய நாயனார் கோயிலில்
மணற்பாக்கத்தைச் சேர்ந்த அம்மைத் திருச்சானி, செல்வநங்கை ஆகிய
இருபிராமணப் பெண்களும், குமாரன் மகன் மற்றும் லோஹிதன் என்கிற
நாதன் ஆகிய நால்வரும் தலா ஒரு காசு வீதம் மொத்தம் 4 காசுகளுக்கு 4
சந்திவிளக்குகள் வைப்பதற்கு இக்கோயில் பிராமணர்கள் பெற்றுக்கொண்டு
விளக்கெரிக்கச் சம்மதித் துள்ளனர்.
கல்வெட்டு
1. [ஹஹஷிஸ்ரீவிக்கி]ரமசோழ தேவற்க்கு யாண்டு சு ஆவது தாமர்க் கோட்டத்து
கரைக்கோட்டை ஸைஹூேயமாந திணசிஷாமணிச் சதுப்பேதிமங்கலத்து
உடையார் ஸ்ரீபோ[ந்*]தை உடைய நாயனாற்கு
2. [மண ]ற்பாக்கத்து ஆளுகபெருமான் கிரமவித்தந் ஸாஹணி அம்மைத்
திருச்சாநி வைத்த ஸநிவிளக்கு க க்கு க[£]சு மணற்ப்பாக்கத்து குமார
மக(நின் வைத்த ஸநிவிளக்கு கக்கு காசு கம்
3. மணற்ப்பாக்கத் திருச்சிற்றம்பலமுடைய வாணி செல்வ வனங்கைச் சானி
வைத்த ஸநிவிளக்கு க க்கு காசு க ம் லோஹிதநாந நாயகன் வைத்த
ஹு
286
4. நி விளக்கு க க்கு காசு க ம் ஆக இந்னாலு காசும் கைக்கொண்டு
ஸநிவிளக்கு நாலும் இக்கோயில் ஸிவவாராஒணந் க௯ாபமடவந்
தக்ஷிணாமூத்தி[*]பட்டநும் கருவுனாயக-
5. பட்டநும் உள்ளிட்ட மிவஹா$ணைரோம் இந்த ஸநிவிளக்கு நாலும்
வஷிராகிகூவரை செலுத்தக் கடவோம் ஆநோம்
287
த.நா.அ.. தொல்லியல் துறை தொடர் எண் :- 163/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு டூ
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1124
ஊர் : பிரம்மதேசம் இ.க. . ஆண்டறிக்கை: 262/1977-78
மொழி : தமிழ் , முன் பதிப்பு ர ௮
எழுத்து : கிரந்தங்கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 80
அரசன் : விக்கிரமசோழன்
இடம் : சந்திரமெளலீஸ்வரர் கோயில் திருச்சுற்றுத் தெற்குச்சுவர்.
குறிப்புரை : கரைக்கோட்டு மண்டலத்து. விஜயராசேந்திர வளநாட்டு புலியூர் நாட்டு மயிலாப்பூர்
உடையான் என்பான் ஒரு காசு தானமளித்துள்ளான்.
கல்வெட்டு :
1. ஷஹிஷஸ்ரீ விக்கிரமசோழ தேவற்க்கு யாண்டு ஆறாவது கரைக்கோட்டு
2. [ம]ண்டலத்து விஜயராஜேஐ, வளநாட்டு புலியூர் நாட்டு மமிலாப்பூரூடையா
2 ன் நிட்ட காசு க இக்காசு ஒன்றும் இக்(கா)கோயில் காணி உடைய
சிவா
288
த.நா.அ. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
திருவண்ணாமலை
செய்யாறு
பிரம்மதேசம்
தமிழ்
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர்
விக்கிரமசோழன்
தொடர் எண் :- 164/2017
ஆட்சி ஆண்டு : 9
வரலாற்று ஆண்டு : கியி. 1127
இ.க. ஆண்டறிக்கை: 263/1977-78
முன் பதிப்பு த
ஊர்க் கல்வெட்டு எண்: 81
சந்திரமெளலீஸ்வரர் கோயில் திருச்சுற்றுத் தெற்குச்சுவர்.
ஜயங்கொண்டசோழ மண்டலத்து பெரும்பாணப்பாடி கரைவழி கந்தபுறபேட்டை
ஊரில் வசிக்கும் வடுகவாணியன் ஈக்காட்டைச் சார்ந்த பூவன் திருவல்லம்
உடையான் என்பவனிடமிருந்து கரைக்கோட்டுப் பிரமதேயத்து உடையார்
ஸ்ரீபோந்தை நாயகர் கோயிலில் சிறுகாலைச் சந்தியின் போது ஒரு சந்திவிளக்கு
எரிக்க ஒரு காசு மற்றும் ஒன்றே கால் திரமம் இக்கோமில் சிவபிராமணர்
பெற்றுக்கொண்டுள்ளனர்.
கல்வெட்டு :
1. [ஹ]ஷிஸ்ரீ விக்கிரமசோழ தேவற்க்கு யாண்டு ஒன்பதாவது ஜயங்கொண்ட
2. போந்தை நாயகர்க்கு சிறுகாலை ஸந்திமில் எரிக்கும் சந்திவிளக்கு ௧
சோழமண்டலத்து பெரும்பாணம்பாடிக் கரைவழி கந்தபுறப்பேட்டையில்
இருக்கும் வடுகவாணியன் ஈக்காட்டு வாணியந் பூவந் திருவல்லம்
முடையான் கரைக்கோட்ட பிரமதேயத்து உடையார் ஸ்ரீ[நா]-
சந்திராதித்தவரை எரிக்கக் கடவோமாக பூவந் திருவல்லம்முடையாந்
பக்கல் இக்கோயிலில் மமிவஹ;ா2ணரோம் கைக்கொண்ட காசு க திரமம்
கவ ம் கைக்கொண்டோம் காமமிவந் தக்ஷிணா2த[*] பட்டந்நும்
கருவுனாய-
8. க பட்டநும் உள்ளிட்ட மரிவஹ;ா2ஊணரோம் இப்படிக்கிவை
289
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 165/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 3
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1181
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 265/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/189
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 82
அரசன் : மூன்றாம் குலோத்துங்கன்
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : கல்வெட்டு முற்றுப்பெறொமல் உள்ளது. உள்ளாவூர் ஊரைச் சார்ந்த கம்பன்
வாணதரையன் என்பவனுக்குத் தாமர் நாட்டு கரைக்கோட்ட பிரமதேசமான
தினசிந்தாமணிச் சதுர்வேதி மங்கலத்தில் ஜீவிதமாக உள்ள நிலத்தில் எட்டு
வேலி நிலத்தினை ஸ்ரீபோந்தையுடையார் கோயிலுக்கு வழங்கியுள்ளான்.
கல்வெட்டு :
1. ஷஷிஞஸ்ரீ[1*] ஸ்ரீமெக்சீர்த்தி[க்கு*] மு-
2. ன்னாகத் திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ-
9. குலோத்துங்கசோழமேவற்கு யா-
4. ண்டு மூன்றாவது ஜயங்கொண்-
5. டசோழ மண்டலத்துத் தா-
6. மற் கோட்டத்துத் தாமர் நாட்-
7. டுக் கரைக்கோட்ட .-வூ,ஹதேச-
8. மான சினசிந்தாமணிச்ச.துேே
9. வ.திமங்கலஞ் ஜீவிதமுடை-
290
29.
24.
ய உள்ளாவூர்க் கம்பன் வாண-
தரையனேன் இவ்வூர் ஆளுடை-
யார் ஸ்ரீபோந்தையுடையா-
ற்கு இக்கரைக்கோட்ட ஷூஷ-
. தேத்து என் ஜீவிதப் பற்றில்]
. ஆறாங்கட்டளையிற் திருவீதி[க்கு]-
. க்கிழக்குங் கடப்பேரிக்[கு]-
டத் தெற்குஞ் சம்புவரா[ய]-
௨ ப் பேராற்றுக்கு 6[மற்]கும் தெ]-
. ன்பாற்கெல்லை இந்நாயனார்]
பழந்தேவதானத்துக்கு வ-
. டக்கும் இந்நாற்பாற்கெல்லை
க்கு முட்பட்ட நிலம் எட்டு வே-
லி நிலமும் பிள்ளையாற்கும்
விண்ணப்பஞ் செய்து இ...
291
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை :
கல்வெட்டு
திருவண்ணாமலை
செய்யாறு
பிரம்மதேசம்
தமிழ்
கிரந்தங் கலந்த தமிழ்
சோழர்
மூன்றாம் குலோத்துங்கன்
தொடர் எண் :- 166/2017
ஆட்சி ஆண்டு
வரலாற்று ஆண்டு
இ.க. ஆண்டறிக்கை:
முன் பதிப்பு
(தெ.க.தொ.)
27
கிபி, 1205
266/1915
30/190
ஊர்க் கல்வெட்டு எண்: 82
சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப வடக்குச் சுவர்.
இக்கோயிலின் கோபுரம், இறைவனுக்கு அமுதுபடி, செந்நெல் அமுது, திருநந்தா
விளக்கு, அபிடேகத்திற்குத் தேவையான பால் மற்றும் தயிர் ஆகியவற்றிற்காக
இருங்கோள விளாகம் என்னும் நிலத்தினை ஆடவல்லான் கங்கைகொண்டான்
என்னும் இருங்கோளன் என்பான் தானமாக வழங்கியுள்ளான்.
1. ஷஹிஸ்ரீ[॥*] தி,ல-வ5வ௯, வகிகள்-
2. ஸ்ரீகுலோத் துங்கசோழமேவற்கு-
3. யாண்டு ௨௰எ ஆவது திருமோ-
4. புரமும் அமுதுபடி சென்னெலமு-
5. து செய்தருளுகைக்கு இருங்கோள-
6. விளாகமு ஷிருனஷாவிளக்கு காலு-
7. ம் அமுது செய்தருள
8. நெய்நாழியும் ஆடிஅருளப் பா-
9. ல் முன்னாழியும் தமிரமுது எண்ணாழியு-
292
10. ம் வைப்பித்தான் ஆடவல்லான் கங்கை
11. கொண்டாநான இருங்கோளன் [௨*] அறமற
12. வற்வ ॥-
293
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 167/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 31
வட்டம் 3 செய்யாறு வரலாற்று ஆண்டு : கி.பி. 1247
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 252/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 80/174
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 84
அரசன் : மூன்றாம் இராசராசன்
இடம் 3: சந்திரமெளலீஸ்வரர் கோயில் முன் மண்டப தெற்குச் சுவர்.
குறிப்புரை : மணையில் கோட்டத்து படுவூர் நாட்டைச் சேர்ந்த அழியாத்திறன் விடையின்மேல்
வருவான் என்பவன் 20 கழஞ்சு ஒரு மஞ்சாடி அளவு கொண்ட பொன்னிலான
பட்டம் ஒன்றினை இக்கோயில் இறைவனுக்குத் தானமளித்.துள்ளான்.
கல்வெட்டு :
1. ஷஹிஸ்ரீ[॥*] ராசராச தேவர்க்கு யாண்டு முப்பத்தொன்றாவது மணையில்
கோட்டத்து படுவூர் நாட் . . . உலோக .....
2. அழியாத்திறனனே[ன்] விடையின் மேல்வருவான் இட்டபட்டம் இருபதின்
கழஞ்சே மஞ்சாடி மதிராந்தகன் மாடையோடோக்கு மிழன் இருபதக்கிஞ்சே'
மஞ்சாடி
ளு
1. இதன் இருபதன்கழஞ்சே-என்று படிக்கவும்
294
த.நா.௮. தொல்லியல் துறை
மாவட்டம் திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 3
வட்டம் செய்யாறு வரலாற்று ஆண்டு : -
ஊர் பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: -
மொழி தமிழ் முன் பதிப்பு : 90/192
(தெ.க.தொ.)
எழுத்து தமிழ்
அரசு சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 85
அரசன் -
இடம் செல்லியம்மன் கோயில்.
குறிப்புரை : நான்கு உடைந்த கல்வெட்டுகள் உள்ளன. ஜயங்கொண்டசோழ மண்டலத்து
தாமர்கோட்டத்து தாமர் நாட்டு சோழவல்லி நல்லூர் மமிபாலகுலகாலப் பெருந்தெரு,
மணற்பாக்குடி, கங்கைகொண்டசோழ வளநாட்டு வடபாந் பாக்கை நாடு ஆகிய
குறிப்புகள் காணப்படுகின்றன.
கல்வெட்டு :
I
1... . . கொண்டசோழ மண்டலத்து தாமற் கோட்டத் தாமர் நாட்டு . . .
ப் வேண்டுவனத்துக்கும் இப்படி சந்திராதித்தவர் நிமந்தப் . . . .
இடபக் எழத கொண்டு இதுக்கு இது இப்பொருள் மாவறுதிப் பொருள் சிலவே
க க ரரை எச்சோற்றுக் கூற்றுநெல்லு வெட்டிமுட்டைஆள் உப்புக்கா
5.
தொடர் எண் :- 168/2017
. ௨மவித்தந் எழுத்து இப்படிக்[கு*] இவை பாக்கத்து ஈழ லட்டநாம
I
... [சே]ழகுலவல்லிநல்லூர் மமிபால[கு]லகாலப் பெருந்தெருவில் கடாம
295
தத மேற்க்குந் தெந்பாற்க்கெல்லை மணற்பாக்குடிக்கு மராடி லட்ட
. ற்று விலையாவணஞ் . செய்து குடுத்தோம் இருகாலாவதும்
முக்காலாவதும் இப் . . .
. . ருவேங்கடத்திந் எழுத்து சோமங்கலத்து நாராயண லட்டந் ஸமிஞ்ஜெ
. நியலூர் இஷலவாஹன லட்டந் எழுத்து இப்படிக்கிவை மணற்பா[க்க* ]த்
க
Il
, ழதாத்தக்க . .
. செல்கிற நில . .
. தநத்துக்குங் . .
திரித்திருவே[கம்] . .
நறை. ௨
. நாமி[னாற்க்]கு . .
௨ம் ஆகக்குழி . . .
IV
. ட்ட கங்கைகொண்டசோழ வளநாட்டு வடபாந் பாக்கை நாட்டு சோ .
. சங்கரநாறாயண லட்டந் ஸமிஞ்ஜெ ஆநமைய்க்கு இவை திருவேங்கட
த்து இப்படி . . . பறியலூர் . . . டய லட்டந் மிஞ்ஞை ஆநமை
296
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 169/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 1 21
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1091
ஊர் : பிரம்மதேசம் (புதூர்) இ.க. ஆண்டறிக்கை: 269/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 80/198
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 86
அரசன் : முதலாம் குலோத்துங்கன்
இடம் 3: ருத்ரகோட்டீஸ்வரர் கோயில் முன் மண்டப மேற்கு மற்றும் வடக்குச் சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்து தாமர் கோட்டத்து தாமர் நாட்டு
தினச்சிந்தாமணிச் சதுர்வேதி மங்கலத்து சபையார் ஸ்ரீருத்ரசோலை மகாதேவர்
கோயிலுக்கு, இம்மன்னனின் 12, 14 மற்றும் 21-ஆவது ஆட்சியாண்டில்
பன்னிரண்டு இடங்களில் 12 தனி நபர்கள் வழங்கிய நிலங்கள் மீதான இறை
நீக்கி தேவதானமாக வழங்கியுள்ளனர்.
கல்வெட்டு :
1. மறஷிஸ்ரீ[॥*] புகழ்குழ்ந்த புணரி அகழ் சூழ்ந்த புவிமிற் பொந்னேமியளவு
தெந்னேமி-
2. நடப்ப விளங்கு சயமகளை இளங்கோப்பருவத்து விக்கிற2த் தொழி[லால்
ம]-
3. ணம் புணர்வ மதுவரை மிட்டம் வயிராகரத்து வாரி அயிர்முனைக்
கொந்தள வரைசர் தநமி-
4. ரிய வாளுரை கழித்துத் தோள்வலி காட்டிப் போர்ப்பரி நடாத்திக் கீர்த்தியை
நிறுத்தி வடதிசை
5. வாகை சூடித் தென்றிசை தெமரு கமலப் பூமகள் பொதுமையும் பொன்
நியாடை நன்நில-
6. ப் பாவை தனிமையுஷவித்துப் பணித்த திருமணி மகுட முரிமையிற்
சூடித் தன்நடி மிர-
297
11.
12.
18.
14.
19.
. ண்டுகடமுடியாகத் தொன்நிலவேஷர் சூட முன்னை மநுவாறு பெருகக்
கலியாறு வறுப்பச் செங்-
. கோல் திசைதோறுஞ் செல்ல வெண்குடை மிருநில விளாகம் மெங்கணுஷ
னாது திருநிலவெண்ணிலா பாற்பதும-
. நீ திகழ ஒருதநிமேருவிற் புலிவிளையாட வார்கடற்றிவாஷரத்துப் பூவர்
திறைவிருத்த கலஞ்சொரி களிறு முறை
. நிற்ப விலங்கிய தென்நவன் கருகலை பருஷலைத்திடத் தன் பொன்
நகர்புறத்திடைக் கிடப்ப வின்-
நாள் பிற்குலப் பிறைபோல இப்பிழையென்[ற* ]ங்கு சொல்லெதிர் கொடிற்றல்லது
தந்கை வில்லெதிர் கொடா
விக்கலன் கல்லதர் நங்கிலி துடங்கி மண்ணரசர் நடுவெனத்
துங்கபத்திரியளவுவரத்தி வெங்கணும் படைவெங்க-
ளிறு விட்ட தந்மாநமுங் கூறிய வீரமுங் கிடப்பாறின மலைகளும்
முதுகுநெளிப்ப இழிகநெதிகளும்
சுழன்றுடைந்காட விழுக கடல்களுஷலைவிரித்தலமரக் குடதிசைத் தன்
நாளுககதாறு நுஷானையும் ப-
௨ ன்நாளிட்டம் பலபல முதுகும் பயவெதிர் மாறிய சயப்பெருஸிருவும் பழியுகவ
குடுத்த புகழின் செல்வி-
௨யும் வாளாவிட்ட மடஷயரிட்டமும் மிளாது குடுத்த வெங்கரி நிரையும்
கங்கமண்டலமும் சிங்கண மெ-
௨ ன்நும் பாணியிரண்டும் ஒருவிசைக் கைக்கொண்டிண்டிய புகழோடு
பாண்டிமண்டலங் கொள்ளத் தி-
. ௬ருவுள்ளத் தடைத்து வெள்ளவறாவரு பரித்தலங்களும் பொருகரித் தலங்களும்
தஷிரவாரியு முடைத்தாய் வட
கடல் தென்கடலாவது போலத் தண்பெருஞ்சேணையை ஏவிப்பஞ்சவரையா
பொருத போர்க்களத்த-
298
20.
21.
22.
22.
24.
25.
20.
27.
29.
30.
31.
ஞ்சி வெரு நெளித்தோடி அரணெனப் புக்ககாடறத் துடைத்து
நாட்டிடைப்படுத்து மற்றவர் தம்மை
வனசரராக்கியும் பொற்சை வெஞ்சுரமேற்றிக் கொற்ற விஜயஷம்பம் திசைதோறு
நிறுத்தி முத்தின சலாபமும்
முத்தமிழ்ப் பொதியிலும் வெங்கரிபடு மய்யச் சைய்யமும் கன்நியும்
கைக்கொண்டருளித் தென்நாட்டவ-
விடுசாவெறெல்லாம் தனிவிசும்பெறமா வெறியதன் வருதனித் தலைவரைக்
குறுகலர் குலைக் கொட்டாறுட்-
பட நெறிகடொறும் நிலைகளிட்டருளி திறை கோளாரமுவிருப் புயத்தலங்கலும்
பொலிய வீரமும் தியாகமும்
விளங்கப் பார்தொழச் சிவநிடத்துமையெனத் திநசிகாமணிபுவன
முழுதுடையாளிருப்ப அவளுடன் கங்டை
க வீற்றிருகததன மங்கயர் திலகம் ஏழிசை வல்லி ஏழுலகுடை [யாள்* ]
மிருப்ப ஊழிபுவனமுழுதுடையாளோடு-
ம் வீரஸிஃஹாஸநத்து வீற்றிருகருளிந கோவிராஜகேஸரி பாந
ஸசூவர்த்திகள் குலோத்துங்க[சோ]-
. ழ தேவற்கு யாண்டு ௨௰க ஆவது ஜயங்கொண்டசோழ மண்டலத்துத்
தாமர்க் கோட்டத்துத் . தாமர் நாட்டு
த் திநசிகாமணிச் சருப்பேதி மங்கலத்து ஸ்ரீறாரஆசோலை ஊஹாதேவர்
ஆதிதாஸ சண்டேமுரற்கு இவ்வூர் ஹாஹணந் கா-
மாடபந் நம்பி தாமோதிரக் கிரமவித்தன் விற்ற நிலம் வடகழநி
ராஜமல்லப்பெருவதிக்கு மேற்கு வெ-
க்காவுக்குத் தெற்கு இரண்டாங் கண்ணாற்றுத் தடி உ னாற் குழி
அஞ்நூற்றொரு(ம்)பதுக்குக் கீழ்பாற் கெல்-
299
32.
33.
94.
95.
36.
97.
98.
39.
40.
41.
42.
43.
44,
லை சிறுகுளத்தூர் . . . . . மேற்கும் தென்பார்க்கெல்லை சோ-
ழ பாண்டியப் பேராற்றுக்கு வடக்கும் மேல்பார்க்கெல்லை ஸ்ரீகமிலாஸமுடைய
2ஊஹாதேவர் தேவ-
தாநத்துக்குக் கிழக்கும் வடபார்கெல்லை கண்ணாற்று வாய்க்காலுக்குத்
தெற்கும் இன்நான்கெல்லை உள்ளும் நடுவுட்பட்ட வகி தடி இ[ர]
ண்டிநாற் குழி அஞ்நூற்றொருபதும் இத்தேவர்க்கு யாண்டு ௰௪ ஆவது
பாக்கத்து ஸ்ரீபோஷைக் கிரமவித்தன் பக்கல் கொண்டு[டை ]-
ய ஹுூதி இங்கேய் ராஜமல்லப் பெருவதிக்குக் கிழக்கு வெக்காவுக்குத்
தெற்கு இரண்டாங் கண்ணாற்று தடி ௨ நா-
ற் குழி நாநூற்றைம்பத்து . . . ச்சின்நத்துக்கும் கீழ்பாற்கெல்லை கொல்லை
நிலத்துக்கு மேற்கும் தெந்பார்க்கெல்லை ஸ்ரீகமிலாஸமு-
டையார் தேவதானத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை பெருமண்டபத்து
ஷஹோவிஷ க்கள் தேவதாநத்துக்குக் கிழ-
க்கும் வடபாற்கெல்லை ஸ்ரீபோஷைக் கிரமவித்தன் ஷூமிக்குத் தெற்கும்
இந்நான்கெல்லை உள்ளும் நடுவுபட்ட வதி தடி ௨ நாற் குழி
நாநூற்றைம்பத்துச் சிந்நமும் இங்கே மேற்படி[யார் பக்]கல் கொண்டுடைய
ஹூமி இக்கண்ணாற்று குழி நூற்றைம்பத்துச் சிந்நத்துக்குக் கீ-
ழ்பாற்கெல்லை ஸ்ரீகயிலாஸமுடையார் தேவதாநத்துக்கு மேற்கும்
தென்பாற்கெல்லை கண்ணாற்று வாய்க்காலுக்கு வடக்கும்
மேல்பாற்கெல்லை இத்தேவர் திருமுற்றத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை
பாதிரித் திருக்கதவக் கிரமவித்தந் ஷூமிக்-
குத் தெற்கும் இந்நான்கெல்லைக்கு நடுவுட்பட்ட வுமி குழி நூற்றைம்பத்துச்
சிந்நமும் ஆகக்குழி அறுநூற்றுச் சிந்நமும் கம்-
பின்படி மிகுதிக்குறைவுள்ளடங்கவும் இத்தேவர்க்கு யாண்டு ௨௰க ஆவது
நறையாமண்டய லட்டன் பக்-
300
45.
40.
47.
48.
49.
50.
51.
52.
59.
54.
55.
50.
57.
58.
59.
60.
01.
02.
கல் விலை கொண்டுடைய நிலம் இங்கேய் வெக்காவு-
க்குத் தெற்கு அஞ்சாங் கண்ணாற்றுத்தடி ௨ நாற் குழி அந்நூ-
ற்றுச் சிந்நத்துக்கும் கீழ்பாற்கெல்லை முடக்கு வாய்க்காலுக்கு 6-
மற்கும் 'தெள்பாற்கெல்லை சோழபாண்டிய வாய்க்காலுக்கு வ-
டக்கும் மேல்பாற்கெல்லை பறியலூர் நரஸிஹதேவ லட்டந் வூமி-
க்குக் கிழக்கும் வடபாற்கெல்லை கண்ணாற்று வாய்க்காலுக்குத் தெற்கும்
இந்நான்கெல்லை உள்ளும் நடுவுபட்ட லூமி தடி ௨ நாற்குழி அந்-
நூற்றுச் சிந்நமும் முன்பு பறியலூர்க் காமக்கோடிக் கிரமவித்தன் பக்க-
ல் விலை கொண்டுடைய ஷூமி இங்கே ராஜமல்லப் பெருவழிக்குக்
கிழக்கு வெ-
க்காவுக்குத் தெற்கு இரண்டாங் கண்ணாற்றுக் காமக்கோடிக் குழி முன்னூற்று
முப்பத்துச் சிந்நத்துக்குக் கீ-
ழ் பாரக்கெல்லை வமிஜூந் திருவிக்கரம ஹட்டன் வயிஜுபோகத்துக்கு
மேற்கும் தெ-
ன் பார்க்கெல்லை புறக்காலுக்கு வடக்கும் மேல்பார்க்கெல்லை நீரோடு வாய்க்கா-
லுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை கண்ணாற்று வாய்க்காலுக்கு தெற்கும்
இந்நான்கெல்லை உள்ளு நடுவுபட்ட மூமி குழி முந்நூற்று முப்பத்து
ச்சிந்நமு-
ம் இங்கே விட்டு கிழக்கும் பாக்கத்து ஸ்ரீகதம்ப வட்ட ஸவபக்கிரிதுயாஜியார்
இத்தே-
வற்குக் குடுத்த வுமிக்கு கீழ்பாற்கெல்லை ஸ்ரீகயிலாஸமுடையார்
தேவதாநத்துக்கு
மேற்கும் தென்பாற்கெல்லை இத்தேவர் தேவதானத்துக்கும் ஸ்ரீ ஈஉசோலை
மஹா
தவர் தேவதாநத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை பாதிரித் திருக்கத வக்
கிரமவித்-
301
04.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
. தன் ஹூமிக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை கண்ணாற்று வாய்க்காலுக்குத்
தெற்கு இந்-
நான்கெல்லை உள்ளு நடுவுபட்ட ஷூமி குழி நூற்றெழுபத்துச் சிந்நமும்
இந்கேய் வெக்-
காவுக்கு வடக்குப் புறகண்டத்துப் பாக்கத்து முத்த ஆதிவராக லட்டந்
குடுத்த மூமிக்குக்
கீழ்பாற்கெல்லை ஸ்ரீகமிலாஸமுடையார் சேவதாநத்துக்கு மேற்கும் தென்பாற்டெ
கல்லை கண்ணாற்று வாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை
திருப்படக்கா-
டுடையார் ஜேவதாநத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை கண்ணாற்று
வாய்க்கா-
லுக்குத் தெற்கும் இந்நான்கெல்லைக்கும் நடு[வு*]பட்ட மி குழி நூற்று
நாற்பதும் இப்-
பூமிக்குத் தெற்கடையவும் வடக்கடையவும் உள்[எ* ]மேடு குழி அறுபதும்
ஆகக் கு-
ழி ௨ஊ றும் ஆகக்குழி இரண்டாயிரத்து முந்நூற்றுச் சிந்நங் குழியும்
கம்பின்படி மி-
குதிக் குறைவுள்ளடங்க கல்லிலும் செம்பிலும் குலோத்துங்கசோழ தேவற்கு
யாண்டு
௰௨ ஜயங்கொண்டசோழ மண்டலத்து தாமற் கோட்டத்து தாம[ற்* ]நாட்டுத்
தின சிந்தாமணிச் சதுப்பே-
தி மங்கலத்து மஹாஸஹைப் பெருங்குறிப் பெருமக்கள் எழுத்து நம்மூர்
ஸ்ரீஉருத்திரசோலை ஊஹ-
£தேவர் தேவர் கம்மிகள் கண்டு இத்தேவர் ஆதிகாஸ சண்டேழரற்கு
உத்தமசோ-
ழச்சேரிக் கூடலூர் சீகுமார சோகியார் வ;ாஹணி எழுவரடியாள் சாநி
ஹி,தனத்தால்
302
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
80.
87.
88.
89.
உடையாரும் [கடைத்தாக] கூடலூர் சீகுமார சோகிய[£ரை] முதுகண்ணாகக்
கொண்டு விலை நி-
லமா[வ*]து குஷவைப் பேரேரி கீழ் அடிகள் . . . வாய்க்காலுக்கு வடக்கு
மூன்றாங் கண்ணாற்[று]
தடி இரண்டினாற் குழி நாநூற்று ஒருபத்துச் சி[ந்நங்]குழியும் களமேடும்
இத[ன்*]வடக்கு , நாலாங்க-
ண்ணாற்று குழி அறுபத்துச் சிந்நங்குழியும் இங்கே மூன்றாங்கண்ணாற்று
திருவரங்க கூமவித-
நீ ஹாஷணி திருவரங்க[ச்சிந] பாதிரித் திருப்போலணை ஷோயோஜியார்
மகன் கேசுவ-
னை முதுகண்ணாக கொண்டு விற்ற இருநூறும் அபிமாநமேருச் சேரிச்
சிறுகுளத்தூற் [ஆளகய] சூம-
வித்தநும் இவந் தம்பி திருப்போந்தையார் சோமய[£ஜியா*]ர௬ும் இவர்கள்
பக்கல் கொண்ட பூமி ராஜமல்-
லப் பெருவதிக்கு மேற்கு வெக்காவுக்கு தெற்கு இரண்டாங் கண்ணாறு
விலை கொ[ண*]ட குழி நூ-
ற்றுத் தொண்ணூறும் இதன் தெற்குக் குடிமிருக்கை குழி அறுபதும்
ஆக விலை கொண்ட குழி தொளாமிரத்து இருபதும் களமேடும்
இறைமிலி ஆகத்
தந்தோம் இவ-
ர்கள் இலக்ஷணப்படி இறையிலியாக கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்க
வென்று ஷஹவெவெயுள்ளெழுந்து பணித்தார் மணற்ப்பாக்கத்து திருச்சி-
ற்றம்பலமுடையான் ஸஹஹ,ந் நறையூர் ஆனந்தக் கிரமவித்தநும் பாடகத்து
திருசாலை வஹஸ.ம் பணிகேட்டு எழுதிநே[ந்*]மிவூர் கரணத்தாந்
பநங்காடன் குழஞ்சாந் இவை
எந்நெழுத்து இதில் குறை திருமாளிகை மேல் சதிரத்திலே கண்டு கொள்க[॥*]
303
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 170/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : 9
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1059
ஊர் : பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 270/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 30/194
(தெ.க.தொ.)
எழுத்து : கிரந்தங் கலந்த தமிழ்
அரசு : சோழர் ஊர்க்கல்வெட்டு எண்: 87
அரசன் : இரண்டாம் இராஜேந்திர தேவன்
இடம் : ருத்தரகோட்டீஸ்வரர் கோயில் முன் மண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : ஜயங்கொண்ட சோழமண்டலத்து தாமர் கோட்டத்துக் கரைக்கோட்டு பிரமதேயம்
... ஆன பராக்கிரமசோழ சதுர்வேதிமங்கலத்து சபையார் வேகவதி ஆற்றின்
தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீருத்ரசோலை மகாதேவர் கோமிலுக்குப் பொது
ஏலத்தில் விற்று நிலம் ஒன்றினை அளித்துள்ளனர். இந்நிலத்தின் 10000 குழி
நிலத்தினைப் பிரித்து “அலங்காரவல்லி சேரி” என்ற பெயரிடப்பட்டு,
உழுகுடிகளுக்கு குடி இருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கல்வெட்டு
1. ஹஹிஸ்ரீ[॥*] வணேறறந்
2. ஓஷெ ஸமாகறகூசூழ் வையகத்[தே ]
8. கண்டிசரந் கரும மாராயும் பண்டே
4. அறஞ்செ[நய்* ]தான்செய்தான் அறங்க[ண்]டா-
5. ந் பாதம் திறம்பாமை செப்பேடெழுத்து
6. திருமாதர் புவியென்னும்
7. பெருமாதர் இவர்தம் மாதேவியார் கள்ளா-
8. க்கி [நி]திமில்திகழும் நாளினுள் இகல் வெ-
304
28.
29.
..ண்டெழுவ சென்றருமுறை கொப்பத்து
. ஆகவமல்லன் பொரு சாமர்புரியும் காலை
. அரிநிகர் தன் திருத்தமையநாகிய வெஷஹிறல்
. ராஜராஜநை மு(ல)றல் பகடு மொ]த்தது
. நெராமரசரை நெடுவிசும்பெற்ற அஷரவாந-
. த்தரம்பயர் எதிர்கொள இந்திரலோக மெய்தி-
ய பிந்பொத்தள கடற்படைக் குடைவ தந்-
. கடற்ப்படை கெட கண்டஞ்சல் அஞ்சல் என்ற-
. ரளி தன் குஞ்சரமெல் காற்றென கடாவிய தெரி-
. கணை முதலியஷி(ர)பொருபடை வழங்கியும் மொ]-
. [ய்] மா சளுக்கி தம்பி சயசிங்கனும் பொர்புலை-
. க்கேசியும் தார்தசபந்மனும் இவர் முதலாகிய
. எண்ணிலி அசரரை வி[ண்ண*]கத்தேற்றி எதிராதோர் கா
. சிலை துர செஞ்சரமாரி குஞ்சர முகத்திலும் குன்-
. [று]று தோள் புயத்திலும் தன்திருத்துடையிலும்
ம் தர்ம க தன்நுடன் களிறேறிய வீர[ர்*] மடி-
, யவும் கையாதொரு தளிபுக்க போர்தொ-
மில் சளுக்கி பெர*]ருத வேழத்தை விடாது கெ-
மட்டு வித்து கொற்றவேல் தாநவரது கூறுத்த-
மெற்றிவந் கைய்படை போகவிட்டு பக[டி]ழிவ
குல[குல] குலைந்து தலைமயிர் விரிவ விண்ணுற' 6
1. முன்னுற-என்று படிக்க
305
49.
50.
. நளித்து பின்நுற நோக்கி வந்திஇரெவநும் பய-
ப்பட தூதநும் கொன்[ன*]வில் படை திண்டப்பது-
. ம் மேற்றிந வெஞ்சிந வரைச ரொடிந வாற்ற தலை[ஞ்]-
. சி வெருவில் முன்நோட மென்கொண்டா[ங்*] குருமே-
. தரபத்திரமுதல் களிறநெகமும் பரிமிந்நாத்தி[ர]-
. யும் வரிய தேவியும் வராகவேல் கொடி முதல்[ரா]-
. ஜபரிச் சின்னமும் ஏநையன பலவும் முழை]-
, ய்பே கவரவ போர்கள விளாகத்து பார்த்திவரார் மு-
உ ன்நருஞ் செய்தறியாதது பின்ன[ரு]ஞ் செய்துப்பின்றெண்ற
. கரியது கைத்தலத்தன்றின் படைகெடத்-
. தன்றிருமேநியிற் பசும் புண்ணா-
. மி நீர்த்தம்பு ஒரு புனலா[ல்*] நீக்கத்த-
ந் போர் கருங்களத்தே விஜெயாஷி0[ஷ ]-
ட கம் விஜயமிகச்செய்து வீரஷிஎ
. ஹாஸஹநஹிரிய விட்டேயோடவன் ௧-
உங்காபுரி புகுஜருளி நன்றென்று தாநு-
. ம் யாவரு செய்யுமன்[0* ]நறிகளோம்
. ... தீதன் திருக் காதல-
. னான பொதலர்
தெரிய[ல்*] கங்கை
கொண்ட சோழனையு
. மான்கவந் திருமகனா[ந]
. ஆளவந்த பெருமாளையு-
. ம் அணிகிளர் தந் திரு தம்-
பியர் தம்முள் வந்திறல் [வ]-
௨ எவந் மும்முடி சோழனைபயும்*]
. ஆங்கிளர் படை வீர சே[£]-
, ழனையும் வேழ் மதி-
, ராஜிகனையும் தார்மதி
பொன்தனைத் தந்தி-
, ருமகந் ராஜேஷிர சோ-
. ழனையும் இருமுடி சோ-
. மந் ஈாஜாயிறாஜந் திரி-
. தியகன்நகுணருஞ் சோழ]
. பாண்டியந் வரிசிலை(த்)
. தநிக் கரிகாலசோழ கங்-
ட கந் தொடு கழலுத்தம
.. சோழனெநும் சுடர்[நெறு]
. நவமணி புனை திருமு[டி]
. குட்டித் தெந்னவர் முத-
_லிநர் திருதளங்காநவ-
..ற்கருளிக் கார்கடலிலங்ன[க]
307
72.
73.
படை கலிங்கம[ன்]
[வீர] சலாமெக-
. னைக் கதகளிறோடு-
து வன்தெழு சளுக்கிய-
. ங்கெய்திய பரிபவ மெ]:
பலுன் இக்க டட
௨ லமர் செய்து நீங்கு-
, வனெந சிந்தையுள் கருதி
. இன்பமா[மி*] நந் . . .
. அவதரிப்ப பலவ . .
. முஷிறவ உவர்கடல் இள-
, ஐதந இளர்படைபரப்-
. பிய வளதுளங்க ந . . .
. கய காமாற்றி அவனை தண்
ட நாயகன் வாலா தேவ-
. இுவிறல் மல்லயா
. முதலினர் பலபடைய-
. ரைசரும் பொருகளத்த-
௨ விய இருகையர் முதலி-
யர் மந்னவர் தம்மோடு
308
94.
95.
96.
97.
98. .
99.
100.
101.
102.
108.
104.
105.
106.
107.
108.
109.
110.
111.
112.
118.
114.
115.
[வைத்தார்] விக்கலநோ[]
[தன்னிலை]
அழி சளுக்கி க
[ந]டைதர வண்ட
. பார்த்திய வழி
. . நீறொரு தனி வேழ
... _த்துடபமில் ஆங்” i
[கவனை] இருமுடி [மென் மேல்]
[கொண்டருளி] ர், மாப்பெ-
ரும் புகழ் மிக வளர்த்த கோப்ப-
ர கேசரிவ௨ராந உடையா-
ர் ஸ்ரீமாஜேஞ, மேவற்கு யா-
ண்டு ஒந்பதாவது
ஜயங்கொண்டசோழ-
[மண்ட ]லத்து தாமர் 6-
காட்டத்து தாமர் நாட்-
டு கரைக்கோட்டு வ ஷடே-
யமான பராக்கிரமசோ-
ழச்சதுர்வேதி மங்க
லத்து ஊஹாஸலெ -
ப் பெருங்குறி பெரும-
க்களோம் நம்மூர் ஸ்ரீபே[]-
309
116. ன்ஷயுடையார் பகலிரு[க்]
117, கையிலேய் கூட்டங் கு-
118. றைவ[ற*]க் கூடிமிருவ ந[ம்]-
119. மூர் திருவெக்காவிந் தெற்கு
120. . . . ஸ்ரீறா
121. சூசோலை ஊஹா-
122. மேவர் ஆதிலூ-
123. ஸசண்டேய[ரர்]
124. பக்கல் திரவம் கொ-
125. ண்டு மிவர்கள் முன்பு
126. அளவிலுஷரத்திலும்
127. . . யெ காடுகொளாககிட [க]
128. கொல்லை நில[ம் உரப்]- '
129. பதர்க்கி கீழ்பாற்கெல்- ட
130. லை ஸ்ரீபோக . . .
131. கவதிக்கு மேற்கு தெ-
192. ன் பாற்கெல்லை திருச்-
133. சிற்றம்பலச் சேரிமி-
194. ல் வடக்கில் பற்றுக் . .
195. மணற்பாக்கத்து உதை-
136. ய திவாகர பட்டன், உளிளி]-
197. ட்டார் இறை நிலத்துக்கு
310
198.
189.
140.
141.
142.
148.
144,
145.
146.
147.
148.
149.
150.
151.
152.
153.
வடக்குங் கிழக்கும் மே-
ல் பாற்கெல்லை மணற்-
ற்பா[க்க*]த்து செந்தை ச
- க்கிரமவித்தந் இறை-
நிலத்துக்கும் ஈரங் கொ]-
ள்ளி கெல்லிந குழிக்குக்
கிழக்கும் வடபாற் கெல்-
லை இத்தேவர் வாய்க்[கா]-
லுக்குத் தெ[ற்கு*]ம் இந்னாந்
கெல்லை உள்ளும் ந[டு]-
[வு]பட்ட [குழி மூவாமி]-
ரமும் தேவர் பூமிக்கு வடக்கும் வடகிழக்கு சார் நில வரப்பதற்கு
கீ[ழ்*]பாற்கெல்லை கொல்லை நிலத்துக்கு மே[ற்*]கும் தெந்பார்கெல்லை
இத்(த)தேவர் பூமிக்கு வடக்கும்
மேல்பாற்கெல்லைய் எங்கள் கொல்லை நிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை
எங்கள் கொல்லை நிலத்துக்கு தெற்கும் இந்நான்கெல்லை-
யுள்ளும் நடுவுபட்ட குழி ஏழாமிரமும் ஆக குழி பத்தாமிரமு[ம்*] இத்தேவர்
நிலம் உழுகுடிகளுக்கு குடி இருக்கையாக ஏறிந [அலங்காரவல்]லி
சேரிக்கு கீழ்பார்கெல்-
லை இத்தேவர் நிலம் தெந்கிழக்கடைந்த நிலத்துக்கு மேற்கும் தெந்பார்கெல்லை
விளை நிலத்துக்கு வடக்கும் மேல்பால் கெல்லை . . . . க்கு கிழக்கும்
வட-
பாற்கெல்லை இத்தேவர் பூமிக்கு பாச்ச வாய்[க்* ]காலுக்கு தெற்கும் இன்னான்
கெல்லை உள்ளும் நடுவுபட்ட குழி ஆயிரத்தைஞ்னூறும் வ[ஞ, ]
டட ட யாக விற்று
311
154.
155.
156.
157.
98. ..
159.
160.
161.
162.
108.
விலையாவணஞ் செய்து குடுத்தோம் இருகாலாவதும் முக்காலாவது[ம்*]
முற்சுட்டப்பட்டந இசை நான்கெல்லைய் கள . . . . . நிலம் . .
[௮]ஈ,ாதித்தவற் இறையிலி ஜேவதாநமாக விற்று விலையாவணஞ் செய்து
குடுத்தோம் இந்நிலம் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளப்
பெறுவா[ர்கள [கவும் இவ்வலங்கார வல்லிசேரி ஏறிந குடிகளை சூவர,காலம்
கோயில் வாச[லி*]ல் போந்த குடிமைகளும் வெட்டிமுட்டை ஆள் உட்பட்ட
அமஞ்சிகளும் உள்ளிட்டு எப்பேர்பட்டதும் காட்ட பெறாதோமாகவும் இ
. ரதஜேவேதாநம் இறையிலியாக விற்று குடுத்து ஷவெவெயுள்ளேய் [இரு]
குண்டூர் மாதவ கிரமவித்தநும் மண்பாத்து அக்கலட்ட வஹஸ,[ய”]னும்
மணற்பா[க்க*]த்து ஆடவ[ல்*]லாந் மட்டனும் பணிப்பணியால் பணி
கேட்டு எழுதினே]ன் இவூர் மயஷஹுந் ஏகாம்பரந் சதிரநேன் இவை என்
எழுத்து |
௨ல் கதெறாஜு வபுகா 8ஆஷந் திருவிக்கிரமந் திருவெ-
க்காதித்தநேன் இவை என் எழுத்து இப்படி அறிவேந்
இ[வ்*]வூர் மிவஸ,[ர*]ஹஷணன் லாறதாவி மூஷிஹவாமந லட்டன் மகன்
அம்பலக் கூத்தநேன்
இ[ப்*]படி அறிவேன் இவூர் ஸ்ரிவஸ,[ர*]|ஹண காணாவன் கூத்த மட்டன்
மகன் இஷப தேவனேன்
இ[ப்*]படி அறிவேன் இவூர்(வ்)வெஃ(£)நாதநேன் இ[ப்]படி அறிவேன்
கெளதமன் தசக்கி[ரம* ]பட்டநேன்
இப[ப்]படி அறிவேன் இவூர் போசன் மகன் காள கண்டநேன்
312
த.நா.௮. தொல்லியல் துறை தொடர் எண் :- 171/2017
மாவட்டம் : திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு 3. த
வட்டம் : செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1186
ஊர் 3: பிரம்மதேசம் இ.க. ஆண்டறிக்கை: 271/1915
மொழி : தமிழ் முன் பதிப்பு : 7/195
எழுத்து : தமிழ்
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 88
அரசன் 3 இரண்டாம் குலோத்துங்கன்
இடம் : ருத்தரகோட்டீஸ்வரர் கோயில் முன் மண்டப வடக்குச் சுவர்.
குறிப்புரை : விக்கிரமசோழபுரத்து கோயிலின் உள்ளே அபிஷேக மண்டபத்து முத்துபந்தலின்
கீழ் பள்ளிப்டத்தில் இரண்டாம் குலோத்துங்கசோழன் எழுந்தருளி இருந்தபோது
தாமர்நாட்டு கடைக்கோட்டு பிரம்மதேயம் ஆன தினசிந்தாமணிச்
சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீஉருத்திரசோலை உடைய மகாதேவர்க்குத்
தேவதானமாக நிலம் இல்லை என்று குலோத்துங்கசோழ ஸ்வர்ணாதிராஜன்
என்னும் அதிகாரி முறைமிட்டதின் காரணமாக, அவ்வேளூர் ஊரில் 500 கலம்
நெல் வரியாக பெறக்கூடிய அளவுக்கு தேவதான இறையிலியாக வழங்கிட
“அனபாயநல்லூர்” என்று பெயரிட்டு புதிய ஊர் உருவாக்கித் தேவதானமாக
வழங்கி மன்னன் ஆணையிட்டுள்ளான்.
கல்வெட்டு
1. ஹஷியஸ்ரீ[॥*] பூமேவு வளர் திருப்பொந்மார்வு புணர நாமேவு ' கலைமகள்
நிலம்பெருது சிறப்ப விசயமாமகள்
2. வேல்புயத் திருப்ப இசை[வி]ந் செல்வ எண்டிசை விளங்க நிருபர்வகிறைஞ்
8200 டு ல் ஆட்டு ஆட்டி உக ஆடு ஆது கருப்பு அடல ல லாடு தது
ர ததத ர ரர ர ர த த இ இ. இ இ இடு இ இ
1.
12.
18.
௨ னத்துப் புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோவிராஜகேஸரி வ
உ உ J. a உ.உ உ உ உ உ உ. J, J J J உ உ உ. உ உ உ உ உ உ. .உ உ.௯
. குலோத்துங்கசோழமேவற்கு யாண்டு மூன்று நாள் . . விக்கிரமசோழபுரத்து
கோயிலினுள்ளால் அபிஷேகமண்டபத்து முத்துபன்தல் கீழ்
.. பள்ளிப்பிடத்து எழுன்தருளிமிருன்(த்)து செய்யத் திருவாய்மொழிஷருளினபடி
தாமற்கோட்டத்துத் தாமர்நாட்டுக் கடைக்கோட்டு ஸ;,2தேசமான தினசிந்தா-
மணிச் சருப்பேதிமங்கலத்து ஸ்ரீடருத்திர சோலை உடைய மஹாதேவர்க்கு
முன்பு தேவதானமில்லையென்று இத்தேவர்க்கு அவ்வேளுரு [ம்
வெ]ண்கற்பா-
. டியுமான இராஜேந்திரசோழ நல்லூரில் அவ்வேளூர் நிலத்திலே ஐஞ்னுற்றுக்கல
நெல்லுக்கு தேவதான இறையிலியாக இட்டு அனபாயநல்லூரென்னும்
.. பேரால் வெறுபிறிக்கப் பெறவேண்டுமென்று இக்கோயீலிற் பிடாரர் திருச்சிற்றம்பல
நம்பியைக் காட்டி குலோத்துங்கசோழ ஸவணா_யிராஜன் நமக்கு
சொன்னமைமி-
ல் தாமர்க் கோட்டத்து தாமர் நாட்டு இவ்வேளூரும் வெண்கற்ப்பாடியுமாந
மாஜேவிறசோழநல்லூரில் அவ்வேளூர் நிலத்து இடும் மூன்றுபூ விளை
நிலம் அரையே ய-
ரைக்காணிக்கீழ் நான்மாவரை இருபூ விளைநிலம் ஒன்றேமுக்காலே நான்
மாவரை அரைக்காணி முந்திரிகைக் கீழரையே யரைக்காணி முந்திரிகைக்
கீழரை ஒருபூ வி- _
ளைநிலம் ஏழே' ஏழுமரவரை முந்திரிகைக் கீழ் முக்கால் ஆக நீர்நிலம்
ஒன்பதேமுக்காலே இரண்டு மாக்காணி அரைக்காணி முந்திரிகைக்
கீழொன்பது மாவரையீநா . . .......
314
த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் :- 172/2017
மாவட்டம்
வட்டம்
ஊர்
மொழி
எழுத்து
அரசு
அரசன்
இடம்
குறிப்புரை
கல்வெட்டு
திருவண்ணாமலை ஆட்சி ஆண்டு : சகம் 1285
செய்யாறு வரலாற்று ஆண்டு : கியி. 1862
பிரம்மதேசம் (புதூர்) இ.க. ஆண்டறிக்கை: 272/1915
தமிழ் முன் பதிப்பு : 7/196
தமிழ்
சோழர் ஊர்க் கல்வெட்டு எண்: 89
ஸ்ரீவீரகுமார கம்பண உடையார்
ருத்தரகோட்டீஸ்வரர் கோயில் மண்டப கிழக்குச் சுவர்.
வீரகுமாரகம்பண உடையார் அவர்களின் மகாபிராதனி சோமய தண்ணாயக்கர்
அவர்களின் காரியதரிசி போவந்தராசரின் ஆணைப்படி ஜயங்கொண்ட சோழ
மண்டலத்து தாமர் நாட்டுக் கரைக்கோட்டு பிரம்மதேசம் ஸ்ரீஉருத்திரசோலை
உடையர் கோயிலில் திருநந்தாவீளக்கு ளிக்க இக்கோயில் திருமடை வளாகத்தில்
் குடிமிருப்பவர்களின் மீது விதிக்கப்படும் வரிகளைப் பயன்படுத்திக் கொள்ள
தானமாக வழங்கப்பட்டுள்ளது.
1. ஹஷிய்ீ[॥*] மகாவ ஆயிரத்து இருநூற்று எண்பத்தஞ்சு மேல் பொபது
ஹ௦ு
2. வகஸஹறத்து மந நாயற்று வ-வூ)வக்ஷத்து ஏகாஹியு வந் கி-
8. மையும் புணர்பூசத்து நாள் ஜயங்கொண்டசோழ மண்டலத்துத் தா-
4. மல் கோட்டத்து தாமல் நாட்டு கரைக்கோட்டு வூஹசேம(தச)த்து உடையார்
5. ஸ்ரீஉருத்திரசோலை உடையார் உடைய நாதற்க்கு உதகவவ-வூ ம-
6. ஏதோநசாக வைய்த்த திருநுந்தாவிளக்கு மூன்றுக்கு விட்ட ஸ்ரீமன் ம-
315
10.
11.
12.
ஹாமணலினறறந ஹறிறாய விபாடன் பாஷெஷெக்குத் தப்பும் ராயர் கண்டன்-
மூவராயர்கண்டன் பமரிம பூவ) ஸூ9ஜாயிபதி ஸ்ரீபோக்கணஉடையர்
மகனார்
. ஸ்ரீவீரகுமாரகம்பண உடையர் மஹ[ா*]வ,தாநி ஸோமய தண்ணாயக்கர்
காரியப் போவிந்தரசர் நிருபப்படிக்கு இராகுதேவரும் ஆராசூரும் ம)
தங்கள் திருமடை விளாகத்தி . . . . க்கு வாணியர் சேனைஅங்காடியர்
சிவன்படவர் எடுத்துநடத்தும்பேர் மற்றும் இத்திருமடைவி-
ளாகம் நோக்கி இருக்கும் . . . ஆய்க்குடி மக்கள் உள்ள பேர்க்கும் ஆயம்
உள்ளாயம் நூலாயம் நாட் . . . . . சம்மாதம் மற்றும் ஆயம் நோக்கி
வரும் எப்பேர்ப்பட்ட பல உபாதியும் உதகவ5வு) தன்மதா-
னமாக ஸவூமாஷ இறைஇலி ஆக குடுத்தோம் இத்தன்மத்துக்கு விரோதம்
பண்ணினவன் கெங்ை ..... ள்ளுவான் இது ஸ்ரீகாஹேறாற றகக்ஷ
௨
316
ள
System of Transliteration
Grantha
த இத இது நனக ௮௮ வான இ ௮. ன பத 1 5
317
English
a
௦ ஓ, க தறற வ.உ உடலு
“திக உதி ஐ. ஐ௮ 23 8 ௨௨௮௨ 2.௩.௩ ௫ த...
பட்டு ஒர் டு அடிமுடி. இ. இ EEE
திரு உய லட்டை ன ன ன நன நன ன த உட தடி வட் டட
sa
ksha
318
1/2017
2/2017
3/2017
SUMMARY
Veédapurisvara temple at Tiruvottir.
On the south wall of the Chidambarésvara shrine in the
Védapurisvara temple. Chola. Aditya-l. Records the
construction of the shrine Sankaranarina-ISvaragriham by
Adittakuttiyar in memory of his elder brother,
Sankaranaranar. The sabha of Tiruvottir endowed a garden
with cocoanut trees to the shrine.
On the south wall of the Chidambarésvara shrine in the
Vedapurisvara temple. Rashtrakuta. Kannaradéva (Krishna-
I r.y. 27 (966 A.D). Registers gift of 50 sheep for a day
lamp to god Mahadéva of Tiruvottir by Kodanda manradi
of Mambakkam in Taraiytir-nadu in sub-division of Palkunrak-
kottam.
On the south wall of the Chidambarésvara shrine in the
Véedapurisvara temple. Chola. Utramachola r.y. 14 (984
A.D). Records a vellala of Tiruvottir, who was in a
previous agreement entrusted with 100 sheep, did not
supply ghee as stipulated for maintaining a perpetual lamp
in the Mahidéva temple at the village there by causing the
discontinuance of the lamp service for several years and
that at the instance of a Ilankidasanai Tirumérrali Pallikattilp-
pidaran a priest of the temple, the ve//4/4 son Vidangan
revived the service and named the lamp after the priest as
319
4/2017
5/2017
6/2017
7/2017
Ilankidasanai. The Irandutalai-porkoyil Kaikolap-
perumbadaiyarkud! of the village assured the protection of
the service.
On the south wall of the Chidambarésvara shrine in the
Védapurisvara temple. Chola. Koparakésari (Uttama Chola)
r.y. 14 (984 A.D.). Mentions that the sheep endowed for
lighting the lamp of the temple of Tiruvottir Mahadéva
at Tiruvottur were lost in a ‘Siirat (epidemic) called after
Uttamachola-maraya and that on a representation to Sembiyan
mahadévi, 200 sheep were restored to the temple for
supplying 16 Alf one urf and one alakku of ghee for
burning few perpetual lamps.
On the west wall of the Chidambarésvara shrine in the
Védapurisvara temple. Chola. Prarkésarivarman (Uttamachola)
r.y 15 (985 A.D.). Records the gift of 25 kalaiju of gold
by Aruran Amabalattadigal, the senior queen (Mahidévi)
of Uttamachola, for burning a lamp in the temple.
On the north wall of the Chidambarésvara shrine in the
Védapurisvara temple. Chola. Rajaraja-I r.y. 21 (1006 A.D).
Registers gift of 5 ma of land by Kandan Parakésari the
headman of Kurukkidi, in Taiijavur-kurram for the
archanabhoga to the temple of Tiruvottir after prior
purchase from Neduman kilin Paramadi Kramavittan, a
member of the 4/uriganam of-Tiruvottir. The sabha of the
village remitted taxes on the land after receiving capital
({rai-dravya) for the same.
On the south Kumudha of the central shrine in the
Védapurisvara temple. 13th century A.D. Records the
construction of the Dakshnamurthy shrine by Mattipallavan.
320
8/2017
9/2017
10/2017
On the east wall of the first prakara of the same temple.
Chola. Vikrama Chola r.y. 5 (1123 A.D). Begining of lines
built in. Records gift of land, after purchase, by Kurichchi-
udaiyin Tiruchchirrambalam-udaiyan of Kurichchi in Kiliydir-
nidu, a. s.d. of Pandikulasani-Valanadu in Sola-mandalam,
for feeding devotees (apiirrvi-andar) in the temple on the
days of new moon.
‘On the south wall of the first.prakara of the Védapurisvara
temple. Chola. Vikramachola r.y. 6+1 (1125 A.D.). Refers
to the destruction of crops by a big flood and the
consequent sale of land by the ir of Kuda nagar in
Kaliytir-kottam to raise money for taxes. 2000 kul! of land
were sold for current kasu to Nattuvaykkudi in Inga-nidu.
The land was gifted as madappuram by the purchaser to
Tapasvi-vidayinmélvaruvan and his descendants with irrigation
rights and remission of certain dues. The iirar agreed to
pay a five of one marjadi of gold at the dharmadana, in
the case of any impediment.
On the south wall of the first prakara of the Védapurisvara
temple. Chola. Vikramachola r.y. 8 (1126 A.D.). Records
the sale of 4,250 kul! of land as tax free by the ur of
பண்றோம் to Tapas Vaippirudaiyan Dévan vidayinmélvaruvan
of Vaippiir in Marugal-nadu, a sub-division of Kéyamanikka-
Valanidu in Cholamandalam with heriditary rights for 20
kau. The purchaser made it over to the temple of
Tiruvottir-Udaiyar as tiruvidi madappuram for feeding the
tiruvidi-andar serving the temple. The சரத of Ariyavdr in
Kayirambédu-nidu in Kialiyur-kottram a sub-division of
Jayangondachola-mandalam sold the said lands for paying
off some tax arrears of the village for the previous year.
321
11/2017
12/2017
13/2017
14/2017
15/2017
On the east wall of the first prakara of the same temple.
Chola. Kulottungachola déva (Kulottunga-I]) r.y. 6 (1139
~A.D.). Records gift of coins for a perpetual lamp to the
temple.
On the north wall of the first prakara of the Védapurisvara
temple. Chola. Kulottunga-Il r.y 6 (1139 A.D.). Mentions
the accidental death of Puliyan caused by Korgan Selva-
Muttaraiyan son of போர் i in a hunting. It was decided by
the pannattar that 16 cows for a lamp be donated by the
Kongan Selva Muttaraiyan to the temple of Tiruvotrir-
Udaiyar to render him free from enemity.
On the north wall of the first prakara of the Védapurisvara
temple. Chola. Kulottunga-III r.y 11 (1189 A.D.). Registers
gift of 1000 சீம of wet land and garden lands by Murivan
Pallavarayan of Seyyiir after a prior purchase from Irungalai
Araisiirudaiyan of Parasur-nidu, for a perpetual lamp to
god Aludaiya Tiruvottirudaiya Nayanar.
On the east wall of the first prakara in the same temple.
Chola. Rajaraja-III r.y. 19 (1235 A.D). Registers gift of 30
cows for a perpetual lamp for Tiruvottir Aludaiyar by
Kiliya Pallavaraiyan Ammaiyappan alias Atiyaman
Tiruvenkattukkon a shepherd of Kirandai, took charge of
the cows and agreed to supply of one u/akku of ghee daily
at the temple measured by the liquid measure Selvirafakésari.
On the north wall of the first prakara of the Védapurisvara
temple at Tiruvottur. Chola. Rajadhirajadéva- II r.y. 4
(1107 A.D) Records the gift of 32 cows for a perpetual
lamp by Attiyindin son of Senkéni Virindan to the god
322
16/2017
17/2017
18/2017
Aludaiyar Tiruvottir at Tiruvottir in Kaliyur-nadu, a
sub-division of Kaliyur-kottam, a district of Jayangondasola-
mandalam.
On the south wall of the mandapa in front of the central
shrine in the Védapurisvara temple. Chola. Tribhuvana.
Rajadhiraja déva (Rajadhiraja-I] r.y. 4 (1167 A.D). States
that Sfyamuttaraiyan son of Sola muttaraiyan and Pandal
son of Senda muttaraiyan, hunters of the village Periyavayaliir
went out on a hunting expedition and Pandal was killed
by (mistake) by an arrow discharged by Sfyamuttaraiyan
and in expiation of the sin (some gift was made) with
temple of Tiruvottur.
On the north wall of the first prakara of the same temple.
Chola. Tribhuvana. Sri Rajadhiraja (Rajadhirajall) r.y. 8
(1171 A.D). Registers of 32 cows for a perpetuel lamp to
the Tiruvottiir temple by Arumolidévan alias Pallikkattu
Mummalarayan, son of Simantan Mummalarayan of Kudippalli
Maduvir pidagai of Madurantaka chaturvédimangalam, taniyiir
in Kalattir-kottam. Kirandai Tiruvenkattukkon, a shephered
of Puliytir Perumbakkam,. took charge of the cows and
agreed to supply one பக்கம of ghee daily at the temple
measured by the liquid measure Sel/virasakésari.
On the south wall of the Nataraja mandapa in the same
temple. Chola. Tribhuvana. Sri Rajadhirajadéva (Rajadhiraja-
ID r.y.11 (1174 A.D). Records a political pact made by
Sengéni Attimallanayan alias Rajéndrasola-Sambuvarayar and
his young brother Oduvan alias Rajagambhira-Sambuvarayar
with Sengéni-Mindan Siyan Pallavadaraiyan alias Sambuvaraya
to stand together as against Attiyindan alias Vikramasola
SambuvarAya.
323
19/2017
20/2017
21/2017
22/2017
On the south wall of the Natarija mandapa in the same
temple. Chola. Rajadhiraja-Il r.y.13 (1176 A.D). Records
agreement by the truvunnAligai-sabhai to maintain a
perpetual lamp in the temple for 12% kalaiju of gold
received by them from Tiruvirattinamudaiyin of
Tirumunaippadi-nidu.
On the north ‘wall of the first prakara of the Védapuri$vara
temple. Chola. Sri Virarajéndra Chola மனக (Kulottunga-
I ஈர. 2 (1180 A.D.) Registers gift of each 30 cows by
Senkéni Artimallan, Ammaiyappan Nachchi daughter of
Vampupaluttal and Kalattir Kilavan a ve//alan residing at
Anukkaviir for three perpetual lamps of Tiruvottiir-Nayanar.
On the north wall of the first prakara of the same temple.
Telugu Chola. Madurintakap-pottappicholan r.y. 2 (1252
A.D.) Registers an order of Madurantaka Pottappicholan
stating that the assembly of the people of Jayangondasola-
mandalam remitted Six kalam of paddy per véli of lands
granted as dévadayam, tiruvidaiyattam, agarapparru, tirappu,
vannlyapparru. :
On the south wall of the mandapa in front of the central’
shrine of the same temple. Chola. Kulottunga-IIT r.y. 33
(1211 A.D.). Registers gift of Alagiya Chola-nallur alias
Tittaichéri, a southern hamlet of Kalavai alias Rajanarayana-
chaturvédi mangalam in Sergunra naidu a sub-division of
Palkunrak-kottam in Jayangondachola mandalam, as dévadina
gift to the Nayanar at Tiruvottir by Senkéni Ammaiyappan
Alagiyacholan alias Edirilisola Chambuvarayan. Taxes made
over to the temple included verti, taniyAl, chirupadikaval,
324
23/2017
24/2017
25/2017
26/2017
eduttukkott;, arimukka, kasa yam, kollajpputijai Eriminpattam,
asuvigal pérkadamal, tariyiral, அர்த் pérkadamal,
kurradandam, palttidandam and koyilantarayam.
Records the’ gift of two villages, Vaiyaltir and Kanriyam to
devaradiyars of Tiruvottir as Jividakkani (by the village
sabhA) received 90 panam from them.
On the south wall of the mandapa in front of the central
shrine of the same temple. Chola. Kulottunga-II r.y. 39
(1217 A.D.). Records gift 100 kalaiju of gold of purity of
74 carat (marru) for two pattams to Tiruvottar-Udaiyar ‘|
by Ponniirk Kannudaiyin Karanai Vilupparaiyan.
On the south wall of the Nataraja mandapa in the same
temple. Chola. Rajaraja-III r.y.14 (1230 A.D). Records the
gift of the village Sirriyirrur in Mavanduir-érivayp-parru,
in KaSirambedu-nadu, a sub division of Kaliytir-kottam a ,
district of Jayangondasola-mandalam by Senkéni Virapperumal ’
Attimallan Ediril$ola-Sambuvarayan as déevadina to the
temple. States further that the chief confirmed the order of
his great great grand father remitting the taxes on the
deEvadina village to Tiruvottur, Vayalir, Andili etc., for
worship and offerings to the god.
On the east wall of the first prakara in the same
Vedapurisvara temple. Chola. Rajaraja-II r.y. 15 (1231
A.D). Begining of lines built in. Records gift of 30 cows
for a lamp in the temple by Nachchi daughter of
Vambupaluttal, a maid-servant of Atti alias Kéralintaka-
nallir in Perunagar-nidu, a sub-division of Venkunrak-
kottam.
325
27/2017
28/2017
29/2017
30/2017
On the east wall of the Nataraja mandapa in the same
temple. Chola. Rajaraja-II r.y.16 (1232 A.D). Built in
towards the end of the inscription. Records gift of 12000
kasu by Senkéni Attimallan Sambuvarayan alias Edirilisola-
Sambuvarayan for providing daily, from the intrest theron,
sandal paste and camphor to the god.
On the east wall of the first prakara of the same temple.
Chola. Tribhuvana. Rajaraja-IIT r.y. 16 (1232 A.D). Registers
a gift of the village’ Mangalam in Vadavir nidu a
sub-division of Venkunrak-kottam as devadina together
with income from taxes and dues thereon for worship,
offerings lamps, food and other requirements for the Nayanar
of Tiruvottiir during the festival of Avanitirunl by Senkéni
Attimallan Sambuvarayan alias Edirilichola Sambuvarayan.
On the south wall of the Nataraja mandapa in the same
temple. Chola. Rajaraja-III r.y.14 (1233 A.D). States that
the village Sirriyarrur mentioned above was resumed by
Vikrama$ola-SambuvarAya, and that Damodaran Perumanadi-
Nayaka, with the permission of Gandagopala, got back half
of this village as dévadAna to the temple, while the other
half was assigned as madappuram for feeding itinerant
mahésvaras in the Putpagiri-jfyar matha. The new order
was engraved in the temple with permission of Virapperumal
alias Edirili$ola-Sambuvarayan.
On the south wall of the first prakara of the same temple.
Chola. Tribhuvana. Rajaraja déva (Rajaraja-II]) r.y. 19 (1235
A.D). Registers gift of income from taxes paid in kind and -
cash, including kadamat and vetti on 2015 kulf of land
326
31/2017
32/2017
33/2017
from various plots in Sengidu in Kovalir-nadu in Venkunrak-
kottam for burning two pedestal lamp endowed to god
Tiruvottir Udaiya-Nayanar by Sentimaraikannan
Tondaimanar, headman of Vilattir. The Tiruvunnéligai-
sabla received the tax income and untertook to maintain
the lamp.
On the south wall of the mandapa in front of the central
shrine of the same temple. Chola. Rajaraja-III r.y. 20 (1236
A.D). Registers gift of tax income on 1050 kul! of land for
a perpetual lamp in the temple of god Tiruvottur-udaiyar
by Kulamukkil Kandan Eranambi chetti. The tax income
including &kadamai, nellayam and kasayam was received by
the dévakanmis of the temple who agreed to maintain the
lamp.
On the south wall of the mandapa in front of the central
shrine of the same temple. Chola. Rajaraja-II r.y. 20 (1236
A.D). Registers gift of 520 kulf of land for opening a
flower garden called Tappamol! nandavanam by Kudamukkil
Kandan Eranambi chetti. Also records an agreement by
Alagiyasiyan for rearing flow plants and supplying daily
one &urun! of flowers to god Tiruvottir-Nayanar in lieu
of the income from taxes viz., kadamal etc on the gift
land.
On the south wall of the first prakara of the same temple.
Chola. Tribhuvana. Sri Rajaraja (Rajaraja-II]) r.y. 21 (1237
A.D). Registers gift of three tier pedestal lamp by a
merchant Karumavir valakkan Tiruvégambamudaiyin
Tiruppulivanamudaiyin who endowed 1000 யூ of land in
327
34/2017
35/2017
36/2017
Venkunrak-kottam for burning a pertpetual lamp in it in
the temple of Tiruvotturudaiya Nayanar out of the
nilakkadamai income on the land. The gift land was in
Chorruppakkam in Venkunrak-kottam and the pedestal
lamp was weighing 150 (palam)
On the east wall of the Nataraijja mandapa in the same
temple. Telugu chola. Vijaya Gandagopaladéva. r.y. 9 (1259
A.D). Records a gift of land by Mittanda-Nachchiyar,
daughter of Udayalvar and wife of Kridalalap-pirandar
Kadavarayar as tirunimattuk-kani for worship, offerings
etc., to the three images of the Mivar (Tirujfiinasambandar,
Tirunivukkarasar and Sundarar) in the temple of
Tiruvottiirtidaiya Nayanar.
On the south wall of the first prakara of the same temple.
Later Pallava. Kopperuiijinga déva-IIl r.y.20 (A.D. 1270).
Registers gift of 24 kalaiiju for 32 cows for a lamp
endowed by Santanika Saivicharya Katichikuri Tiruvégamba-
Udaiyir alias Ekambra bhattar to god Udaiyar
Tiruvottiirudaiya Nayanar. The tiruvunnalgai-sabhaiyar of
the temple took the amount and agreed to maintain the
lamp.
On the south wall of the mandapa in front of the central
shrine in the same temple. Later Pallava. Kopperuifijingadéva
(Kopperufijingan-I]) r.y. 22 (1265 A.D.). Gift of 2000 ப்
of land as tirunamattukkant by Virapperumal Nachchi
after purchase for 2000 kasu from the iirar of Anukkavir
nidu in Venkunrak-kottam for maintaining two perpetual
lamps which had been donated in the 17* year of
Kulottungachola by her mother Kalappala Nachchi, one of
the agambadis of Anuppatur.
328
37/2017
38/2017
39/2017
40/2017
41/2017
On the east wall of the Nataraja mandapa in the same
temple. Telugu chola. Vijaya Gandagopalan. r.y. 27 (1277
A.D). Records a gift of land in Perumbakkam as pidari
patty, by Senkéni Virakaran Alappirandar alias Rajaraja
SambuvarAya, to goddess Kanagaral Selvi Ammai setup in
the village by Samba the daughter of devaradigal attached
to the temple of Tiruvottiriidaiya Nayanar.
On the south wall of the Nataraja mandapa in the same
temple. Telugu Chola. Vijaya Gandagopalan. r.y. 27 (1277
A.D). Records gift of 2037 kul! of land free of taxes, in
Venkunram by Senkéni Virapperumal Gandagopalan alias
Kulottungachola Sambuvarayan for burning two perpetual
lamp in the temple.
On the east wall of the Natarija mandapa of the
Védapurisvara temple. Telugu chola. Vijaya Gandagopalan.
r.y. 28 (1278 A.D). Records a gift of land in Anukkavur
by Sengéni Virakaran Alappirandar alias Rajaraja-Sambuvarayar
as dévadina to god Subramanya and his consorts setup in
the temple of Tiruvottir-udaiya Nayanar by the daughter
of a maid servant of the temple.
Records pave the tiles on the roof of the mandapa by
Midévip-perumanadi Nayakkar grandson of Pattamudaiyar
Kangéyar, one of the mudalis of Kandagopalar.
On the north wall of the first prakara of the Védapurisvara
temple. Pandya. Jatavarman Tribhuvana. Vira-Pandya déva
(Vira - Pandya -I) r.y.5. (1301 A.D). Records an undertaking
by Aifichidan alias Kulaiya-karakkon, son of Verunkai-
329
42/2017
43/2017
44/2017
venrin Allindai and his brother Piraman alias
Tirujfianasambandakkon shepherds of Tiruvottur, in respect
of 64 cows and two bulls received by them from the Sri
bhandara (Treasury) of the temple that they would supply
daily eight nal’ of milk and one 77 of ghee measured by
the liquid measure aranaitiyagi to the god Tiruvottur-
Udaiyi Nayanar of Tiruvottur 1 in Kaliytr-nidu in Kaliydr-
kottam.
On the north wall of the first prakara of the same temple.
Sanskrit verse. Dynasty and Kings name not mentioned.
12-13% century A.D. Contains a verse in praise of god
Siva
On the east wall of the Natarajja mandapa in the same
temple. Pandya. Sadaiyavarman Virapindya-III r.y.4. (1301
A.D.). Records the gift of the village Madurai alias
Tiruvambalap-perumal-nallur in Parasur-nadu, a sub-division
of Venkunrak-kottam, as madappuram by the Nattavar of
Alividaitingip-parru in Attipparru, a sub-division of
Jayangondasola-mandalam, for worship and offering to the
image of Visvésva:a-Nayanar and for feeding tapasvins in
the Bhiksha4 matha of Patatijali-Mahamunidévan of
Meélaichchéri in Perumbarrappuliyiir.
On the west wall of the first prakara in the same temple.
Pandya. Sadaiyavarman Vira-Pandya déva-III r.y.14 (1310
A.D). Records an agreement by the Sri-Rudra Sri miahesvaras
of the temple to provide offerings to the god Somanathadéva
setup in the temple by a certain Sivanammai and for
burning a lamp before this deity in lieu of the interest on
400 Kalam of paddy. received by them from the later in
the 13™ year (of the king), when the temple was without
funds.
330
45/2017
46/2017
47/2017
48/2017
On the east wall of the Nataraja mandapa in the same
temple. Pandya. Sadaiyavarman Virapandya-II r.y.17. (1313
A.D.). Records a royal gift of the village Tavasi Perumbakkam
in Parasur-nadu, a sub-division of Attipparru free of taxes
as dévadana, for meeting expenses of the Virapandyan-
Sandi instituted in the name of the king in the temple by
Munaiyadaraiyar alias Kandya dévar, and for offering and
festival in the month of Ani.
On the east wall of the Nataraja mandapa in the same
temple. Pandya. Maravarman Tribhuvana. Sundarapindya
r.y.11. Records an agreement made by a shepherd of Att
to supply 4 nal! milk one u/akku ghee to the temple daily
in return for 32 cows and one rishabha from temple
treasury by him.
On the north wall of the mandapa in front of the central
shrine in the same temple. Pandya. Maravarman
SundaraPandya r.y.12 (1315 A.D) Registers a gift of 14 veli
land of various places for burning 28 perpetulal lamps in
the temple of god Tiruvottiir-udaiya Nayanar and 4 vel
land for 8 perpetual lamps infront of the godesses Ilamulai-
nachchiyar, which had been donated in the pervious years.
States further that the gift of land Virasambu-nayan alias
Sambuvarayan free of taxes in Tachchantingal and
Sirayampattu as tiruvilakkuppuram for burning 40 perpetual
lamps to the Tiruvottir Udaiya Nayanar from the month
of Avani in the twelfth regnal year of Sundarapindya.
On the east wall of the Natarija mandapa in the same
temple. Pandya Maravarman Tribhuvana. Sundarapindya
331
49/2017
50/2017
51/2017
déva r.y.12 (1315 A.D). States that Tiruvayppidi-nattavar
of the eighteen countries assembled in the hall called
Amudavallavan-tirumandapa, agreed to give for each tiram
(ie. herd to 80 sheep, 80 cows and 80 buffaloes) a heifer,
a lamb and a young buffalo to the god Tiruvottirtidaiya
Nayanar for the favours received by their caste and family.
On the south wall of the mandapa in front of the central
shrine of the same temple. Pandya Vira-Paindya r.y.22.
(1318 A.D). Registers gift of the village Tingal Agaram
bifrucated from Anukkaviir for five members reciting s/ogas
(Attyayanam) infront of the god Tiruvotturtidaiya-Nayanar
by order of Kulasekara Sambuvarayan. The order addressed
to Seyarru venrin chaturvédimangalam Variyan and
Karanattan.
On the east wall of the first prakara in the same temple.
Pandya. Sadaiyavarman Vira-Pandya déva-II r.y.37+8 (1335
A.D). Records gift of 48 (&alatju) of gold of finess of 10%
carat for one pattam to Tiruvotturtidaiya Nayanar in her
name Kaliyuga Raman Tiruttolpriyata Tirukkanai, by the
queen Ulagamuludum-udaiyar.
On the south wall of the mandapa in front of the central
shrine in the same temple. Pandya. Sadaiyavarman
Virapindyan-IV r.y.5. (1341 A.D.). Records an agreement
made by Otuvittan alias Aranatiyigikon of Atti to provide
milk and ghee daily in return for 21 cows and 15 sheeps
received from Tennakon and Kankéyan to the god Tiruvottiir
Udaiya Nayanar in Kaliyur-nidu, a sub-division of Kaliytir-
kottam in Jayangondasola-mandalam
332
52/2017
53/2017
54/2017
55/2017
56/2017
On the east wall of the first prakara in the same temple.
Pandya Jativarman Trib. ViraPandya-IV r.y.13. (1349 A.D.).
Records an agreement made by Otuvittin alias
Narpattennayirak kon, a shepherd of Vinnapadi to provide
ghee and milk daily in return for 30 cows received by
him, to the god at Tiruvottir in Kaliyur-nadu, a
sub-division of Kaliyir-kottam a district of Jayangondasola-
mandalam.
On the east wall of the Nataraja mandapa in the same
temple. Pandya. Maravarman Virapindya r.y.20. (1357 A.D.).
Records an agreement made by a shepherd. residing at
Vallai in Parasur-nadu, a sub-division of Venkunrak-kottam,
to supply of stipulated quantity of milk and ghee by the
measure called Aranatyigi to the god for the cows received
by him.
On the north wall of the mandapa in the same temple.
Sambuvarayar. Rajanarayanan r.y. 4 (1341 A.D.). Registers
gift of Navarpakkam alias Tirujfiana Sambandar Nallir and
Kuthiraithangal by Rajanarayanan as Kani madappura to
mahesvaras for singing sacred hymns (Tiruppattu)
On the east wall of the Natarajja mandapa in the same
temple. Sambuvaraya. Rasanarayanan r.y. 6. (1343 A.D.).
Records the details of taxes to be collected per loom from
the kaiko/as of Tiruvottiir.
On the east wall of the Natarija mandapa in the same
temple. Sambuvaraya. Rajanariyanan r.y. 6. (1343 A.D.).
Records an order of the chief communicated to the trustees
333
57/2017
58/2017
59/2017
60/2017
of the temple conferring the right of worship in the
temple on Bhuvanéka bahudévar, son of Alagiya
Tiruchchirrambalam udaiyar Aiyyan and the grandson of
Bhuvanéka bahudévar.
On the east wall of the Nataraja mandapa in the same
temple. Sambuvaraya. Rajanarayanan r.y. 6. (1343 A.D.).
Records an order of the chief communicated to the Sri
Rudra Sri mahesvaras of the temple conferring the right of
worship in the temple of Bhuvanéka bahudévar son of
Alagiya Tiruchchirrambalam udaiyar Aiyyan and the
grandson of Bhuvanéka bahudévar.
On the north wall of the mandapa in front of the central
shrine in the same temple. Sambuvarayar. Rasanarayanan
r.y. 7 (1344 A.D). Registers gift of Tirujfiina Sambanda
Nalluir as kant madappura irayill to mahésVaras of reciting
Tiruppattu (Dévaram) in front this god Tiruvottur by
Attipparru Nattavar of Jayangondachola-mandalam.
On the south wall of the Nataraja mandapa in the same
temple. Sambuvarayar RaAjanarayanan r.y. 7 (1349 A.D.
Records an agreement made by two shepherds of Tiruvottur
to measure a stipulated quantity of milk and ghee to the
temple in return for cows received by them from the
temple.
On the north wall of the Ekambaresvara shrine in the
same temple. Unfinished inscription. Sambuvaraya.
Rajanarayanan r.y. 13. (1350 A.D.). Records an endowment
for worship to the god Annamalai Nayanar setup in the
temple by Vira Kampa Nayanar alias Vira Vallaladévar.
334
61/2017
62/2017
63/2017
64/2017
65/2017
66/2017
Sambuvaraya. Rajanarayanan r.y. 17. (1354 A.D.). Records
a gift of 200 param to the temple for offerings by one of
the Kaikolars of the village.
On the south wall of the Nataraja mandapa in the same
temple. Vijayanagara. Pukkanna Udaiyar. (1356-77 A.D.).
Chitrabhanu. Records a fixed levy of param per year
imposed on the Kaikkolas, Senaikkadaiyar and Vainiyar of
Tiruvagattur with the assurance that nothing more would
be collected from them.
On the south wall of the mandapa in the Védapurisvara
temple. Vijayanagara. Pokkana Udaiyar. Records the digging
of a channel called Siruppasur from the river (SéyAru)
equally share the water from the channel by Tiruvottur
and Vaiyalur the two villages were as dévadana villages of
Tiruvotturiidaiya Nayanar of Tiruvottur, in Kaliyur-nidu
a sub-division of Kaliyir-kottam in Jayangondachola-mandalam.
Records gift of 22 pon to provide offerings to the god
Tiruvottur by Tiruvénata pillai to merit of his master
Pommu Nayakkar of Vélur.
On the right side wall of the entrance gopura in the
Védapurisvara temple. Vijayanagara. Records gift of taxes
such tinaiyam, Idangai, valangai, idaithurai, vettivari as
sarvaminya to the temple in Agarams and Godess temples
in Dévadainam.
On the south wall of the first prakara in the same temple.
Saka 1454 (1532 A.D). Records the appointment of Koneri,
son of Sella-kon of Diisi, for the maintenance of a lamp in
the temple as the gift of Ayyan Venkapar A[y]yan.
335
67/2017
68/2017
69/2017
70/2017
71/2017
72/2017
On the east wall of the first prakara in the same temple.
Visvivasu 15® century A.D. Records the conferment of the
hereditary office of supervisor of stores (pala-pandarigal) of
the temple on Ariyan mudali alias Tiruvanaikkavudaiyan
of Sandilya gotra.
On the outer south wall of the first prakara of the same
temple. Saka 1519. (1597 A.D). Records the assignment of
certain taxes due from Kilaiyyarrir by Tatti Nayaka as
the gift of Yisura-Nayaka for a lamp before the god.
On the west wall of the Nataraja mandapa in the same
temple. Saka 1520 (1598 A. D.). Pingala. Records the provision
made for burning a lamp before the god at Tiruvottir by
Tattu-Nayaka, the agent of Yisura-Nayaka, on behalf of his
master.
On the outer south wall of the first prakara of the
Veédapurisvara temple. ‘Saka 1542 (1620 A.D.). Seems to
record a grant of land Yidaitturai left in charge of three
persons as inalienable tenants, by Yirakkurupperumal, as
the gift of his master Sadasiva- Nayaka for offerings and
lamps to the temple of Tiruvottirtidaiya Nayanar.
On the south wall of the Nataraja mandapa infront of the
central shrine in the same temple. Vijaya. (164 century
A.D.). Records a grant of 1500 ku/’ of land as tirumugakkanl
by the trustee of the temple to SOmadévar, son of Avadatu
Annappar, a Kannadiya Brahmana residing at Marudarasar
Padaividu.
On the outside south wall of the first prakara in the
Védapurisvara temple. Dynasty and King’s name unknown.
336
73/2017
74/2017
75/2017
76/2017
16th century A.D. Seems to record a grant of land in
Kaliydr as the gift of Rayasam Ramachandra Dikshitar-
Ayyan for conducting the third day festival in the month
of clittirat of the god Tiruvotturtidaiya-Nayanar.
On the east wall of the Natarijja mandapa in the same
temple. Parabava. Records an agreement made by the
trustee of the temple to conduct a festival in honour of
saint Sambandapperumal in the months of Clittirai and
Ani with the mélviram produce of a piece of land
purchased by them with endowment of 100 panam made
for the purpose by two persons.
On the west wall of the inner gOpura, right of entrance in
the same temple. Sukla. (16-17 century A.D.). Seems to
record a unfructuary mortage, by three persons of their
shares of lands in the village to the temple for the money
received by them.
On the north wall of the mandapa in front of the central
shrine in the same temple. KurddhanA in the month Avani
(174 century A.D.). Records sale of 250 kul! of land in
Puliytir Perumbakkam by the tanattar of Tiruvottiriidaiya
Nayanar temple to Pallavarayar pillai for matha called
after Kadérinathar. The tanattar of the temple remitted
taxes on the land after receving 100 panam.
On the east wall of the inner gopura, right of entrance in
the same temple. Ananda. (17* century A.D.). Records an
agreement made among the trustees, the Mahésvaras and
the accountant of the temple in the regime of Anndana
Parérruppillai, the agent at Konéti Timmaya déva-maharaja,
337
77/2017
78/2017
79/2017
80/2017
81/2017
82/2017
not to lend out any of the articles belonging to the
temple, such as tirupparivattam, poles of temple vehicles
(tiruvadudandu), rope and ornaments of the temple car,
umbrella etc.
On the east wall of the first prakara in the same temple.
Vijayanagara. Harihara-Udaiyar. Saka 1300 (1378 A.D).
Records an endowment of land after purchase by Madarasar
vasavanangal of the Piitimisha-gotra, Asvalayana-siitra and
Rigvéda to the temple, for the maintenance of a flower
garden and matha and also house sites for a satra.
On the east wall of the first prakara of the same temple.
Vijayanagara. Kampana Udaiyar. Saka. 1290 (1368 A.D).
Records a royal grant of 4 ஈர் of land in TiruvEngada
nallur situated in Atti-parru to Bharadvaja Saivdhiraja of
Katichikuri.
On the right Navagandam in the Kangiyamman temple.
17th-18th century A.D. An solider of Irufichipuram, who
has his head as an offering to the Goddess.
On the west wall of the Natarija shrine in the same
temple. Chola. Vikramachola r.y.7 (1125 A.D). Records
gift of land, after purchase, by a Sivayogi worshipping in
the temple for providing offering to the god with Sennel
variety of Paddy.
On the grinding stone in the same temple. 14-15® century
A.D. Gift of grinding stone, which was used for sandal.
On the south wall of the first prakara of the Védapurisvara
temple. Chola. Sri Rajéndra Chola dévar (Kulottunga-])
338
83/2017
84/2017
85/2017
r.y. 2 (1072 A.D.) Registers gift of 90 sheep for a perpetual
lamp endowed Patali Echchil nambi alias Amudavallavakkon,
a manradl in Vakiir, in Vésali-nidu in Naduvil-nidu to the
temple of god Tiruvotturidaiyar Kaliyur nadu in Kaliytir-
kottam a, sub-division of Jayangondasola-mandalam. One
Tiruvenkattukkon belonging to the tirunandavilakkukudli
of the temple took charge of the sheep and agreed to
supply the necessary ghee for the lamp.
Brahmadésam, Chandramauli$vara Temple
On the south wall of the same shrine. Pallava. Kampavarman
: year 20 : 866 A.D. This inscription records the gift of
11 தவி of gold for supplying water to the temple
of Tiruppondaip-perumanadigal at Rajamallach-
chaturvédimangalam, by a member of aluriganam of
Kavitippakkam in Paduvir-kottam.
On the south wall of the central shrine. Chola.
Rajakésarivarman (Aditya) : year 20 : 891 A.D. This
inscription records an endowment of a piece of land under
the tank Tigaittiral-éri by Tiruppondai-Somasiyar
(SomayajiyAr) son of Kumaradi-Vajapéyiar (Vajapéyayaji)of
Manarpakkam, a member of the alunganam of Rajamalla-
chaturvedimangalam of Tiruvegambapuram in Damar-kottam,
for the daily feeding of a brahmana at mid-day in the
temple Srippondai-Perumanadigal. The gift was entrusted
to the ganaviriya-perumakka/ of the temple. This is possibly
an inscription of Aditya I.
On the south wall of the central shrine. Chola.
Rajakésarivarman : year 27 The inscription is damaged. It
339
86/2017
87/2017
88/2017
seems to record a gift of 10 kalaiju of gold for burning a
perpetual lamp in the temple of Tiruppondaip-perumanadigal
at Rajamalla Chaturvedimangalam by Ashtamurti, a resident
of the village, and an endowment of land by his wife
(name lost), after purchase, for the daily feeding of a
brihmana in the temple.
On the north wall of the central shrine. King name not
mentioned : Saka 830 : (908 A.D.) This inscription registers
the gift of 121 kalaiiju of gold for burning a perpetual
lamp to the deity Thiruppondaip-perumanadigal at
Rajamallach-chaturvédimangalam of Thiruvégambapuram by
certain Kari Iladattan, who belongs to Innambar-nidu situated
in the northern bank of Chola-nadu. This gift was left in
charge of Ganapperumakkal of the temple to burn this
lamp with the interest of the above-mentioned gold.
On the south wall of the same shrine King’s name not
mentioned : Saka year 830 (908 A.D.) Built in. It records
the gift of 1216 kalatju of gold to burn a perpetual lamp
in the temple of Tiruppondaip-perumanadigal at Rajamallach-
chaturvédimangalam. Ganapperumakkal of this temple were
entrusted to look after the maintenance of this lamp with
the interest drawn out of it.
On the west wall of the central shrine. Saka year 830:
.(908 A.D.) It records the exemption of tax by aljashtasattu
sabha of Rajamallach-chaturvedimanagalam at.
Tiruvégambapuram for the land Amarankuli which was
bought by Sivakkuri Kimadiperumin and his younger
brother Perumal from the sabha of kammilas and donated
for providing 2 தி் of rice daily to Sripondai Mahadéva.
340
89/2017
90/2017
9172017
92/2017
93/2017
On the west wall of the central shrine. King name not
mentioned : Saka 830 : (908 A.D.) This inscription registers
a gift of 12% kalatju of gold for burning a perpetual lamp
to the temple of Tiruppondaip-perumanadigal at Rajamallach-
chaturvédimangalam by Kanakkayan Sattan Kanavati alias.....
உ PéEraraiyan, a native of Kottu..... in Sengattuk kottam.
This gift was left in charge of the ganapperumakkal of the
temple who agreed to burn lamp with the interest of the
above-mentioned gold.
On the south wall of the central shrine. Chola. Parantaka
Chola I : year 2: (909 A.D.). Built in. This inscription
records the gift of land to the temple of Sri
Pondaipperumanadigal to beat the drum daily on Sribali
occasion.
On the south wall of the central shrine. Chola.
Parakésarivarman : year 4 This is damaged. It seems to
record a gift of 15 kalaiju of gold for a perpetual lamp,
and another 95 kalaiiju for some purpose the nature of
which is not known, in the temple at Rajamalla-
chaturvédimangalam.
On 1 south wall of the central shrine. Chola.
Parakésarivarman : year 4. This records a gift of 15 kalariju of
tested gold (iirkal-chemmai) for a twilight lamp in the
temple by Ninrayil Irushikésuvan of Kundina-gotra, a
resident of Vayinanallur in Puliyur-kottam.
On the south wall of the central shrine. Chola. [Parintaka
Chola I : year 5 : 911 A.D.] Built in at the right side and
the end portion is damaged. It records a gift of 90 sheep
to burn a lamp with one ulakku of ghee daily.
341
94/2017
95/2017
96/2017
97/2017
On the south wall of the same shrine Chola Parantaka
Chola I : year 1[3] : 9[20] A.D. This is damaged and
incomplete. It seems to record a gift made by a lady to
the temple of Sri Pondaipperumanadigal at Rajamallach-
chaturvédimangalam in Tiruvégambapuram.
On the south wall of the central shrine. Chola. Parantaka
Chola I : year16 : (922 A.D.) This inscription records the
decision (Vyavasthal) made by the ati/atasAttasattu sabaiyar
regarding the renumeration for the arbitrator (madhyasta)
who was entrusted with the work of writing the account
for the tank committee (Eriviriyam). He was to received
4 nal of paddy daily, 7 kalaiju of gold and one pair of
dress (kirai) annually. On the day of accounts submitting,
he was expected to prove his honesty by holding a red-hot
iron rod (874/2) in his hand. If he came out without
injury, hence also proved as pure he would be honoured
with the bonus (pAdasésha). On the other hand, if he
burnt his hand he would be considered as corrupt and be
fined 10 kalatiju, but of course without any bodily punishment
(Sarira-tandam.
On the south wall of the central shrine. Chola. Parintaka
Chola I: year 17 : (924 A.D). It records a gift of 325
சீயம்! of land by Attamuirti, son of Péraiyya Nallulan Uradi,
a resident of Sankarappadi at Rajamallach-chaturvédimargalam,
to the deity Dakshinamuirtti for providing food offerings
and other items of worship.
On the west wall of the central shrine. Chola Parintaka
Chola I : year 25 : (932 A.D). This inscription records a
gift of gold for a perpetual lamp to the temple of Sri
342
98/2017
99/2017
100/2017
Pondaipperumainadigal, at Rajamallach chaturvédimangalam
in Tiruvégambapuram by certain Ganyan Irana sarman a
native of Mangadu. The committee ganapperumakka/ were
left in charge of burning the lamp with the interest
accrued from the donated gold.
On the south wall of the central shrine. Chola. Parintaka
Chola I : year 25 : 932 A.D.Records that Sembiyan Kilar-
nattukon a headman of Kilinalliir in Kilar kirram in Sola-
nadu gifted 15 pon for burning a perpetual lamp with one
ulakku oil to god Sri Pondai Mahadéva bhattarakar at
Rajamalla-chaturvédimangalam in Daimarkkottam on the
occasion of solar eclipse. The irar and the sabhaiyar of
Vadiyur in Nir Véluir-nadu in Urrukkattuk-kottam, who
received the gift agreed to measure out one u/akku of oil
at the temple premises.
On the north wall of the central shrine. Chola. Parintaka
chola I : year 29 : 936 A.D. This inscription registers the
gift of gold diadem (Pattam) of five kalariju of gold to the
deity Sri Pondai-bhattarakar of Rajamallach-
chaturvédimangalam by a certain person called Haridasa
bhattan, a: native of Naranamangalam. The Ganapperumakkal
who looked after the village administration had taken
charge of this gift.
On the west wall of the central shrine. Chola. Parintaka
Chola I : Year 33 : 940 A.D. This inscription records a
gift of 12 kalaiju of gold for perpetual lamp to the temple
of Sri Pondaipperumanadigal, by Alagasarma Kramavittan
son of Manisiva Bhatta Sarvva-krathukkal of Kridalur, a
member in Zluriganam of Rajamallach-chaturvédimanagalam
in Tiruvégambapuram in Damar-kottam.
343
101/2017
102/2017
103/2017
104/2017
105/2017
On the west wall of the central shrine. Chola. Parintaka
Chola : Year 37 : 944 A.D. This inscription is incomplete.
It records the gift of 1412 kalaiju of gold for burning a
perpetual lamp in the temple of Sri Pondai Perumainadigal
by certain Mahadéva bhattan, son of Manisivabhatta
Sarvakratukkal of Kiidaliir, one of the members of zluriganattir
of Rajamallach-chaturvédimangalam in Thiruvégambapuram,
a village in Damar-kottam.
On the south wall of the central shrine. Chola. Parintaka
Chola I : year 38 : 945 A.D. Unfinished. It seems to
record some gift by Mitta Kufijiramallan a resident of
Karkudi in Malanadu on the northern bank of Kaviri, to
the temple of Sri Pondaipperumanadigal, at Rajamalla-
chaturvédimangalam at Tiruvégambapuram in Damar-kottam.
On the north wall of the central shrine. Chola. Parantaka
Chola I : year lost : 104 century A.D. This inscription
seems to record some gift to the temple of Sri Pondai
Andar at Rajamallachaturvédimangalam of Tiruvégambapuram
in Damar kottam. This gift was left in charge of
the ganapperumakkal who looked after the temple
administration [srt karya]
On the west wall of the central shrine. Chola Parantaka I
: year ... : 10% century A.D. This inscription records a
gift of twenty சவணி of gold by Cholasikhamani pallavaraiyan
of Nelvéli in Inga-nadu a subdivision of Chola-nidu for
burning a perpetual lamp. The members of the tank
committee (é&rivariyapperumakkaf]) agreed to provide oil
for burning the lamp.
On the west wall of the central shrine. King name lost :
year 26 : 10% century A.D. It is damaged and incomplete.
344
106/2017
107/2017
108/2017
109/2017
This record registers the gift of gold for a perpetual lamp
at the temple of Tiruppondaip Perumanadigal by a member
of the a/luriganam of Rajamallach-chaturvédimangalam.
On the west wall of the central shrine. King’s name and
regnal year - not mentioned : 104 century A.D. This
inscription records a gift of two kaladjuof gold for feeding
two Brahmanas on new-moon days (Amavasya) by certain
Nallulin Perumain of Vallivayam. Ganapperumakkal (the
body) of Sri Pondaipperumanadigal, agreed to maintain it
from the interest of the gold.
On the south wall of the central shrine. Chola. Parantaka
Chola I : year lost. This inscription records the gift of 80
kalatiju gold for perpetual lamp to the temple of Sri
Pondaipperumanadigal by Narrilin Nakkeruman, native of
a village in Ilankadu of Venkunrakkottam. Ganapperumakkal
were entrusted with this endowment to execute the act
with the interest derived.
On the south wall of .the central shrine. Chola.
. Parakésarivarman : 104 century A.D. The beginning and
end portions are lost in this inscription. It seems to record
the sale of land by Airijashtasata sabha of Rajamalla-
chaturvédimangalam in Tiruvégambapuram ‘to some person
in Umbala-nadu, a sub-division in Mala-nidu.
On the south wall of the central shrine. Chola. Parintaka
Chola I : year Lost : 104 century A.D. Damaged. Seems
to record some arrangement made by Aujshtasattu Mahasabhai
of Rajamallach-chaturvédimangalam. The renumeration was
345
110/2017
111/2017
112/2017
mentioned as the cloth (&ira:) and wage (korry) given by
ganaviriyapperumakkal. If the arrangement was violated,
the penalty of 108 ரகர has to be remitted.
On the south wall of the central shrine. Chola. Parintaka
Chola I : 104 century A.D. Published in S.LI. Vol. XIX as
No. 253 This is damaged and built in at the right end. It
seems to record a gift of gold by Somasi Sani for burning
a perpetual lamp in the temple of Sri Pondai-[perumanadigal]
Rajamallach-chaturvédimangalam besides a land gift made
for another lamp evidently by a different person.
On the north wall of the central shrine. King year not
known: 10% century A.D Records the Vana-niyaka (the
lord of the jungle) who is known as Pondai-natha who is
Aja (who is not born), who was worshipped by Agni at
first, who was worshipped by the dévas in 7réta-yuga and
by saints like Révasa in Dvzpara-yilga, has been installed
here in Kaliyuga with sandal paste etc. This inscription
on the grounds of paleography may be assigned to 10-
114 cent. A.D.
On the west of the central shrine. Rashtrakita. Kannaradéva
II : year 17 : 956 A.D. It records that Marudinmaiya-
virasuta Bhogavarddhana-vinagata Sri Lakshmana Suta
Sirinarasingayyan Kanhayan made a gift of 21 kalarju of
edarpuram gold for burning a perpetual lamp to Sri
Pondaiperumanadigal at Rajamallach-chaturvédimangalam in
Tiruvégambapuram in Damark-kottam. The ganapperurmakkal
of the temple received the amount and agreed to burn the
lamp out of the interest of the endowed amount.
346
113/2017
114/2017
115/2017
116/2017
On the north wall of the central shrine. Chola.
Parthivéndravarman: year 2 : 961 A.D. This inscription
registers the gift of fifteen kaladju of gold for a perpetual
lamp to the temple of sri Pondaipperumanadigal by Innangiir
alias Alankara chetti, son of Mangalapriyan Kalivilanki, a
merchant of Tiruvégambachcheri in Rajamallach-
chaturvédimangalam. The ganapperumakkal.
undertook the responsibility of maintaining the lamp with
the interest.
On the north wall of the central shrine. Chola.
Parthivéndravarman : year 2 : 961 A.D. This inscription
records that all the lands belonging to the temple were
made tax-free by the village assembly afjashtasatam of
Rajamalla-chaturvédimanagalam in Tiruvégambapuram, a
village in Damar-kottam, in lieu of the amount of gold
86% kalaiiju while they owed to the temple. It also states
that the future lands would also be exempted from taxes.
On the north wall of the central shrine. Chola.
Partivéndiravarman : year 4: 963 A.D. This inscription
records a gift of 12% kalaiju of gold for providing food
offerings and for burning a perpetual lamp to the image of
Risabhavahana in the temple of Sri Pondaip-perumanadigal
of Rajamallach-chaturvédimangalam at Tiruvégambapuram
in Damark-kottam, by a certain Singaperumal. The mahasabha
received the gold and sold three hundred யத of land free
from taxes for this purpose and agreed to carry out the
endowment out of the yield of the land.
On the west wall of the same shrine. Chola.
Parthivéndravarman : year 4 : (963 A.D.) Records the gift
347
117/2017
118/2017
119/2017
of land 1018% kul! for the food offering during the
midnight service and a perpetual lamp to the deity Sri
Pondaipperumanadigal at Rajamalla-chaturvédimangalam in
Tiruvégambapuram, by KAttamayyan son of
Chinnamayyaperkadai after purchasing it from
Tiruvéngatamadhéava-Sarvakrutuyajiyar.
On the west wall of the central shrine. Chola.
Parthivéndrivarman : year 6 : 965 A.D. The inscription
records the gift of 440 kulf of land for feeding two
brahmanis who were well versed in védas during the
midday, by the assembly of aljashtasattu of .
Tiruvégambapuram in Rajamallach-chaturvédimangalam of.
Daimar-kottam. The sabhA members took this decision at
a meeting held during the day time in the big mandapa of
this village and placed this charity under the members of
the committee called ganavariyam. It is also stated that
one among the Brahmins to be fed before the food offering
made to the presiding deity.
On the south wall of the central shrine. Parthivéndravarman
: year 12, day 184 : 971 A.D. The inscription records the gift
of 525 kul of land by Pottan Maduvudaiya Veliyan
Nulamban Visuddhamati Pandita as tax free for the sacred
bath of Sri Pondaipperumanadikal, three times (Santis)
daily and midnight (Ardhayima) by a person who’ well-
versed in Védas. This must be supervised-by great-persons
of gana, who look after the temple (koyil gana-
variyapperumakkal).
On the north wall of the central shrine. Chola.
Parthivéndravarman : year 13 : 972 A.D. This inscription
348
120/2017
121/2017
122/2017
is incomplete and damaged. It seems to register a gift for
special food offerings: (Peruntiruvamudhuy) to Sri Pondaip-
perumanadigal during a particular festival day (peruvirrainil)
by an individual called Jathavéda-kramavittan of Pariyaliir.
On the north wall of the central shrine. Chola.
Parthivéndravarman : year 13, day 120 : 972 A.D. This
inscription records the gift of thirty kalaiju of gold
[Tulal-Niraip-pon] for two perpetual lamps to the temple
of Sri Pondaip-peruminadigal by Caturan Miivayiravan, an
arbitrator /Trairdjyaghat1ka Madhyasthan] and also an officer
who belongs to the Rajamallach-chaturvédimangalam of
Tiruvégampapuram in Damar-Kottam. This money has
been utilized (as deposit) for making the temple land as
tax-free and from the yield of that land, the Mahasabha
accepted to maintain the perpetual lamps through the
assembly (Ganavariyapperumakkal.
On the north wall of the central shrine. Chola.
Parthivéndravarman : year 13 : 972 A. D. Records the gift of
30 ம of gold as tested and weighed by dhanmakattalaikal
by Porkoyil Miivayiravan (alias) Chaturan, the madhyastha
of the Trai-rajya-ghatika of Rajamalla-chaturvédimangalam
of Tiruvékambapuram in Damar-Kottam as maintenance
(for daily measuring out of paddy) and cloth (kiiraj) every
six months to a brahmana who was to do the anointment
of Sri Pondaip-perumanadigal during the three 527447 and
mid-night.
On the south wall of the central shrine. Chola.
Partivéndravarman : year 13 : 972 A.D. Built in at the
349
123/2017
124/2017
125/2017
126/2017
right. It records the gift of gold for burning the lamp to
the temple of Sri Pondaiperuma[nadigal]
On the west wall of the central shrine. Rajakésarivarman :
year 17 : 888 A.D. This is probably an inscription of
Sundara-chola. It records an endowment of two plots of
tax-free land, one after purchase and the other after exchange,
left incharge of the ganavariya - perumakkal of the temple
of Sri-POndaipperumal at Rajamallach-chaturvédimanigalam,
by Bharatvaji Sadasivan of the tiruvunndligal (inner-
temple) of Tiruvégambam at Kachchippédu (Cofijeevaram)
for the supply of sandal paste to the god.
On the north wall of the central shrine. Chola. Rajaraja
Chola I : year 11 : 996 A.D. This inscription is fragmentary.
It stops with the village name.
On the north wall of the central shrine. Chola. Rajaraja I
year 16 : 1001 A. D. Badly damaged. Registers a gift of
land for two persons who recite the sacred songs
[Tiruppadhiyam] in the temple of [Sri Pondai perumanadigal]
at Rajamallachaturvédimanagalam of Thiruvegambapuram
in Damar-kottam.
On the north wall of the central shrine. Chola. Rajaraja I :
year 18 : 1003 A.D. It records a gift of twelve வம of
gold for a perpetual lamp to the temple of Sri Pondai
Peruminadigal at Rajamallach-chaturvédimangalam of
Tiruvégambapuram in Damar-kottram by Kampan Malaiyan
of Tumbir and Nakkan Pavitram alias Rajaraja Talaikkoli.
The members of the samvatsaravariya who looked after the
350
127/2017
128/2017
129/2017
130/2017
grimakirya were entrusted with the maintenance of the
lamp, out of the interest amount and they are empowered
to fine in the event of default.
On the south wall of the same shrine. Chola. Rajaraja I :
year 27: 1012 A.D. Records the gift of ten kalarju of gold
for burning a perpetual lamp to the temple of Sri
Pondaiyalvar in Karaikkottu Brahmadéyam alias
Parakramachola chaturvédimangalam a village in Damar-
nidu of Damar-kottam a sub-division of Jayangondachola-
mandalam. The 10 kalaiju was utilized to purchase ninety
sheep to burn the lamp, and the shepherds of Tillaichéry
agreed to supply ghee daily to the temple. This gift was
left in charge of the ganapperumakkal.
On the west wall of the central shrine. Chola Rajaraja I :
year 29 : 1014 A.D. It records a gift of 90 sheep for
burning a perpetual lamp by Thirupondai of Pariyalur,
one of the members of the aluriganattar of Rajamallach-
chaturvédimangalam. A shepherd of this village took charge
of this gift and agreed to supply ghee daily to the temple.
On the north wall of the central shrine. Chola. Rajéndfa
Chola I r.y.3: 1015 A.D. This records a gift of five kalaiju
of gold for the food offerings and to provide in the mid-
day service to the temple of Sri Pondai mahidéva at
Karaik-kottam alias Parakrama Cholach-chaturvédimangalam
a brahmadéya village in Damar-kottam, a sub-division of
Jayankondasolamandalam by Indaladévi, wife of Vallavaraiyar
Vandyadévar.
On the north wall of the central shrine. Chola. Rajéndra
Chola I : year 4 : 1016 A.D. Fragmentary. Mentions
Rajendra Chola.
351
131/2017
132/2017
133/2017
134/2017
135/2017
On the north wall of the central shrine. Chola. Rajéndrachola
I: year 8 : 1020 A.D. This inscription is much damaged
and incomplete. It mentions gift of paddy to the temple of
Sri Pondaiudailyar] at Karaikkotru brahmadéyam alias
Parakramacholach-chaturvédimangalam in Damar-nidu, by
certain .... Nairakkan from Kéralinthakach-
chaturvédimangalam, a brahmadéya village of Vennidu of
Uyyakkondar-valanidu in Chola mandalam. This gift was
utilized for performing sacret bath(abishé ka) four times in
a day; also mentions thatthe water to be brought from
the well was called Srivaikuntham of this village.
On the west wall of the central shrine. Chola. Kesarivarman
: year 3 : 104 century A.D. Incomplete. Seems to record
something done by Tiruvorriytir Sivan a siVvabrahmana one
among the tiruvunnlikaiyudaiyar of Sri Pondaiyandar.
On the west wall of the central shrine. Chola. Rajaraja
Chola I : year (20). : 100. A.D. This inscription is
damaged and incomplete. It records a gift of 12% kalaiju
of gold for burning a perpetual lamp to the temple of Sri
Pondaiyudaiya-mahadéva at Rajamallach-chaturvédimangalam
in Tiruvégambapuram in Damar-kottam, by Indala Déviyar.
On the west wall of the central shrine. King’s name lost
year 20 : 10% century A.D. Fragmentary. It registers
the gift of land (287% kul by Tiruvadt, a native of
Puduppalli as tax-free to the Brahmin for conducting four
services in a day in the temple of [Sri Pondai] Mahidéva
at Rajamallach-chaturvédimangalam in Tiruvégambapuram.
On the west wall of the central shrine: Chola.
Parthiveéndravarman : year lost : 10% century A.D.
352
136/2017
137/2017
138/2017
Fragmentary and Damaged. It seems to register a gift of
land (350 ul) for flower garden and the worshiping
priests.
On the south wall of the central shrine. Chola. Rajéndra I
year'5, day 230 : 1017 A.D. Damaged at the end. The
inscription records gift of 90 sheep for a perpetual lamp to
the temple of Pondai Mahadéva in Parakramachola-
chaturvedimangalam, a brahmadéya in Karaikkottu a part
of Tiruvégambapuram of Damar-kottam, a sub-division in
Jayangondasola-mandalam by Mandarakovanar Kundadéviyar,
wife of Vallavaraiyar Vandiyadévar.
On the east wall.of the same mandapa of the same temple.
Chola. Rajéndrachola I : year 22 : 1034 A.D. Begins with
the prasasti of the Chola king Rajéndra I, ‘Tirumannivalara’.
Jt records the gift of 1216 Kalariju of gold by Madévi Sani,
wife of Tayapirin Kramavittan, a native of Ettukkir and
also a member A/uriganam of Vayalur in Kayirambédu-
nadu, in Kaliytr kottam a sub-division of Jayangondachola-
mandalam for burning a perpetual lamp. The
perutikurimahasabha of Parakramasola-chaturvédimangalam,
a Karaikkottu Brahmadéyam in Damar-nidu earmarked the
plot of tax free land and agreed to measure out thirty
kalam of paddy by way of intrest at the temple treasury
for the said purpose. The land was also freed from taxes.
On the east wall of the same mandapa. Chola. Rajéndra
Chola I : year 26 : 1038 A.D. This records the sale of 1225
kuf{ of land by the mahasabha of Parakramachola -
chaturvédimangalam in Damar-nadu in Damar-kottam to
Vatkai Karikudi Karikudaiyin of Verriytir in Solamandalam
353
139/2017
140/2017
for eight kalaiju of gold in order to provide food
offerings to the deity Subrahmanyadéva (who is in the
west of the village). Kamakoti Bhatta of Pakkam, Chétrasanma-
kramavittan of Mangidu and others figure as signatories. A
post script at the end of the inscription records the
sivabrahmana of Subrahmanyadévar alias Solakérala temple
of the same village received 45 sheep and agreed to burn
a perpetual lamp.
On the south wall of the same mandapa. Chola. Sri
Rajéndra Chola I : year 25 : 1037 A.D. This inscription
records tha! the revenue offcial Madisidan Adittan of
Siruvayalir deposited 716 kalaiju and 2 maijadi of gold
with the authorities of the temple Sri Pondai-udaiya
Mahidéva of Parakramacholach-chaturvédimangalam in
Damar-nidu, a sub-division of Damark-kottam in
Jayangondasolamandalam. The temple officials made this
gift for constructing the tirumandapa at the temple.
However the temple authorities utilised the interest ac-
crued from the amount, 45 kalam and one tuni of paddy
for conducting festivals and for various offerings and
worship on every Sunday to the gods Pondai Perumanadigal
and chandrasékharadévar.
On the north wall of the mandapa of the same temple.
Chola. Sri Rajéndrachola 1 : year 27 : 1039 A.D. It
records the gift of money for niilérru probably for sacred
thread used for hoisting the flag on the day of beginning
of festivals, by Milaimudaiyan Piivalin Arumoli a native of
| Puliyur-nidu a sub-division of Arumolidéva-valanidu in
Solamandalam for which a land was purchased by the
354
141/2017
142/2017
143/2017
temple of Pondaisudaiya mahidéva at Parakramachola-
chatiirvédimangalam and which was made free by Mahasabha
Another gift of gold (10% விற் and 6 maiijadl) for a
lamp by Umidéviyar, wife of Vallavaraiyar Vandyadévar
was also recorded. It mentions the water sources like
Kundvaip-péréri, Sundarasolap-péréri, Paramésvara-vaykkal
and Kilkottaiyiirvathi while describing the boundaries.
On the south wall of the central shrine. Chola. Rajéndra
Chola - I : year 30 : 1042 A.D. Damaged. This inscription
probably belongs to Rajéndra Chola I. It records a sale of
land for providing food offerings to the god of Sri
Pondaiyudaiya mahaidéva at Parikaramachola-
chaturvédimangalam in [Dimar}-kottam, a sub-division of
Jayangondasola mandalam by the assembly members of
that brabmadéya village.
On the south wall of the mandapa of the same temple.
Chola. Rajéndra Chola I : year 30 : 1042 A.D. Built in at
the end. Begins with the introduction thirumannivalara etc.
The inscription is left incomplete after the name of the
king and regnal year.
On the north wall of the mandapa in front of the temple.
Chola. Rajadhiraja I : Year 26 : 1044 A.D. It records tke
decision of the assembly, Parakramachola-chaturvédimangalam
in Daimar-nidu in Damar-kottam, which met under a
tamarind tree, to sell land as tax-free for constructing a
watershed for quenching the thirst of king Udaiyar
Rajéndracholadéva and his queen Viramahadéviyar, who
probably died at this village to Senapati Madurintakan
355
144/2017
145/2017
alias Parakesarivélar who was the brother of the queen.
The sabha which received both the price and tax amount,
and agreed to remit the taxes on this land.
On the north wall of the mandapa in front of the central
shrine. Chola. Rajidhiraja I : Year 30, day165 : 1048 A.D.
Begins with the prasasti tingalér taru etc. It records the
decision of selling 2000 kuli of the common land [Ur
maljikkam] by the mahasabha of Karaikkottu Brahmadéyam
alias Parakramasolach-chaturvédimangalam while they met
at the temple of Tiruvaypidi deva (Krishna) situated in the
western direction of the village, to the temple (of Sri
pondai-udaiyar) probably for providing food offerings
(Tirumadaippallippuram) 1௦ the deity Adavallin
Parikramasolavitankar by three individuals namely
Maidhavasara bhatta, Ilaiya Nambi Kramavittan and Ilaiya
Santana Kramavittan of Sengotruch-cheri. The temple
committee agreed to maintain the charity.
On the south wall of the mandapa of the same temple.
Chola. Rajéndra Chola I : year . . . : 114 century A.D.
Incomplete. The inscription is built in between the lines 3
& 4 and at the end. It records the provision made for
feeding 100 Srivaishnava pilgrims in the hall named
Jananathamandapa who were going to the temple of Tirumala
and returning after taking sacred bath (tirtamadal) on
newmoon days, on the day of Tiruvonam festival in the
month of Purattast and six days festival in the month of
Auipasi. It could be inferred that this record belonged to
the Vishnu temple i.e. Solakéralavinnagar of this village
[see no.250] since it pertained to Srivaishnavas, Thiruvonam
Tirumala etc.,
356
146/2017
147/2017
148/2017
149/2017
On the south wall of the mandapa of the same temple.
Chola. Rajadhiraja I : year 3[1] : 104[9] A.D. Built in at
the left. It registers the sale of land which was freed for
from taxes to the temple by the urir for feeding Sri
mahésvaras, who come to worship during the days of
festivals in the temple of Sri Pondai-udaiya Mahidéva of
Parakramacholach-chaturvédimangalam of Damar-Nadu in
Damar-kottam, a sub-division of Jayangondasola-mandalam.
On the south wall of the mandapa of the same temple.
Chola. Raja[dhilraja I : year 31 : 1049 A.D. Built in and
damaged. It records the sale of 46 kul of land for nine
கவணம் of gold by the iir assembly of Omanandattur to
temple of Sri Pondaiudaiya Mahidéva in order to provide
food offerings to the devotees who thronged to the temple
on the occasion of festival days. The land was declared as
tax free.
On the north wall of the mandapa. Chola. Rajidhirajachola
I: Year 32 : 1050 A.D. It records that the assembly
Parakramasola-chattirvédimangalam organised a meeting before
the Ayothi Alvar temple and agreed to sell 2000 kul! of
land after receiving both the price-money and tax-money
for providing food offerings to the god
Tiruchirrambalamudaiyar (Lord Nataraja) of Pondai-udaiyar
temple.
On the south wall of the mandapa of the same temple.
Chola. Rajidhiraja I : year 32 : 1050 A.D. Dameged and
Incomplete. It seems to record a meeting of the members
of the sabha at the temple of Sri pondai Alvar and also
refers to the burning of lamp before Sapthamathirukas by
Midhavakramavittan Adittakramavittan, and
Tiruvégambakramavittan.
ச
150/2017
151/2017
152/2017
153/2017
154/2017
On the south wall of the mandapa of the same temple.
Chola. Rajidhiraja : year 33 : 1051 A.D. Records the sale
of 3549 kul of land as madapura iraiyill to the matha
called Pavithramanikka madam in the premises of the
temple Sri Pondaiyindar the land was also freed from
other taxes and declared as iraiyil. They also agreed to
not to levy any tax from the cultivation.
On the north wall of the mandapa. Chola. Rajdhiraja I :
year : 34 : 1052 A.D. It records the gift of gold for
providing food offering to the deity Pasupatamurti when
it was taken out in procession for sriball in the morning
service at the temple of Pondai mahidéva, by a Veflala
lady named Madevan Tiruvantal who was a native of
Niyamam in Pular-Kottam in Jayangondachola-mandalam.
The Sivabrahmanas of the temple received the amount and
agreed to maintain the charity.
On the east wall of the mandapa. Chola. Rajidhirajal : year
lost Fragmentary. This inscription begins with the meykirtti
Tingalér taru. It records the sale deed of 4000 ku/! of land
executed by perunkurt perumakkal of Parakrama [Cholach-
chaturvédimangalam]. While specifying the boundaries
Rajéndrasolappéréri, Murukampadi ஏகம், and Palan ஈகம்
are mentioned.
On stones built into the wall Chola. Sri Rajidhirajadeva :
. 3 11% century A.D. Fragments. The king name
Rajadhirajadéva and a temple name Aditya-griha are alone
survived.
On the east wall of the mandapa. Chola. Rajéndra II :
year 3 : 1055 A.D. Beginning badly damaged. It records
358
155/2017
156/2017
the decision of purchasing 1126 ku/f of land in the name
of Adichandésvara taken by Mahisabha in the meeting held
in the temple mandapa for the expenses of worship
(archanabhogd).
On the north wall of the mandapa. Chola. Rajéndrachola
Il : year 4 : 1056 A.D. Begins with the prasasti of the
king, portions of which are lost. It registers a sale of 25
vél! of land to the temple of Sri Rudrasolamahadéva
situated in the southern bank of the river Tiruvehka at
Parakramachola chattrvédimangalam in Daimar-nidu, a
sub-division of Damar-kottam in Jayangondachola-mandalam,
for 40 kasu by the assembly of Venkulattur in Kalumala-
nidu, a sub-division of Kaliyur-Kottam in the same mandalam.
It is also stated that out of 40 kasu, 10 kasu was towards
the payment of price and other 30 kasu towards the
payment of taxes. The mathyastha Sivakkolundu
chandrasékaran and other figures are seen as signatories.
On the west wall of the mandapa in front of the same
shrine Chola Rajéndra Chola II: year 5 : 1057 A.D. It
records the sale of land to the temple of Bhavarudra
Somisvaradéva on the southern bank of the river Vehka
[Végavati] by the assembly of Parakramacholach-
chaturvédimangalam in Damar-nadu, a sub-division of Damark-
kottam in Jayangondasolamandalam, for 10 kasu from the
temple authorities. The land was also declared as taxfree.
It is also conters the privilege of irrigating the land and
prohibited others from drawing water. Four hundred kul
of house-site was also given to the tillers for their residence.
359
157/2017 On the east wall of the mandapa. Chola. Rajéndra Chola
158/2017
159/2017
160/2017
Il : year 8 : 1060 A.D. Built in. It records that the
perwikurt perumakkal of Parakramasolachaturvédimangalam
received gold from the temple treasury and agreed to
exempt the taxes on, the land owned by the temple. The
produce of the land were to be utilized for feeding
brihmanas well versed in Vedas and also for smearing the
deity with ingrients. The sabha also agreed to remit the
taxes for the temple land.
On the east wall of the mandapa in front of the central
shrine. Chola Rajakésarivarman alias Udaiyar Rajéndradéva
: year 15 : 1067 A.D. A portion of the inscription is lost
during the renovation of the temple. Begins with the
prasasti Tirumagal maruviya etc of the king. Registers the
sale of land to the temple of Rudrasolai mahidéva situated
on the sonthern bank of Vehka at Parakramasola-
chaturvédimangalam in Damar-nadu, a sub-division of Damar-
Kottam by the assembly of Venkulatttr alias Paramésvara
chaturvédimangalam in Kalumala-nidu, a sub-division of
Kaliytir-kottam.
On the south wall of the /mandapa of the same temple. 117
century A.D. This damaged Fragmentary inscription. Records
the sale of land free from all taxes to the temple of Sri
Pondaiyudaiya Mahadéva by the assembly of the brabrmadéya
village.
Stray stones lying near the temple. Chola. Kulottunga -I
Fragmentary inscription. Contains portion of the Euology
of Kulottungachola. Seems to register the sale of land.
360
161/2017
162/2017
163/2017
164/2017
165/2017
On the north wall of the mandapa. Chola. Kulottungachola
I: Year 48, 1118 A.D Incomplete. Registers an agreement
made by certain Sivabrahmanas of the temple of Pondai-
udaiyar at Dinachintimani-chatirvédimangalam in Damar-
nadu, a sub-division of Damar-kottam, with the Srimahésvara,
kankaniseyvar, koil-variyapperumakka] and the karanattir,
for burning two lamps from the interest on gold received
from a native of Paruttikkudi, a sub-division of Misengili-
nidu in chintaimani-valanadu of Solamandalam.
On the south wall of the first prikara in the
Chandramaulisvara temple. Chola. Vikramachola r.y. 6
(1124 A.D). Records the gift of four kasu for four twilight
lamps donated by four individuals to the doing Pondai-
udaiyar at Dinachintamani-chatuppédimangalam, bramadéya
to Karaikkottam in Tamark-kottam.
On the south wall of the first prakaira in the
Chandramaulisvara temple. Chola. Vikramachola. Records
the gift of one kasu by a native of Mayilappur in Puliyur-
nidu in Vijayarajéndra-vala-nadu in Karaikottumandalam.
On the south wall of the first prakara in the
Chandramaulisvara temple. Chola. Vikramachola. r.y.9 (1127
A.D). Records the gift of one kasu in 11% diramam for a
sandhi lamp to the deity Pondai-nayakar at Brahmadéyam
in Karaikkottai by puvan Tiruvallam-udaiyin, a Vaduga
vaniyan of Ikkadu residing at Karaivali Kandapurappéttai
in PerumbanappAdi in Jayankondachola-mandalam.
On the north wall of a mandapa in a field adjoining the
same temple Chola. Kulotrungachola IIT : year 3 : 1181
361
166/2017
167/2017
168/2017
A.D. Incomplete. It registers the gift of eight ஈகி of land
at Karaikottu- Brahmadésam alias Dinachintamani-
chaturvédimangalam in Damar-nidu, a sub-division of Damar-
kottam in Jayangondachola-mandalam, by Ullavir Kamban
Vanidaraiyan which was his /fvitakkani to the temple of
Sri Pondaiyudaiyar. A lake namely Kadappéri and a river
namely Sambuvarayap-pérarti are mentioned. Kamban
Vanadaraiyan might have been a headman of Dinachintamani-
chaturvédimangalam.
On the north wall of the mandapa of the same temple.
Chola. Kulottungachola 11] : year 27 : 1205 A.D. It
registers the gift of land called Irurigo/la Vilagam to meet
the cost of constructing gopura, providing food offerings,
burning lamp and sacred bath to the temple by Adavallin
Gangaikondan alias Irungolan.
On the south wall of the mandapa. Chola. Rajaraja II :
year 31: 1247 A.D. This record could be assigned to
Rajaraja IIT on account of the high regnal year. Registers
a gift of golden diadem weighing 20 kalaiju and one
maijadi by an individual Aliyatiran Vidaiyin-mélvaruvin
belonging to a village in Paduviir-nidu of Manayir-kottam.
On stones lying in the courtyard in the Selliyamman
tmple. Fragments in four pieces contains the names
of village and territorial divisions such as
Mayipalakulakalapperunderu, Solakulavallinallir, SOmangalam,
Manarpakkudi, Dimar-nidu and Kottam in Jayan]gondachola-
Mandalam, Pakkai-nadu in Gangaikonda-chola-valanadu, other
details are lost.
362
169/2017 On the west and north wall of the central shrine Chola.
170/2017
171/2017
Kulottunga chola I : Year 21 : 1091 A.D. This inscription
begins with the prasasti of the king Pugal siilnta punari
etc. It records the exemption of taxes for the devadana
lands of Sri Rudrasolai-Mahidéva by the sabha of
Dinachintamani-caturvédimangalam of Damar-nidu, a sub-
division of Damar-kottam in Jayankonda solamandalam.
The dévadana lands were located in twelve different places,
purchased in the 12%, 14% and 21°“ years of the king, from
twelve different persons. The boundaries of the lands and
measurements were mentioned in detail.
On the north wall of the central shrine Chola Rajéndra
déva (11) : Year 9 : 1059 A.D. This inscription begins
with Chandésvaran ola and the நாகக் ‘ Thirumatar
puviennum’ etc. It records the public sale of land to the
temple of Sri Rudrasolai mahadéva situated on the southern
bank of the river Vehka by the sabha of Karaikkotru-
brahmadéyam alias Parakrama sola-chaturvédimangalam in
Damar-kottam in Jayangondachola-mandalam. It is also stated
thar the said land measuring 10,000 80/7 was utilized for
the settlement of the peasants of the Rudrasolai mahAdéva
temple in the name of Alankaravalli chéri.
On the north wall of the mandapa in front Chola. Kulottunga
Cholall: year 3 : 1136 A.D. Incomplete. It begins with the
prasasti Piimévu Vvafar’ etc. and registers the royal grant
of Anapayanallur which was separated from Rajéndrasolanallur
(inclusive of Avvélur and Venkarpadi) as a dévadina to
the deity Sri Rudrasolai-udaiya Mahadeva at Karaikkottu
Brahmadésa alias Dinachintamani-chaturvédimangalam in
Daimar-nidu, a sub-division of Damark-kottam in
363
172/2017
Jayankondachola-mandalam. It is stated that as the temple
did not have any dévadina land previously, the order was
made when the king was seated on the thrown below the
pearl canopy in the ablisheka mandapa of his palace at
Vikramacholapuram, at the instance of Kulottungachola
Savarnadhirajan.
On the east wall of the mandapa Sri Virakumara kampana
Udaiyar : Saka year 1285, Sobhakrit, Dhanus, su.di.11
Wednesday, Punarvasu : 1363 A.D. It registers the gift of
taxes for burning 3 perpetual lamps to the temple of Sri
Rudrasolai Udaiyar at Karaikkottu Brahmadésam in Daimal-
nidu in Jayankondachola-mandalam. The gift was made on
the order of Povindarasar, the agent of the Mahaipradhini
Somaiya Dannayaka.
364
எசால்லடைவு
சொல் பக்கஎண்வர்'
அகரப்பற்று 35/3
அகரம் செய்யாற்று
வென்றான் சதுர்வேதி மங்கலம் 83/1
அச்சுத்தறி 42/11
அஞ்சஷ்டசதத்து சபை 142/1, 143/3, 150/5,
151/286, 178/5, 184/2, 185/11
அடைக்காயமிர்து 227/25
அடைக்காயமுது 21/43
அடைந்தவாரலையன் மடம் 11/9
அடைப்பு பேறு 93/11
அண்டிலி 42/6
அத்திப்பற்று 70/3
அத்திப்பற்று நாட்டவர் 97/7
அதிகை மாத மாத இரட்டி 104/6
அத்தியாந கேரளாந்தக
நல்லூர் 33/4, 43/2
அத்தியில் இருக்கும்
மன்றாடிகளில் தென்னக்கோன் 85/6
அதிகாரிக்கு குடுக்கும்
முதல் வரி 91/13
அந்தராயம் 248/24
அபிஷேகம் செய்யும் பிராமணன் 191/4
365
சால் பக்கஎண்வர்'
அபிஷேகம் செய்வான் 186/5
அபூர்விகள் 185/10
அபூர்வியாண்டார்கள் 11/8
அபிமாநமேருச் சேரி 303/82
அபிமானச் சதுர்வேதிமங்கலம் 267/14
அமஞ்சி 270/38
அமாவாசியமுது 11/8
அமாவாசை 168/2, 243/4
அமுத வல்லவன் திருமண்டபம் 82/21
அமைஞ்சி 270/24
அர்ச்சனா போகம் 8/4, 267/19
அர்ச்சிப்பார் 213/3
அர்த்த ராத்திரி 182/4
அர்த்த யாமம் 186/4, 191/4
அரசன் செறு 60/5
அரமனையில் பிறக்கும்
பழவரி, புதுவரி 124/9
அரிசி காணம் 91/111
அரிமுக்கை 37/9, 46/8
அருமொழிதேவப் பெருந்தெரு 54/2
அருமொழிதேவன்
மரக்கால் 226/22, 231/3
சால் பக்கஎண்வர்
அருமொழிதேவ வளநாடு 230/6
அரைமனைப் பெருஞ்செறு 55/5
அரைவாசி 113/4
அலங்கார செட்டி 176/3
அழிச்சியாறு 270/28
அழிபடைத் தாங்கிப் பற்று
நாட்டவர் 70/3
அறம் உரைத்த நாயனார் 9/1
அறுபதின் கலவரிசைப் பற்று 60/4
அன்றாடு நற்காசு 14/12, 18/22, 131/18
அனபாய நல்லூர் 314/9
அனுக்காவூர் 42/7
அனுக்காவூர் கிழவன்
மலையன் சடையன் 58/2
அனுப்பத்தூர் அகம்படிப்
பெண்களில் களப்பாள நாச்சி 59/4
ஆசுவிகள் போர்க்கடமை 37/10, 42/10
ஆசுபொதுமக்கள்
பேர்க்கடமை 79/17, 91/14
ஆட்டைச் சம்மாதம் 104/5
ஆடவலார் பராக்கிரமசோழ
விடங்கர் 241/41
ஆடவல்லான் கங்கைகொண்டான்
ஆன இருங்கோளன் 293/10
ஆணி கிழவன் ஏறன் பித்தன் 131/14
ஆதிதாச சண்டேஸ்வரர் தேவர் மடம் 257/22
ஆதித்தவார பெரும்பலி 226/19
366
சொல் பக்கஎண்டிவர்'
ஆய்குடி மக்கள் 316/11
ஆயம் 91/17
ஆரணதியாகி 52/5, 68/7, 77/8, 89/7
ஆலஞ்செறு 13/7
ஆளப்பிறந்த விளாகம் 79/9
ஆளப்பிறந்தார் ஆன இராசராச
சம்புவராயர் 60/3
ஆற்றூர் சூரிய தேவக்காடக
சோமாசியன் 258/33
ஆறாங்கட்டளை 291/15
ஆனித் திருநாள் 119/5
இசைவு தீட்டு 236/12
இடையர் பேற்கடமை 91/20
இடையன் 26/7,29/6
இடையன் கீரந்தை திருவாய்க்குலம்
மணவாளக்கோன் 43/3
இந்தள தேவியார் 204/4
இந்நிலத்தில் ஏறின குடிகள் 270/24
இராக் காலம் 73/6
இராகுதேவர் 316/10
இராசேந்திரசோழ நல்லூர் 314/9
இருங்கோள விளாகம் 292/5
இருஞ்சிபுரம் 129/3
இரு பூ விளை நிலம் 314/12
இலங்காடு 169/1
இலாட ஆதித்தன் 140/3
சால் பக்கஎண்/வர்
இலைக்கறி 232/4
இலைக்கறியிடுவான் 243/5
இலை வாணிகர் 42/11
இறை இழிச்சி 179/10
இறை திரவியம் 8/6, 133/30, 178/8,
237/21, 270/70, 278/17
இறையிலி தேவதாமை 312/155
இறை நிலம் 310/137
இறையிலி 179/9,183/12, 186/3,
218/10, 248/24, 316/12
இனவரி 91/15
ஈரங்கொல்லி 311/142
உடையார் பண்டாரத்துப்
பொன்கொண்டத் தேவர் 275/2
உத்தரன் மேலூர் 54/2
உத்தமசோழச் சேரி 302/75
உத்தமசோழ மாராயன் 5/2
உத்தமசோழ மகாதேவியார்
ஆருரன் அம்பலத்தடிகள் 6/2
உதகபூர்வ தர்ம்ம தாநம் 91/24
உப்பு 243/5
உப்புக்காசு 19/23, 295/4
உம்பள நாடு 170/9
உலகுடை மாதேவி பெருன்தனத்து
திருச்சிற்றம்பல பெருமக்கள் 253/29
உவச்சர் 227/26
உவச்சர் பேர்க்கடமை 42/10
367
சொல் பக்கஎண்வரீ
உழவிறை 248/24, 250/7
உழுங்குடிகள் 274/35
உழுகுடிகள் 258/36, 311/151
உள்ளாவூர் கம்பன் வாணதரையன் 291/10
உள்ளாயம் 316/11
ஊர் அடங்கல் 91/23
ஊர்க் கணக்கர் 79/17, 91/15
ஊர்க்கர் செம்மை பொன் 144/3
ஊர்கற் செம்மை 139/3, 140/3,
146/3, 147/2
ஊற் கணக்கன் 59/8
ஊர் மஞ்சிக்கம் 240/30
ஊரிடு வரிப்பாடு 270/25
எச்சோறு 14/14, 270/24, 295/4
எடர்புரம் 174/9
எடுத்தளவு 91/11
எடுத்துக்கொட்டி 37/9
எண்டிசை நிறைந்த வண்டு வராபதித்
திருவாய்ப்பாடி நாடவர் 82/25
எண்பதின் கலவரிசைப் பற்று 62/6, 64/5
எம்பெருமக்கள் மூவர் 56/12
எளர்புரம் 172/2
ஏரத்தக்கிணறு 236/15
ஏரிக்கணக்கு எழுதுவார் 151/7
ஏரிநீர் கோவை 252/16
ஏரிப்பட்டி 55/6, 62/6
சால் பக்கஎண்/வம்'
ஏரி மீன் காசு 91/20
ஏரி மீன் பாட்டம் 37/10, 42/10, 47/11
ஏரிவாய்ப் பற்று சிற்றியாற்றூர் 48/2
ஐப்பசி திருநாள் 244/5
ஓட்டைத் தூம்பு 257/24
ஒதுவாநாந ராஜகம்பீர சம்புவராயன் 30/2
கடப்பேரி 29/16
கடைநீர் 248/25
கண்காணி 112/2
கண்ணாயக்கர் மகமை 104/6
கண்மட்டவரி 91/19
கணக்கப் பிள்ளை 125/3
கணக்கவரி 42/10
கணக்காயன் சாத்தன் கணவதி 144/2
கணப்பெருமக்கள் 141/2, 155/10
கணவாரியம் 185/12, 190/13
கம்மாளர் சபை 142/1
கமுகந் தோட்டம் 8/4
கரணத்தான் வேங்கடவன்
திருவிக்கிரமன் ஆன பிரம்மபிரியன் 227/29
கரிவேடு நாடு அறியூர் 221/26
கருவூலவரி 91/19
கரைக்கோட்டு பிரமதேயமான பராக்கிரமசோழ
சதுர்வேதிமங்கலத்து மகாசபை
பெருங்குறி பெருமக்கள் 204/3, 217/6
கல்லணை 270/28
கல்லுங் கலருந் நீக்கி 273/24
368
சால் பக்கஎண்வர்
கலவையாந ராசநாராயணச்
சதுர்வேதி மங்கலம் 37/4
கலிங்கல் 240/30
கலிச்சங்கால் 142/2
கலியுகராமன் திருத்தோள் பிரியாத
திருக்கானை 84/3
கழஞ்சு 6/3, 32/4, 40/4, 57/3, 144/4,
160/11, 162/9, 168/2, 175/10, 230/8
களத்தூர் கோட்டம் 28/2
கற்குடி கற்குடையான் 164/11
கற்பூரம் 44/4
கற்றை வட வாணியர் 104/4
“கன்றியம் 42/5
காசாயம் 37/9, 42/9
காசிரம்பேடு நாடு 41/2
காஞ்சிகுறி பராத்துவாசி சைவாதி ராஜர் 128/4
காடி 195/20
காடேறு கொல்லை 269/17
காணம் 157/21,158/4,165/3
காணி மடப்புற இறையிலி 91/28, 98/14
காணி மடப்புறம் 91/24
காத்திகைக் காணிக்கை 90/9
காத்திகைப் பச்சை 91/16
காமக்கோட்டக் கிரமவித்தன் 267/12
காயரம்பேடு நாடு 6/4, 10/5
காயிரம்பேடு நாடு 16/9
காலாண்டர்கள் 123/3
சொல் பக்கஎண்வர்'
காவிரி வடகரை மழநாடு 163/10
கானகரை செல்வி அம்மை 60/3
கிரய திரவியம் 133/30, 237/21
கிராம காரியம் செய்ய கடவ
ஸத்ஸர வாரியம் 199/9
கிருக திரவியம் 270/19
கிளிநல்லூர் பேரதிகாரஞ் செய்த கிளிநல்லூர்
கிழவன் ஆன செம்பியன் 156/4
கிளிய பல்லவரையன்
அம்மையப்பநாந அதியமான் 24/2
கிளியாறு 31/6
கிளியூர் நாடு 10/4
கீழ்ப்பாக் கிழான் பெரியான் 58/2
குசக்கலம் 227/25
குசவன் செறு 56/8
குடநகர் 13/4
குடிஞை கல் 158/4, 221/24
குடிநீங்காத திருநுந்தாவிளக்குப் பட்டி 62/5
குடிநீங்கா தேவதானம் 65/6
குடிநீங்கா மடப்புறம் 71/12
குடிப்பள்ளி சாமந்தன் மும்மமராயன் 28/3
குடிமை 248/24
குடியிருக்கை 303/85
குதிரைச் சேவகன் தாங்கல் 90/5, 98/10
குந்தவைப் பேரேரி 303/78
குலசேகரச் சம்புவராயன் ஓலை 83/1
குலோத்துங்க சோழ
369
சால் பக்கஎண்வர்
ஸவர்ணாதிராஜன் 314/10
குற்றத்தெண்டம் 37/11, 47/12, 75/8
குழிப்பணம் 92/7
குளத்தூட்டு நீ்ரகோவை 252/15
குளவடை 79/18
குன்றிப் பொன் 195/29
கூடல் கிழார் மணிசிவபட்ட சர்வகிருதுக்கள்
மகன் மகாதேவ பட்டன் 161/6
கூடல் கிழார் மணிசிவபட்ட ஸர்வகிருதுக்கள்
மகன் அழகசர்ம கிரமவித்தன் 161/6
கூடலாளப் பிறந்தார் காடவராயர்
நம்பிராட்டியார் உடையாழ்வார் 5573
கூடலூர் சீகுமார சோகியார் பிராமணி
எழுவரடியாள் சானி 302/76
கூற்று நெல் 14/14, 270/24
கூற்று நெல்லு 295/4
கூறை 171/2, 192/5
கெங்கா தேவியார் 84/5
கேசவ வாய்க்கால் 13/7
கேதாரி நாதர் மடம் 123/4
கைக்கோளப்பெரும்படை 4/6
கைக்கோள முதலிகள் 103/3, 107/6
கைக்கோளர் 75/7, 92/3
கையேற்பு 104/5
கைவிலை காணம் 91/11
கொட்டுக்கால் 278/10
கொல்லை நிலம் 310/128, 222/29, 273/22 .
சால் பக்கஎண்வர்
கொல்லைப் புஞ்சை 37/10, 42/10
கொற்று 171/2
கோட்டம் வகை செய்கின்ற பழுவுருழான்
மொடநாராயணன் 236/12
கோட்டம் வகை செய்த பணிமகன்
சியவயலுடையான் மதிசூதனன் 226/19
கோட்டையூர் வதி 230/6, 230/7
கோயில் வாசலால் போந்த குடிமை 270/24
கோயிலன்தராயம் 37/11
கோலியத்தறி 42/12
கோலியர் 75/8
கோவலூர் நாடு 50/4
சங்கரநாரண ஈஸ்வர கிருகம் 1/2
சங்கரப்பாடி 153/4
சத்திரம் 126/3
சந்தணம் 44/4, 276/6
சந்திரகிரி ராச்சியம் 109/6
சந்திரசேகரர்க்கு திருவமிர்தரிசி 227/24
சம்புவராயர் பேராறு 291/17
சம்வத்சரம் தோறும் ஸ்ரீகாரியம் செய்யும்
கோயில் வாரியம் 230/8
சற்கரை 243/4
சாலிகர் 37/10
சாலியர் மனைத் தறி 42/11
சாந்தாநிக சைவாசார்ய காஞ்சிக்குறி
திருவேகம்பமுடையார் 57/1
சித்திரை திருநாள் 118/1, 119/5
370
ஹால் பக்கஎண்_வர்
சிதாரி 276/6
சிபண்டாரம் 87/5
சிரத்தாமந்தர் 183/15, 199/10,
179/12, 190/15
சிராயம் பட்டு 42/6
சிரிபோந்தையந் மரக்கால் 205/10
சில்லிறை 19/23, 250/7
சிலாலேகை 199/13, 237/21
சிவக்குறி காமடிபெருமக்கள் 142/1
சிவயோகி ஸ-ஏஸாரம்பி
ஆரண தியாகி ஆண்டார் 131/16
சிவலிங்கார்ச்சநம் 13/10
சிவன்படவர் 316/10
சிற்றியாற்றூர் 41/3
சிறுகாலைச் சந்தி 289/2
சிறுகுடிகள் 279/21
சிறுநென்மேலி 221/26
சிறுபாடி காவல் 37/9, 46/8
சிற்றேரித் தூம்பு 50/4
சுப்பிரமண்ணியப் பிள்ளையார் 64/4
சுப்ரமண்ய வாய்க்கால் 270/18
சுண்ணாம்பு 243/5
சுந்தரசோழப் பேரேரி 218/7
சுப்ரமண்யதேவர் ஆன சோழ கேரளன் 222/36
சுவாமி போகம் 195/19
சூர்யகிரகணம் 157/11
சால் பக்கஎண்_வர்
‘
ச்
சூலவரி 91/16, 92/7
சூறை 5/2
செக்கிறை 79/18
செக்கு 104/4
செக்கு கடமை 37/11, 42/11, 91/19.
47/85.
செங்காடு 50/4.
செங்குன்ற நாடு 37/4
செங்கேணி அத்திமல்ல நாயநாந
ராஜேந்திரசோழச் சம்புவராயன் 30/2
செங்கேணி அத்திமல்லன்
அம்மையப்பன் 33/4
செங்கேணி அத்திமல்லன் சம்புவராய நாயன்
ஆன எதிரிலிசோழ சம்புவராயன் 44/8, 47/14
செங்கேணி அம்மையம்மன் அழகிய
சோழனான சம்புவராயன்
செங்கேணி வீரப்பெருமாள் அத்திமல்லன்
எதிரிலிச் சோழ சம்புவராயன் 41/4, 42/14
செங்கேணி வீரப்பெருமாள் கண்டகோபாலன்
ஆன குலோத்துங்கசோழ சம்புவராயன் 62/4
செங்கேணி வீராண்டான் மகன் ”
37/1
அத்தியாண்டான் 25/3
செட்டிகள் 75/7, 79/17, 91/18
செந்நீர் 19/23
செந்நெல்லமுது 131/17
செம்பியன் மகாதேவியார் 5/2
செய்யாண்டை ஆன சம்புவராய நாச்சி 64/3
செய்யாற்று வென்றா நல்லூர் 117/5
371
சொல் , பக்கஎண்_வர்
செல்வி இராசகேசரியால்
நித்தம் உழக்கு நெய் 24/2, 25/5
செல்வி ராசகேசரி 43/3
செவிடு 227/24, 232/4
சென்னீரமஞ்சி 14/4
சென்னெல் அமுது 292/4
சேனை அங்காடியர் 316/10
சேனைக்கடையர் 104/4, 107/7
சேனையங்காடிகள் 91/18
சோழசிகாமணிப் பல்லவரையன் 166/2
சோழநாட்டு சிங்க நாடு 166/1
சோழநாட்டு வடகரை சின்னம்பர் நாடு 140/2
சோபாணம் 153/8
சோமாசி சானி 172/3
சோடிப்பு 125/5
சோழகுலவல்லி நல்லூர் 295/1
சோழகேரள விண்ணகர் ஆழ்வார் 247/22
சோழபாண்டியப் பேராறு 300/33
சோழபாண்டிய வாய்க்கால் 301/48
சோழ மண்டலம் 10/4
சோற்றுப்பாக்கம் 54/4
த்ரைராஜ்ய கடிகா மத்யஸ்தன் ஆன
வேங்கடவன் திரிவிக்கிரமன்
ஆன ஏழாயிரவன் 201/6
த்ரைராஜ்ய கடிகை மத்யஸ்தன் திரிவிக்கிரமன்
சிவசரணம் ஆன பராக்கிரமன் 274/41
சொல் பக்கஎண்வர்
த்ரைராஜ்ய கடிகை மத்யஸ்தன் சிவமாண்டார்
மூவாயிரத்தறு நூற்றுவன் 276/8
த்ரைராஜ்ய கடிகா மத்யஸ்தன்
திருவேகம்ப கற்பிச்சன் 190/20
த்ரைராஜ்ய கடிகா மத்யஸ்தன் I
திருவிக்கிரமன் திருவேகாத்தன் 312/158
த்ரைராஜ்ய கடிகா மத்யஸ்தன்
மூவாயிரவன் 179/16
த்ரைராஜ்ய கடிகா மத்யஸ்தன்
ஸ்ரீஅதிகாரியாகிய சதுரன் மூவாயிரவன் 189/5
இச்சன் தாங்கல் ஆன
வேதவிநோத நல்லூர் 79/15
தச்சன் பழமலைக் கூத்தன் 253/28
தஞ்சாவூர்க் கூற்றம் 773
தட்டாயம் 124/10
தட்டார் பாட்டம் 79/17
தட்டார் பேரால் ஊசிவாசி 91/15
தண்டம் 151/23, 179/13, 199/11
தண்டீர மண்டலம் 109/6
தண்ணீர் அட்டுவான் 136/4
தப்பாமொழி நந்தவனம் 53/6
தபஸ்விகள் 70/5
தபஸ்ஸி விடையின் மேல் வருவான் 13/11
தம்பிராட்டியார் உலகு முழுதுடையார் 84
தம்பிரானார் திருப்பாட்டு.
ஒதும் மாகேசுவரர் 98/12
தர்மசாசனம் 14/15, 157/20
372
சால் பக்கஎண்ஹி
தரப்படி யரிசி 42/9
தரா நிலை விளக்கு 157/25
தரையூர் நாடு 1/2
தவசிபெரும்பாக்கம் 42/7
தறிஇறை 79/17
தறிக்கடமை 91/17, 92/5
தறிக்குடி. 121/5
தறிமிறை 37/10
தன்ம கட்டளை 6/3,189/7,192/5, 193/5
தனி ஆள் 63/9
தனியாள் 37/9, 42/8
தனியூர் பெரும்பற்றப் புலியூர் 70/3
தனியூர் மதுராந்தகச் சதுர்வேதிமங்கலம் 28/2
தலைநீர் 248/25
தலைவரிசைட்பற்று 54/4
தூனத்தார் 94/2
திகைத்திறல் ஏரி 137/9
திச விளக்கு 115/3
திட்டைச்சேரியாந அழகியசோழ நல்லூர் 37/5
திரமம் 289/2
திரவியம் 310/124
திரிச்சீலை 125/4
திரிசந்தி 182/4, 191/4
திருக்கண் சாத்திர உபயம் 119/6
திருக்கொடி பிடிப்பார் 227/26
திருக்கொற்ற வாசல் 237/19
சால் பக்கஎணணீ
திருக்கொற்றவாள் கொற்று 258/34
திருகோபுரம் 292/3
திருச்சிற்றம்பலச்சேரி 273/20, 310/132
திருச்சுற்றாலை 189/9
திருஞானசம்பந்த நல்லூர் 98/14
திருநந்தவனம் 126/3
திருநந்தா விளக்குக்குடி 135/4
திருநந்தாவிளக்குப் பட்டி 42/6
திருநாமத்துக்காணி 42/6, 56/13, 117/5
திருநாமத்துக் காணியான தேவதானம் 79/14
திருப்பதியம் பாடுவார் 197/3
திருப்பரிவட்டம் 125/4
திருப்பள்ளித்தாமம் 53/7, 127/4, 226/23
திருப்பள்ளித்தொங்கல் இடுவார் 227/26
திருப்பாட்டு ஒதும் மாகேசுவரர் 91/22
திருப்போந்தை கணப்பெருமக்கள் 168/3
திருப்போந்தை மன்றாடி 203/14
திருமடை விளாகம் 316/10
திருமண்டலம் 226/20
திருமலைப்புறம் 127/4
திருமுக்காணி 117/4
திருமுனைப்பாடி நாடு 32/3
திருமெய்க் காக்கும்
வெள்ளாளன் ஒற்றிபொம்மன் 201/8
திருமெய்ப்பூச்சு 195/14, 226/23
திருமேற்பூச்சு 44/5
373
சால் பக்கஎண்_வர்
திருவகத்தூர் கைக்கோளர் 104/3
திருவமிர்தரிசி 226/23
திருவயோத்தி ஆழ்வார் 252/11
திருவாடுதண்டு 125/6
திருவாராதனை 266/10
திருவிடையாட்டம் 35/3
திருவிழா சேவிக்க வந்த அடியார் 249/3
திருவிளக்கு பிடிப்பார் 227/26
திருவிளக்குப்புறம் 79/14
திருவிளக்கெண்ணை 226/23, 46/4
திருவிளம்பிறையார் 84/6
தி ஆர்கன் 18/17,21
திருவீதிமடப்ப்றம் ' 18/17,21
திருவுண்ணாழிகை உடைய
பாரத்வாஜி சாதசிவன் 194/4 .
திருவுண்ணாழிகை சபை 32/5, 57/3, 51/9
165/2
திருவுண்ணாழிகையுடையார் 5/5, 6/5
திருவுநாயகர் மடம் 132/21
திருவுலகளந்த ஸ்ரீபாதக்கோல் 13/9
திருவேகம்பச்சேரி வியாபாரி
மங்கலபிரியன் கலி விலங்கி 176/3
திருவேங்கட நல்லூர் 128/5
திருவேங்கடமலைத் தீர்த்தம் 243/4
திருவேங்கட மாதவ
சர்வ்வகிருதுயாஜியார் 183/9
சொல் பக்கஎண்டிவர்'
திருவெண்சாமரம் 125/5
திருவொத்த சாமம் 73/1
திருவொற்றியூர் 209/2
திருவோணத்து நாள் 244/4 , :
திருவோத்தூர் ஏரி செம்பியன் ணக
மாதேவிப் பேரேரி 13/6
திருவோத்தூர் சபை 1/3
திருவோத்தூர் மன்றாடிகளில்
வெறுங்கை வென்றான் அல்லாண்டை 67/4
திருவோத்தூர் யாளுங்கணத்தார் 773
திருவோத்தூரில் மன்றாடிகளில்
துவாரபதி வேளான் 100/4
திருவோத்தூருடைய நாயனார்
கோயிலில் தேவர் அடியாள்
அடைஞ்சாகை காத்தான் 64/2
திருவோத்தூருடைய நாயனார் கோயிலில்
தேவரடியாள் உண்ணாமுலையார் 60/2
திருவோலக்கம் 188/6
திறப்பு 35/4
தினக்கட்டளை 113/2, 115/3
தினசிந்தாமணிச் சதுர்வேதிமங்கலம் 290/7
தினச்செறு 54/5
தீட்டு 30/4,5
தீத்தக்குளத்தின் வடகரைப்புளிகீழ்
கூட்டம் குறைவறக் கூடி 236/11
தீத்தக்குளம் 236/11
துளை நிறை 218/7
துளை நிறை பொன் 192/5
சால் பக்கஎண்வர்
தூம்பு 182/7
தெங்கிட்ட நந்தவனம் 1/2
தெண்ணாயிரவன் மடம் 249/3
தேசாந்திகள் 48/5
தேவதான இறையிலி 74/6
தேவதானம் 35/3
தேவைக்கிடும் பணம் 91/12
தேவர் உழக்கு 157/16
தேவர்கன்மி 226/19
தேவர் பண்டாரம் 221/24, 218/7, 226/22
227/27, 276/5
தேர்வடம் 125/5
தேவரடியார் 38/1
தேவியார் தூம்பு 218/7
தோட்டச்செறு 23/6
தோட்டப்பற்று 91/23
நக்கன் பவித்திரம் ஆன ராஜராஜத்
தலைக்கோலி லக்ஷணத்தால் 198/6
நடுவில் நாடு 135/2
நம்மூர் சப்தமாதிருக்கள் 254/3
"நம்மூர் மேலை சுப்ரமண்யதேவர் 221/23
நம்மூர் மேலைத் திருவாய்ப்பாடி
தேவர் கோயில் 240/28
நல்வைய்காசநன் கேசுவ பட்டன் 253/28
நல்லெருது நற்கிடா 91/12
நாட்டுக்கு சமைந்த நாட்டு கணக்கு
தொண்டை மண்டல பிரமாராயன் 99/36
சால் பக்கஎண்/வர்
நாட்டு வரி 79/18, 91/10
நாட்டு வினியோகம் 29/18, 79/18
நாரணமங்கலத்து ஹரிதாச பட்டன் 158/3
நாவற் கழனி 237/17
நாவற்பாக்கம் ஆன
திருஞானசம்பந்த நல்லூர் 90/3
நிருத்த மண்டபம் 119/6
நிலவிலையாவணம் 17/11, 58/3
நிலையான தறி 93/13
நின்ற தறி 93/12.
நீர் நிலம் 23/5, 237/16, 314/13
நீர் விலை 19/23, 248/24, 250/7
நீர் விளைக்கும் உழவிறை 258/36
நீர் வேளூர் நாடு 157/19
நீரோடு அட்டிக்குடுத்தோம் 5/3
நீரோடு வாய்க்கால் 218/8
நுளம்பர் விசுத்தமதி பண்டிதர் 18673
நூலாயம் 91/17, 316/11
நூலேற்றல் 230/6
நெல்லாயங்கள் 42/9
நெல்லாயம் 37/9
நெற்க்கூலி 279/29
நொ ன்தா ஜோதி -
பகல் விளக்கு 2/2
பங்குனி உத்திரம் 205/9
பஞ்சவாரக்கால் 5/4
375
பக்கஎண்வர்'
சொல்
104/4
40/2, 84/5, 158/3
128/6
37/11, 47/12, 75/2
109/6
74/4
பட்டடை நூல் ஆயம்
பட்டம்
பட்ட விருத்தி
பட்டித்தெண்டம்
படவீடு ராஜ்ஜியம்
படிவெஞ்சனம்
படுவூர் நாட்டு பிரமதேயம்
முஞ்ஞை தண்டலம்
படை வீட்டில் இருக்கும்
கன்னடிய பிராமணர்
222/27
117/3
88/6
278/9
153/9, 230/6
230/7
பண்டாரம்
பயன் மரங்கள்
பரமேஸ்வர வாய்க்கால்
பரமேசுவர வாய்க்கால்
பராக்கிரமசோழச் சருப்பேதிமங்கலத்து
சுப்ரமண்யதேவர் ஆன சோழ கேரளன் 222/36
பராக்கிரமசோழச் சதுபேதிமங்கலத்துப்
பெருங்குறி பெருமக்கள்
பராக்கிரமசோழச் சதுர்வேதிமங்கலத்து
மகாசபை
பராக்கிரமசோழ சருப்பேதிமங்கலத்து
மகாசபைப் பெருங்குறி பெருமக்கள் 252/11
23/4
275/1
221/22
பராசூர் நாடு
பரிக்கிரகத்து நிலை உடைய
பெண்டுகள் 43/2, 33/5
195/11
37/4
ரிவர்ச்
பல்குன்றக் கோட்டம்
சால் பக்கஎண்/வர்'
பல பண்டங்கள் 112/2
பலிசை 73/7, 160/12, 162/10,
168/2,175/11
பவருத்திர சோமீசுர தேவர் 273/17
பவித்திரமாணிக்க மடம் 257/22
பழங்கோல் 247/23
பழந்தேவதானம் 291/20
பழவரி புதுவரி 91/20
பறியலூர் ஜாதவேத கிரமவித்தன் 188/3
பன்னாட்டார் 22/10
பனஞ்செறு 54/5
பனையுடை நல்லூர் ஏரி 182/7
பாடகம் 142/2,182/8, 213/3, 270/26
பாடி காவல் 63/9, 124/11
பாண்டி குலாசநி வளநாடு 10/4
பாராசூர் நங்கித் தச்சன் தாங்கல் 79/11
பாராசூர் நாட்டு 71/6
பாழ்கிட்த்த காணி 269/17
பாலன் வதி 263/15
பிடாகை 273/18
பிடாரர் திருச்சிற்றம்பல நம்பி 314/10
பிடாரி படம் 60/4
பித்தளை நிலை விளக்கு 43/5
பிராமணி காமக்கொடி சானி 201/6
பிராமணி மாதேவி சானி 218/16
புங்கன்குழி 55/6
சால் பக்கஎண்_ர்'
புட்பகிரி சியர் மடம் 48/4
புதுச்செறு 54/5
புலியாடு பெரும்பாக்கம் - 60/4
புலியூர் நாட்டு மயிலாப்பூருடையான் 288/2
புலியூர் நாடு 230/6
புவநேக பாகு தேவர் 94/4
புவனேக பாகு தேவர் 95/6
புழற்கோட்டத்து நியமத்தின் கீழ் வெள்ளாட்டி
மாதேவன் திருவன்தாள் 260/14
புழுக்கு கறி 243/4
புழுகு கடமை 91/19
புளித்த கறி 243/4
புளி 243/4
புளியஞ் செறு 13/7
புறக்கலனைக்குடி 71/8
பூசைக் கண்காணி 94/3, 95/5
பூசைப்பேறு 71/11
பூமாலை 205/13
பெரியேரி 270/19
பெருங்குறி 184/3
பெருந்திருவமிர்து 188/8
பெருந்தூம்பு 250/5
பெருநகர் நாடு 43/2
பெருநீர் 106/2
பெரும்பாணப்பாடி 289/1
பெரும்பாலை நிலம் 79/7
சொல் பக்கஎண்டிவர்
பெரும்புலியூர் நாடு 48/2
பெருமண்டபம் 184/3, 221/22
பெருமானடிகள் கணப்பெருமக்கள் 144/5
பெருவீற்றை நாள் 188/5
பெருவாய்க்கால் 218/8
பெருவெள்ளம் 13/5
பெறுவிலைக் காணம் 13/9
பேராயச் சம்மாதம் 104/5
பேற்கடமை 91/18
பைங்கிணறு 19/23
பொத்தகம் 195/12
பொருட்செலவோலை 279/20
பொலிஎட்டு 157/16
பொலிசை 205/7, 231/3
பொலியூட்டு 45/13
பொன் வரி 75/8, 79/16, 90/9
மகாசபை பெருங்குறி பெருமக்கள்
190/13, 199/13
மகாசபை பெருமக்கள்
மகாவிஷ்ணுக்கள் தேவதாநம்
மஞ்சாடி
மஞ்சிக்கம்
மடப்புறம்
மணல்பாக்கத்து வதி
மணற்பாக்கத் திருச்சிற்றம்பலமுடைய
பிராமணி செல்வ நங்கை
மணற்பாக்கத்து திருமந்திரசாலை
218/11
300/38
201/9, 226/20, 230/8
142/2, 186/3
48/5
276/4
286/3
257/29
சொல் பக்கஎண்வர்
ப்ச்
மணற்பாக்கம் 222/30
மத்தி பல்லவன் 9/2
மத்யஸ்தர் 151/8
மத்யஸ்தன் ஏகாம்பர சதிரன் 312/157
மத்யஸ்தன் ஸ்ரீபோந்தை
ஆதிசண்டேஸ்வர பெருமாள் 258/38
மத்யஸ்தன் ஸ்ரீபோன்தை
உடைய திவாகரன் 223/41
மந்தைப் பணம் 91/13
மமிபால குலகாலப் பெருந்தெரு 295/1
மரவடை 91/17
மல்லன் கானகப்பிரியன் 248/26
மழவராயப் பெரிஅரயன் கொல்லை 17/12
மாங்காட்டு கண்யன் இரணசர்ம்மன் 155/5
மாவடை 42/10, 47/12, 79/18, 91/17
மாவண்டுர் ஏரி வாய்ப்பற்று 41/2
மிளகு கறி 243/4
மிளகு 243/4
மீட்டாண்ட நாச்சியார் 55/3
மீன்வரி 42/12
முடக்கு வாய்க்கால் 197/3
முடிகொண்ட சோழச் சேரி 276/7
முதுகன் 303/77
மும்முடிச்சோழ புரம் 222/27
முருகம்பாடி வதி 263/12
377
சால் பக்கஎண்ஹீ
முற்றுவப்பேறு 90/8
முன்னிடும் பணம் 91/10
மூத்த குஞ்சிர மல்லன் 164/12
மூன்று நிலைக் குத்துவிளக்கு 54/3
மூன்று பூ விளைநிலம் 314/11
மெய்ப்பூச்சு 276/5:
மேற்கு மாவிலங்கை 118/2
மேற்சுட்டி வரி 91/16
மேல் வாரம் 120/11
மோர் 232/4, 243/4
வடுகவாணியன் ஈக்காட்டு வாணியன்
பூவன் திருவல்லம் உடையான் 289/1
வதியூர் சபை 157/9
வந்திய தேவர் 204/4
வயலூர் 42/5
வயலூர் ஆளுங்கணத்தாருள் எட்டுக்கூர்
தாயபிரான் கிரமவித்தன் 218/4
வாகு 269/17,
வரிச்சாமை 56/7
வல்லவரையர் 157/9, 210/5
வல்லவரசர் வந்தியதேவர் தேவியார்
இந்தள தேவியார் 204/4
வல்லவரையர் வந்தியதேவர் நம்பிராட்டியார்
உமாதேவியார் 230/7
வல்லவரையர் வந்தியதேவர் மந்தர
கோவநார் குந்தளதேவியார் 215/19
வழிநடைக்கு இடும் பணம் 91/10
சால் பக்கி
வள்ளையில் இருக்கும் மன்றாடிகளில்
பெருமாப்பிள்ளை ஆன பெரிய
நாட்டுக்கோன் 88/4
வள்ளிவயம் 168/1
வன்னியப்பற்று 35/4
வஸ்து 11/10
வாசல் ஒட்டு 317/5
வாசல் குழி 91/14
வாசற் பணம் 91/13
வாசல் வரி 316/3
வாசல் வினியோகம் 90/9
வாணிகர் 37/10, 91/18
வாணிகர் பேர்க்கடமை 42/11, 79/18
வாணிகர் பேராற் கடமை 47/10
வாணியர் 316/10
வாதவூர் நாடு 46/6
வாயினா நல்லூர் 147/2
வாழை தோட்டம் 55/6
வான் பயிர் 39/3
விக்கிரமசோழச் சம்புவராயர் 48/3
விக்கிரமசோழச் சேரி 274/40
_ விக்கிரமசோழபுரம் 314/6
விக்கிரமசோழபுரத்து அபிஷேக மண்டபத்து
முத்துபன்தன் கீழ் பள்ளிபீடத்து
எழுந்தருளியிருந்து திருவாய்மொழி
அருளினபடி 314/7
378
பக்கஎண்_வர்'
விண்ணபாடியில் இருக்கும் மன்றாடிகளில்
சித்திரமேழிக்கோன் 87/4
வியவஸ்தை 171/2
சால்
யொபாரி ர வழக்கள்
திருவேகம்பமுடையான் 54/2
விருகவேட்டை (மிருக வேட்டை) 22/9
விருத்தி 250/6
விருத்திப் பொன் 176/5
விருந்துனர்பர் 185/6
விருந்துப்படி 91/11
விலை திரவியம் 278/16
விலையாவணம் 218/8, 258/37
விறகிடுவான் 243/5
விறகு 227/25
விளத்தூர் கிழவன்
செந்தாமரைக் கண்ணன் 50/2
விழா நல்லூர் நிலம் 78/3
விஜய ராஜேந்திர வளநாடு 288/2
வீரப்பெருமாள் நாச்சி 59/6
வீரபாண்டியன் சந்தி A
வீரபெருமாளான எதிரிலிசோழச் I
சம்புவராயர் 49/6
வீர வல்லாள தேவர் எழுந்தருளிவித்த
அண்ணாமலை நாயினார் 102/2
வெஞ்சனம் 103/4
வெட்டி 37/9, 42/8, 237/20, 270/24
வெட்டி முட்டையாள் 14/14, 19/23,
295/4, 312/156
சால் பக்கஎண்/வ்
வெட்டி வரி 113/4
வெண்கற்பாடியும் ஆன
ராஜேந்திரசோழ நல்லூர் 314/11
43/2, 46/5, 62/5
வெண்குளத்தூர் மகாசபை 269/14, 271/28
வெண்குன்றக் கோட்டம்
வெற்றிலை 232/4, 241/43
வெற்றிலையமிந்து 227/25
வெறுங்காய் 227/25, 232/4, 241/43
வெள்ளாளன் 3/2, 34/7
வெஃகா 299/31
வேசாலி நாட்டு வாகூர் 135/2
வேசாலிபாடி நாடு 11/9
வேட்டைக்காரன் 27/2
வேதம் வல்லான் 186/4
வேலிப்பற்று 42/9
வைகானசன் கெளதமன்
கேசுவ பட்டன் 276/9
வையலூர் 106/2
வைய்காசந் திருவிக்கிரம பட்டன் 253/25
யாளும் கணத்தார் 137/4, 203/10, 231/2
யாளுங்கணம் 159/6
யிடங்கை வலங்கை 110/10
யிரேகைப்படி 113/4
ராஜமல்லப் பெருவதி 218/7, 267/15,
299/30, 300/36
ராஜராஜன் பெருவழி 31/6
ராஜேந்திரசோழச் சேரி 276/5
சால் பகீகஎண்டிவர்'
ராஜேந்திரசோழப் பேரேரி 263/12
ஸ்ரீகமிலாசமுடைய மகாதேவர் 300/34
ஸ்ரீகார்யம் சபை வாரியம் 179/11
ஸ்ரீகாரியஞ் செய்கின்ற
கணப்பெருமக்கள் 165/4
ஸ்ரீகார்யம் பார்க்கும் ஸ்ரீகோயில் வாரியர்
உள்ளிட்ட தேவர்கன்மி 227/28 :
ஸ்ரீகாழிநாடன் விளாகம் 42/6, 37/8
ஸ்ரீகோயில் கணப்பெருமக்கள் 175/12
ஸ்ரீகோயில் கணவாரியப் பெருமக்கள் 195/17
ஸ்ரீகோயில் திருவம்பலம் 141/1
ஸ்ரீகோயில் வாரியர் செய்கின்ற
கணப்பெருமக்கள் 187/6
ஸ்ரீகோயில் வாரியர் செய்வார் 241/44
ஸ்ரீகோயில் வாரிய பெருமக்கள் 181/9,
205/14, 285/7
ஸ்ரீகோயில் வாரியர் 226/99
ஸ்ரீகோயில் ஸ்ரீமகேஸ்வர கங்காணி
செய்வார்கள் 285/6
ஸ்ரீகுந்தவை பேரேரி 230/6
ஸ்ரீசுந்தரப் பேரேரி 230/7
ஸ்ரீதனம் 302/76
ஸ்ரீபண்டாரம் 68/6, 73/8, 76/6
101/6, 103/4,131/17
ஸ்ரீபதஞ்சலி மகாமுனிதேவன் திருமடம்
ஆன பிக்ஷா மடம் 70/4
ஸ்ரீபலி கொட்டுதல் 145/2
ஸ்ரீபலி 261/15
ஷால் பக்கஎண்வர்'
ஸ்ரீபாசுவத மூர்த்திகள் 261/15
ஸ்ரீபாதக்கோல் 132/24
ஸ்ரீபொத்தகம் 171/3
ஸ்ரீபோந்தை உடைய மகாதேவர் 208/6
ஸ்ரீபோந்தை உடையார் மகாதேவர் 230/8
ஸ்ரீபோந்தை பட்டாரகர் ஸ்ரீகார்யம்
ஆராய்கின்ற கணப்பெருமக்கள் 158/2
ஸ்ரீபோந்தை பரமேசுவரர் 199/7
ஸ்ரீபோந்தை மகாதேவர் 204/4, 217/6
ஸ்ரீமதுராந்தகம் 257/23
ஸ்ரீமதுராந்தகப் பேரேரி 240/30
ஸ்ரீராம வாய்க்கால் 257/24
ஸ்ரீருத்ரசோலை 269/16
ஸ்ரீவைகுந்தம் என்னும் தண்ணீர் கிணறு 208/7
ஸ்ரீவைஷ்ணவர் 243/4
ஜநநாதன் மண்டபம் 243/4
ஜயங்கொண்டசோழப் பேராறு 132/19
ஜயங்கொண்டசோழ
ட மண்டலத்து நாட்டவர் 35/2
ஜீவிதப் பற்று 291/14
380
6262641112 2128282628 2801 ல்
“2
ILI
3 1 அதுவவ வைடு
நீழற்
6023 2520202323 23 நத நந நந ந ந 00
ட்
னல்,
YY YY
381
ன்
இதல் 3 ந்ஸ்
ஆட்டுப்
ந-௫ "லா ௫96 “(:ஐ) moineg ராச
"௫ரம(மல mies ஓர APN லாரா TORY RR மூநூயலல டு 09008 ௫10௦ 1௫7
ர ‘wn (206-726 Wg) wing சீஷ ரபா மே
“டும(909ல 7107௦2 லே சநாரடும மனநப (Lira ipo) ராண்டி01934 1001711212
383
9 ‘en (096 Wg) Wiig NET
“இ-1௦(09ல nie YG Hod GGoorone 10 1DE (யாரால) Pi டாரா ம(0011.2ஐ NEE
FY
வ
கத்ரு 0 75
ர்க்,
3 ஒல்!
9 ‘wn (696 Tg) ஊிய2ஐ ராச 2
-gmeg SEs 10608 008 பபாபாாநு ஜேோலரா PMOL LEY 1ஐ 10112 TEE 3
384
88-76 ‘en (687ர Wg) லாய ோமஐஓ ரா பலவ
ming சீட nT Inn RRA தமஓ
ம.ஒ ஓ hore 10௦ சம (Bung 10g TOIL
385
ge ‘en ஒகர Gre) wor Guoog® ரபா 1௦ஐ. 1௫7
uongoogi ereywg Ros NGA
386
28 னா (ரா Gg) Wann ரபா பலம.
auinoyn emg NATH - 2807௫ Bagi» hone Ro சர்ம
[ர 1091110919 09880] 109101110019 1M EGOP Mg
ve ‘en (977 Wg) wemtenig guru
fm20 ௮ ons yuegie ரா
Ionomgie 107 10௦00௦ 01ஓ ImiiworணToSooT MYL
கல் ASS
ஆ GALE ழு
2 i Lien
387
18-08 "எரா ௫27 மஜ) மலஒாலாரனு ரபா மரு
eR TE ome 18 1௦ராரராஐ IWS
amntrohge 10k 10ராபர்ம0ர0901] 19mg 109 Lowy jopwgraY
qiidior omnirohore 1pdinegigaiegniண 10092 1900S 0௦1௭09
வலு தல் 1
3
atl tao
388
கரந்த பட்
மலய 011 ம
ன்
»e-ge ‘wn (081T Tg) Meru GnoY® ரபர்
௫_1ம(0ல qifios ஓரார் 1௦௨௫ மஜாமு 1110911008] [லர தலமாா
389
ge ‘en ‘pw 1wdin2g 2S Gg ரல யரோ
390
vs ‘en (9987 Wg) ம9ாமீபமஐ பார்ர (ஐ ராயராமராட 10௦.2 TAI
"சீர.209 1919118882 rT 1097ஓ oI இலா 0௫ 190110 ரான 12600ஒ09-5 Wie Moo
391
0 ‘en சோர “மஜ Iwo EN0Y® IIR
‘gma oie ராரா PMY, ஓவரு MESO
yw ‘wn (088ர Trg) ஒய் 2 பர் gd
quonGoogi சேம 1omniirohoie 017291090௦ 10000001இஞ்ஓ 101010 0௦ ௨1.20
392
நெ ‘wn (6887 Wg) wenienig gio
FGI LUN TWHRY omg Life
gio Sate PONT ஈடாகத்
393
6%-ஒர ‘sr (6887 Tg) Dene IOP
rogooe ரப எண ரா 1 ராா$ மஜா
ப நீல ஸர [4 (2 i mle
வைக் (பயக்கக்
394
eg ‘en (9887 Wg) Menienig ரபர்
ghey 210109 TSR ரப 90181 coyrmrng ரா
‘
ரப் GinongnrmG
395
99-09 ‘en (6087 Tg) ஊயாபாலல -ப௦ஐல11௩௦மூந
YoY ராஇலநுமுமே மேதா ராஐ] ஸராா(10௦1லல1ர பஜ
மாறாம. ௮110ம் oor ராரா பாரா Ag mn ne HNGSTIOIE 1170109702
396
த்து ல் தக
oon oT Tg) 1௦0 ராபலஐ “100 RNLUIYS
இறட 2S TDS EEPYOODE ராமப Hop பல பராலாடி
மரு oyu! mere Gro 8601] HOTLY 0௦௦௨
19-09 ‘wn (228 Ug) மார - 0௦11௩௦ மந
இர SETI 09நூபாலஐ (ToT!) ரா
1௦09.209 பிமல்
~
8 coy forog oro Imre Hound OEY நூ WEGNOPDE
1 -ஆவ)
வ
397
72-02 "எர (087 Wg) மாாக்பமஜயாம்ழு 199002 Tid
‘gineg 2mgradir ரபலய த் ergrong ௦0 இர் 101 மர்மமு தஸ TTD
1007520000 IR (goLDENIN GAD முநாு2ஐ.2000001ஐ
Ginasig) IfngormaaingPrg பாபம்
398
சொர்க கா ரசா நஜி 1007 8ப௦லஐராபர்ற9 10 0TGM 109.2 1100100029
‘neg mgEONIG gale 1pm corm 1ஜரர்பமஜராப் 100109 1291 111600ஐ 11 ரா பஸ ராம ஜோ௱ம்பமலை
400
po ‘gn தேன Tg) women
me mgrmdiro nowy wed Gorn ௮0971 0(09மாபாலஐல ௫ DRDO மாமே PID groh
401
ம ப்
ட்டு .
நத 2 1 வக
: DE A FAD 3014௮
பலக கராய
இ கவன
ட அடப் ப
பர்த்து த்
திருவோத்தூர் கோயிலில்
திருப்பாட்டு ஓதும்
மாகேசுவரர்களுக்கு
அஜி SITIO EDS பவி க்யக்| | நிதானம் வழங்கியச் செய்தி.
ந்த பாசிய. றத் BS இராசநாராயணன் (௫.பி. 1344)
கைக்குத் ம்: a 20 2 KR sy பக். 97-98
2 நமத ப்ர த்
கத்தம்.
[த்த றம்
[௦
BT டன் ்
டுய்! 21 ன்.
ண கட் ப்ட் ல
402
Ooo ராரிஓ -ரெ ம)
‘gma ரர தாவரம ராமு ஏ 1௦ ॥ஐ 72107 ந ora 9(09நூயலஐ
‘cot ‘en (0987 Tg) MiowmniindigniG
‘gma 6மல 200 ௦௦0192 Gerangorog) Lurnos 0701021001 00(00நூபலஐல ௫ ரரமற 1191090970.
403
08-ளா ‘en ௫மஐ (00107 021-91 “நு
ஐ
¢m-20 Ion SEY 1g ஒலாரா1ட 122017121௦
404
987 ‘en (998 Wg) 1௦ரயராலா1ரால.-.109109 10907 100011
எ ஹால( ஓருன்றட1ல(ல[220௬
102102 2 எஓுல($நுபாலல 10RD DY ரமே யல
dg
க் இ
otek
ஸ் ்் ம. பே. ரி ன் க.
ல் ௨௧13 ற் க்் டப் அ 20
A டி “a ச் =. 4 4 பது ற ஜா மட்
* ல்க 1 த ௫ ் த
3 3 i 2௮95 1 இட DC உ ட்ரீ A 8
» Ade ETA AS
ட்ட
் என் திக்
»
ட் i - .
As 4 3 நி , A -
ஒய் வ ன் டக வ w kar os
ப்ர ns, ல 9: (i TY | (2 1.4. ப ஆரு 7 ௪: 2 டி
் A a 1 ம் ௩.௮. பட்டத A oi
ட் க ௬ 1
ட் 1 » A ௩, ப்
ட் னி ட் 21 ப 53. ப்பி ப் ௪ ௪ இ! க்க ட ன்
"தன் 3 அ, த் த
த p ஐ ல வழு
த கத்தான்
௩
5 pip
ப் ர அதி! ௪
A
ஆ! ட்ட
123.
க i of ப)
டி
்
405
பிரம்மதேசம்.
போந்தைப் வகுமானடிகள்
Ch மல கோயில் தட்சிணாமூர்த்தி
Ata LE ROA 4 இறைவன் ts
21 அம அற கல்
நிலதானம்.
முதலாம் பராந்தக சோழன்
(௫.பி. 924) பக். 153
க த 2 டட
் tp ag
ப ்] 12 (8
ர் க் ப் ஓட. i
க 4. அச உ
wn ர ல் 3
ரி
[oT
406 =